என் மலர்
ஆரோக்கியம்
தினமும் காலை எழுந்ததும் ஓர் ஐந்து நிமிடம் இன்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம்.
கோபம் ஏன் வருகிறது? பரிணாமரீதியாக பார்த்தால் இரண்டு காரணங்களை சொல்கிறார்கள் அறிவியலாளர்கள். முதல் காரணம், கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்கு போட்டியாக வருபவர்களை பயமுறுத்தி விரட்டவும் உருவான ஒரு செயல்.
இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக் கொண்டுவர உதவும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கலாம். ஆக, எல்லா கோபத்துக்கு பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது. கோபத்தின்போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கோபம் அதிகம் வரும்போது உணர்வுப்பூர்வமான நிலையில் அறிவுப்பூர்வமாக யோசிக்கும் திறன் வெகுவாக குறைந்து விடுகிறது.
கோபத்தை குறைப்பதற்கும் அடுத்து என்ன செய்யலாம் என அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கும் மூளையில் சில பகுதிகள் உள்ளன. மன அழுத்தம், விபத்து, மூளையில் ஏற்படும் நோய்கள், மது போன்றவை மூளையின் கோபத்தை கட்டுப்படுத்தும் பகுதியை பாதிக்கின்றன. அதனால் சிறு விஷயங்களுக்குக்கூட கட்டுப்படுத்த முடியாமல், ஏன் காரணமே இல்லாமல்கூட கடுங்கோபம் ஏற்படுகிறது. கோபப்படும்போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்தம் எகிறும். இதயம் கண்டபடி துடிக்கும். கோபம் வரும்போது உடல் கொதிக்கத்தான் செய்கிறது. அதனால் தான் ‘ஆறுவது சினம்’ என அவ்வையார் கூறினார்.
அளவுக்கு அதிகமான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை தருகின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஏற்க தொடங்கினாலே பாதி கோபம் குறைந்துவிடும். வீட்டினுள் நுழைந்ததும் நாற்காலி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் ஒருவர். அவ்வாறு இல்லை என்றவுடன் உடனே ஏமாற்றம் வந்து கோபமாக வெடிக்கிறது. இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டால் ஏமாற்றமும் வராது. கோபமும் வராது.
இன்னொரு முக்கியமான விஷயம் கோபம் என்பது அனிச்சையாக நடைபெறும் ஒரு பழக்கம். சூடான பாத்திரத்தை தொட்டவுடன் கை அனிச்சையாக பின்செல்வதுபோல், ஒரு நிகழ்வு நடந்ததும் யோசிக்காமல் அனிச்சையாகக் கோபப்பட்டு பலரும் பழகியிருக்கிறோம். தினமும் காலை எழுந்ததும் ஓர் ஐந்து நிமிடம் இன்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம். ‘ஆத்திரமடையும் ஒவ்வொரு நிமிடமும் நாம் அறுபது விநாடி மகிழ்ச்சியை இழக்கிறோம்’ என எமர்சன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதானே. அதற்காக கோபம் என்பதே கூடாதா எனக் கேட்டால், அதுதான் இல்லை. நியாயமான காரணங்களுக்காக சரியான முறையில் கோபம் கொள்ளவே வேண்டும். அதுதான் உண்மையான நலம் தரும் நான்கெழுத்தான சமநிலை.
இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக் கொண்டுவர உதவும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கலாம். ஆக, எல்லா கோபத்துக்கு பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது. கோபத்தின்போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கோபம் அதிகம் வரும்போது உணர்வுப்பூர்வமான நிலையில் அறிவுப்பூர்வமாக யோசிக்கும் திறன் வெகுவாக குறைந்து விடுகிறது.
கோபத்தை குறைப்பதற்கும் அடுத்து என்ன செய்யலாம் என அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கும் மூளையில் சில பகுதிகள் உள்ளன. மன அழுத்தம், விபத்து, மூளையில் ஏற்படும் நோய்கள், மது போன்றவை மூளையின் கோபத்தை கட்டுப்படுத்தும் பகுதியை பாதிக்கின்றன. அதனால் சிறு விஷயங்களுக்குக்கூட கட்டுப்படுத்த முடியாமல், ஏன் காரணமே இல்லாமல்கூட கடுங்கோபம் ஏற்படுகிறது. கோபப்படும்போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்தம் எகிறும். இதயம் கண்டபடி துடிக்கும். கோபம் வரும்போது உடல் கொதிக்கத்தான் செய்கிறது. அதனால் தான் ‘ஆறுவது சினம்’ என அவ்வையார் கூறினார்.
அளவுக்கு அதிகமான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை தருகின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஏற்க தொடங்கினாலே பாதி கோபம் குறைந்துவிடும். வீட்டினுள் நுழைந்ததும் நாற்காலி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் ஒருவர். அவ்வாறு இல்லை என்றவுடன் உடனே ஏமாற்றம் வந்து கோபமாக வெடிக்கிறது. இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டால் ஏமாற்றமும் வராது. கோபமும் வராது.
இன்னொரு முக்கியமான விஷயம் கோபம் என்பது அனிச்சையாக நடைபெறும் ஒரு பழக்கம். சூடான பாத்திரத்தை தொட்டவுடன் கை அனிச்சையாக பின்செல்வதுபோல், ஒரு நிகழ்வு நடந்ததும் யோசிக்காமல் அனிச்சையாகக் கோபப்பட்டு பலரும் பழகியிருக்கிறோம். தினமும் காலை எழுந்ததும் ஓர் ஐந்து நிமிடம் இன்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம். ‘ஆத்திரமடையும் ஒவ்வொரு நிமிடமும் நாம் அறுபது விநாடி மகிழ்ச்சியை இழக்கிறோம்’ என எமர்சன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதானே. அதற்காக கோபம் என்பதே கூடாதா எனக் கேட்டால், அதுதான் இல்லை. நியாயமான காரணங்களுக்காக சரியான முறையில் கோபம் கொள்ளவே வேண்டும். அதுதான் உண்மையான நலம் தரும் நான்கெழுத்தான சமநிலை.
அரிசி மாவில் ப.மிளகாய், தேங்காய், கொத்தமல்லி சேர்த்து செய்யும் அக்கி ரொட்டி கர்நாடகாவில் மிகவும் பிரபலம். சுவையும் அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி மாவு - கால் கிலோ,
தேங்காய் - ஒரு மூடி,
கொத்தமல்லி - ஒரு கட்டு,
பச்சை மிளகாய் - 4,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - 50 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, சீரகம், உப்பு, துருவிய தேங்காய், கொத்தமல்லி, ப.மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.
ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.
சூப்பரான அக்கி ரொட்டி ரெடி.
இதற்கு தொட்டுக் கொள்ள புதினா/கொத்தமல்லி சட்னி சிறந்தது.
பச்சரிசி மாவு - கால் கிலோ,
தேங்காய் - ஒரு மூடி,
கொத்தமல்லி - ஒரு கட்டு,
பச்சை மிளகாய் - 4,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - 50 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, சீரகம், உப்பு, துருவிய தேங்காய், கொத்தமல்லி, ப.மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.
ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.
சூப்பரான அக்கி ரொட்டி ரெடி.
இதற்கு தொட்டுக் கொள்ள புதினா/கொத்தமல்லி சட்னி சிறந்தது.
