என் மலர்
நீங்கள் தேடியது "tag 97176"
இஞ்சியை உணவுடன் துவையலாக சேர்த்து உண்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் பிரச்சனைகளுக்கும் நல்லது. சுவையான இஞ்சி துவையல் செய்வது எப்படி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இஞ்சி - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 1 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 4
துருவிய தேங்காய் - கால் கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
வானலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு வறுத்த, பின் காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சித் துண்டுகள், புளி சேர்த்து வதக்கவும்.
இறக்கும்போது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்.
அடுத்ததாக அதில் துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
துவையலுக்கு ஏற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைக்கவும்.
தேவைப்பட்டால் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து துவையலில் தாளித்து ஊற்றலாம். இல்லையெனில் அப்படியேவும் சாப்பிடலாம்.
சுவையான இஞ்சி துவையல் ரெடி..!
இஞ்சி - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 1 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 4
துருவிய தேங்காய் - கால் கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
வானலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு வறுத்த, பின் காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சித் துண்டுகள், புளி சேர்த்து வதக்கவும்.
இறக்கும்போது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும்.
அடுத்ததாக அதில் துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
துவையலுக்கு ஏற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைக்கவும்.
தேவைப்பட்டால் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து துவையலில் தாளித்து ஊற்றலாம். இல்லையெனில் அப்படியேவும் சாப்பிடலாம்.
சுவையான இஞ்சி துவையல் ரெடி..!
நமது உணவில் மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். தேங்காயை பச்சையாகவே மென்று சாப்பிடுவதால் நார்ச்சத்து முழுமையாக நமக்குக் கிடைக்கிறது.
தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் - ஒரு கப்,
தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,
பச்சை மிளகாய் (பெரியது) - ஒன்று,
கடுகு - கால் டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.
துருவிய தேங்காய் - ஒரு கப்,
தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,
பச்சை மிளகாய் (பெரியது) - ஒன்று,
கடுகு - கால் டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.
தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். பித்தம் மிகுந்து கல்லீரல் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க வெள்ளரியை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் - 2
தக்காளி - 1 சிறியது
வறுத்த வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
துருவிய தேங்காய் - 1 மேஜைக்கரண்டி
ப.மிளகாய் - 2
உப்பு - ருசிக்கேற்ப
தாளிக்க :
எண்ணெய்,
கடுகு,
கறிவேப்பிலை,
பெருங்காயம்
செய்முறை :
வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துவைக்கவும்.
வெள்ளரிக்காய், வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், ப.மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவைகளை ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அதை அரைத்த கலவையில் கொட்டவும்.
வெள்ளரிக்காய் - 2
தக்காளி - 1 சிறியது
வறுத்த வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
துருவிய தேங்காய் - 1 மேஜைக்கரண்டி
ப.மிளகாய் - 2
உப்பு - ருசிக்கேற்ப
தாளிக்க :
எண்ணெய்,
கடுகு,
கறிவேப்பிலை,
பெருங்காயம்
செய்முறை :
வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துவைக்கவும்.
வெள்ளரிக்காய், வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், ப.மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவைகளை ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அதை அரைத்த கலவையில் கொட்டவும்.
மனதுக்கும், வயிற்றுக்கும் நல்ல திருப்தியான உணர்வைக் கொடுக்கும் இந்தப் புது விதமான சட்னி.
இதையும் படிக்கலாம்...15 நிமிடத்தில் செய்யலாம் அருமையான டிபன்
மாங்காய் சீசன் தொடங்கி விட்டது. இன்று மாங்காயை வைத்து புளிப்பான, காரசாரமான துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாங்காய் - 1,
காய்ந்த மிளகாய் - 8,
பச்சை மிளகாய் - 2,
உ.பருப்பு - 1 கைப்பிடி,
க.பருப்பு - 2 ஸ்பூன்,
பெருங்காயம் சிறு துண்டு,
தாளிக்க

செய்முறை
மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும உ.பருப்பு, க.பருப்பு இவைகளை பொன்னிறமாக வறுக்கவும்.
பின்பு துருவிய மாங்காய், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
சூடு ஆறியவுடன் மிக்சியில் போட்டு மாங்காய் கலவையை அரைத்த பின்னர் பருப்பு கலவையை சேர்த்து கரகரப்பாய் அரைத்து எடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் கலந்து பரிமாறவும்.
மாங்காய் - 1,
காய்ந்த மிளகாய் - 8,
பச்சை மிளகாய் - 2,
உ.பருப்பு - 1 கைப்பிடி,
க.பருப்பு - 2 ஸ்பூன்,
பெருங்காயம் சிறு துண்டு,
தாளிக்க
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை.

