என் மலர்
ஆரோக்கியம்
உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, பாதங்களை முறையாக பராமரிக்காதது, பொருத்தமில்லாத காலணிகள் அணிவது போன்ற காரணங்களால் பாத வெடிப்பு ஏற்படுகிறது.
முக அழகின் பராமரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும். பாதங்கள் உடலின் மொத்த எடையையும் தாங்கி நிற்கின்றன. உடலின் அனைத்து நரம்புகளும் பாதங்களில் தான் இணைகின்றன. தற்போது பாத வெடிப்பு பலர் சந்திக்கும் பிரச்சனையாகும். இது அழகை மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
காரணம்
உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, பாதங்களை முறையாக பராமரிக்காதது, பொருத்தமில்லாத காலணிகள் அணிவது போன்ற காரணங்களால் பாத வெடிப்பு ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் இருக்கும் போது வெடிப்புகளில் அழுக்கு சேருவது கிருமித்தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். இதன் காரணமாக சீழ் வடிதல், எரிச்சல், வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
தீர்வுகள்
மருதாணி
பாத வெடிப்புக்களை குணப்படுத்துவதில் மருதாணி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கைப்பிடி மருதாணி இலைகளோடு கிழங்கு மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் சிறிது துண்டு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இந்த கலவையை காற்று புகாத டப்பாவில் போட்டு குளிர்பதனப்பெட்டியில் பாதுகாத்து வைத்து பயன்படுத்தலாம். இரவு தூங்கச்செல்வதற்கு முன்பு கால்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்துவிட்டு அரைத்து வைத்திருக்கும் கலவையை வெடிப்பு உள்ள இடங்களில் பூச வேண்டும் இவ்வாறு தொடர்ந்து சில வாரங்கள் செய்து வந்தால் பாத வெடிப்பு நீங்கும்.
எலுமிச்சை சாறு
இளம் சூடான நீரில் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து அதில் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்பு பாதங்களில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கிவிட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி வெடிப்பு மறையும்.
மஞ்சள்
பாதங்களில் உண்டாகும் வெடிப்புகளில் கிருமிகளால் தொற்று ஏற்படக்கூடும். எளிய முறையில் கிருமிகளை நீக்குவதற்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கலந்து வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வரலாம். இதன் மூலம் கிருமிகள் நீங்கி, பாதங்களில் ஏற்படும் வலி, எரிச்சல் போன்றவை குணமாகும்.
மசாஜ்
பாதங்களில் உள்ள சருமம் வறண்டு போகாமல் இருப்பதற்காக ஆலிவ் எண்ணெய் பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை மூன்றையும் சமஅளவு கலந்து மசாஜ் செய்யலாம். இதன் மூலம் வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாகும்.
காரணம்
உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, பாதங்களை முறையாக பராமரிக்காதது, பொருத்தமில்லாத காலணிகள் அணிவது போன்ற காரணங்களால் பாத வெடிப்பு ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் இருக்கும் போது வெடிப்புகளில் அழுக்கு சேருவது கிருமித்தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். இதன் காரணமாக சீழ் வடிதல், எரிச்சல், வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
தீர்வுகள்
மருதாணி
பாத வெடிப்புக்களை குணப்படுத்துவதில் மருதாணி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கைப்பிடி மருதாணி இலைகளோடு கிழங்கு மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் சிறிது துண்டு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இந்த கலவையை காற்று புகாத டப்பாவில் போட்டு குளிர்பதனப்பெட்டியில் பாதுகாத்து வைத்து பயன்படுத்தலாம். இரவு தூங்கச்செல்வதற்கு முன்பு கால்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்துவிட்டு அரைத்து வைத்திருக்கும் கலவையை வெடிப்பு உள்ள இடங்களில் பூச வேண்டும் இவ்வாறு தொடர்ந்து சில வாரங்கள் செய்து வந்தால் பாத வெடிப்பு நீங்கும்.
எலுமிச்சை சாறு
இளம் சூடான நீரில் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து அதில் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்பு பாதங்களில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கிவிட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி வெடிப்பு மறையும்.
மஞ்சள்
பாதங்களில் உண்டாகும் வெடிப்புகளில் கிருமிகளால் தொற்று ஏற்படக்கூடும். எளிய முறையில் கிருமிகளை நீக்குவதற்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கலந்து வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வரலாம். இதன் மூலம் கிருமிகள் நீங்கி, பாதங்களில் ஏற்படும் வலி, எரிச்சல் போன்றவை குணமாகும்.
மசாஜ்
பாதங்களில் உள்ள சருமம் வறண்டு போகாமல் இருப்பதற்காக ஆலிவ் எண்ணெய் பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை மூன்றையும் சமஅளவு கலந்து மசாஜ் செய்யலாம். இதன் மூலம் வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாகும்.
தற்போதைய பெருந்தொற்று காலங்களில் பழங்களில் உள்ள சத்துக்கள் என்ன என்று தேடி தேடி படித்து அதை நாடி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.
தொழிலில் வெற்றி பெறுவதற்கு மனிதனின் உடல் ஆரோக்கியம் என்பது தான் சக்கரம் போன்றது. சக்கரம் சரியாக இல்லையென்றால் வண்டி ஓடாது என்பது ஏற்ப, உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டால் தொழிலிலும் கவனம் செலுத்த முடியாது. அதிலும் தற்போது பெருந்தொற்று காலம் என்பதால், உடல் ஆராக்கியத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.
துரிதமாக வளரும் இந்த உலகில் துரித உணவான பீட்சா, பர்கர் யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால் தான் உடலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்து கொரோனா என்னும் கொடிய அரக்கனின் பிடிக்குள் அகப்பட்டு வருகிறோம்.
உணவு, மருந்தாக செயல்பட்டு, ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தரும் பழங்களை நம்மில் பலர் மறந்து விட்டனர். அதனால் தான் நம் ‘பழ’ந்தமிழர்கள் பழங்களை கொண்டாடினார்கள்.
ஆனால், பழங்களை தினசரி உணவில் எடுத்து கொள்வதையே, நம் சந்ததியினர் பலர் மறந்துவிட்டார்கள். அதனால் தான் தற்போதைய பெருந்தொற்று காலங்களில் பழங்களில் உள்ள சத்துக்கள் என்ன என்று தேடி தேடி படித்து அதை நாடி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் பல்வறேு பழங்களின் சத்துக்கள் என்ன என்பது குறித்த ஒவ்வொரு தொகுப்பாக பார்க்கலாம் வாங்க...
பழங்களில் பொதுவாக அதிக அளவில் நார்ச்சத்தும், மிக குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்க விடாமல் இவை தடுக்கிறது.
கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க கிர்ணி, தர்ப்பூசணி என்று அந்த அந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி தருகிறது இயற்கை. இவை மட்டுமின்றி தினமும் தொடர்ந்து பழவகைகளை சாப்பிடுவதே சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மாம்பழம்
முதலில் முக்கனிகளின் முதன்மையான கனியாக இருக்கும் பாம்பழம் குறித்து பார்ப்போம்:-
மாம்பழம், பழங்கின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. நமது நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட உதவும் கனி இதுவாகும். இதில் வைட்டமின் ஏ, பி6, சி, இ ஆகியன நிறைந்துள்ளது. மேலும் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு சத்து, தாது உப்புக்கள் மற்றும் பாலிபீனாலிக் பிளவனாய்ட், ஆன்டிஆக்சிடன்ட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
100 கிராம் மாம்பழத்தில், 765 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ, பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். அதேபோன்று வைட்டமின் சி - நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
மாம்பழத்தில் மார்பகம், ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாம்பழத்தில் உள்ள சிலவகையான என்சைம்கள், புரதத்தை உடைத்து உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாக மாற்றும் பணியை ஊக்குவிக்கிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. மலச்சிக்கலையும் போக்கும்.