விரும்பினால் கேரட், வெள்ளரியைத் துருவி மாவில் சேர்த்துத் தயாரிக்கலாம்.
இதையும் படிக்கலாம்...சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் வாழைத்தண்டு சாலட்
குழந்தையின் பிறந்த நாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள்.
குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்த்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும். நம் குழந்தைகள் நம்மைப் பார்த்தே வளர்கிறார்கள். நம்மிடம் சேமிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களிடமும் அந்தக் குணம் வரும். எனவே, குழந்தைகளுக்குச் சேமிப்பு பழக்கத்தைச் சிறுவயது முதலே கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்.
1. கடைக்குச் சென்றால், குழந்தை கேட்கிறது என்று கண்களில் பட்டதையெல்லாத்தையும் வாங்கக் கூடாது. ஒரு பொருளின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பொறுமையாக உணர்த்த வேண்டும். அதன்பின் அந்தப் பொருள் அவசியமா இல்லையா என்பதைக் குழந்தைகளையே தீர்மானிக்கச் சொல்லுங்கள்.
2. சிறுசேமிப்பு பற்றி குழந்தைகளுக்குக் கதைகளாகவோ, அல்லது அவர்களுக்குப் புரியும் விதத்திலோ கூறி மனதில் ஆழப் பதியவையுங்கள்.
3. சேமிப்பு என்பது காசு பணம் சேமிப்பது மட்டுமல்ல. எந்தப் பொருளானாலும் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவதும் ஒரு வகை சேமிப்பே. பென்சில், ரப்பர் என எந்தப் பொருளை வாங்கினாலும், அதை முழுவதுமாக உபயோகித்த பின்னரே, அடுத்து வாங்க வேண்டும் என்ற உறுதியைக் குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்
4. குழந்தையின் பிறந்தநாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள்
5. பாக்கெட் மணி கலாசாரத்துக்குப் பதில், சேவிங்க்ஸ் மணி கலாச்சாரத்துக்குக் குழந்தையைப் பழக்குங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட வேண்டும் எனச் சொல்லி, மாதம் ஒருமுறை சேமித்த பணத்தைக் குழந்தையைவிட்டே எண்ணிப் பார்த்து உற்சாகப்படுத்துங்கள்.
6. குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.
7. சாக்லேட், பிஸ்கட் என எதுவானாலும் தேவையானதை மட்டுமே எடுத்துச் சாப்பிட பழக்குங்கள். மொத்த பாக்கெட்டையும் கையில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைக்க கற்றுக்கொடுக்கலாம்
8. குழந்தையின் அம்மா அல்லது அப்பாவின் பிறந்த நாளுக்கு, குழந்தை உண்டியலில் சேர்த்துவைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியில் சிறு பரிசை வாங்கிக்கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொள்ளுங்க. அந்தப் பரிசை உறவினர்கள், நண்பர்களிடம் 'என் மகள் / மகன் சேமிப்பில் வாங்கித்தந்தது' எனப் பெருமையாகச் சொல்லுங்கள்.
9. குழந்தைகள், மற்றவர்களுக்குப் பரிசு அளிக்க விரும்பினால், உண்டியலைப் பரிசளிக்க ஊக்கம் அளியுங்கள். இது, அவர்களின் மனதில் சேமிப்புக்கான முக்கியத்துவத்தை உணரவைக்கும்.
1. கடைக்குச் சென்றால், குழந்தை கேட்கிறது என்று கண்களில் பட்டதையெல்லாத்தையும் வாங்கக் கூடாது. ஒரு பொருளின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பொறுமையாக உணர்த்த வேண்டும். அதன்பின் அந்தப் பொருள் அவசியமா இல்லையா என்பதைக் குழந்தைகளையே தீர்மானிக்கச் சொல்லுங்கள்.
2. சிறுசேமிப்பு பற்றி குழந்தைகளுக்குக் கதைகளாகவோ, அல்லது அவர்களுக்குப் புரியும் விதத்திலோ கூறி மனதில் ஆழப் பதியவையுங்கள்.
3. சேமிப்பு என்பது காசு பணம் சேமிப்பது மட்டுமல்ல. எந்தப் பொருளானாலும் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவதும் ஒரு வகை சேமிப்பே. பென்சில், ரப்பர் என எந்தப் பொருளை வாங்கினாலும், அதை முழுவதுமாக உபயோகித்த பின்னரே, அடுத்து வாங்க வேண்டும் என்ற உறுதியைக் குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்
4. குழந்தையின் பிறந்தநாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள்
5. பாக்கெட் மணி கலாசாரத்துக்குப் பதில், சேவிங்க்ஸ் மணி கலாச்சாரத்துக்குக் குழந்தையைப் பழக்குங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட வேண்டும் எனச் சொல்லி, மாதம் ஒருமுறை சேமித்த பணத்தைக் குழந்தையைவிட்டே எண்ணிப் பார்த்து உற்சாகப்படுத்துங்கள்.
6. குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.
7. சாக்லேட், பிஸ்கட் என எதுவானாலும் தேவையானதை மட்டுமே எடுத்துச் சாப்பிட பழக்குங்கள். மொத்த பாக்கெட்டையும் கையில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைக்க கற்றுக்கொடுக்கலாம்
8. குழந்தையின் அம்மா அல்லது அப்பாவின் பிறந்த நாளுக்கு, குழந்தை உண்டியலில் சேர்த்துவைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியில் சிறு பரிசை வாங்கிக்கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொள்ளுங்க. அந்தப் பரிசை உறவினர்கள், நண்பர்களிடம் 'என் மகள் / மகன் சேமிப்பில் வாங்கித்தந்தது' எனப் பெருமையாகச் சொல்லுங்கள்.
9. குழந்தைகள், மற்றவர்களுக்குப் பரிசு அளிக்க விரும்பினால், உண்டியலைப் பரிசளிக்க ஊக்கம் அளியுங்கள். இது, அவர்களின் மனதில் சேமிப்புக்கான முக்கியத்துவத்தை உணரவைக்கும்.
அதிக அளவில் கஞ்சா புகையை உட்கொள்ளத் தொடங்கும்போது வானில் பறப்பது போன்றும், உல்லாச வானில் மிதப்பது போன்றும் சிறிது நேரத்துக்கு இருக்கும்.
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் சூப்பிரண்டும், மனநல மருத்துவத்துறை பேராசிரியருமான டாக்டர் அருள்பிரகாஷ் கஞ்சா போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூறியதாவது:-
கஞ்சா பழக்கத்தை பொறுத்தவரையில் வளர் இளம் பருவம், மாணவர்கள் பருவம் ஆகிய பருவத்தில்தான் தொடங்குகிறது. இவர்கள் முதலில் பரீட்சார்த்த முறையில் இந்த பழக்கத்தை தொடங்குகிறார்கள். அதில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்? என்ற ஆர்வமும், உடன் இருக்கும் நண்பர்களின் அழுத்தமும், எளிதாக கிடைப்பதும் இந்த பழக்கம் தொடங்குவதற்கான முதல் காரணங்களாகும். முதலில் தொடங்கும்போது அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது போன்றும், சிறு, சிறு உடல் வலிகள், மன வலிகள் தெரியாமல் இருப்பது போன்றும் உணர்வுகள் ஏற்படும்.
