என் மலர்
ஆரோக்கியம்
இன்றையச் சூழலில் பெண்கள் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு பரந்து விரிந்திருக்கிறது. புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு இது.
இன்றையச் சூழலில் பெண்கள் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு பரந்து விரிந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பெண் தொழில்முனைவோர்கள் ஆண்களுக்கு இணையாக சாதனைகளை செய்திருக்கிறார்கள். கொரோனா பரவலுக்குப் பிறகு பல பெண்கள் தொழில் முனைவோராக மாறி வருகின்றனர்.
அவ்வாறு புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு இது.
எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் முன் அனுபவம் முக்கியமானது. அல்லது சம்பந்தப்பட்ட தொழில் குறித்த குறுகிய கால பயிற்சியாவது பெற்றிருப்பது நல்லது. செய்யும் தொழில் குறித்த அடிப்படை தகவல்களை தெளிவாக அறிந்திருப்பது அவசியம். ‘முதலீடு போட்டால் மட்டும் போதும், மற்ற விஷயங்களை ஊழியர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்ற மனநிலை தொழில் வெற்றிக்கு அடிப்படையாக அமையாது.
சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில்கள், உற்பத்தித்துறை, விற்பனை பிரிவு, ஏஜென்சி, மொத்த விற்பனை, சேவைப்பிரிவு உள்ளிட்ட பல தொழில் பிரிவுகள் இருக்கின்றன.
அவற்றிற்கேற்ப தொழில் உரிமம், பணியிடத்திற்கான உள்ளாட்சி அனுமதி, கட்டிட வாடகை ஒப்பந்தம் அல்லது உரிமை பத்திரம், தனிநபர் அல்லது தொழில்கூட்டாளிகள் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகள் முறையாக பெற்ற பின்பே எந்த ஒரு தொழிலிலும் காலடி எடுத்து வைக்கவேண்டும்.
கல்வி என்பது அனைத்துக்கும் அடிப்படை ஆகும். எனவே பெண் தொழில் முனைவோர் குறைந்தபட்ச கல்வியாவது பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் பல சாதனையாளர்கள் ஆரம்ப பள்ளிப்படிப்பே பெறவில்லை என்பது உழைப்பின் அவசியத்தையும், அதன் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது.
அரசு அளிக்கும் பல்வேறு பயிற்சிகளைப் பெற்று, அவற்றை தொழில் முயற்சியாக பெண்கள் மேற்கொள்ளலாம். பயிற்சி பெற்றதற்கான அரசு சான்றிதழ் உள்ள நிலையில் வங்கி கடன், அதற்கான மானியம் உள்ளிட்ட அரசு சலுகைகள் கிடைப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்கள் தொழில் தொடங்க சுலபமான கடன் வசதி திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தி வருகிறது. அதனால் தொழில் தொடங்க விரும்புபவர்கள் அவர்களது திட்ட அறிக்கை, எந்திரங்களுக்கான மதிப்பீடு, தொழில் உரிமம், தொழில் நடக்கும் முகவரி, அனுபவச் சான்றுகள் உள்ளிட்ட தகவல்களை வங்கியில் அளித்து கடன் பெற்று தொழிலைத் தொடங்கலாம்.
அவ்வாறு புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு இது.
எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் முன் அனுபவம் முக்கியமானது. அல்லது சம்பந்தப்பட்ட தொழில் குறித்த குறுகிய கால பயிற்சியாவது பெற்றிருப்பது நல்லது. செய்யும் தொழில் குறித்த அடிப்படை தகவல்களை தெளிவாக அறிந்திருப்பது அவசியம். ‘முதலீடு போட்டால் மட்டும் போதும், மற்ற விஷயங்களை ஊழியர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்ற மனநிலை தொழில் வெற்றிக்கு அடிப்படையாக அமையாது.
சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில்கள், உற்பத்தித்துறை, விற்பனை பிரிவு, ஏஜென்சி, மொத்த விற்பனை, சேவைப்பிரிவு உள்ளிட்ட பல தொழில் பிரிவுகள் இருக்கின்றன.
அவற்றிற்கேற்ப தொழில் உரிமம், பணியிடத்திற்கான உள்ளாட்சி அனுமதி, கட்டிட வாடகை ஒப்பந்தம் அல்லது உரிமை பத்திரம், தனிநபர் அல்லது தொழில்கூட்டாளிகள் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகள் முறையாக பெற்ற பின்பே எந்த ஒரு தொழிலிலும் காலடி எடுத்து வைக்கவேண்டும்.
கல்வி என்பது அனைத்துக்கும் அடிப்படை ஆகும். எனவே பெண் தொழில் முனைவோர் குறைந்தபட்ச கல்வியாவது பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் பல சாதனையாளர்கள் ஆரம்ப பள்ளிப்படிப்பே பெறவில்லை என்பது உழைப்பின் அவசியத்தையும், அதன் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது.
அரசு அளிக்கும் பல்வேறு பயிற்சிகளைப் பெற்று, அவற்றை தொழில் முயற்சியாக பெண்கள் மேற்கொள்ளலாம். பயிற்சி பெற்றதற்கான அரசு சான்றிதழ் உள்ள நிலையில் வங்கி கடன், அதற்கான மானியம் உள்ளிட்ட அரசு சலுகைகள் கிடைப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்கள் தொழில் தொடங்க சுலபமான கடன் வசதி திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தி வருகிறது. அதனால் தொழில் தொடங்க விரும்புபவர்கள் அவர்களது திட்ட அறிக்கை, எந்திரங்களுக்கான மதிப்பீடு, தொழில் உரிமம், தொழில் நடக்கும் முகவரி, அனுபவச் சான்றுகள் உள்ளிட்ட தகவல்களை வங்கியில் அளித்து கடன் பெற்று தொழிலைத் தொடங்கலாம்.
நீரிழிவானது பல பெண்களுக்கு அறியப்படாமலே இருப்பதுதான் சமீபத்திய அதிர்ச்சி. இப்பிரச்னை அறியப்படாமலோ, அறிந்தும் கண்டுகொள்ளப்படாமலோ போகும் போது, கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படக் கூடும்.