மாம்பழத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாமிரம் உள்ளதால், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், இரும்புச் சத்து நிறைந்தது. எனவே, பெண்கள், கர்ப்பிணிகள், மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.
பலா
முக்கனிகளில் 2-வது இடம் வகிக்கும் கனி பலா. நமது கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு பெயர்பற்றது இந்த கனி. வைட்டமின்கள், நார்ச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்த பழமாகும்.
100 கிராம் பலாப் பழத்தில், 95 கலோரிகளே உள்ளது. இது மிகவும் எளிதில் செரிமானத்தைக் கொடுக்கும். நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், குடலைப் பாதுகாக்கிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது. குறைந்த அளவில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் பி உள்ளிட்ட பிளவனாய்ட் உள்ளதால், பார்வைத் திறன் மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பலாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான பி5, நியாசின்,, போலிக் அமிலம் போன்றவை அதிக அளவில் உள்ளன. மேலும் இயற்கையான முறையில் கிடைக்கும் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின்கள், நுரையீரல் மற்றும் சில வகையான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கிறது.
தாது உப்புக்களில் பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ளலாம். பலாவில் வோ், இலை, காய் பழம் என அனைத்துமே ஆரோக்கியம் நிறைந்தவை ஆகும்.
வாழைப்பழம்
முக்கனிகளில் 3-வதாக அங்கம் வகிக்கும் கனி வாழைப்பழம், ஆண்டு முழுவதும் கிடைக்ககூடியதாகும். வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த கனி.
வாழையில் உள்ள பரக்டோஸ் போன்ற எளிய சர்க்கரை, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் இதை தினமும் எடுத்துக்கொள்ளும்போது இயற்கையான உடனடி எனர்ஜி கிடைக்கும். 100 கிராம் பழம் 90 கலோரியை இது தருகிறது. அதேபோல் 100 கிராம் வாழைப் பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் இருப்பதால் இதய துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றை செய்கிறது.
பொட்டாசியம் சத்து அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது இதயத் துடிப்பைப் பாதிக்கச் செய்யும். எனவே, இதை நினைவில் கொண்டு
இதய மற்றும் சிறுநீரக நோயாளிகள் கவனமுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் குழந்தைகளை பொறுத்தவரை உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
இதில் உள்ள வைட்டமின் பி 6, ரத்த சோகை போன்ற குறைபாடுகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும். இதயப் ரத்தக் குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
தாது உப்புக்களைப் பொறுத்தவரையில், தாமிரம், மக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.
துரிதமாக வளரும் இந்த உலகில் துரித உணவான பீட்சா, பர்கர் யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால் தான் உடலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்து கொரோனா என்னும் கொடிய அரக்கனின் பிடிக்குள் அகப்பட்டு வருகிறோம்.
உணவு, மருந்தாக செயல்பட்டு, ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தரும் பழங்களை நம்மில் பலர் மறந்து விட்டனர். அதனால் தான் நம் ‘பழ’ந்தமிழர்கள் பழங்களை கொண்டாடினார்கள்.
ஆனால், பழங்களை தினசரி உணவில் எடுத்து கொள்வதையே, நம் சந்ததியினர் பலர் மறந்துவிட்டார்கள். அதனால் தான் தற்போதைய பெருந்தொற்று காலங்களில் பழங்களில் உள்ள சத்துக்கள் என்ன என்று தேடி தேடி படித்து அதை நாடி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் பல்வறேு பழங்களின் சத்துக்கள் என்ன என்பது குறித்த ஒவ்வொரு தொகுப்பாக பார்க்கலாம் வாங்க...
பழங்களில் பொதுவாக அதிக அளவில் நார்ச்சத்தும், மிக குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்க விடாமல் இவை தடுக்கிறது.
கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க கிர்ணி, தர்ப்பூசணி என்று அந்த அந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி தருகிறது இயற்கை. இவை மட்டுமின்றி தினமும் தொடர்ந்து பழவகைகளை சாப்பிடுவதே சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மாம்பழம்
முதலில் முக்கனிகளின் முதன்மையான கனியாக இருக்கும் பாம்பழம் குறித்து பார்ப்போம்:-
மாம்பழம், பழங்கின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. நமது நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட உதவும் கனி இதுவாகும். இதில் வைட்டமின் ஏ, பி6, சி, இ ஆகியன நிறைந்துள்ளது. மேலும் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு சத்து, தாது உப்புக்கள் மற்றும் பாலிபீனாலிக் பிளவனாய்ட், ஆன்டிஆக்சிடன்ட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
100 கிராம் மாம்பழத்தில், 765 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ, பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். அதேபோன்று வைட்டமின் சி - நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
மாம்பழத்தில் மார்பகம், ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாம்பழத்தில் உள்ள சிலவகையான என்சைம்கள், புரதத்தை உடைத்து உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாக மாற்றும் பணியை ஊக்குவிக்கிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. மலச்சிக்கலையும் போக்கும்.
மாம்பழத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாமிரம் உள்ளதால், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், இரும்புச் சத்து நிறைந்தது. எனவே, பெண்கள், கர்ப்பிணிகள், மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.
பலா
முக்கனிகளில் 2-வது இடம் வகிக்கும் கனி பலா. நமது கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு பெயர்பற்றது இந்த கனி. வைட்டமின்கள், நார்ச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்த பழமாகும்.
100 கிராம் பலாப் பழத்தில், 95 கலோரிகளே உள்ளது. இது மிகவும் எளிதில் செரிமானத்தைக் கொடுக்கும். நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், குடலைப் பாதுகாக்கிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது. குறைந்த அளவில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் பி உள்ளிட்ட பிளவனாய்ட் உள்ளதால், பார்வைத் திறன் மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பலாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான பி5, நியாசின்,, போலிக் அமிலம் போன்றவை அதிக அளவில் உள்ளன. மேலும் இயற்கையான முறையில் கிடைக்கும் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின்கள், நுரையீரல் மற்றும் சில வகையான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கிறது.
தாது உப்புக்களில் பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ளலாம். பலாவில் வோ், இலை, காய் பழம் என அனைத்துமே ஆரோக்கியம் நிறைந்தவை ஆகும்.
வாழைப்பழம்
முக்கனிகளில் 3-வதாக அங்கம் வகிக்கும் கனி வாழைப்பழம், ஆண்டு முழுவதும் கிடைக்ககூடியதாகும். வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த கனி.
வாழையில் உள்ள பரக்டோஸ் போன்ற எளிய சர்க்கரை, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் இதை தினமும் எடுத்துக்கொள்ளும்போது இயற்கையான உடனடி எனர்ஜி கிடைக்கும். 100 கிராம் பழம் 90 கலோரியை இது தருகிறது. அதேபோல் 100 கிராம் வாழைப் பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் இருப்பதால் இதய துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றை செய்கிறது.