அதிக அளவில் கஞ்சா புகையை உட்கொள்ளத் தொடங்கும்போது வானில் பறப்பது போன்றும், உல்லாச வானில் மிதப்பது போன்றும் சிறிது நேரத்துக்கு இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக கஞ்சாவை பயன்படுத்தும்போது அது மூளையில் பதிந்து, கஞ்சா இருந்தால்தான் அன்றாட பணிகளை, அலுவல்களை கவனிக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரையில் தொடர்ந்து கஞ்சாவை பயன்படுத்தினாலே இம்மாதிரியான நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். குறைந்தது ஒரு மாதம் எடுத்தாலே கஞ்சாவுக்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகிறது.
ஒரு சிலருக்கு கஞ்சாவை பயன்படுத்த தொடங்கும்போதே சில உடல் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிடும். சிலருக்கு தூக்கக் குறைவு, பசியின்மை, தலைவலி, எரிச்சல், கோபம், போன்ற ஆரம்ப கட்ட அறிகுறிகள் வரலாம். சிலருக்கு ஆரம்ப கட்ட மனநிலை பாதிப்பும், மன அழுத்தமும் ஏற்படலாம். தொடர்ச்சியாக கஞ்சாவை பயன்படுத்தும்போது வேறு எந்த காரியத்திலும் ஆர்வம் இல்லாத நிலையும் வரும். உதாரணமாக படிப்பு, வேலை ஆகியவற்றில் ஆர்வம், நாட்டம் இருக்காது. தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால்கூட அதைக்கூட பொருட்படுத்தாமல் கஞ்சாவை பயன்படுத்துவதில்தான் சம்பந்தப்பட்ட நபர் ஆர்வம் காட்டுவார். அதற்காக திருட்டு போன்ற சிறு, சிறு குற்றச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்கி விடுவார் அந்த நபர்.
கஞ்சா கிடைக்காதபோது அந்த நபர்கள் தூக்கம் இல்லாமல் இருப்பார்கள். தலைவலியுடன் அலைந்து திரிவார்கள். பிறரிடம் எரிச்சலடைவது, தேவையில்லாமல் கோப்படுவது, பதற்றத்துடன் காணப்படுவது, அங்கலாய்ப்புடன் அலைவது, கட்டுப்படுத்த முடியாத ஆசையைக் கொண்டிருப்பது போன்ற செயல்கள் அவர்களிடம் காணப்படும், எதைச் செய்தாவது கஞ்சாவை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர்களிடம் இருக்கும்,
பாதிப்புக்குள்ளாகும் நபர்களில் சில குறிப்பிட்ட சதவீதத்தினர் எந்த உந்துதலும் இல்லாமல் சோர்வான நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதன்பிறகு அவர்களால் படிக்க முடியாது. வேலையில் அக்கறை இருக்காது. குடும்பத்தினர் மீதான பாசம், அக்கறை எதுவும் அவர்களிடம் காண முடியாது. எனவே அவர்கள், குடும்பத்துக்கு தேவையில்லாத நபராகவும், பயனற்ற மனிதராகவும் மாறுவார். இன்னும் அதிகமாகும்போது கஞ்சா எடுப்பதால் ஏற்படும் மனநோய்கள் உருவாகும். அவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாயக்குரல்கள் கேட்பது போல் இருக்கும். தவறான சிந்தனை ஓட்டம் ஆரம்பிக்கும். இல்லாத ஒன்றை இருக்கிறது என்று நம்புவார். எப்போது பார்த்தாலும் தன்னுடைய எதிரி யாரோ இருப்பது போன்றும், போலீஸ் தன்னை தேடி வந்துவிடுவார்களோ? என்பதைப் போன்ற மன பயம் அவர்களுக்கு இருந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட அந்த நபர் மனநோயாளிபோல் மாறிக் கொண்டிருப்பார். ஒரு சிலருக்கு கை, கால் நடுக்கம், தனக்கு எதுவும் ஏற்பட்டு விடுமோ? என்ற கவலை, மன பதற்றம் ஏற்படும். அவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
போதை பழக்க வழக்கங்களில் ஈடுபடுபவர்களில் கஞ்சா போதை பழக்கத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் குறைந்தது 4 சதவீதம் முதல் அதிகபட்சமாக 12 சதவீதம் வரை இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பழக்கம் அதை பயன்படுத்தும் நபரை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். தொடர்ச்சியாக பயன்படுத்தும் நபருக்கு கஞ்சா கிடைக்காதபோதுதான் அவர் வன்முறையில் ஈடுபட்டாவது அதைப்பெற வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. சிந்திக்கிற திறன் அந்த நபருக்கு போய்விடுவதால் அந்த நபர் குற்றச்செயலில் ஈடுபடுகிறார். கஞ்சா பயன்படுத்தும் நபருக்கு உடல் வலிமை அதிகமாகும் என்று சொல்வது தவறு. இதனால் அவர் வலு குறையத்தான் செய்யும். இந்த தவறான போதை பழக்கத்தால் ஒரு தனி மனிதனின் உற்பத்தித் திறன் குறைவதோடு, நாட்டின் உற்பத்தி திறனும் பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு கஞ்சா போதைக்கு அடிமையானவர்களை மனநல மருத்துவம் மூலம் சரிசெய்ய முடியும். அதற்கு அவர்களுடைய ஒத்துழைப்பும் அவசியம். அவர்கள் மனதளவில் இந்த பழக்கத்தைவிட்டு வெளியே வரவேண்டும், சமூகத்தில் தானும் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட வேண்டும். முதலில் இம்மாதிரியானவர்களுக்கு கவுன்சிலிங்தான் எங்களின் முதல் கட்ட மருத்துவமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கஞ்சா பழக்கத்தை பொறுத்தவரையில் வளர் இளம் பருவம், மாணவர்கள் பருவம் ஆகிய பருவத்தில்தான் தொடங்குகிறது. இவர்கள் முதலில் பரீட்சார்த்த முறையில் இந்த பழக்கத்தை தொடங்குகிறார்கள். அதில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்? என்ற ஆர்வமும், உடன் இருக்கும் நண்பர்களின் அழுத்தமும், எளிதாக கிடைப்பதும் இந்த பழக்கம் தொடங்குவதற்கான முதல் காரணங்களாகும். முதலில் தொடங்கும்போது அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது போன்றும், சிறு, சிறு உடல் வலிகள், மன வலிகள் தெரியாமல் இருப்பது போன்றும் உணர்வுகள் ஏற்படும்.
அதிக அளவில் கஞ்சா புகையை உட்கொள்ளத் தொடங்கும்போது வானில் பறப்பது போன்றும், உல்லாச வானில் மிதப்பது போன்றும் சிறிது நேரத்துக்கு இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக கஞ்சாவை பயன்படுத்தும்போது அது மூளையில் பதிந்து, கஞ்சா இருந்தால்தான் அன்றாட பணிகளை, அலுவல்களை கவனிக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரையில் தொடர்ந்து கஞ்சாவை பயன்படுத்தினாலே இம்மாதிரியான நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். குறைந்தது ஒரு மாதம் எடுத்தாலே கஞ்சாவுக்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகிறது.