கர்ப்ப காலத்தில் பல பெண்கள் தற்காலிக நீரிழிவுக்கு ஆளாவதும், பிரசவத்துக்குப் பிறகு அது சரியாவதும் நாம் அறிந்ததே. இந்த நீரிழிவானது பல பெண்களுக்கு அறியப்படாமலே இருப்பதுதான் சமீபத்திய அதிர்ச்சி.3.8 முதல் 21 சதவிகித இந்தியப் பெண்கள் கர்ப்பகால நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னை அறியப்படாமலோ, அறிந்தும் கண்டுகொள்ளப் படாமலோ போகும் போது, கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படக் கூடும். நாளடைவில் நிரந்தர நீரிழிவும் உண்டாகலாம். கருச்சிதைவும் நேரலாம். அது மட்டுமல்ல... குழந்தைகளுக்கும் பிரச்னைதான். அளவு மீறிய எடையோடு பிறப்பு, குறைப் பிரசவம், சுவாசப் பிரச்னைகள் உண்டாகக் கூடும். சில குழந்தைகளுக்கு தாழ்நிலை சர்க்கரை அல்லது டைப் 2 நீரிழிவு ஏற்படும் அபாயமும் உண்டு.
* இந்திய வழிமுறைகளின் படி...
உணவருந்தாமல் இருக்கும் நிலையில் (ஃபாஸ்ட்டிங்), 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீர் அருந்தி, 2 மணி நேரத்துக்குப் பிறகு, விரலில் ஒரு துளி ரத்தம் எடுத்து பரிசோதிக்கப்படும். இந்த அளவு 140mg/dlக்கு அதிகம் எனில், கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். இந்தச் சோதனை எளிமையானது. ஒரு துளி ரத்தமே போதும். ஆனால், இச்சோதனையில் துல்லியம் குறைவு. 40 சதவிகித மகப்பேறு மருத்துவர்களும் 30 சதவிகித நீரிழிவு மருத்துவர்களும் இவ்வழிமுறையையே விரும்புகின்றனர். இவர்களில் 15 சதவிகிதத்தினர் இதையே கர்ப்ப கால நீரிழிவை உறுதி செய்யும் முறையாகப் பின்பற்றுகின்றனர்.
* சர்வதேச வழிமுறைகளின் படி...
உணவருந்தாமல் இருக்கும் நிலையில் (ஃபாஸ்ட்டிங்), ரத்த சர்க்கரை அளவு 92mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ... 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீர் அருந்தி, 1 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவு 180mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ... 1 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவு 153mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற இச்சோதனை முறை மிகத் துல்லியமானது.
எனினும், கர்ப்பிணிகள் இச்சோதனைக்கு வந்து, காத்திருந்து செய்து கொள்வது இந்தியச் சூழலில் அவ்வளவு எளிதாக இல்லை (குறிப்பாக கிராமப்புறப் பெண்களுக்கு). இச்சோதனை விரலில் அல்லாது ரத்த நாளங்களில் ரத்தம் எடுத்தோ செய்யப்படும். 18.3 சதவிகித மகப்பேறு மருத்துவர்களும் 19 சதவிகித மற்ற மருத்துவர்களும் மட்டுமே சர்வதேச வழிமுறைகளை விரும்புகின்றனர். நடைமுறையில் இதையே கர்ப்ப கால நீரிழிவை உறுதி செய்யும் முறையாகப் பின்பற்றுவோர் இன்னும் குறைவே.
சென்னை, திருவனந்தபுரம்,ஹைதராபாத், மும்பை ஆகிய பெரு நகரங்களில்தான் கர்ப்ப கால நீரிழிவு அதிகம் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் வாழ்க்கை முறை மற்றும் சூழல் காரணமாக இப்பிரச்னை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் 3 ஆயிரத்து 841 மருத்துவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 84.9 சதவிகித மருத்துவர்கள் கர்ப்ப கால நீரிழிவுக்கான சோதனையை அவசியம் மேற்கொள்வதாகத் தெரிவித்தனர். 67 சதவிகித மருத்துவர்கள் மட்டுமே கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களுக்குள் இச்சோதனையை செய்துவிடுகின்றனர்.
எனினும், ஒட்டுமொத்தமாக அலசும்போது, மருத்துவ சேவை குறைபாடு காரணமாகவோ, கர்ப்பிணி குடும்பத்தினரின் கவனக் குறைவு அல்லது அறியாமை காரணமாகவோ, ஏறத்தாழ 50 சதவிகித மருத்துவர்கள் கர்ப்ப கால நீரிழிவு பரிசோதனையை எந்த ஒரு வழிமுறையிலும் செய்ய முடியாமலே போகிறது. 2014ல் மத்திய சுகாதார அமைச்சகம் கர்ப்ப கால நீரிழிவை அறிய டிப்சி வழி முறையை (Diabetes in Pregnancy Study group of India) பின்பற்றும் படி அறிவுறுத்தியது.
கர்ப்பத்தை உறுதி செய்ய ஒரு பெண் முதல் முறை வரும் போதே, 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, 2 மணி நேரத்துக்குப் பிறகு விரலில் ஒரு துளி ரத்தம் மட்டும் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அப்போது ரத்த சர்க்கரை அளவு 140mg dlக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் கர்ப்பகால நீரிழிவு (Gestational diabetes) உறுதி செய்யப்படும்.
பொதுவாக இந்தியப் பெண்கள் கர்ப்ப காலத்தின் போது விரதம் இருக்கவோ, உணவருந்தாமல் இருக்கவோ பெரியவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் மருத்துவமனைக்கு ஃபாஸ்ட்டிங் சோதனைக்கு ஏற்ப வருவது ஒரு குழப்பமான விஷயமே. மீண்டும் ஒருநாள் உணவு அருந்தாமல் வரும்படி கூறினாலும், மூன்றில் ஒரு பங்கு பெண்களே வருவார்கள். வராமல் போன பல கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு அறியப்படாமல் போகும் அபாயம் இப்படித்தான் அதிகரிக்கிறது.
* இந்திய வழிமுறைகளின் படி...
உணவருந்தாமல் இருக்கும் நிலையில் (ஃபாஸ்ட்டிங்), 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீர் அருந்தி, 2 மணி நேரத்துக்குப் பிறகு, விரலில் ஒரு துளி ரத்தம் எடுத்து பரிசோதிக்கப்படும். இந்த அளவு 140mg/dlக்கு அதிகம் எனில், கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். இந்தச் சோதனை எளிமையானது. ஒரு துளி ரத்தமே போதும். ஆனால், இச்சோதனையில் துல்லியம் குறைவு. 40 சதவிகித மகப்பேறு மருத்துவர்களும் 30 சதவிகித நீரிழிவு மருத்துவர்களும் இவ்வழிமுறையையே விரும்புகின்றனர். இவர்களில் 15 சதவிகிதத்தினர் இதையே கர்ப்ப கால நீரிழிவை உறுதி செய்யும் முறையாகப் பின்பற்றுகின்றனர்.