பொட்டாசியம் சத்து அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது இதயத் துடிப்பைப் பாதிக்கச் செய்யும். எனவே, இதை நினைவில் கொண்டு
இதய மற்றும் சிறுநீரக நோயாளிகள் கவனமுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் குழந்தைகளை பொறுத்தவரை உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
இதில் உள்ள வைட்டமின் பி 6, ரத்த சோகை போன்ற குறைபாடுகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும். இதயப் ரத்தக் குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
தாது உப்புக்களைப் பொறுத்தவரையில், தாமிரம், மக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நோயற்ற வாழ்வை வாழவே அனைத்து பெற்றோரும் விரும்புவர்.
தேசிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு வாரத்தையொட்டி தஞ்சை ஆர்.கே. மருத்துவமனையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரு மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் உஷாநந்தினி பேசியபோது எடுத்த படம். டாக்டர்கள் ராஜராஜேஸ்வரி, ராஜேஸ்வரன், மணிராம்கிருஷ்ணா, எழிலன் ஆகியோர் அருகில் உள்ளனர்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நோயற்ற வாழ்வை வாழவே அனைத்து பெற்றோரும் விரும்புவர்.
ஆனால் தற்போது காலச்சக்கரத்தின் சுழல் வேகத்தில் மருத்துவத்துறை அபார வளர்ச்சியை பெற்று இருந்தாலும் குழந்தைகளை பாதிக்கும் நோயின் அளவும் அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. குழந்தை பிறந்த 7 நாட்களும், குழந்தைகளை தாய்மார்கள் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் நவம்பர் மாதம் 15-ந் தேதி முதல் முதல் 21-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் பிழைத்து நோயற்ற வாழ்வு வாழ தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்த முதல் மாதம் தான் குழந்தையின் வாழ்க்கை முழுவதுக்குமான ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது. அதிகமான குழந்தை பருவ இறப்பு விகிதம் கொண்ட காலகட்டமும் இதுவே ஆகும்.
ஆரோக்கியமான குழந்தையே ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்து சமூகத்துக்கு பயன்பட முடியும். ஒரு நாட்டில் 1000 குழந்தைகள் பிறந்தால் அதில் 30 குழந்தைகளுக்கு குறைவான குழந்தை இறந்தால் மட்டுமே அந்த நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நோயற்ற வாழ்வை வாழவே அனைத்து பெற்றோரும் விரும்புவர்.
ஆனால் தற்போது காலச்சக்கரத்தின் சுழல் வேகத்தில் மருத்துவத்துறை அபார வளர்ச்சியை பெற்று இருந்தாலும் குழந்தைகளை பாதிக்கும் நோயின் அளவும் அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. குழந்தை பிறந்த 7 நாட்களும், குழந்தைகளை தாய்மார்கள் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு வாரம் நவம்பர் மாதம் 15-ந் தேதி முதல் முதல் 21-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் பிழைத்து நோயற்ற வாழ்வு வாழ தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்த முதல் மாதம் தான் குழந்தையின் வாழ்க்கை முழுவதுக்குமான ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது. அதிகமான குழந்தை பருவ இறப்பு விகிதம் கொண்ட காலகட்டமும் இதுவே ஆகும்.
ஆரோக்கியமான குழந்தையே ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்து சமூகத்துக்கு பயன்பட முடியும். ஒரு நாட்டில் 1000 குழந்தைகள் பிறந்தால் அதில் 30 குழந்தைகளுக்கு குறைவான குழந்தை இறந்தால் மட்டுமே அந்த நாட்டின் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இன்று கொத்தமல்லி பொடி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி - 2 கட்டு
பெருங்காயம் - 1 துண்டு
கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
எண்ணெய் - 2 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
செய்முறை
புளியை வெறும் சட்டியில் போட்டு வறுத்துத்தெடுத்து கொள்ளுங்கள்.
எண்ணெய் விட்டு பெருங்காயம், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் அனைத்தையும் அடுத்தடுத்து போட்டு வறுத்து கொள்ளுங்கள்.
அனைத்தும் ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் கொத்தமல்லியை சேர்த்து பொடித்து கொள்ளுங்கள்.
சத்தான சுவையான கொத்தமல்லி பொடி ரெடி.
கொத்தமல்லி - 2 கட்டு
பெருங்காயம் - 1 துண்டு
கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
எண்ணெய் - 2 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
செய்முறை
புளியை வெறும் சட்டியில் போட்டு வறுத்துத்தெடுத்து கொள்ளுங்கள்.
எண்ணெய் விட்டு பெருங்காயம், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் அனைத்தையும் அடுத்தடுத்து போட்டு வறுத்து கொள்ளுங்கள்.
அனைத்தும் ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் கொத்தமல்லியை சேர்த்து பொடித்து கொள்ளுங்கள்.
சத்தான சுவையான கொத்தமல்லி பொடி ரெடி.
இதனை சாதத்திலும் போட்டு சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.
இதையும் படிக்கலாம்...சூப்பரான காரசாரமான மிளகாய் சப்ஜி
சமையல் வேலையை முடிந்தவரை எளிமையாக்கிக் கொள்ள வேண்டும். காலை வேளையில் எளிமையான உணவு வகைகளை மட்டுமே தயார் செய்ய வேண்டும்.
பெண்கள் நேரத்தை அதிகமாக செலவிடும் இடங்களில் சமையல் அறையும் ஒன்று. சமையல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால், அன்றைய நாளில் முடிக்க வேண்டிய மற்ற வேலைகளிலும், பாதிப்பு ஏற்படுகிறது. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இதனைத் தவிர்க்க முடியும். அதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.
சமையல் அறையில் உள்ள பொருட்களை சரியான முறையில் அடுக்கி வைக்க வேண்டும். பயன்படுத்தி முடித்ததும் மீண்டும் அவற்றை உரிய இடத்தில் வைப்பதன் மூலம் எந்த பொருள், எந்த இடத்தில் இருக்கிறது என்பதை எளிதாக அறிய முடியும்.
அடிக்கடி பயன்படுத்தும் வாணலி, குக்கர், கரண்டி போன்ற பொருட்களை கைக்கு எட்டும் தூரத்தில் இருக்குமாறு வைக்கலாம். சமையல் எண்ணெய், உப்பு, தாளிப்பு பொருட்கள் ஆகியவற்றை எளிதாக எடுக்கும் வகையில் வைத்திருப்பது நல்லது.
ஒரு வாரத்துக்கான சமையலை முன்பே திட்டமிட்டு பட்டியல் தயாரித்துக்கொள்ளலாம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் உணவு தயாரிப்பது நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு உதவும்.
சமையல் வேலையை முடிந்தவரை எளிமையாக்கிக் கொள்ள வேண்டும். காலை வேளையில் எளிமையான உணவு வகைகளை மட்டுமே தயார் செய்ய வேண்டும்.
வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி சில வேலைகளை முன்னேற்பாடாக செய்து கொள்ளலாம். பூண்டு தோலுரித்து வைக்கலாம். இஞ்சி - பூண்டு விழுது தயாரிக்கலாம். புளியை ஊறவைத்து, வடிகட்டி வைக்கலாம். இவற்றை குளிர் சாதன பெட்டியில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அந்த வாரம் முழுவதும் பயன்படுத்த முடியும்.
ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்துக்குள் அதை முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் நிறைய வேலைகளைச் சுலபமாகச் செய்ய முடியும்.