ஒரு சிலருக்கு கஞ்சாவை பயன்படுத்த தொடங்கும்போதே சில உடல் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிடும். சிலருக்கு தூக்கக் குறைவு, பசியின்மை, தலைவலி, எரிச்சல், கோபம், போன்ற ஆரம்ப கட்ட அறிகுறிகள் வரலாம். சிலருக்கு ஆரம்ப கட்ட மனநிலை பாதிப்பும், மன அழுத்தமும் ஏற்படலாம். தொடர்ச்சியாக கஞ்சாவை பயன்படுத்தும்போது வேறு எந்த காரியத்திலும் ஆர்வம் இல்லாத நிலையும் வரும். உதாரணமாக படிப்பு, வேலை ஆகியவற்றில் ஆர்வம், நாட்டம் இருக்காது. தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால்கூட அதைக்கூட பொருட்படுத்தாமல் கஞ்சாவை பயன்படுத்துவதில்தான் சம்பந்தப்பட்ட நபர் ஆர்வம் காட்டுவார். அதற்காக திருட்டு போன்ற சிறு, சிறு குற்றச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்கி விடுவார் அந்த நபர்.
கஞ்சா கிடைக்காதபோது அந்த நபர்கள் தூக்கம் இல்லாமல் இருப்பார்கள். தலைவலியுடன் அலைந்து திரிவார்கள். பிறரிடம் எரிச்சலடைவது, தேவையில்லாமல் கோப்படுவது, பதற்றத்துடன் காணப்படுவது, அங்கலாய்ப்புடன் அலைவது, கட்டுப்படுத்த முடியாத ஆசையைக் கொண்டிருப்பது போன்ற செயல்கள் அவர்களிடம் காணப்படும், எதைச் செய்தாவது கஞ்சாவை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர்களிடம் இருக்கும்,
பாதிப்புக்குள்ளாகும் நபர்களில் சில குறிப்பிட்ட சதவீதத்தினர் எந்த உந்துதலும் இல்லாமல் சோர்வான நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதன்பிறகு அவர்களால் படிக்க முடியாது. வேலையில் அக்கறை இருக்காது. குடும்பத்தினர் மீதான பாசம், அக்கறை எதுவும் அவர்களிடம் காண முடியாது. எனவே அவர்கள், குடும்பத்துக்கு தேவையில்லாத நபராகவும், பயனற்ற மனிதராகவும் மாறுவார். இன்னும் அதிகமாகும்போது கஞ்சா எடுப்பதால் ஏற்படும் மனநோய்கள் உருவாகும். அவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாயக்குரல்கள் கேட்பது போல் இருக்கும். தவறான சிந்தனை ஓட்டம் ஆரம்பிக்கும். இல்லாத ஒன்றை இருக்கிறது என்று நம்புவார். எப்போது பார்த்தாலும் தன்னுடைய எதிரி யாரோ இருப்பது போன்றும், போலீஸ் தன்னை தேடி வந்துவிடுவார்களோ? என்பதைப் போன்ற மன பயம் அவர்களுக்கு இருந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட அந்த நபர் மனநோயாளிபோல் மாறிக் கொண்டிருப்பார். ஒரு சிலருக்கு கை, கால் நடுக்கம், தனக்கு எதுவும் ஏற்பட்டு விடுமோ? என்ற கவலை, மன பதற்றம் ஏற்படும். அவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
போதை பழக்க வழக்கங்களில் ஈடுபடுபவர்களில் கஞ்சா போதை பழக்கத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் குறைந்தது 4 சதவீதம் முதல் அதிகபட்சமாக 12 சதவீதம் வரை இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பழக்கம் அதை பயன்படுத்தும் நபரை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். தொடர்ச்சியாக பயன்படுத்தும் நபருக்கு கஞ்சா கிடைக்காதபோதுதான் அவர் வன்முறையில் ஈடுபட்டாவது அதைப்பெற வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. சிந்திக்கிற திறன் அந்த நபருக்கு போய்விடுவதால் அந்த நபர் குற்றச்செயலில் ஈடுபடுகிறார். கஞ்சா பயன்படுத்தும் நபருக்கு உடல் வலிமை அதிகமாகும் என்று சொல்வது தவறு. இதனால் அவர் வலு குறையத்தான் செய்யும். இந்த தவறான போதை பழக்கத்தால் ஒரு தனி மனிதனின் உற்பத்தித் திறன் குறைவதோடு, நாட்டின் உற்பத்தி திறனும் பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு கஞ்சா போதைக்கு அடிமையானவர்களை மனநல மருத்துவம் மூலம் சரிசெய்ய முடியும். அதற்கு அவர்களுடைய ஒத்துழைப்பும் அவசியம். அவர்கள் மனதளவில் இந்த பழக்கத்தைவிட்டு வெளியே வரவேண்டும், சமூகத்தில் தானும் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட வேண்டும். முதலில் இம்மாதிரியானவர்களுக்கு கவுன்சிலிங்தான் எங்களின் முதல் கட்ட மருத்துவமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழில் தற்போது பிரபலம் ஆகி வருகிறது. இது, பெண்களுக்கு ஏற்ற சிறந்த தொழில் ஆகும்.
பண்டைகாலத்தில் மாடுகள் மூலம் செக்கிழுத்து எண்ணெய் தயாரிக்கப்பட்டது. இதனால் நம் முன்னோர் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் காலப்போக்கில் செக்குகள் காணாமல் போய் விட்டன. அதாவது, செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கப்படும் முறை அழிந்து போனது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை பயன்படுத்தியதன் விளைவாக, பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் தற்போது மீண்டும் பழைய முறையில் தயராகும் எண்ணெய்களை பயன்படுத்த மக்கள் தொடங்கி விட்டனர். அதன்படி கல் செக்கு, மரச்செக்குகளால் தயாரிக்கப்படுகிற எண்ணெய் வகைகளை பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.
எனவே மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழில் தற்போது பிரபலம் ஆகி வருகிறது. இது, பெண்களுக்கு ஏற்ற சிறந்த தொழில் ஆகும். வீட்டில் ஒரு அறையை தேர்ந்தெடுத்து கூட மரச்செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கலாம். தொழில் தொடங்க இருக்கும் இடத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வேறு யாரும் மரச்செக்கு வைத்துள்ளார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களை பாதிக்காத வண்ணம் உற்பத்தி அளவு அறிந்து, மக்கள் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட எல்லையை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தொழில் ஆரம்பிக்கும் இடத்தில் மின்சார வசதி எப்படி உள்ளது என்று முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்ளுங்கள். இதற்கு காரணம், எண்ணெய் செக்கினை இயக்க 3 எச்.பி. மோட்டார் வேண்டும். ஒரு செக்குக்கு 10-க்கு 15 அடி இடமாவது அவசியம் தேவை. தேங்காய், எள் போன்றவற்றை வெயிலில் காய வைக்க இடவசதி இருக்க வேண்டும்.
செக்கு எந்திரத்தின் விலை சுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை ஆகும் நல்லெண்ணெய்க்கும், கடலை எண்ணெய்க்கும் 1 லிட்டர் எண்ணெய் எடுக்க சுமார் 2 3/4 கிலோ முதல் 3 கிலோ மூலப்பொருட்கள் தேவைப்படும். பொருளின் தரத்திற்கேற்ப இந்த அளவுகள் மாறுபடும். ஒரு நாளைக்கு 80 கிலோ கடலையை செக்கில் போட்டு ஆட்டினால், சுமார் 30 கிலோ எண்ணெய் மற்றும் 50 கிலோ புண்ணாக்கு கிடைக்கும்.