* சர்வதேச வழிமுறைகளின் படி...
உணவருந்தாமல் இருக்கும் நிலையில் (ஃபாஸ்ட்டிங்), ரத்த சர்க்கரை அளவு 92mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ... 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீர் அருந்தி, 1 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவு 180mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ... 1 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவு 153mg/dlக்கு அதிகமாக இருந்தாலோ கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற இச்சோதனை முறை மிகத் துல்லியமானது.
எனினும், கர்ப்பிணிகள் இச்சோதனைக்கு வந்து, காத்திருந்து செய்து கொள்வது இந்தியச் சூழலில் அவ்வளவு எளிதாக இல்லை (குறிப்பாக கிராமப்புறப் பெண்களுக்கு). இச்சோதனை விரலில் அல்லாது ரத்த நாளங்களில் ரத்தம் எடுத்தோ செய்யப்படும். 18.3 சதவிகித மகப்பேறு மருத்துவர்களும் 19 சதவிகித மற்ற மருத்துவர்களும் மட்டுமே சர்வதேச வழிமுறைகளை விரும்புகின்றனர். நடைமுறையில் இதையே கர்ப்ப கால நீரிழிவை உறுதி செய்யும் முறையாகப் பின்பற்றுவோர் இன்னும் குறைவே.
சென்னை, திருவனந்தபுரம்,ஹைதராபாத், மும்பை ஆகிய பெரு நகரங்களில்தான் கர்ப்ப கால நீரிழிவு அதிகம் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் வாழ்க்கை முறை மற்றும் சூழல் காரணமாக இப்பிரச்னை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் 3 ஆயிரத்து 841 மருத்துவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 84.9 சதவிகித மருத்துவர்கள் கர்ப்ப கால நீரிழிவுக்கான சோதனையை அவசியம் மேற்கொள்வதாகத் தெரிவித்தனர். 67 சதவிகித மருத்துவர்கள் மட்டுமே கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களுக்குள் இச்சோதனையை செய்துவிடுகின்றனர்.
எனினும், ஒட்டுமொத்தமாக அலசும்போது, மருத்துவ சேவை குறைபாடு காரணமாகவோ, கர்ப்பிணி குடும்பத்தினரின் கவனக் குறைவு அல்லது அறியாமை காரணமாகவோ, ஏறத்தாழ 50 சதவிகித மருத்துவர்கள் கர்ப்ப கால நீரிழிவு பரிசோதனையை எந்த ஒரு வழிமுறையிலும் செய்ய முடியாமலே போகிறது. 2014ல் மத்திய சுகாதார அமைச்சகம் கர்ப்ப கால நீரிழிவை அறிய டிப்சி வழி முறையை (Diabetes in Pregnancy Study group of India) பின்பற்றும் படி அறிவுறுத்தியது.
கர்ப்பத்தை உறுதி செய்ய ஒரு பெண் முதல் முறை வரும் போதே, 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, 2 மணி நேரத்துக்குப் பிறகு விரலில் ஒரு துளி ரத்தம் மட்டும் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அப்போது ரத்த சர்க்கரை அளவு 140mg dlக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் கர்ப்பகால நீரிழிவு (Gestational diabetes) உறுதி செய்யப்படும்.
பொதுவாக இந்தியப் பெண்கள் கர்ப்ப காலத்தின் போது விரதம் இருக்கவோ, உணவருந்தாமல் இருக்கவோ பெரியவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் மருத்துவமனைக்கு ஃபாஸ்ட்டிங் சோதனைக்கு ஏற்ப வருவது ஒரு குழப்பமான விஷயமே. மீண்டும் ஒருநாள் உணவு அருந்தாமல் வரும்படி கூறினாலும், மூன்றில் ஒரு பங்கு பெண்களே வருவார்கள். வராமல் போன பல கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு அறியப்படாமல் போகும் அபாயம் இப்படித்தான் அதிகரிக்கிறது.
உருளைக்கிழங்கை சமையலுக்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கு சாறு மூலம் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதம் பற்றி பார்ப்போம்.
உருளைக்கிழங்கை சமையலுக்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அதிலிருக்கும் வைட்டமின் பி-6, சரும அழகை மெருகேற்றும். புதிய செல்கள் உருவாகுவதற்கும் வழிவகைசெய்யும். உருளைக்கிழங்கு சாறு மூலம் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதம் பற்றி பார்ப்போம்.
இரண்டு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் தலா இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமம் பொலிவு பெறும்.
முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் புள்ளிகள், வீக்கம் போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஒரு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாறுவை கலந்து முகத்தில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். இரவில் தூங்க செல்லும் முன்பாகவோ அல்லது காலையில் எழுந்த பின்போ இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
மிருதுவான, மென்மையான சரும பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், அரை டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகம், கழுத்து பகுதியில் பூசி வரலாம். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.
கண்களுக்கு அடியில் கருவளையம் பாதிப்பை எதிர்கொள்பவர்கள் 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் சம அளவு வெள்ளரிக்காய் சாறுவை கலந்து தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு அடியில் தடவி மசாஜ் செய்யலாம். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர, கருவளையங்கள் மறையத் தொடங்கும்.
முகத்தில் படியும் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையை கட்டுப்படுத்தவும் உருளைக்கிழங்கு சாறுவை பயன்படுத்தலாம். 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டியை பசை போல் குழப்பி முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் தலா இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமம் பொலிவு பெறும்.
முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் புள்ளிகள், வீக்கம் போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஒரு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாறுவை கலந்து முகத்தில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். இரவில் தூங்க செல்லும் முன்பாகவோ அல்லது காலையில் எழுந்த பின்போ இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
மிருதுவான, மென்மையான சரும பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், அரை டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகம், கழுத்து பகுதியில் பூசி வரலாம். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.
கண்களுக்கு அடியில் கருவளையம் பாதிப்பை எதிர்கொள்பவர்கள் 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் சம அளவு வெள்ளரிக்காய் சாறுவை கலந்து தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு அடியில் தடவி மசாஜ் செய்யலாம். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர, கருவளையங்கள் மறையத் தொடங்கும்.