செய்முறை
மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும உ.பருப்பு, க.பருப்பு இவைகளை பொன்னிறமாக வறுக்கவும்.
பின்பு துருவிய மாங்காய், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
சூடு ஆறியவுடன் மிக்சியில் போட்டு மாங்காய் கலவையை அரைத்த பின்னர் பருப்பு கலவையை சேர்த்து கரகரப்பாய் அரைத்து எடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் கலந்து பரிமாறவும்.
சுவையான மாங்காய் துவையல் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சுண்டைக்காயில் கூட்டு, குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சுண்டைக்காயை வைத்து சூப்பரான துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சை சுண்டைக்காய் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1 (சிறியது)
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு,

செய்முறை :
பச்சை சுண்டைக்காய்களை கழுவி இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும். பிறகு அதனை நன்கு கழுவ வேண்டும். அதில் உள்ள விதைகள் வெளிவந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.
பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை கழுவிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சைமிளகாய், சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும்.
அது பாதி வதங்கும்போது வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். முக்கால் பதம் வதங்கியதும் உப்பு புளி சேர்த்து தேங்காய்த் துருவல் போட்டு அரைநிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
பச்சை சுண்டைக்காய் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1 (சிறியது)
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு,
உளுந்து - 2 டீஸ்பூன்.

செய்முறை :
பச்சை சுண்டைக்காய்களை கழுவி இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும். பிறகு அதனை நன்கு கழுவ வேண்டும். அதில் உள்ள விதைகள் வெளிவந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.
பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை கழுவிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சைமிளகாய், சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும்.
அது பாதி வதங்கும்போது வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். முக்கால் பதம் வதங்கியதும் உப்பு புளி சேர்த்து தேங்காய்த் துருவல் போட்டு அரைநிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான சுண்டைக்காய் துவையல் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எண்ணெய்ச் சத்து மிகுந்த அவகோடா பழத்தின் சதைப் பகுதியில் வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. இந்த பழத்தில் இன்று துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
அவகோடாவில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.
தேவையான பொருட்கள்
அவகோடா பழக்கூழ் (தோல், கொட்டை நீக்கியது) - 1 கப்
உளுந்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
பூண்டு - 5 பல்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வறுத்து ஆறியதும் அதனுடன் புளி சேர்த்துப் பாதி அரைபட்டதும் அவகோடா பழக்கூழைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
மற்றொரு கடாயை அடுப்பில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
தேவையான பொருட்கள்
அவகோடா பழக்கூழ் (தோல், கொட்டை நீக்கியது) - 1 கப்
உளுந்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
பூண்டு - 5 பல்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வறுத்து ஆறியதும் அதனுடன் புளி சேர்த்துப் பாதி அரைபட்டதும் அவகோடா பழக்கூழைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
மற்றொரு கடாயை அடுப்பில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
சத்தான சுவையான அவகோடா துவையல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அஜீரண கோளாறு, வயிறு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி இந்த இஞ்சி பூண்டு சட்னியை செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பூண்டு - 10 பற்கள் (அ) ஒரு முழுப்பூண்டு
இஞ்சி - பெரிய துண்டு
புளி - சிறு அளவு
வரமிளகாய் -1
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை :
இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். பூண்டை தோலுரித்துக்கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் புளி, வரமிளகாயைச் சேர்த்து மிளகாய் கருகாமல் வறுத்து ஆறவைக்கவும்.
நன்றாக ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். வதக்கும்போது இருக்கும் எண்ணெயையும் சேர்த்து அரைக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
சூப்பரான இஞ்சி பூண்டு சட்னி ரெடி.
பூண்டு - 10 பற்கள் (அ) ஒரு முழுப்பூண்டு
இஞ்சி - பெரிய துண்டு
புளி - சிறு அளவு
வரமிளகாய் -1
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். பூண்டை தோலுரித்துக்கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் புளி, வரமிளகாயைச் சேர்த்து மிளகாய் கருகாமல் வறுத்து ஆறவைக்கவும்.
நன்றாக ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். வதக்கும்போது இருக்கும் எண்ணெயையும் சேர்த்து அரைக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
சூப்பரான இஞ்சி பூண்டு சட்னி ரெடி.
இட்லி - தோசை- சப்பாத்திக்கு பொருத்தமான சட்னி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கறிவேப்பிலையை வைத்து எளிய முறையில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
கறிவேப்பிலை - 3 கைப்பிடி அளவு
மிளகாய் வத்தல் - 5
தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
புளி - பாக்கு அளவு
பூண்டு பற்கள் - 6
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி

செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுத்து கொள்ளவும்.
பிறகு அதோடு தேங்காய் துருவல், புளி, பூண்டு சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.
வறுத்த கறிவேப்பிலையை தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.
ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.
சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.
கறிவேப்பிலை - 3 கைப்பிடி அளவு
மிளகாய் வத்தல் - 5
தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
புளி - பாக்கு அளவு
பூண்டு பற்கள் - 6
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுத்து கொள்ளவும்.
பிறகு அதோடு தேங்காய் துருவல், புளி, பூண்டு சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.
வறுத்த கறிவேப்பிலையை தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.
ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.
சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.
இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாயுத் தொல்லை உள்ளவர்கள் அறுகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது. இன்று அருகம்புல் வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அறுகம்புல் - 1 கட்டு,
கருப்பு உளுந்து - 20 கிராம்,
வெங்காயம் - 1,
பூண்டு - 7 பல்,
இஞ்சி - சிறு துண்டு,
புளி - பாக்கு அளவு,
காய்ந்தமிளகாய் - தேவைக்கு,
உப்பு - தேவைக்கு,

