search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inji thuvaiyal"

    சூடான சாதத்தில் இந்தத் துவையல் போட்டு சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். வயிற்று கோளாறுகளை குணமாக்கும். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு,
    புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,
    உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, கறிவேப்பிலையை போட்டு வதக்கி கொள்ளவும்.

    அடுத்து காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுத்துக்கொள்ளவும்...

    அனைத்தும் நன்றாக ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் போட்டு அதனுடன் புளி, உப்பு, சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

    இப்போது சூப்பரான சத்தான இஞ்சி துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிற்று கோளாறு, அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி இஞ்சி துவையலை செய்து சாப்பிடலாம். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள் :

    இஞ்சி - 1/2 கப்
    தேங்காய் துருவல் - 1/2 கப்
    காய்ந்த மிளகாய் - 2
    உளுத்தம்பருப்பு - 1 ½  மேசைக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - 4 ஈர்க்கு
    பெருங்காயம், புளி - சிறு நெல்லிக்காய் அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 தேக்கரண்டி



    செய்முறை :

    இஞ்சியைத் தோல்சீவி நன்றாகக் கழுவி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிது நேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.

    அடுத்து தேங்காயைத் துருவல், புளி, பச்சை மிளகாயைக் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்,

    ஆறியதும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

    காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு ஒரு ஓட்டு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

    இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×