முகத்தில் படியும் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையை கட்டுப்படுத்தவும் உருளைக்கிழங்கு சாறுவை பயன்படுத்தலாம். 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டியை பசை போல் குழப்பி முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.
வளர்ச்சிக்கான பாதையில் கிடக்கும் தடைகளை அகற்றி விட்டு தயக்கங்களை விரட்டி அடுத்த அடியை எடுத்து வைத்தால் மட்டுமே நம்மால் இலக்கை அடைய முடியும்.
தொழில் நுட்ப வளர்ச்சி பெற்ற இன்றைய உலகில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் அதிக அளவில் தொழில் முனைவோராக அவதாரம் எடுத்து வருகிறார்கள். அதில் ஆண்களை விட பெண்கள் சந்திக்கும் சவால்களே அதிகம். அதற்கான தீர்வுகள் பற்றி இங்கே பார்ப்போம்.
தொழில் முனைவோராக வெற்றி பெற வேண்டுமானால் முதலில் வாடிக்கையாளர்கள், தொழில் துறை நண்பர்கள் என்று சமுதாயம் சார்ந்த வட்டாரத்தை விரிவுபடுத்துவது அவசியம். ஆனால் பல பெண்கள் தங்களை தாங்களே பாதுகாப்பு வளையத்திற்குள் அடைத்து கொள்வதால் அதை தாண்டி இதர விஷயங்களில் கவனம் செலுத்த தவறுகிறார்கள். வெகு சிலர் மட்டுமே அந்த வளையத்தை விட்டு வெளியேறி சமுதாயத்தை அணுகி வெற்றி பெறுகிறார்கள்.
தொழில் சிறியதோ, பெரியதோ அதற்கான முதலீடு என்பது மிக முக்கியம். ஆனால் பல பெண்களுக்கு முதலீடு செய்வதற்கான பண வசதி அல்லது உதவிகள் கிடைப்பதில்லை. எனவே வங்கியின் மூலம் கடன் பெறுவதற்கான வழிகள் மற்றும் அரசு திட்டங்கள் மூலம் கிடைக்கும் நிதி உதவியை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வது அவசியம்.
குடும்பம், தொழில் என இரண்டு விஷங்களையும் சமமாக கவனிக்க வேண்டிய அவசியம் பெண் தொழில் முனைவோருக்கு உள்ளது. பெரும்பாலான பெண்கள் குடும்ப உறவுகள் இதை சார்ந்த விஷயங்கள் என்று குடும்பத்தின் பாசப்பிணைப்புக்குள் தங்களை முடக்கி கொள்கிறார்கள். குடும்பமா, தொழிலா என்ற நிலையில் குடும்பம் தான் இறுதியில் வெற்றி பெறுகிறது. அதனால் பலரும் தொழிலை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். எனவே தன்னம்பிக்கையோடு குடும்பத்தையும் தொழிலையும் சமன் செய்து கொண்டு செல்லும் திறமையை பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமுதாயத்தில் அதிகரித்து வருகின்றன. எனவே எந்த ஒரு சூழலிலும் மற்றவர்களின் உதவிக்காக காத்திருக்காமல் தங்களை தற்காத்துத்கொள்ளும் திறன் ஒவ்வொரு பெண்ணுக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.
வெற்றி என்ற எண்ணம் மட்டுமே நம்மை உயர்த்திவிடாது. வளர்ச்சிக்கான பாதையில் கிடக்கும் தடைகளை அகற்றி விட்டு தயக்கங்களை விரட்டி அடுத்த அடியை எடுத்து வைத்தால் மட்டுமே நம்மால் இலக்கை அடைய முடியும்.
தொழில் முனைவோராக வெற்றி பெற வேண்டுமானால் முதலில் வாடிக்கையாளர்கள், தொழில் துறை நண்பர்கள் என்று சமுதாயம் சார்ந்த வட்டாரத்தை விரிவுபடுத்துவது அவசியம். ஆனால் பல பெண்கள் தங்களை தாங்களே பாதுகாப்பு வளையத்திற்குள் அடைத்து கொள்வதால் அதை தாண்டி இதர விஷயங்களில் கவனம் செலுத்த தவறுகிறார்கள். வெகு சிலர் மட்டுமே அந்த வளையத்தை விட்டு வெளியேறி சமுதாயத்தை அணுகி வெற்றி பெறுகிறார்கள்.
தொழில் சிறியதோ, பெரியதோ அதற்கான முதலீடு என்பது மிக முக்கியம். ஆனால் பல பெண்களுக்கு முதலீடு செய்வதற்கான பண வசதி அல்லது உதவிகள் கிடைப்பதில்லை. எனவே வங்கியின் மூலம் கடன் பெறுவதற்கான வழிகள் மற்றும் அரசு திட்டங்கள் மூலம் கிடைக்கும் நிதி உதவியை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வது அவசியம்.
குடும்பம், தொழில் என இரண்டு விஷங்களையும் சமமாக கவனிக்க வேண்டிய அவசியம் பெண் தொழில் முனைவோருக்கு உள்ளது. பெரும்பாலான பெண்கள் குடும்ப உறவுகள் இதை சார்ந்த விஷயங்கள் என்று குடும்பத்தின் பாசப்பிணைப்புக்குள் தங்களை முடக்கி கொள்கிறார்கள். குடும்பமா, தொழிலா என்ற நிலையில் குடும்பம் தான் இறுதியில் வெற்றி பெறுகிறது. அதனால் பலரும் தொழிலை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். எனவே தன்னம்பிக்கையோடு குடும்பத்தையும் தொழிலையும் சமன் செய்து கொண்டு செல்லும் திறமையை பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமுதாயத்தில் அதிகரித்து வருகின்றன. எனவே எந்த ஒரு சூழலிலும் மற்றவர்களின் உதவிக்காக காத்திருக்காமல் தங்களை தற்காத்துத்கொள்ளும் திறன் ஒவ்வொரு பெண்ணுக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.
வெற்றி என்ற எண்ணம் மட்டுமே நம்மை உயர்த்திவிடாது. வளர்ச்சிக்கான பாதையில் கிடக்கும் தடைகளை அகற்றி விட்டு தயக்கங்களை விரட்டி அடுத்த அடியை எடுத்து வைத்தால் மட்டுமே நம்மால் இலக்கை அடைய முடியும்.
கவுனி அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கவுனி அரிசி மாவு - 250 கிராம்,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்,
நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி - தேவையான அளவு.