நாம் கலப்படமின்றி, தரமான மூலப்பொருட்களை போட்டு எண்ணெய் உற்பத்தி செய்யும்போது அதிக விலைக்கே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உதாரணமாக 1 லிட்டர் கடலை எண்ணெய் சந்தையில் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால், நாம் ரூ.250-க்கு விற்க வேண்டியிருக்கும். குறைந்த விலையில் தரமற்ற எண்ணெய்யை வாங்கி கொண்டிருக்கும் மக்களிடம் நம்முடைய எண்ணெய்யின் தரத்தை எடுத்துக்கூறி வாங்க வைக்க வேண்டும். இதில் தான் நம்முடைய தொழில் ரகசியம் உள்ளது.
மக்களுடன் நேரடியாக தொடர்பு வைத்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றாற்போல எண்ணெய் தயாரித்து கொடுக்க வேண்டும். நம்முடைய பொருளின் தரத்தையும் தெரியப்படுத்தலாம். இதனால் மக்களுக்கும், நமக்குமான தொடர்பு எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் வெளிப்படையாக இருக்க வேண்டும். மக்கள் சந்தேகங்கள் கேட்டால் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி தெளிவு படுத்தவேண்டும்.
மரச்செக்கால் எண்ணெய் தயாரிக்கும்போது, முழுமையாக எண்ணெயை விதைகளில் இருந்து பிரிக்க முடியாது. 100-க்கு 80 சதவீதம் எண்ணெயை தான் பிழிந்து எடுக்க முடியும். மீதமுள்ள 20 சதவீதம் எண்ணெய் சத்துக்கள் புண்ணாக்கில் தான் இருக்கும். நியாயமாக பார்த்தால் இதுதான் சரியானது. ஏனெனில், நமக்கு 80 சதவிகிதமும் இதை சாப்பிடும் மாட்டுக்கு 20 சதவீதமும் சத்துக்கள் கிடைக்கும்.
இந்த புண்ணாக்கை சாப்பிடும் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எண்ணையை உட்கொள்வதன் மூலம் நம்முடைய உடல் நலமும் ஆரோக்கியமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. மரச்செக்கு மூலம் எண்ணெய் தயாரிப்பதன் மூலம் குறைந்த பட்சம் மாதத்துக்கு ரூ. 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம். மகளிர் மட்டுமின்றி வேலையில்லாத இளைஞர்களுக்கும் இது ஒரு சிறந்த தொழில் ஆகும்.
எனவே மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழில் தற்போது பிரபலம் ஆகி வருகிறது. இது, பெண்களுக்கு ஏற்ற சிறந்த தொழில் ஆகும். வீட்டில் ஒரு அறையை தேர்ந்தெடுத்து கூட மரச்செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கலாம். தொழில் தொடங்க இருக்கும் இடத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வேறு யாரும் மரச்செக்கு வைத்துள்ளார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களை பாதிக்காத வண்ணம் உற்பத்தி அளவு அறிந்து, மக்கள் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட எல்லையை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தொழில் ஆரம்பிக்கும் இடத்தில் மின்சார வசதி எப்படி உள்ளது என்று முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்ளுங்கள். இதற்கு காரணம், எண்ணெய் செக்கினை இயக்க 3 எச்.பி. மோட்டார் வேண்டும். ஒரு செக்குக்கு 10-க்கு 15 அடி இடமாவது அவசியம் தேவை. தேங்காய், எள் போன்றவற்றை வெயிலில் காய வைக்க இடவசதி இருக்க வேண்டும்.
செக்கு எந்திரத்தின் விலை சுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை ஆகும் நல்லெண்ணெய்க்கும், கடலை எண்ணெய்க்கும் 1 லிட்டர் எண்ணெய் எடுக்க சுமார் 2 3/4 கிலோ முதல் 3 கிலோ மூலப்பொருட்கள் தேவைப்படும். பொருளின் தரத்திற்கேற்ப இந்த அளவுகள் மாறுபடும். ஒரு நாளைக்கு 80 கிலோ கடலையை செக்கில் போட்டு ஆட்டினால், சுமார் 30 கிலோ எண்ணெய் மற்றும் 50 கிலோ புண்ணாக்கு கிடைக்கும்.
நாம் கலப்படமின்றி, தரமான மூலப்பொருட்களை போட்டு எண்ணெய் உற்பத்தி செய்யும்போது அதிக விலைக்கே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உதாரணமாக 1 லிட்டர் கடலை எண்ணெய் சந்தையில் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால், நாம் ரூ.250-க்கு விற்க வேண்டியிருக்கும். குறைந்த விலையில் தரமற்ற எண்ணெய்யை வாங்கி கொண்டிருக்கும் மக்களிடம் நம்முடைய எண்ணெய்யின் தரத்தை எடுத்துக்கூறி வாங்க வைக்க வேண்டும். இதில் தான் நம்முடைய தொழில் ரகசியம் உள்ளது.
மக்களுடன் நேரடியாக தொடர்பு வைத்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றாற்போல எண்ணெய் தயாரித்து கொடுக்க வேண்டும். நம்முடைய பொருளின் தரத்தையும் தெரியப்படுத்தலாம். இதனால் மக்களுக்கும், நமக்குமான தொடர்பு எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் வெளிப்படையாக இருக்க வேண்டும். மக்கள் சந்தேகங்கள் கேட்டால் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி தெளிவு படுத்தவேண்டும்.
மரச்செக்கால் எண்ணெய் தயாரிக்கும்போது, முழுமையாக எண்ணெயை விதைகளில் இருந்து பிரிக்க முடியாது. 100-க்கு 80 சதவீதம் எண்ணெயை தான் பிழிந்து எடுக்க முடியும். மீதமுள்ள 20 சதவீதம் எண்ணெய் சத்துக்கள் புண்ணாக்கில் தான் இருக்கும். நியாயமாக பார்த்தால் இதுதான் சரியானது. ஏனெனில், நமக்கு 80 சதவிகிதமும் இதை சாப்பிடும் மாட்டுக்கு 20 சதவீதமும் சத்துக்கள் கிடைக்கும்.
இந்த புண்ணாக்கை சாப்பிடும் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எண்ணையை உட்கொள்வதன் மூலம் நம்முடைய உடல் நலமும் ஆரோக்கியமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. மரச்செக்கு மூலம் எண்ணெய் தயாரிப்பதன் மூலம் குறைந்த பட்சம் மாதத்துக்கு ரூ. 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம். மகளிர் மட்டுமின்றி வேலையில்லாத இளைஞர்களுக்கும் இது ஒரு சிறந்த தொழில் ஆகும்.
நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க தினமும் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - 50 கிராம்,
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 20 கிராம்,
மோர், கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் சிறிது நேரம் ஊறவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த வாழைத்தண்டு, முளைகட்டிய பச்சைப்பயறு, கொத்தமல்லி, சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, தேங்காய்த்துருவல், உப்பு அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.