மேற்கண்ட வழிகளை கடைப்பிடிப்பதன் மூலம், ஒரு நாளில் நீண்ட நேரம் சமையல் அறையிலேயே கழிக்காமல் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அந்த நேரத்தில் புத்தகம் படிப்பது, திறன்களை வளர்த்துக்கொள்வது போன்ற பயனுள்ள வகையில் செலவழிக்கலாம்.
சமையல் அறையில் உள்ள பொருட்களை சரியான முறையில் அடுக்கி வைக்க வேண்டும். பயன்படுத்தி முடித்ததும் மீண்டும் அவற்றை உரிய இடத்தில் வைப்பதன் மூலம் எந்த பொருள், எந்த இடத்தில் இருக்கிறது என்பதை எளிதாக அறிய முடியும்.
அடிக்கடி பயன்படுத்தும் வாணலி, குக்கர், கரண்டி போன்ற பொருட்களை கைக்கு எட்டும் தூரத்தில் இருக்குமாறு வைக்கலாம். சமையல் எண்ணெய், உப்பு, தாளிப்பு பொருட்கள் ஆகியவற்றை எளிதாக எடுக்கும் வகையில் வைத்திருப்பது நல்லது.
ஒரு வாரத்துக்கான சமையலை முன்பே திட்டமிட்டு பட்டியல் தயாரித்துக்கொள்ளலாம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் உணவு தயாரிப்பது நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு உதவும்.
சமையல் வேலையை முடிந்தவரை எளிமையாக்கிக் கொள்ள வேண்டும். காலை வேளையில் எளிமையான உணவு வகைகளை மட்டுமே தயார் செய்ய வேண்டும்.
வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி சில வேலைகளை முன்னேற்பாடாக செய்து கொள்ளலாம். பூண்டு தோலுரித்து வைக்கலாம். இஞ்சி - பூண்டு விழுது தயாரிக்கலாம். புளியை ஊறவைத்து, வடிகட்டி வைக்கலாம். இவற்றை குளிர் சாதன பெட்டியில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அந்த வாரம் முழுவதும் பயன்படுத்த முடியும்.
ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்துக்குள் அதை முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் நிறைய வேலைகளைச் சுலபமாகச் செய்ய முடியும்.
மேற்கண்ட வழிகளை கடைப்பிடிப்பதன் மூலம், ஒரு நாளில் நீண்ட நேரம் சமையல் அறையிலேயே கழிக்காமல் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அந்த நேரத்தில் புத்தகம் படிப்பது, திறன்களை வளர்த்துக்கொள்வது போன்ற பயனுள்ள வகையில் செலவழிக்கலாம்.
உணவு போக நாம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறையும் கருப்பையை வலுப்படுத்தும். உடல் உழைப்பு, வசிப்பிடம், காலத்துக்கேற்ற உணவை விருப்பத்துடன் உண்ணுங்கள், சமச்சீரான உணவை நேசியுங்கள்.
தாய்மை புனிதமானது. பெண்களின் கருப்பை உட்சுவர் சீராக வளர்வதற்கு ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டீரோன் ஹார்மோன்கள் சீராக சுரக்க வேண்டும்.
சில பெண்களுக்கு கருப்பையின் உட்சுவர் மெலிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. கருப்பை உட்சுவர் வளர்ச்சி படிப்படியாக அதிகரித்து 10 மி.மீ. முதல் 12 மி.மீ. வரை வளர்வது கருவுறுதலுக்கு சிறந்தது. ஸ்கேனில் ஹெட்ரோஜினியஸ் அல்லது டிரிபிள் லேயர் என குறிப்பிடும் வளர்ச்சி, கருவுறுவதற்கு வசதியாக அமையும்.
கருப்பை உட்சுவரின் சீரான வளர்ச்சக்கு உளுந்து, கற்றாழை, சதாவேரி ஆகியவற்றின் பங்களிப்பு இன்றியமையாதது.
உளுந்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து இருப்பதை அறிந்தே தென் இந்தியாவில் மரபு உணவாக நமது முன்னோர்கள் உளுந்தங்கஞ்சியை பயன்படுத்துகிறார்கள். பெண்கள் பூப்பு எய்தியவுடன் வழங்கப்படும் முதல் உணவு இது. மாதவிடாயின் முதல் 15 நாட்களுக்கு காலை உணவாக தொடர்ச்சியாக உண்டுவருவது கருப்பையை நன்கு பலப்படுத்தும்.
ஆலம் விழுது பால் கசாயமும் குடிக்கலாம். ஆலம் விழுது 50 கிராம், 200 மி.லி. பால், 200 மி.லி. தண்ணீர் ஆகியவற்றை 100 மி.லியாக சுண்டும்வரை காய்ச்சி, பின் வடிகட்டி கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து காலை, மாலையில் அருந்தலாம். பழங்களில் அத்தி, மாதுளை, கருப்பு திராட்சையை சாப்பிடுவதும் மிக்க பலனை தரும்.
உணவு போக நாம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறையும் கருப்பையை வலுப்படுத்தும். உடல் உழைப்பு, வசிப்பிடம், காலத்துக்கேற்ற உணவை விருப்பத்துடன் உண்ணுங்கள், சமச்சீரான உணவை நேசியுங்கள். குறைத்தது 45 நிமிட நடை பயிற்சி அல்லது திறந்தவெளி விளையாட்டு, உடலுக்கும் மனதுக்கும் சுகமளிக்கும் எளிய யோகா பயிற்சிகள் செய்யலாம்.. மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும் அவசியம்.
சில பெண்களுக்கு கருப்பையின் உட்சுவர் மெலிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. கருப்பை உட்சுவர் வளர்ச்சி படிப்படியாக அதிகரித்து 10 மி.மீ. முதல் 12 மி.மீ. வரை வளர்வது கருவுறுதலுக்கு சிறந்தது. ஸ்கேனில் ஹெட்ரோஜினியஸ் அல்லது டிரிபிள் லேயர் என குறிப்பிடும் வளர்ச்சி, கருவுறுவதற்கு வசதியாக அமையும்.
கருப்பை உட்சுவரின் சீரான வளர்ச்சக்கு உளுந்து, கற்றாழை, சதாவேரி ஆகியவற்றின் பங்களிப்பு இன்றியமையாதது.
உளுந்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து இருப்பதை அறிந்தே தென் இந்தியாவில் மரபு உணவாக நமது முன்னோர்கள் உளுந்தங்கஞ்சியை பயன்படுத்துகிறார்கள். பெண்கள் பூப்பு எய்தியவுடன் வழங்கப்படும் முதல் உணவு இது. மாதவிடாயின் முதல் 15 நாட்களுக்கு காலை உணவாக தொடர்ச்சியாக உண்டுவருவது கருப்பையை நன்கு பலப்படுத்தும்.
ஆலம் விழுது பால் கசாயமும் குடிக்கலாம். ஆலம் விழுது 50 கிராம், 200 மி.லி. பால், 200 மி.லி. தண்ணீர் ஆகியவற்றை 100 மி.லியாக சுண்டும்வரை காய்ச்சி, பின் வடிகட்டி கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து காலை, மாலையில் அருந்தலாம். பழங்களில் அத்தி, மாதுளை, கருப்பு திராட்சையை சாப்பிடுவதும் மிக்க பலனை தரும்.