செய்முறை:
கவுனி அரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி பிறகு மிக்ஸியில் அரைத்துவைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கவுனி அரிசி மாவில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாகப் பிசையவும். தண்ணீர் தெளித்து பிசைவதால் மாவு கெட்டியாகிவிடக் கூடாது. மாவாகவே இருக்க வேண்டும். ஆனால், மாவில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அந்த மாவை சல்லடையில் போட்டு சலிக்கவும்.
ஐந்து நிமிடங்கள் ஆனதும் இட்லிப்பானையில் துணி போட்டு சலித்த மாவை ஏழு நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.
அதை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் தேங்காய்த்துருவல், நாட்டுச்சர்க்கரை சேர்த்து பிசிறி எடுத்து உருண்டையாகப் பிடிக்கலாம் அல்லது அப்படியே பரிமாறலாம்.
கவுனி அரிசி மாவு - 250 கிராம்,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்,
நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி - தேவையான அளவு.
செய்முறை:
கவுனி அரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி பிறகு மிக்ஸியில் அரைத்துவைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கவுனி அரிசி மாவில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாகப் பிசையவும். தண்ணீர் தெளித்து பிசைவதால் மாவு கெட்டியாகிவிடக் கூடாது. மாவாகவே இருக்க வேண்டும். ஆனால், மாவில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அந்த மாவை சல்லடையில் போட்டு சலிக்கவும்.
ஐந்து நிமிடங்கள் ஆனதும் இட்லிப்பானையில் துணி போட்டு சலித்த மாவை ஏழு நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.
அதை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் தேங்காய்த்துருவல், நாட்டுச்சர்க்கரை சேர்த்து பிசிறி எடுத்து உருண்டையாகப் பிடிக்கலாம் அல்லது அப்படியே பரிமாறலாம்.
சத்தான கவுனி அரிசி உருண்டை ரெடி.
இதையும் படிக்கலாம்...மழை நேரத்தில் சாப்பிட அருமையான வெங்காய போண்டா
வறுத்த உணவுகளே ஒரு சுமை என்றால், அதிக அளவில் சாப்பிடுவது இன்னொரு சுமையாகி உறுப்புகளை 'ஓவர் டைம்' வேலை செய்ய வைக்கிறது.
இன்று காலத்தில் வறுத்த உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களை அவர்கள் சிந்திப்பதில்லை. இதுமட்டுமின்றி பீட்சா மற்றும் துரித உணவு வகைகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுவை தெரிய வேண்டும் என்பதற்காக, இந்த உணவுகளில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. நாக்கின் சுவையை மட்டும் மதித்து தொடர்ந்து இதனையே பழக்கமாக்கி விடுகின்றனர்.
சுவையான உணவு சாப்பிட தூண்டும், சந்தோஷம் கொடுக்கும் என்பதால் அனைவரும் அதனையே நாடுகிறோம். உணவில் எண்ணெய் பயன்பாடு அதிகமானால் ஆபத்தை நீங்களே வரவேற்பதாக அர்த்தம். உணவுகளை வறுத்து தயார் செய்ய தொடங்கும் போதே உடல் வருந்த தொடங்கி விடும். உணவுகளை தீயில் அதிக நேரம் சூடாக்கி எண்ணெய் சேர்த்து மசாலா பொருட்களை அள்ளித்தெளிக்கும் போது நாக்கில் எச்சில் ஊற தொடங்கி விடும். கண்டிப்பாக சுவையும் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த வகை உணவுகளை தேவைக்கு அதிகமாகவே வயிற்றுக்குள் சேர்த்து வைப்பார்கள்.
வறுத்த உணவுகளே ஒரு சுமை என்றால், அதிக அளவில் சாப்பிடுவது இன்னொரு சுமையாகி உறுப்புகளை 'ஓவர் டைம்' வேலை செய்ய வைக்கிறது. அதன் பிறகு நோய்கள் எந்தெந்த வகையில் எல்லாம் தோன்ற முடியுமோ? அப்படியெல்லாம் வெளிப்படத் தொடங்கி விடுகிறது.
சுவையான உணவு சாப்பிட தூண்டும், சந்தோஷம் கொடுக்கும் என்பதால் அனைவரும் அதனையே நாடுகிறோம். உணவில் எண்ணெய் பயன்பாடு அதிகமானால் ஆபத்தை நீங்களே வரவேற்பதாக அர்த்தம். உணவுகளை வறுத்து தயார் செய்ய தொடங்கும் போதே உடல் வருந்த தொடங்கி விடும். உணவுகளை தீயில் அதிக நேரம் சூடாக்கி எண்ணெய் சேர்த்து மசாலா பொருட்களை அள்ளித்தெளிக்கும் போது நாக்கில் எச்சில் ஊற தொடங்கி விடும். கண்டிப்பாக சுவையும் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த வகை உணவுகளை தேவைக்கு அதிகமாகவே வயிற்றுக்குள் சேர்த்து வைப்பார்கள்.
வறுத்த உணவுகளே ஒரு சுமை என்றால், அதிக அளவில் சாப்பிடுவது இன்னொரு சுமையாகி உறுப்புகளை 'ஓவர் டைம்' வேலை செய்ய வைக்கிறது. அதன் பிறகு நோய்கள் எந்தெந்த வகையில் எல்லாம் தோன்ற முடியுமோ? அப்படியெல்லாம் வெளிப்படத் தொடங்கி விடுகிறது.
குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ தொடைப் பகுதியிலோ அல்லது காலிலோ வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர், அதை அலட்சியப்படுத்திட வேண்டாம்.
மனிதனின் இருகால்களும் ஒரே உயரத்தில் ஒன்று போலவே தோற்றமளிப்பது இயல்பானது. ஆனால், சிலருக்கு 2 கால்களில் ஒன்று மட்டும் உயரம் குறைந்தோ அல்லது வளைந்தோ இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. வளரும் பருவத்தில் குழந்தைகளின் தொடை எலும்பின் மேல் பகுதி அல்லது கீழ்ப்பகுதியில் அடிபட்டு வளர்ச்சி குருத்துகளில் முறிவு ஏற்பட்டிருக்கலாம்.
அடிபட்டதும் சில சமயம் இதை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். முறையான வைத்தியம் கிடைக்காமல் இந்த பகுதிகள் சரியாக பொருத்தப்படவில்லை என்றால் வளரும் குருத்துகள் தாறுமாறாக கூடிவிடும். இதனால் அந்த காலின் வளர்ச்சி சீராக அமையாமல் குட்டையாகவோ முறுக்கியபடியோ வளர வாய்ப்பு உண்டாகும்.