வாழைத்தண்டு - 50 கிராம்,
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 20 கிராம்,
மோர், கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் சிறிது நேரம் ஊறவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த வாழைத்தண்டு, முளைகட்டிய பச்சைப்பயறு, கொத்தமல்லி, சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, தேங்காய்த்துருவல், உப்பு அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.
சூப்பரான சத்தான வாழைத்தண்டு சாலட் ரெடி.
உங்கள் வீட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த 11 வகையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதன் மூலம் பிறக்க போகும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் என மொத்தம் 11 வகையான சத்துகள், கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படுகின்றன. எனவே அது மாதிரியான சத்து வகைகளை கர்ப்பிணிகள் உணவாக கொள்ளவேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் ரத்த சோகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து கிடைக்க தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை வெல்லம் கலந்த உணவு சாப்பிட்டால் நல்லது. அவ்வப்போது முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் சுண்டைக்காய், பாகற்காய், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் மூலம் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும். கர்ப்ப காலத்தில் காபி, டீ குடிப்பதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச்சத்தை கிரகிக்க முடியாமல் காபி, டீ போன்றவை தடுத்து விடுகின்றன. அதே நேரத்தில் டீ, காபிக்கு பதிலாக கர்ப்பிணிகள் பால் குடிப்பது மிகவும் நல்லது.
பால், பருப்புகள், காய்கறிகள், முட்டைகள் ஆகியவற்றில் இருந்து புரதச்சத்து கிடைக்கும். பச்சை காய்கறிகளை சமைக்கும் போது அவற்றில் போலிக் அமில சத்து வெளியேறி விடுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் நல்லதாகும். உங்கள் வீட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த 11 வகையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதன் மூலம் பிறக்க போகும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம் தானே!
மேலும் சுண்டைக்காய், பாகற்காய், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் மூலம் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும். கர்ப்ப காலத்தில் காபி, டீ குடிப்பதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச்சத்தை கிரகிக்க முடியாமல் காபி, டீ போன்றவை தடுத்து விடுகின்றன. அதே நேரத்தில் டீ, காபிக்கு பதிலாக கர்ப்பிணிகள் பால் குடிப்பது மிகவும் நல்லது.
பால், பருப்புகள், காய்கறிகள், முட்டைகள் ஆகியவற்றில் இருந்து புரதச்சத்து கிடைக்கும். பச்சை காய்கறிகளை சமைக்கும் போது அவற்றில் போலிக் அமில சத்து வெளியேறி விடுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் நல்லதாகும். உங்கள் வீட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த 11 வகையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதன் மூலம் பிறக்க போகும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம் தானே!
சமீபகாலமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்றவைதான்.
தரமற்ற அழகு சாதன பொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது அவற்றில் கலந்திருக்கும் ரசாயன பொருட்கள், பலவித சரும நோய்களை உருவாகக்கூடியவை.
முகப்பரு, முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வறண்ட சருமம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் முதல் மருந்து நாம் உட்கொள்ளும் உணவுதான்.
பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்றாலும் முதலில் உடலை நன்றாக பராமரிக்க வேண்டும். கூந்தல், உடல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. ஒற்றை முடியின் நீளத்தையும் அடர்த்தியையும் வைத்தே நம் உடலின் புரதச்சத்து, நீர்ச்சத்து ஆகியவற்றின் அளவை கணக்கிட முடியுமாம்.
சமீபகாலமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்றவைதான். ஏ.சி அறையில் பல மணி நேரம் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.
பூசணிக்காய், கேரட், முள்ளங்கி, கீரை வகைகள், தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும், நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் இயற்கை வழியிலேயே இந்த சிக்கல்களை எளிமையாகச் சரிசெய்ய முடியும் என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.
மேலும் பல உடல் உபாதைகளுக்கு மனஅழுத்தம்தான் காரணம், என்றும் கூறுகிறார்கள்.
உடல் பராமரிப்பின் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. தெளிவான புரிதலுடன் சருமத்தையும், கூந்தலையும் பராமரிக்கும்போது உடல் அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேரப் பெற முடியும்.
முகப்பரு, முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வறண்ட சருமம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் முதல் மருந்து நாம் உட்கொள்ளும் உணவுதான்.
பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்றாலும் முதலில் உடலை நன்றாக பராமரிக்க வேண்டும். கூந்தல், உடல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. ஒற்றை முடியின் நீளத்தையும் அடர்த்தியையும் வைத்தே நம் உடலின் புரதச்சத்து, நீர்ச்சத்து ஆகியவற்றின் அளவை கணக்கிட முடியுமாம்.
சமீபகாலமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்றவைதான். ஏ.சி அறையில் பல மணி நேரம் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.
பூசணிக்காய், கேரட், முள்ளங்கி, கீரை வகைகள், தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும், நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் இயற்கை வழியிலேயே இந்த சிக்கல்களை எளிமையாகச் சரிசெய்ய முடியும் என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.
மேலும் பல உடல் உபாதைகளுக்கு மனஅழுத்தம்தான் காரணம், என்றும் கூறுகிறார்கள்.
உடல் பராமரிப்பின் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. தெளிவான புரிதலுடன் சருமத்தையும், கூந்தலையும் பராமரிக்கும்போது உடல் அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேரப் பெற முடியும்.
மாதவிடாய் வலியை குறைப்பதற்காக அடிக்கடி மருந்துகள் சாப்பிடுவது, காற்றோட்டமில்லாத ஆடைகள் அணிவது போன்றவற்றால் கர்ப்பப்பை பாதிக்கும் அபாயம் உள்ளது.
பெண்கள் மாதவிடாய் ஏற்படும் நாட்களில் உடல் சார்ந்த சிரமங்களை மட்டுமில்லாமல் மன ரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். மன அழுத்தம், சோகம், அழுகை, மகிழ்ச்சி போன்ற மனநலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மாதவிடாய் காலங்களில் பெண்களை அதிகமாக பாதிக்கின்றன.
மாதவிடாய் சுழற்சி தொடங்குவது முதல் கருவுறுதல், மகப்பேறு மற்றும் மாதவிடாய் சுழற்சி நிற்பது வரையிலான காலகட்டங்களில் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன்களின் சுரப்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக உடல் ரீதியாக பல பிரச்சனைகள் உருவாகக்கூடும். அவை குறித்து இங்கே பார்க்கலாம்.
மாதவிடாய் சார்ந்த மன அழுத்தம்.
பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மாதவிடாய் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை பி.எம்.எஸ் என குறிப்பிடுகிறோம். இதன் அறிகுறிகள் மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பாக தொடங்கி ரத்தப்போக்கு தொடங்கிய பின் படிப்படியாக குறையும். வயது அதிகரிக்கும் போது இதன் தன்மை மாறுபடும்.
உணவுப்பழக்கங்களும், வாழ்க்கை முறையும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையவை. எண்ணெய்யில் பொரித்த பண்டங்களை அதிகமாக சாப்பிடுவது, உடல் பருமன், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது போதிய தூக்கமின்மை அதிக மனஅழுத்தம் ஆகியவை பி. எம்.எஸ் வீரியத்தை அதிகரிக்கும். இதை தவிர்ப்பதற்காக சீரான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை, மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தேவையற்ற கோபத்தை கட்டுப்படுத்துவது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் ஹார்மோன்களின் சுரப்பு சீராகும்.