உணவு போக நாம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறையும் கருப்பையை வலுப்படுத்தும். உடல் உழைப்பு, வசிப்பிடம், காலத்துக்கேற்ற உணவை விருப்பத்துடன் உண்ணுங்கள், சமச்சீரான உணவை நேசியுங்கள். குறைத்தது 45 நிமிட நடை பயிற்சி அல்லது திறந்தவெளி விளையாட்டு, உடலுக்கும் மனதுக்கும் சுகமளிக்கும் எளிய யோகா பயிற்சிகள் செய்யலாம்.. மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும் அவசியம்.
குளிர்காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும்.
நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனே சியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.
குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஹவாய், புளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று.
குளிர்காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும். அதேபோல மழைக்கால சரும பாதிப்புகளில் இருந்து விடுபடவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் நட்சத்திர பழம் உதவுகிறது.
இந்த ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும். அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகிறது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.
குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஹவாய், புளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று.
குளிர்காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும். அதேபோல மழைக்கால சரும பாதிப்புகளில் இருந்து விடுபடவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் நட்சத்திர பழம் உதவுகிறது.
இந்த ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும். அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகிறது.
சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம்.
குழந்தைகள் அடம் பிடித்து சண்டித்தனம் செய்யும் போது பெற்றோர்களுக்கு மன அழுத்தமும் எரிச்சலும் ஏற்படும். இதனை நடத்தை பிரச்சனையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம். நிலையான அக்கறையும் மன ஒருமித்தலும் இருந்தால் போதும், உங்கள் குழந்தையின் இந்த குணத்தை மாற்றி விடலாம். அவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி அமைதியான பிறகு அவர்களுடன் பேசுங்கள். இது ஒரு தீய பழக்கம் என்று புரிய வையுங்கள். இவ்வகை சூழ்நிலைகளை சமாளிக்க சில தகவல்களை நீங்கள் அறிந்திருந்தால் இந்த வேலையை சுலபமாக செய்து முடிக்கலாம்.
உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். உங்கள் குழந்தைக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலைகள் திரும்ப ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செயல்பாட்டில் இறங்குவதற்கு முன்பு சரியாக திட்டமிடுவது மிகவும் முக்கியம். அதனால் களத்தில் இறங்கும் முன் முதலில் சில விதிமுறைகளை போடுங்கள். குழந்தையின் சில தேவையை நீங்கள் நிராகரிப்பதற்கான சரியான காரணத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள். அதே நேரம் அவர்களின் அனைத்து தேவைகளையும் நீங்கள் நிராகரிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் கோபம் வருவதை நீங்கள் கண்டறிந்தால், அதற்குரிய நடவடிக்கைகளில் உடனே இறங்குங்கள். இதனால் அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை சுலபமாகவும் வேகமாகவும் சரி செய்து விடலாம். ஓய்வில்லாமல் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் குணத்தை மேம்படுத்த போதிய நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதற்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதனால் உங்கள் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழித்து எது சரி எது தப்பு என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.
சில நேரங்களில் உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள அவர்களின் கோபத்தை புறக்கணிப்பதே சிறந்த வழியாக விளங்கும். அவர்களின் தேவை எல்லாம் அவர்களின் பிடிவாதத்தால் நிறைவேறும் என்று அவர்கள் தெரிந்து கொண்டால், தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் உடனடி பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கு சிறிது காலம் எடுக்கும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பொறுமையை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள இதுவும் உங்களுக்கு உதவி புரியும்.
உங்கள் குழந்தை கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர்களை பார்த்து கத்தாதீர்கள். உங்களின் கவனத்தை ஈர்க்கவே அவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது, நீங்கள் அவர்களை பார்த்து கத்துவது அவர்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை உண்டாக்கி விடும். அவர்களை அடிக்கும் பொழுது அதுவே அவர்களுக்கு பழகிவிடும். பயம் என்பதே இல்லாமல் போய் விடும்.
உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். உங்கள் குழந்தைக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலைகள் திரும்ப ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செயல்பாட்டில் இறங்குவதற்கு முன்பு சரியாக திட்டமிடுவது மிகவும் முக்கியம். அதனால் களத்தில் இறங்கும் முன் முதலில் சில விதிமுறைகளை போடுங்கள். குழந்தையின் சில தேவையை நீங்கள் நிராகரிப்பதற்கான சரியான காரணத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள். அதே நேரம் அவர்களின் அனைத்து தேவைகளையும் நீங்கள் நிராகரிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் கோபம் வருவதை நீங்கள் கண்டறிந்தால், அதற்குரிய நடவடிக்கைகளில் உடனே இறங்குங்கள். இதனால் அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை சுலபமாகவும் வேகமாகவும் சரி செய்து விடலாம். ஓய்வில்லாமல் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் குணத்தை மேம்படுத்த போதிய நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதற்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதனால் உங்கள் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழித்து எது சரி எது தப்பு என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.
சில நேரங்களில் உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள அவர்களின் கோபத்தை புறக்கணிப்பதே சிறந்த வழியாக விளங்கும். அவர்களின் தேவை எல்லாம் அவர்களின் பிடிவாதத்தால் நிறைவேறும் என்று அவர்கள் தெரிந்து கொண்டால், தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் உடனடி பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கு சிறிது காலம் எடுக்கும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பொறுமையை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள இதுவும் உங்களுக்கு உதவி புரியும்.
உங்கள் குழந்தை கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர்களை பார்த்து கத்தாதீர்கள். உங்களின் கவனத்தை ஈர்க்கவே அவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது, நீங்கள் அவர்களை பார்த்து கத்துவது அவர்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை உண்டாக்கி விடும். அவர்களை அடிக்கும் பொழுது அதுவே அவர்களுக்கு பழகிவிடும். பயம் என்பதே இல்லாமல் போய் விடும்.
தாய் மட்டுமே அருகில் இருந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலை மாறி, தாயானவள் தாய்ப்பால் சேகரித்து வைத்து விட்டால் தந்தையோ மற்ற பெரியவர்களோ தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கலாம்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரெஸ்ட் பம்ப் பற்றித் தெரிந்திருக்கும். அதை எப்படி பயன்படுத்துவது? அதில் எத்தனை வகைகள் உள்ளன? பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தி தாய்ப்பாலை எப்படி சேகரிக்கலாம்? எவ்வளவு நாள் பாதுகாக்கலாம்? எதை செய்யலாம்? எதை தவிர்க்கலாம் என அனைத்தையும் இந்தப் பதிவில் பார்க்கலாம். அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்கும் தாய்ப்பாலை சேமித்து வைப்போருக்கும் இப்பதிவு உதவும்…
தாய்ப்பாலை குழந்தைக்கு தாய் கொடுப்பது என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு விஷயம். அன்பு, அரவணைப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி, பாதுகாப்புணர்வு போன்ற அனைத்து நல்ல விஷயங்களையும் தரும். இதையே அனைத்துத் தாய்மார்களும் எல்லாக் காலத்திலும் செய்ய முடியாமல் போகலாம். ஏனெனில் அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்கு, தாய்ப்பாலை குழந்தைக்கு நேரடியாக வழங்க முடியாமல் போகலாம். அவர்களுக்கு என்ன மாற்று வழி? பார்க்கலாம் வாங்க…
பிரெஸ்ட் பம்ப்
குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். சில தாய்மார்களுக்கு 3 அல்லது 6 மாதத்திலே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கலாம். அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும் கவலை இருக்கும். இவர்கள் தாய்ப்பாலை சேமித்து வைத்துக்கொள்ள உதவும் கருவியே பிரெஸ்ட் பம்ப்.