ஒரு கால் உயரம் குறைவாகவோ, வளைவாகவோ அமைவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. குழந்தைகளுக்கு அதுவும் மூன்று மாதங்களுக்குள் இருப்பவர்களுக்கு இடுப்பு மூட்டில் சீழ்பிடித்து, சரியான நேரத்தில் முறையான சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்றால் தொடை எலும்பின் மேல்பாகமும் அதை சார்ந்த குருத்துப் பகுதிகளும் அழிந்தே போய்விடும்.
இது போன்ற வேதனைகள் கால் மூட்டு சார்ந்த குருத்து மற்றும் கணுக்கால் மூட்டு சார்ந்த குருத்தெலும்பு பகுதிகளிலும் உண்டாகி, அந்த கால் உயரம் குறைவாகவும், சிறுத்தும் போவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
'செப்டிக் ஆர்த்ரைட்டிஸ்' எனும் கொடிய சீழ்பிடிப்பு நோயினால் தன் தனித்தன்மையை, வடிவத்தை இழந்த தொடை எலும்புகளும் உண்டு. ஆனால், வளர்ந்து வரும் நமது நாட்டில் இது போன்ற நோய்கள் தற்போது குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.
குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ தொடைப் பகுதியிலோ அல்லது காலிலோ வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர், அதை அலட்சியப்படுத்திட வேண்டாம். உடனே தகுந்த டாக்டரிடம் ஆலோசனை செய்வது கட்டாயம்.
கால்கள் பெரும்பாலும் உயரம் குறைந்து மெலிந்து போவதற்கு மிக முக்கிய காரணம் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோதான். இப்போதெல்லாம் நாடு முழுவதும் நடைபெறும் முகாம் மூலம் போலியோ தடுப்பு மருந்து குழந்தைகள் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டுவிடுவதால் வருங்காலத்தில் இந்த கொடிய நோய், பெரியம்மை போல மருத்துவ வரலாற்றில் மட்டும் இடம் பெறும் நோயாக மாறிவிடும்.
அடிபட்டதும் சில சமயம் இதை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். முறையான வைத்தியம் கிடைக்காமல் இந்த பகுதிகள் சரியாக பொருத்தப்படவில்லை என்றால் வளரும் குருத்துகள் தாறுமாறாக கூடிவிடும். இதனால் அந்த காலின் வளர்ச்சி சீராக அமையாமல் குட்டையாகவோ முறுக்கியபடியோ வளர வாய்ப்பு உண்டாகும்.
ஒரு கால் உயரம் குறைவாகவோ, வளைவாகவோ அமைவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. குழந்தைகளுக்கு அதுவும் மூன்று மாதங்களுக்குள் இருப்பவர்களுக்கு இடுப்பு மூட்டில் சீழ்பிடித்து, சரியான நேரத்தில் முறையான சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்றால் தொடை எலும்பின் மேல்பாகமும் அதை சார்ந்த குருத்துப் பகுதிகளும் அழிந்தே போய்விடும்.
இது போன்ற வேதனைகள் கால் மூட்டு சார்ந்த குருத்து மற்றும் கணுக்கால் மூட்டு சார்ந்த குருத்தெலும்பு பகுதிகளிலும் உண்டாகி, அந்த கால் உயரம் குறைவாகவும், சிறுத்தும் போவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
'செப்டிக் ஆர்த்ரைட்டிஸ்' எனும் கொடிய சீழ்பிடிப்பு நோயினால் தன் தனித்தன்மையை, வடிவத்தை இழந்த தொடை எலும்புகளும் உண்டு. ஆனால், வளர்ந்து வரும் நமது நாட்டில் இது போன்ற நோய்கள் தற்போது குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.
குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ தொடைப் பகுதியிலோ அல்லது காலிலோ வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர், அதை அலட்சியப்படுத்திட வேண்டாம். உடனே தகுந்த டாக்டரிடம் ஆலோசனை செய்வது கட்டாயம்.
கால்கள் பெரும்பாலும் உயரம் குறைந்து மெலிந்து போவதற்கு மிக முக்கிய காரணம் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோதான். இப்போதெல்லாம் நாடு முழுவதும் நடைபெறும் முகாம் மூலம் போலியோ தடுப்பு மருந்து குழந்தைகள் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டுவிடுவதால் வருங்காலத்தில் இந்த கொடிய நோய், பெரியம்மை போல மருத்துவ வரலாற்றில் மட்டும் இடம் பெறும் நோயாக மாறிவிடும்.
பெண்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதுபோல் தோன்றும். மனதில் நிம்மதி இருக்காது. அலைபாயும். பல்வேறு விதமாக மனஉளைச்சல் ஏற்படுவதால் தூக்கமின்றி தவிப்பார்கள்.
பழைய காலத்தில் அவர்களுக்கு பெருமளவு வெளிவேலைகள் இருந்ததில்லை. ஆனால் இப்போது பெண்கள் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே அலுவலக வேலைகளுக்கும் செல்கிறார்கள். ஆனாலும், பின் தூங்கி முன் எழ வேண்டியிருக்கிறது.
மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களிலும், மாதவிலக்கு நாட்களிலும் பெண்களின் உடலில் ஹார்மோன்களின் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்போது தொடர்ச்சியாக சில நாட்கள் அவர்களது தூக்கம் பாதிக்கப்படும்.
கர்ப்பிணியாகும் காலகட்டத்திலும் அவர்களது தூக்கத்தில் நெருக்கடி ஏற்படுகிறது. கருவுற்ற மூன்றாவது மாதத்தில் இருந்து இந்த பிரச்சினை உருவாகும். அது ஒன்பதாவது மாதம் வரை நீடிக்கும். கர்ப்பிணிகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தூக்கமின்றி அவதிப்படுவார்கள்.
பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மெனோபாஸ் காலகட்டத்தில்தான் தூக்கமின்மையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். அப்போது உடலில் அதிகமாக சூடு தாக்கும். அடிக்கடி தூங்கவேண்டும் என்பதுபோல் தோன்றும். ஆனால் தொடர்ந்து ஆழ்ந்து தூங்கமுடியாமல் இடைஇடையே விழிப்பு வந்து தொந்தரவு தரும். அப்போது அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதுபோல் தோன்றும். மனதில் நிம்மதி இருக்காது. அலைபாயும். பல்வேறு விதமாக மனஉளைச்சல் ஏற்படுவதால் தூக்கமின்றி தவிப்பார்கள்.
மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களிலும், மாதவிலக்கு நாட்களிலும் பெண்களின் உடலில் ஹார்மோன்களின் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்போது தொடர்ச்சியாக சில நாட்கள் அவர்களது தூக்கம் பாதிக்கப்படும்.
கர்ப்பிணியாகும் காலகட்டத்திலும் அவர்களது தூக்கத்தில் நெருக்கடி ஏற்படுகிறது. கருவுற்ற மூன்றாவது மாதத்தில் இருந்து இந்த பிரச்சினை உருவாகும். அது ஒன்பதாவது மாதம் வரை நீடிக்கும். கர்ப்பிணிகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தூக்கமின்றி அவதிப்படுவார்கள்.
பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மெனோபாஸ் காலகட்டத்தில்தான் தூக்கமின்மையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். அப்போது உடலில் அதிகமாக சூடு தாக்கும். அடிக்கடி தூங்கவேண்டும் என்பதுபோல் தோன்றும். ஆனால் தொடர்ந்து ஆழ்ந்து தூங்கமுடியாமல் இடைஇடையே விழிப்பு வந்து தொந்தரவு தரும். அப்போது அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதுபோல் தோன்றும். மனதில் நிம்மதி இருக்காது. அலைபாயும். பல்வேறு விதமாக மனஉளைச்சல் ஏற்படுவதால் தூக்கமின்றி தவிப்பார்கள்.
படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.
நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டல் பின் எப்படி திருந்துவார்கள்? இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை. உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான்.
இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.
ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது.
படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.
அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.
இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.
ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது.
படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.
அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.
தலைக்கும் முகத்திற்கும் என்ன போட்டு குளித்தாலும் சிறிது நேரத்தில் முகம் டல்லாகிவிடும். இவர்கள் வாரம் இருமுறை தலைக் குளிக்க வெட்டிவேர் பவுடரை உபயோகிக்கலாம். உடனடியாக வித்தியாசம் தெரியும்.
முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. வெட்டிவேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது.
வெட்டிவேர், ஆவாரம் பூ, ரோஜா இதழ்கள், செம்பருத்தி இதழ்கள் ஆகியவற்றை நன்றாக உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தண்ணீரில் குழைத்து பேஸ் பேக் போல முகத்துக்குப் பயன்படுத்த, முகம் பொலிவடையும். வியர்வை நாற்றத்தைத் தடுக்க, குளிக்கும் நீரில் வெட்டிவேரை ஊறவைத்துக் குளிக்கலாம்.
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில், வெட்டிவேர், ஆவாரம் பூ, சடாமஞ்சி போன்ற மூலிகைகளைச் சேர்த்து ஊறவைத்து, முடித் தைலமாக உபயோகிக்க, தலைமுடிக்குக் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும்.
வெட்டிவேரினை சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் முதல்நாள் இரவே கொதிக்கும் நீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் நன்றாக மைய அரைத்து அந்த விழுதினை பருக்கள் மீது மறைப்பதுபோல பூசவும். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது.
பருக்கள் வந்து காய்ந்தாலும் ஒரு சிலருக்கு தழும்புகள் மட்டும் போகாது. இதனாலேயே முகம் கரடு முரடாக மாறிவிடும். அந்த தழும்புகள் மறைய ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.
தலைக்கும் முகத்திற்கும் என்ன போட்டு குளித்தாலும் சிறிது நேரத்தில் முகம் டல்லாகிவிடும். இவர்கள் வாரம் இருமுறை தலைக் குளிக்க வெட்டிவேர் பவுடரை உபயோகிக்கலாம். உடனடியாக வித்தியாசம் தெரியும்.
வெட்டிவேர் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம் சேர்த்து இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள். கூந்தல் வாசனையாக இருக்கும். தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்திற்கு எல்லோருமே மயங்குவார்கள்.
வெட்டிவேர், ஆவாரம் பூ, ரோஜா இதழ்கள், செம்பருத்தி இதழ்கள் ஆகியவற்றை நன்றாக உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தண்ணீரில் குழைத்து பேஸ் பேக் போல முகத்துக்குப் பயன்படுத்த, முகம் பொலிவடையும். வியர்வை நாற்றத்தைத் தடுக்க, குளிக்கும் நீரில் வெட்டிவேரை ஊறவைத்துக் குளிக்கலாம்.
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில், வெட்டிவேர், ஆவாரம் பூ, சடாமஞ்சி போன்ற மூலிகைகளைச் சேர்த்து ஊறவைத்து, முடித் தைலமாக உபயோகிக்க, தலைமுடிக்குக் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும்.
வெட்டிவேரினை சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் முதல்நாள் இரவே கொதிக்கும் நீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் நன்றாக மைய அரைத்து அந்த விழுதினை பருக்கள் மீது மறைப்பதுபோல பூசவும். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது.
பருக்கள் வந்து காய்ந்தாலும் ஒரு சிலருக்கு தழும்புகள் மட்டும் போகாது. இதனாலேயே முகம் கரடு முரடாக மாறிவிடும். அந்த தழும்புகள் மறைய ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.
தலைக்கும் முகத்திற்கும் என்ன போட்டு குளித்தாலும் சிறிது நேரத்தில் முகம் டல்லாகிவிடும். இவர்கள் வாரம் இருமுறை தலைக் குளிக்க வெட்டிவேர் பவுடரை உபயோகிக்கலாம். உடனடியாக வித்தியாசம் தெரியும்.
வெட்டிவேர் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம் சேர்த்து இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள். கூந்தல் வாசனையாக இருக்கும். தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்திற்கு எல்லோருமே மயங்குவார்கள்.
தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். பித்தம் மிகுந்து கல்லீரல் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க வெள்ளரியை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் - 2
தக்காளி - 1 சிறியது
வறுத்த வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
துருவிய தேங்காய் - 1 மேஜைக்கரண்டி
ப.மிளகாய் - 2
உப்பு - ருசிக்கேற்ப
தாளிக்க :
எண்ணெய்,
கடுகு,
கறிவேப்பிலை,
பெருங்காயம்
செய்முறை :
வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துவைக்கவும்.
வெள்ளரிக்காய், வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், ப.மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவைகளை ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அதை அரைத்த கலவையில் கொட்டவும்.