ஒழுங்கற்ற மாதவிடாய்
உடல்பருமன், தைராய்டு குறைபாடு, நேரம் தவறி உண்ணுதல், அதிக அளவு உடற்பயிற்சி போன்ற காரணங்களால் மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு ஏற்படும். இதனால் குழந்தைப்பேறு தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது. ஆரம்ப நிலையிலேயே இந்த பிரச்சனையை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனையுடன் தக்க சிகிச்சைகளை மேற்கொண்டால் மாதவிடாய் சுழற்சியை சீராக்க முடியும்.
அதிக வயிற்று வலி
மாதவிடாய்க்கு சில நாட்கள் முன்பாக ஆரம்பித்து மாதவிடாய் முடிந்த சில நாட்கள் வரை சிலருக்கு அதிகமான வயிற்று வலி ஏற்படலாம். வலியை குறைப்பதற்காக அடிக்கடி மருந்துகள் சாப்பிடுவது, காற்றோட்டமில்லாத ஆடைகள் அணிவது போன்றவற்றால் கர்ப்பப்பை பாதிக்கும் அபாயம் உள்ளது.
அதைத் தடுப்பதற்கு நீர்ச்சத்துள்ள காய்கறி, பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். மாதுளம் பழம் துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
அதிக ரத்தப்போக்கு
மாதவிடாய் காலத்தில் சிலருக்கு 7 முதல் 10 நாட்கள் வரை ரத்தப்போக்கு நீடிக்கும். இதனால் உடல் மிகவும் சோர்ந்து போகும். எந்த வேலையிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். இந்த அறிகுறிகள் உள்ள பெண்கள், ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.
மாதவிடாய் சுழற்சி தொடங்குவது முதல் கருவுறுதல், மகப்பேறு மற்றும் மாதவிடாய் சுழற்சி நிற்பது வரையிலான காலகட்டங்களில் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன்களின் சுரப்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக உடல் ரீதியாக பல பிரச்சனைகள் உருவாகக்கூடும். அவை குறித்து இங்கே பார்க்கலாம்.
மாதவிடாய் சார்ந்த மன அழுத்தம்.
பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மாதவிடாய் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை பி.எம்.எஸ் என குறிப்பிடுகிறோம். இதன் அறிகுறிகள் மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பாக தொடங்கி ரத்தப்போக்கு தொடங்கிய பின் படிப்படியாக குறையும். வயது அதிகரிக்கும் போது இதன் தன்மை மாறுபடும்.
உணவுப்பழக்கங்களும், வாழ்க்கை முறையும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையவை. எண்ணெய்யில் பொரித்த பண்டங்களை அதிகமாக சாப்பிடுவது, உடல் பருமன், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது போதிய தூக்கமின்மை அதிக மனஅழுத்தம் ஆகியவை பி. எம்.எஸ் வீரியத்தை அதிகரிக்கும். இதை தவிர்ப்பதற்காக சீரான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை, மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தேவையற்ற கோபத்தை கட்டுப்படுத்துவது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் ஹார்மோன்களின் சுரப்பு சீராகும்.
ஒழுங்கற்ற மாதவிடாய்
உடல்பருமன், தைராய்டு குறைபாடு, நேரம் தவறி உண்ணுதல், அதிக அளவு உடற்பயிற்சி போன்ற காரணங்களால் மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு ஏற்படும். இதனால் குழந்தைப்பேறு தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது. ஆரம்ப நிலையிலேயே இந்த பிரச்சனையை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனையுடன் தக்க சிகிச்சைகளை மேற்கொண்டால் மாதவிடாய் சுழற்சியை சீராக்க முடியும்.
அதிக வயிற்று வலி
மாதவிடாய்க்கு சில நாட்கள் முன்பாக ஆரம்பித்து மாதவிடாய் முடிந்த சில நாட்கள் வரை சிலருக்கு அதிகமான வயிற்று வலி ஏற்படலாம். வலியை குறைப்பதற்காக அடிக்கடி மருந்துகள் சாப்பிடுவது, காற்றோட்டமில்லாத ஆடைகள் அணிவது போன்றவற்றால் கர்ப்பப்பை பாதிக்கும் அபாயம் உள்ளது.
அதைத் தடுப்பதற்கு நீர்ச்சத்துள்ள காய்கறி, பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். மாதுளம் பழம் துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
அதிக ரத்தப்போக்கு
மாதவிடாய் காலத்தில் சிலருக்கு 7 முதல் 10 நாட்கள் வரை ரத்தப்போக்கு நீடிக்கும். இதனால் உடல் மிகவும் சோர்ந்து போகும். எந்த வேலையிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். இந்த அறிகுறிகள் உள்ள பெண்கள், ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.
தற்காலிக முகப்பொலிவை மட்டும் தராமல் நிரந்தரத்தீர்வையும் இயற்கையான முறையில் கொடுக்கக்கூடிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.
சருமம் முழுவதும் சீரான நிறத்தை பெறுவதற்காக பலவித அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகிறோம். இவற்றுள் பெரும்பாலானவை குறுகிய கால வெளிப்புற அழகை மட்டுமே வழங்கும் தன்மை கொண்டவையாகும். தற்காலிக முகப்பொலிவை மட்டும் தராமல் நிரந்தரத்தீர்வையும் இயற்கையான முறையில் கொடுக்கக்கூடிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.
ஆப்பிள், பீட்ரூட், கேரட் பானம் :
* 1 ஆப்பிள், அரை பீட்ரூட், 1 கேரட், சிறிய இஞ்சித்துண்டு போன்றவைற்றை சேர்த்து அரைத்து அதில் 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தினமும்காலையில் பருகலாம். இந்த பானம் உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து மேனியை பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது.
* 3 தேக்கரண்டி கோதுமை மாவு, 2 தேக்கரண்டி தயிர், 1 தேக்கரண்டி கஸ்துரி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பளபளப்பாகும்.
* 4 தேக்கரண்டி சர்க்கரை, 2 தேக்கரண்டி காபி தூள், 2 தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து உடல் முழுவதும் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சீரான நிறத்தை பெற முடியும். சருமமும் மென்மையாகும்.
* 3 தேக்கரண்டி அரிசி மாவு, 5 தேக்கரண்டி கேரட்சாறு, 6 தேக்கரண்டி பால் சேர்த்து கலந்து குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சருமம் பொலிவு பெறும்.
* வெட்டி வேர் 50 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ 25 கிராம், உலர்ந்த மகிழம் பூ 50 கிராம், கஸ்துரி மஞ்சள் 50 கிராம், பூலான் கிழங்கு 50 கிராம், கோரைக்கிழங்கு 50 கிராம், வேப்பிலை பொடி 20 கிராம், இவற்றை பொடியாக அரைத்து கொள்ளவும். 100 கிராம் பச்சை பயிறு, உலர்ந்த ரோஜா இதழ்கள் 20, உலர்ந்த ஆரஞ்சு தோல் 30 கிராம் ஆகிய மூன்றையும் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். தினமும் குளிக்கும் போது இரண்டு கலவையையும் முறையே 2 தேக்கரண்டி மற்றும் 1 தேக்கரண்டி அளவுக்கு எடுத்து பன்னீருடன் கலந்து உடல் முழுவதும் பூசி 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதன் மூலம் உடல் முழுவதும் சருமம் சீரான நிறம் பெறும்.