மார்பகத்தை அழுத்தி அழுத்தி தாய்ப்பாலை எடுத்து மேனுவல் பிரெஸ்ட் பம்ப். அதாவது நாம் அழுத்தி தாய்ப்பால் எடுக்க வேண்டும். இது ஒரு வகை.
எலக்ட்ரானிக் பிரெஸ்ட் பம்ப், இன்னொரு வகை. இதை மார்பகத்தில் வைத்துப் பொருத்தி கொள்ள வேண்டும். அருகில் உள்ள ஸ்விட்ச் போர்ட்டில், பிளக்கை சொருகி ஆன் செய்து கொள்ளலாம். இந்தக் கருவியே மார்பகத்தை அழுத்தி பாலை சேகரித்து கொள்ளும். இது தானியங்கி கருவி.
இந்த இரண்டு கருவிகளில், தாய்மார்கள் தங்களது வசதி பொறுத்து வாங்கிப் பயன்படுத்தலாம்.
ஏன் பிரெஸ்ட் பம்ப் தேவை?
வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் சேமித்து வைக்க உதவும்.
தாய் மட்டுமே அருகில் இருந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலை மாறி, தாயானவள் தாய்ப்பால் சேகரித்து வைத்து விட்டால் தந்தையோ மற்ற பெரியவர்களோ தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்க்கு ஓரளவு ஓய்வு கிடைக்கும்.
சில குழந்தைகள் இரவில் அழுது கொண்டே இருக்கும். தூக்கமும் வரும் அதேசமயம் பசியும் இருக்கும். சரியாக தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள். குறைந்த இடைவெளியில் அழுதுகொண்டே இருப்பார்கள். நீங்கள் தாய்ப்பாலை சேகரித்து வைத்துக் கொண்டால், இரவில் சேமித்து வைத்த பாலை கொடுத்து விடலாம். தாய் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் தந்தையோ மற்றவர்களோ எழுந்து சேமித்து வைத்த பாலை கொடுக்கலாம்.
தாய்ப்பாலை குழந்தைக்கு தாய் கொடுப்பது என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு விஷயம். அன்பு, அரவணைப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி, பாதுகாப்புணர்வு போன்ற அனைத்து நல்ல விஷயங்களையும் தரும். இதையே அனைத்துத் தாய்மார்களும் எல்லாக் காலத்திலும் செய்ய முடியாமல் போகலாம். ஏனெனில் அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்கு, தாய்ப்பாலை குழந்தைக்கு நேரடியாக வழங்க முடியாமல் போகலாம். அவர்களுக்கு என்ன மாற்று வழி? பார்க்கலாம் வாங்க…
பிரெஸ்ட் பம்ப்
குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். சில தாய்மார்களுக்கு 3 அல்லது 6 மாதத்திலே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கலாம். அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும் கவலை இருக்கும். இவர்கள் தாய்ப்பாலை சேமித்து வைத்துக்கொள்ள உதவும் கருவியே பிரெஸ்ட் பம்ப்.
மார்பகத்தை அழுத்தி அழுத்தி தாய்ப்பாலை எடுத்து மேனுவல் பிரெஸ்ட் பம்ப். அதாவது நாம் அழுத்தி தாய்ப்பால் எடுக்க வேண்டும். இது ஒரு வகை.
எலக்ட்ரானிக் பிரெஸ்ட் பம்ப், இன்னொரு வகை. இதை மார்பகத்தில் வைத்துப் பொருத்தி கொள்ள வேண்டும். அருகில் உள்ள ஸ்விட்ச் போர்ட்டில், பிளக்கை சொருகி ஆன் செய்து கொள்ளலாம். இந்தக் கருவியே மார்பகத்தை அழுத்தி பாலை சேகரித்து கொள்ளும். இது தானியங்கி கருவி.
இந்த இரண்டு கருவிகளில், தாய்மார்கள் தங்களது வசதி பொறுத்து வாங்கிப் பயன்படுத்தலாம்.
ஏன் பிரெஸ்ட் பம்ப் தேவை?
வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் சேமித்து வைக்க உதவும்.
தாய் மட்டுமே அருகில் இருந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலை மாறி, தாயானவள் தாய்ப்பால் சேகரித்து வைத்து விட்டால் தந்தையோ மற்ற பெரியவர்களோ தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்க்கு ஓரளவு ஓய்வு கிடைக்கும்.
சில குழந்தைகள் இரவில் அழுது கொண்டே இருக்கும். தூக்கமும் வரும் அதேசமயம் பசியும் இருக்கும். சரியாக தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள். குறைந்த இடைவெளியில் அழுதுகொண்டே இருப்பார்கள். நீங்கள் தாய்ப்பாலை சேகரித்து வைத்துக் கொண்டால், இரவில் சேமித்து வைத்த பாலை கொடுத்து விடலாம். தாய் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் தந்தையோ மற்றவர்களோ எழுந்து சேமித்து வைத்த பாலை கொடுக்கலாம்.
பெண்கள் விரும்பி அணிய எற்றவாறு கண்கவர் உருவகங்கள் அச்சிடப்பட்ட பிரிண்டட் டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்டட் எனும்போது பெண்மைக்கு அழகூட்டும் அம்சங்கள் அதிகமாகவே சேர்க்கப்படுகின்றன.
இளம்பெண்கள் விரும்பி அணியக்கூடிய குர்தீஸ் எனப்படும் மேல்சட்டைகள் அனைத்து இடங்களுக்கும் அணிந்து செல்ல ஏற்றதாக உள்ளது. பல்வேறு ரகங்களில் உருவாகும் குர்தீஸ்கள் தற்போது புதுமையும், நவீனமும் கலந்தவாறு டெனிம் குர்தீஸ்கள் வருகின்றன. இவை ஒரு நாள் முழுவதும் அணிய ஏற்ற கச்சிதமான ஆடையாகவும், பலரும் பார்த்து வியக்கும் மேம்பட்ட தையல் அமைப்புகளை உள்ளடக்கியவாறு தைக்கப்படுகின்றன. விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் செல்வதற்கு ஏற்ற ஆடையாக திகழ்வதுடன், வெளியூர் மற்றும் சுற்றுலா பயண்களிலும் அணிய ஏற்றதாக உள்ளது. இளவயது பெண்கள் கல்லூரிகள் மற்றும் வகுப்புகளுக்கு அணிந்து செல்ல ஏதுவான ஆடையாகவும் திகழ்கிறது.
விதவிதமான பிரிண்டட் டெனிம் குர்தீஸ்
பெண்கள் விரும்பி அணிய எற்றவாறு கண்கவர் உருவகங்கள் அச்சிடப்பட்ட பிரிண்டட் டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்ட் செய்யப்பட்டது எனும்போது சாதாரண டெனிம் குர்தீஸ்-யை விட கூடுதல் பொலிபை தரக்கூடியவை. டெனிம் துணியின் அடர்த்தி நீலத்திற்கு மேற்புறம் மென்மையான வெளிர் நீல நிற சாயலில் இலைகள், பூக்கள், கொடிகள் மற்றும் கணித உருவங்கள் அச்சிடப்பட்டு டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்டட் எனும்போது பெண்மைக்கு அழகூட்டும் அம்சங்கள் அதிகமாகவே சேர்க்கப்படுகின்றன.