வெள்ளரிக்காய் - 2
தக்காளி - 1 சிறியது
வறுத்த வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
துருவிய தேங்காய் - 1 மேஜைக்கரண்டி
ப.மிளகாய் - 2
உப்பு - ருசிக்கேற்ப
தாளிக்க :
எண்ணெய்,
கடுகு,
கறிவேப்பிலை,
பெருங்காயம்
செய்முறை :
வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துவைக்கவும்.
வெள்ளரிக்காய், வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், ப.மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவைகளை ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அதை அரைத்த கலவையில் கொட்டவும்.
மனதுக்கும், வயிற்றுக்கும் நல்ல திருப்தியான உணர்வைக் கொடுக்கும் இந்தப் புது விதமான சட்னி.
இதையும் படிக்கலாம்...15 நிமிடத்தில் செய்யலாம் அருமையான டிபன்
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள் பற்றியும் சரி செய்யும் விதம் பற்றியும் இங்கே பார்க்கலாம்.
உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்வதும் பலன் இல்லாமல் கவலைப்படுபவர்கள் அதிகம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்படுகிறார்கள். எடையை குறைத்து தொப்பை இல்லாத ஜீரோ சைஸ் வயிறு என்பது பலரது கனவாக இருக்கிறது. இந்த நோக்கத்தில் பல முயற்சிகளை மேற்கொள்ளும் போது நம்மை அறியாமலே ஒரு சில தவறுகளை செய்கிறோம். அதுவே எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாக அமைகிறது.
முதலில் மனது தயாரானதும், எடைக்குறைப்புக்கு உடல் தயாராகுவதற்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் தான் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள் பற்றியும் சரி செய்யும் விதம் பற்றியும் இங்கே பார்க்கலாம்.
சிலர் உண்ணும் உணவை குறைப்பதற்காக வழக்கமாக சாப்பிடும் அளவில் நான்கில் ஒரு பங்கு சாப்பிடுவார்கள். இதனால் பசி அதிகரித்து அவதிப்படுவார்கள். ஒரு கட்டத்தில் கட்டுப்பாடு இல்லாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் பிடித்த உணவை அதிகம் உண்ணாமலும் அதிகம் தவிர்க்காமலும் அளவாக சாப்பிடுங்கள். சிலர் உடல் எடையை குறைப்பதற்காக பழச்சாறு அருந்துவார்கள். ஆனால் பழச்சாறுகள் உடல் எடையை குறைப்பதற்கு உதவுவதை காட்டிலும் அதிக அளவு பசியை தூண்டிவிடும்.
உடல் எடையை வேகமாக குறைப்பதற்காக தொடர்ந்து அதிவேக உடற்பயிற்சியில் ஈடுபடுவ்தும் தவறு. இது உடல் எடை குறைப்புக்கு பதிலாக சோர்வை உண்டாக்கும். மாடிப்படிகளில் ஏறி இறங்குதல், குனிந்து நிமிர்தல், தோப்புக்கரணம் போடுதல் என தினசரி அரைமணி நேரம் எளிமையான பயிற்சிகள் செய்தாலே போதும்.
துரித கொழுப்பு உணவுகளை உடனடியாக தவிர்க்கலாம். உடல் எடையை குறைப்பதற்காக சிலர் உணவை குறைத்துவிட்டு நொறுக்கி தீனிகள் சாப்பிட்டு வயிற்றை நிரப்புவார்கள். இதுவும் எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாகும்.
உணவுக்கட்டுப்பாட்டை ஓரிரு நாட்கள் பின்பற்றிய பிறகு இடையில் இரண்டு நாட்கள் பின்பற்றாமல் இருந்து மீண்டும் தொடர்வது எந்த பலனையும் கொடுக்காது.
எடையை குறைப்பதற்கு கருத்தில் கொள்ள வேண்டிய பிற விஷயங்கள்
7 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம். இரவு உணவு அளவாக இருக்க வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்காமல் அவ்வப்போது எழுந்து நடக்கலாம்.
முதலில் மனது தயாரானதும், எடைக்குறைப்புக்கு உடல் தயாராகுவதற்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் தான் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள் பற்றியும் சரி செய்யும் விதம் பற்றியும் இங்கே பார்க்கலாம்.
சிலர் உண்ணும் உணவை குறைப்பதற்காக வழக்கமாக சாப்பிடும் அளவில் நான்கில் ஒரு பங்கு சாப்பிடுவார்கள். இதனால் பசி அதிகரித்து அவதிப்படுவார்கள். ஒரு கட்டத்தில் கட்டுப்பாடு இல்லாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் பிடித்த உணவை அதிகம் உண்ணாமலும் அதிகம் தவிர்க்காமலும் அளவாக சாப்பிடுங்கள். சிலர் உடல் எடையை குறைப்பதற்காக பழச்சாறு அருந்துவார்கள். ஆனால் பழச்சாறுகள் உடல் எடையை குறைப்பதற்கு உதவுவதை காட்டிலும் அதிக அளவு பசியை தூண்டிவிடும்.
உடல் எடையை வேகமாக குறைப்பதற்காக தொடர்ந்து அதிவேக உடற்பயிற்சியில் ஈடுபடுவ்தும் தவறு. இது உடல் எடை குறைப்புக்கு பதிலாக சோர்வை உண்டாக்கும். மாடிப்படிகளில் ஏறி இறங்குதல், குனிந்து நிமிர்தல், தோப்புக்கரணம் போடுதல் என தினசரி அரைமணி நேரம் எளிமையான பயிற்சிகள் செய்தாலே போதும்.
துரித கொழுப்பு உணவுகளை உடனடியாக தவிர்க்கலாம். உடல் எடையை குறைப்பதற்காக சிலர் உணவை குறைத்துவிட்டு நொறுக்கி தீனிகள் சாப்பிட்டு வயிற்றை நிரப்புவார்கள். இதுவும் எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாகும்.
உணவுக்கட்டுப்பாட்டை ஓரிரு நாட்கள் பின்பற்றிய பிறகு இடையில் இரண்டு நாட்கள் பின்பற்றாமல் இருந்து மீண்டும் தொடர்வது எந்த பலனையும் கொடுக்காது.
எடையை குறைப்பதற்கு கருத்தில் கொள்ள வேண்டிய பிற விஷயங்கள்
7 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம். இரவு உணவு அளவாக இருக்க வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்காமல் அவ்வப்போது எழுந்து நடக்கலாம்.