ஆப்பிள், பீட்ரூட், கேரட் பானம் :
* 1 ஆப்பிள், அரை பீட்ரூட், 1 கேரட், சிறிய இஞ்சித்துண்டு போன்றவைற்றை சேர்த்து அரைத்து அதில் 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தினமும்காலையில் பருகலாம். இந்த பானம் உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து மேனியை பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது.
* 3 தேக்கரண்டி கோதுமை மாவு, 2 தேக்கரண்டி தயிர், 1 தேக்கரண்டி கஸ்துரி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பளபளப்பாகும்.
* 4 தேக்கரண்டி சர்க்கரை, 2 தேக்கரண்டி காபி தூள், 2 தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து உடல் முழுவதும் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சீரான நிறத்தை பெற முடியும். சருமமும் மென்மையாகும்.
* 3 தேக்கரண்டி அரிசி மாவு, 5 தேக்கரண்டி கேரட்சாறு, 6 தேக்கரண்டி பால் சேர்த்து கலந்து குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சருமம் பொலிவு பெறும்.
* வெட்டி வேர் 50 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ 25 கிராம், உலர்ந்த மகிழம் பூ 50 கிராம், கஸ்துரி மஞ்சள் 50 கிராம், பூலான் கிழங்கு 50 கிராம், கோரைக்கிழங்கு 50 கிராம், வேப்பிலை பொடி 20 கிராம், இவற்றை பொடியாக அரைத்து கொள்ளவும். 100 கிராம் பச்சை பயிறு, உலர்ந்த ரோஜா இதழ்கள் 20, உலர்ந்த ஆரஞ்சு தோல் 30 கிராம் ஆகிய மூன்றையும் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். தினமும் குளிக்கும் போது இரண்டு கலவையையும் முறையே 2 தேக்கரண்டி மற்றும் 1 தேக்கரண்டி அளவுக்கு எடுத்து பன்னீருடன் கலந்து உடல் முழுவதும் பூசி 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதன் மூலம் உடல் முழுவதும் சருமம் சீரான நிறம் பெறும்.
குழந்தைகள் முதல் முதியோர் வரை யாரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் அதிக அளவில் சிறுவர், சிறுமிகளை இது பாதிக்கிறது.
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்கு தோலில் தோன்றும் நோய்களுள் ‘பங்கஸ்’ என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம்.
மக்கள்தொகை பெருக்கம், பொதுசுகாதார-சுத்த குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. தோலில் ஏற்படுகிற காளான் நோய்களில் முதலிடம் பெறுவது தேமல் நோய். ‘மலேசேசியாபர்பர்’ எனும் கிருமியால் இந்த பாதிப்பு உண்டாகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர் வரை யாரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது.
மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாக படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் படையைச் சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படுவதும் சிறிதளவு அரிப்பு ஏற்படுவதும் இயல்பு. வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டு வருபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் அடிக்கடி தொல்லை தரும்.
இன்றைய நவீன மருத்துவத்தில் தேமலைப் போக்கப் பலதரப்பட்ட களிம்புகள், வியர்வையை உறிஞ்சும் மருந்து கலந்த பவுடர்கள், மாத்திரைகள், நடைமுறையில் உள்ளன.
காளான் கிருமிகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடத்திலும் வசிக்கக்கூடியவை. எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடமிருந்தும் இது பரவ வாய்ப்புள்ளது. அசுத்தமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது மண்ணிலிருந்து கிருமிகள் பரவி நோய் வருவதுண்டு.
காளான் நோய்க்கு ‘டீனியா தொற்று’ என்பது மருத்துவப் பெயர். இதை ஏற்படுத்தும் கிருமிகள் பல. அவற்றுள் மைக்ரோஸ்போரம், டிரைகோபைட்டன், எபிடெர்மோபைட்டன் முக்கியமானவை. முதல் இரண்டு கிருமிகள் தோலையும் முடியையும் பாதிக்கின்றன. மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கிருமி தோலையும் நகங்களையும் பாதிக்கக்கூடியவை. இந்தக் கிருமிகள் பாதிக்கிற இடத்தைப் பொறுத்து நோயின் பெயர் மாறும். தலை படை, முகப் படை, உடல் படை, தொடை இடுக்கு படை, நகப் படை, கால் படை என்று காளான் படைக்குப் பல பெயர்கள் உள்ளன.
பெரும்பாலும் சிறுவர், சிறுமிகளுக்கு இது வருகிறது. இது வருவதற்கு முக்கியக் காரணம், சுயச் சுத்தக்குறைவு. மேலும் இந்த நோய் உள்ளவர் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதன் வழியாகவும் இது ஏற்படுவதுண்டு.
மக்கள்தொகை பெருக்கம், பொதுசுகாதார-சுத்த குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. தோலில் ஏற்படுகிற காளான் நோய்களில் முதலிடம் பெறுவது தேமல் நோய். ‘மலேசேசியாபர்பர்’ எனும் கிருமியால் இந்த பாதிப்பு உண்டாகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர் வரை யாரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது.
மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாக படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் படையைச் சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படுவதும் சிறிதளவு அரிப்பு ஏற்படுவதும் இயல்பு. வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டு வருபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் அடிக்கடி தொல்லை தரும்.
இன்றைய நவீன மருத்துவத்தில் தேமலைப் போக்கப் பலதரப்பட்ட களிம்புகள், வியர்வையை உறிஞ்சும் மருந்து கலந்த பவுடர்கள், மாத்திரைகள், நடைமுறையில் உள்ளன.
காளான் கிருமிகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடத்திலும் வசிக்கக்கூடியவை. எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடமிருந்தும் இது பரவ வாய்ப்புள்ளது. அசுத்தமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது மண்ணிலிருந்து கிருமிகள் பரவி நோய் வருவதுண்டு.
காளான் நோய்க்கு ‘டீனியா தொற்று’ என்பது மருத்துவப் பெயர். இதை ஏற்படுத்தும் கிருமிகள் பல. அவற்றுள் மைக்ரோஸ்போரம், டிரைகோபைட்டன், எபிடெர்மோபைட்டன் முக்கியமானவை. முதல் இரண்டு கிருமிகள் தோலையும் முடியையும் பாதிக்கின்றன. மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கிருமி தோலையும் நகங்களையும் பாதிக்கக்கூடியவை. இந்தக் கிருமிகள் பாதிக்கிற இடத்தைப் பொறுத்து நோயின் பெயர் மாறும். தலை படை, முகப் படை, உடல் படை, தொடை இடுக்கு படை, நகப் படை, கால் படை என்று காளான் படைக்குப் பல பெயர்கள் உள்ளன.
பெரும்பாலும் சிறுவர், சிறுமிகளுக்கு இது வருகிறது. இது வருவதற்கு முக்கியக் காரணம், சுயச் சுத்தக்குறைவு. மேலும் இந்த நோய் உள்ளவர் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதன் வழியாகவும் இது ஏற்படுவதுண்டு.
உடல் பருமனைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
அரிசி - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி - 1 இன்ச்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைத்து நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்படி அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பயறு தோசை ரெடி!!!
இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
பச்சை பயறு - 1 கப்
அரிசி - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி - 1 இன்ச்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைத்து நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்படி அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பயறு தோசை ரெடி!!!
இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.