செய்முறை :
அறுகம்புல்லை கழுவி சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அறுகம்புல்லை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கருப்பு உளுந்தை வறுத்து எடுக்கவும்.
அதே கடாயில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, காய்ந்தமிளகாய், புளி அனைத்தையும் வதக்கவும்.
வதக்கிய பொருட்கள் அனைத்தும் ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சி அல்லது அம்மியில் கரகரப்பாக அரைத்து எடுத்து சாதத்துடன் பரிமாறவும்.
சூப்பரான சத்தான அறுகம்புல் துவையல் ரெடி.
அறுகம்புல் - 1 கட்டு,
கருப்பு உளுந்து - 20 கிராம்,
வெங்காயம் - 1,
பூண்டு - 7 பல்,
இஞ்சி - சிறு துண்டு,
புளி - பாக்கு அளவு,
காய்ந்தமிளகாய் - தேவைக்கு,
உப்பு - தேவைக்கு,
கடலை எண்ணெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை :
அறுகம்புல்லை கழுவி சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அறுகம்புல்லை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கருப்பு உளுந்தை வறுத்து எடுக்கவும்.
அதே கடாயில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, காய்ந்தமிளகாய், புளி அனைத்தையும் வதக்கவும்.
வதக்கிய பொருட்கள் அனைத்தும் ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சி அல்லது அம்மியில் கரகரப்பாக அரைத்து எடுத்து சாதத்துடன் பரிமாறவும்.
சூப்பரான சத்தான அறுகம்புல் துவையல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உணவில் அடிக்கடி எள்ளை சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தம், கொலஸ்ட்டிரால் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். இன்று எள் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கருப்பு எள் - அரை கப்
துருவிய தேங்காய் - கால் கப்
காய்ந்த மிளகாய் - ஐந்து
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

செய்முறை :
எள்ளை சுத்தப்படுத்தி வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வறுக்கவும்.
பிறகு அதே வாணலியில் காய்ந்த மிளகாய் சேர்த்து துளி எண்ணெய் விட்டு வறுக்கவும்.
மிக்ஸியில் வறுத்து ஆறவைத்த எள், துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் புளி சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
கருப்பு எள் - அரை கப்
துருவிய தேங்காய் - கால் கப்
காய்ந்த மிளகாய் - ஐந்து
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
எள்ளை சுத்தப்படுத்தி வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வறுக்கவும்.
பிறகு அதே வாணலியில் காய்ந்த மிளகாய் சேர்த்து துளி எண்ணெய் விட்டு வறுக்கவும்.
மிக்ஸியில் வறுத்து ஆறவைத்த எள், துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் புளி சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
உணவில் எள்ளை சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தம், கொலஸ்ட்டிரால் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சூடான சாதத்தில் இந்தத் துவையல் போட்டு சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். வயிற்று கோளாறுகளை குணமாக்கும். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு,
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா 2 டீஸ்பூன்,

செய்முறை:
இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, கறிவேப்பிலையை போட்டு வதக்கி கொள்ளவும்.
அடுத்து காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுத்துக்கொள்ளவும்...
அனைத்தும் நன்றாக ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் போட்டு அதனுடன் புளி, உப்பு, சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு,
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, கறிவேப்பிலையை போட்டு வதக்கி கொள்ளவும்.
அடுத்து காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுத்துக்கொள்ளவும்...
அனைத்தும் நன்றாக ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் போட்டு அதனுடன் புளி, உப்பு, சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
இப்போது சூப்பரான சத்தான இஞ்சி துவையல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூலநோய் போன்றவை குணமாகும்.
தேவையான பொருட்கள் :
பிரண்டை இலை - 100 கிராம்,
இஞ்சி - ஒரு துண்டு,
பூண்டு - 3 பல்,
மிளகு - 5,
காய்ந்த மிளகாய் - 3,
கறிவேப்பிலை - தேவையான அளவு,
கொத்தமல்லி - தேவையான அளவு
மஞ்சள், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
பிரண்டை இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டை இலை, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.
மிக்சியில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து அதனுடன் வதக்கியவற்றையும், உப்பும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.
பிரண்டை இலை - 100 கிராம்,
இஞ்சி - ஒரு துண்டு,
பூண்டு - 3 பல்,
மிளகு - 5,
காய்ந்த மிளகாய் - 3,
கறிவேப்பிலை - தேவையான அளவு,
கொத்தமல்லி - தேவையான அளவு
மஞ்சள், உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - சிறிதளவு

செய்முறை :
பிரண்டை இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டை இலை, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.
மிக்சியில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து அதனுடன் வதக்கியவற்றையும், உப்பும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.
சூப்பரான சத்தான பிரண்டை இலைத் துவையல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






