என் மலர்
நீங்கள் தேடியது "பதப்படுத்தப்பட்ட உணவுகள்"
- ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு முறை என்பது மிக முக்கியம்.
- பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும்.
குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு முறை என்பது மிக முக்கியம். பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை கொடுக்கவில்லை என்றால் அவர்கள் பல நோய்களுக்கு ஆளாவார்கள்.
பிஸியான வாழ்க்கை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பல நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த போதுமான நேரம் கிடைப்பதில்லை. பல நேரங்களில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவசர அவசரமாக பல வகையான உணவுகளை வயிறு நிரம்பினால் போதும் என கொடுக்கிறார்கள்.
இந்த உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர, குழந்தைகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. அந்த வகையில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க சில வகை உணவுகளை மறந்தும் கொடுக்கக் கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

துரித உணவுகள்
இன்றைய குழந்தைகள் பர்கர், பீட்சா, பிரஞ்சு பிரைஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் உட்கொள்கின்றனர். இதனால் குழந்தைகள் சிறு வயதிலேயே உடல் பருமன், சர்க்கரை நோய், சோர்வு போன்ற பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இந்த உணவுகள் குழந்தைகளின் மூளையில் ஆரோக்கியமான உணவை மறக்கடிக்கிறது.

இனிப்பு பானங்கள்
சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பானங்களில் இனிப்புச் சுவைக்காக இயற்கையான சர்க்கரைகள் சேர்க்கப்படுகின்றன. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குழந்தைகளுக்கு பல் சிதைவு, எதிர்காலத்தில் நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற அபாயத்தை ஏற்படுத்துகிறது.

ஸ்நாக்ஸ்
சிறு குழந்தைகள் குக்கீகள், சாக்லேட்கள் மற்றும் இனிப்புகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். இந்த விஷயங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் குழந்தைகளின் எடையை விரைவாக அதிகரிக்கின்றன. இதுபோன்ற உணவுகள் குழந்தைகளின் செரிமானத்தை மோசமாக பாதிக்கிறது. அதேபோல் இது போன்ற உணவுகள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் குழந்தைகளின் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது மற்றும் அவர்களின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. குழந்தைகளுக்கு ஒருபோதும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்கக்கூடாது. இது குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உப்பு நிறைந்த உணவுகள்
சந்தையில் பல வகையான தின்பண்டங்கள் கிடைக்கின்றன, அவற்றில் அதிக அளவு உப்பு உள்ளது. இந்த உணவுகள் குழந்தைகளுக்கு சுவையாகத் தோன்றினாலும், அவற்றை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் பன்மடங்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்கு சந்தையில் கிடைக்கும் சிப்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஒருமுறை என்றுகூட கொடுக்க வேண்டாம், காரணம் இந்த சுவை குழந்தைகளிடம் தொற்றிக் கொண்டால் அதை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும்.
- கிராமப்புற இந்தியர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் 9.84% தொகையை செலவிடுகின்றனர்.
- இருதய நோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கின்றன.
இந்தியர்கள் தங்கள் பட்ஜெட்டில் கணிசமான பகுதியை பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்களுக்காக செலவிடுகிறார்கள் என்று அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இது இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடையது.
மத்திய அரசு வெளியிட்ட 2023-24 ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பின்படி, கிராமப்புற இந்தியர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் 9.84% தொகையை இதுபோன்ற பொருட்களை வாங்க செலவிடுகின்றனர்.
இதுவே நகர்ப்புற இந்தியர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் 11.09% தொகையை இதற்கு செலவிடுகின்றனர். சுமார் 20 ஆண்டுகளாக இந்த செலவினம் 10 சதவீதத்துக்கு கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த வரம்பை கடந்துள்ளது எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

2.61 லட்சம் வீடுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கை, உணவு நுகர்வு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
நகர்ப்புறங்களில், உணவு செலவினங்களில் 39% க்கும் அதிகமானவை பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை வாங்குவதில் செலவிடப்படுகிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் போன்ற அதிக சத்தானவற்றை தவிர்த்து மக்கள் ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவை நோக்கி அதிகம் செல்வது புலனாகிறது.

சர்க்கரை, உப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருதய நோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கின்றன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால் இந்த ஆரோக்கியமற்ற உணவுகளை விளம்பரப்படுத்தும் சந்தைப்படுத்தலின் மூலம் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களிடம் செலுத்தும் ஆதிக்கம் மற்றும் செல்வாக்கையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.