அழகிய வெட்டுகளுடன் கூடிய குர்தீஸ்
டெனிம் குர்தீஸ் என்பது ஒவ்வொரு விதமாக மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இதன் தோற் அமைப்பு பலவிதமான பெண்களின் விருப்பங்களை பொருத்து அமையும் விதமாக உருவாக்கப்படுகின்றன. கழுத்து மற்றும் கை பகுதிகளில் சில மாறுபட்ட வடிவமைப்பு வெட்டுகளுடன் டெனிம் குர்தீஸ் வருகின்றன. அதாவது கை பகுதி என்பது முக்காலி கை பகுதி மற்றும் முழு நீள கைப்பகுதி கொண்டவாறு உருவாகின்றன.
அதிலும் இந்த முக்கால் கைப்பகுதி என்பது நடுவில் வளைவு உள்ளவாறு வெட்டப்பட்டு அதில் சில எம்பிராய்டரி செய்யப்பட்டு தரப்படுகிறது. இந்த வெட்டு துலிப் மலர் போன்ற மேல், கீழ் சுழல் பகுதி உள்ளவாறு உள்ளன. கழுத்து பகுதி வி-நெக், வட்டம், டூம் நெக் மற்றும் சில பூ வடிவ கழுத்துக்கள் கொண்டவாறு வடிவமைப்பு செய்யப்படுகிறது.
இதில் கழுத்து பகுதியிலும், நடு நாயக பகுதியிலும் பட்டன்கள் மற்றும் எம்பிராய்டரி அமைப்பு உருவாக்கம் செய்யப்படுகின்றன. இதில் பட்டன் அமைப்பு நூல் மற்றும் சில பட்டு நூல்களால் அழகுற பொருத்தப்படுகின்றன. மேன்டிரின் காலர், வி-நெக் கொண்ட நீளமான குர்தீஸ் அதிகமாக விரும்பப்படுகிறது. அதுபோல் சில மாடல்கள் ஷார்ட் காலர் அமைப்புடன் வித்தியாசமாக பெரிய அளவுள்ள டெனிம் குர்தீஸ்கள் வருகின்றன. இவை வெளிர்நிற சாயலுடன் அதிக கவனத்தை ஈர்க்கும் குர்தீஸ்களாக உள்ளன.
ஏற்ற-இறக்க குர்தீஸ்கள்
அதாவது குர்தீஸ்கள் கீழ் பகுதி என்பது முன்புறம் சற்று எற்றமாகவும், பின்புற கீழ்பகுதி சற்று இறக்கம் உள்ளவாறும் வடிவமைக்கப்படும். இந்த டெனிம் வகை குர்தீஸ்களில் இந்த வடிவமைப்பு குர்தீஸ் அதிகம் வருகின்றன. பதானி வகை ஹை-லோ குர்தீஸ், ஏ-லைன் குர்தீஸ், டியூனிக் குர்தீஸ் என்ற பலவகை குர்தீஸ்கள் டெனிம் ரகத்தில் வருகின்றன. ஹை-லோ குர்தீஸ் என்பதில் சில முன்புற கீழ் பகுதி வித்தியாசமான வளைவுகள் கொண்டவாறு வெட்டப்பட்டு தைத்து தரப்படுகின்றன. பூக்கள் மற்றும் கைப்பை அமைப்புகள் வேறு வகை நூல்கள் மூலம் எம்பிராய்டரி செய்யப்பட்டு குர்தீஸ்ன் அழகை மேம்படுத்துகின்றன.
டெனிம் ரக துணிகள் ஒரே அடர் நீலம் மற்றும் வெளிர் நீல வகை சார்ந்தவையாகவே இருக்கும். அதனை குர்தீஸ் தயாரிக்க பயன்படுத்தும்போது பெண்களுக்கு உரியவாறு அதிக பொலிவும், வனப்பும் உள்ளவாறு மேம்பட்ட வகையில் வடிவமைப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் டெனிம் ரக துணியின் நிற சாயல் என்பதின் குறை நீங்கி அதுவே அந்த டெனிம் துணிக்கு கூடுதல் மவுசு தரும் வகையில் உருவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது பிரிண்ட், டை, எம்பிராய்டரி, வெட்டுகள் என்றவாறு டெனிம் துணியில் குர்தீஸ் அழகுடன் மாறுபட்ட வகையில் உருவாகின்றன.
விதவிதமான பிரிண்டட் டெனிம் குர்தீஸ்
பெண்கள் விரும்பி அணிய எற்றவாறு கண்கவர் உருவகங்கள் அச்சிடப்பட்ட பிரிண்டட் டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்ட் செய்யப்பட்டது எனும்போது சாதாரண டெனிம் குர்தீஸ்-யை விட கூடுதல் பொலிபை தரக்கூடியவை. டெனிம் துணியின் அடர்த்தி நீலத்திற்கு மேற்புறம் மென்மையான வெளிர் நீல நிற சாயலில் இலைகள், பூக்கள், கொடிகள் மற்றும் கணித உருவங்கள் அச்சிடப்பட்டு டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்டட் எனும்போது பெண்மைக்கு அழகூட்டும் அம்சங்கள் அதிகமாகவே சேர்க்கப்படுகின்றன.
அழகிய வெட்டுகளுடன் கூடிய குர்தீஸ்
டெனிம் குர்தீஸ் என்பது ஒவ்வொரு விதமாக மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இதன் தோற் அமைப்பு பலவிதமான பெண்களின் விருப்பங்களை பொருத்து அமையும் விதமாக உருவாக்கப்படுகின்றன. கழுத்து மற்றும் கை பகுதிகளில் சில மாறுபட்ட வடிவமைப்பு வெட்டுகளுடன் டெனிம் குர்தீஸ் வருகின்றன. அதாவது கை பகுதி என்பது முக்காலி கை பகுதி மற்றும் முழு நீள கைப்பகுதி கொண்டவாறு உருவாகின்றன.
அதிலும் இந்த முக்கால் கைப்பகுதி என்பது நடுவில் வளைவு உள்ளவாறு வெட்டப்பட்டு அதில் சில எம்பிராய்டரி செய்யப்பட்டு தரப்படுகிறது. இந்த வெட்டு துலிப் மலர் போன்ற மேல், கீழ் சுழல் பகுதி உள்ளவாறு உள்ளன. கழுத்து பகுதி வி-நெக், வட்டம், டூம் நெக் மற்றும் சில பூ வடிவ கழுத்துக்கள் கொண்டவாறு வடிவமைப்பு செய்யப்படுகிறது.
இதில் கழுத்து பகுதியிலும், நடு நாயக பகுதியிலும் பட்டன்கள் மற்றும் எம்பிராய்டரி அமைப்பு உருவாக்கம் செய்யப்படுகின்றன. இதில் பட்டன் அமைப்பு நூல் மற்றும் சில பட்டு நூல்களால் அழகுற பொருத்தப்படுகின்றன. மேன்டிரின் காலர், வி-நெக் கொண்ட நீளமான குர்தீஸ் அதிகமாக விரும்பப்படுகிறது. அதுபோல் சில மாடல்கள் ஷார்ட் காலர் அமைப்புடன் வித்தியாசமாக பெரிய அளவுள்ள டெனிம் குர்தீஸ்கள் வருகின்றன. இவை வெளிர்நிற சாயலுடன் அதிக கவனத்தை ஈர்க்கும் குர்தீஸ்களாக உள்ளன.
ஏற்ற-இறக்க குர்தீஸ்கள்
அதாவது குர்தீஸ்கள் கீழ் பகுதி என்பது முன்புறம் சற்று எற்றமாகவும், பின்புற கீழ்பகுதி சற்று இறக்கம் உள்ளவாறும் வடிவமைக்கப்படும். இந்த டெனிம் வகை குர்தீஸ்களில் இந்த வடிவமைப்பு குர்தீஸ் அதிகம் வருகின்றன. பதானி வகை ஹை-லோ குர்தீஸ், ஏ-லைன் குர்தீஸ், டியூனிக் குர்தீஸ் என்ற பலவகை குர்தீஸ்கள் டெனிம் ரகத்தில் வருகின்றன. ஹை-லோ குர்தீஸ் என்பதில் சில முன்புற கீழ் பகுதி வித்தியாசமான வளைவுகள் கொண்டவாறு வெட்டப்பட்டு தைத்து தரப்படுகின்றன. பூக்கள் மற்றும் கைப்பை அமைப்புகள் வேறு வகை நூல்கள் மூலம் எம்பிராய்டரி செய்யப்பட்டு குர்தீஸ்ன் அழகை மேம்படுத்துகின்றன.
டெனிம் ரக துணிகள் ஒரே அடர் நீலம் மற்றும் வெளிர் நீல வகை சார்ந்தவையாகவே இருக்கும். அதனை குர்தீஸ் தயாரிக்க பயன்படுத்தும்போது பெண்களுக்கு உரியவாறு அதிக பொலிவும், வனப்பும் உள்ளவாறு மேம்பட்ட வகையில் வடிவமைப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் டெனிம் ரக துணியின் நிற சாயல் என்பதின் குறை நீங்கி அதுவே அந்த டெனிம் துணிக்கு கூடுதல் மவுசு தரும் வகையில் உருவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது பிரிண்ட், டை, எம்பிராய்டரி, வெட்டுகள் என்றவாறு டெனிம் துணியில் குர்தீஸ் அழகுடன் மாறுபட்ட வகையில் உருவாகின்றன.
Salad, Recipes, Veg Recipes, Healthy Recipes, Corn Recipes, சாலட், கார்ன் சமையல், சைவம், ஆரோக்கிய சமையல்
தேவையான பொருட்கள் :
பேபி கார்ன் - 4,
ப்ரோக்கோலி - சிறியது 1
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1,
வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொத்தமல்லி, ப்ரோக்கோலி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பேபி கார்னை சின்ன சின்ன வட்டமாக வெட்டிக்கொள்ளவும். ப்ரோக்கோலி, பேபி கார்னை கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். ஆவியிலும் வேக வைக்கலாம்.
வேக வைத்த ப்ரோக்கோலி, பேபி கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து கலக்கவும்.
அடுத்து மிளகுத் தூள், உப்பு தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி, பரிமாறவும்.
பேபி கார்ன் - 4,
ப்ரோக்கோலி - சிறியது 1
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1,
வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொத்தமல்லி, ப்ரோக்கோலி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பேபி கார்னை சின்ன சின்ன வட்டமாக வெட்டிக்கொள்ளவும். ப்ரோக்கோலி, பேபி கார்னை கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். ஆவியிலும் வேக வைக்கலாம்.
வேக வைத்த ப்ரோக்கோலி, பேபி கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து கலக்கவும்.
அடுத்து மிளகுத் தூள், உப்பு தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி, பரிமாறவும்.
சூப்பரான சத்தான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட் ரெடி.
இதையும் படிக்கலாம்...கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: தேங்காய் பால் அரிசி பாயாசம்
டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கினாலே சில எளிய வழிமுறைகளை பின்பற்றி ஆரம்ப நிலையிலேயே நோய் தாக்கத்தை கட்டுப்படுத்திவிடலாம்.
கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வராத நிலையில் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி இருக்கிறது. உடல் நடுக்கம், காய்ச்சல், பசியின்மை, கடுமையான உடல்வலி, தலைவலி உள்ளிட்டவை டெங்குவின் அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் தென்பட தொடங்கினாலே சில எளிய வழிமுறைகளை பின்பற்றி ஆரம்ப நிலையிலேயே நோய் தாக்கத்தை கட்டுப்படுத்திவிடலாம்.
பப்பாளி இலை சாறு: பிளேட்லெட் எனப்படும் ரத்தத்தட்டுகள், சிறிய செல்கள் வடிவிலானவை. உடலில் சிறிய காயம் ஏற்பட்டால் உடனே ரத்தத்தை உறைய வைப்பதற்கு இவை அவசியம் தேவை. அதிகப்படியான ரத்த இழப்பை தடுப்பதில் பிளேட்லெட்டுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதுதான் டெங்கு காய்ச்சல் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். பப்பாளி இலை சாறு பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது. அதனால் பப்பாளி இலைகளை சாறு பிழிந்து பருகி வரலாம்.
வைட்டமின் சி: இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி போன்ற வைட்டமின் சி நிரம்பிய உணவு பொருட்களை சாப்பிட்டுவது நல்லது.
துத்தநாகம்: இதுவும் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும். முழு தானியங்கள், பால் பொருட்கள், செர்ரி பழங்கள், வேகவைத்த பீன்ஸ், கொண்டைக்கடலை, முந்திரி, பாதாம், சிவப்பு இறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றில் துத்தநாகம் அதிகம் நிரம்பியுள்ளது. அவற்றை சாப்பிடலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஜிங்க் மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12: இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அபரிமிதமாக அதிகரிக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவை.
இரும்பு: இரும்புச்சத்து குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தை எதிர்மறையாக பாதிக்கும். நோயெதிர்ப்பு செல்கள் பெருக்கம் அடைவதற்கு இரும்பு அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகலாம். மது அருந்தக்கூடாது. எண்ணெய் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகள், காபின், கார்பனேற்றப்பட்ட பானங்கள், காரமான உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பப்பாளி இலை சாறு: பிளேட்லெட் எனப்படும் ரத்தத்தட்டுகள், சிறிய செல்கள் வடிவிலானவை. உடலில் சிறிய காயம் ஏற்பட்டால் உடனே ரத்தத்தை உறைய வைப்பதற்கு இவை அவசியம் தேவை. அதிகப்படியான ரத்த இழப்பை தடுப்பதில் பிளேட்லெட்டுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதுதான் டெங்கு காய்ச்சல் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். பப்பாளி இலை சாறு பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது. அதனால் பப்பாளி இலைகளை சாறு பிழிந்து பருகி வரலாம்.
வைட்டமின் சி: இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி போன்ற வைட்டமின் சி நிரம்பிய உணவு பொருட்களை சாப்பிட்டுவது நல்லது.
துத்தநாகம்: இதுவும் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும். முழு தானியங்கள், பால் பொருட்கள், செர்ரி பழங்கள், வேகவைத்த பீன்ஸ், கொண்டைக்கடலை, முந்திரி, பாதாம், சிவப்பு இறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றில் துத்தநாகம் அதிகம் நிரம்பியுள்ளது. அவற்றை சாப்பிடலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஜிங்க் மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12: இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அபரிமிதமாக அதிகரிக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவை.
இரும்பு: இரும்புச்சத்து குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தை எதிர்மறையாக பாதிக்கும். நோயெதிர்ப்பு செல்கள் பெருக்கம் அடைவதற்கு இரும்பு அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகலாம். மது அருந்தக்கூடாது. எண்ணெய் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகள், காபின், கார்பனேற்றப்பட்ட பானங்கள், காரமான உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.






