search icon
என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    முல்தானி மெட்டியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.
    அழகை அதிகரிக்க உதவும் ஓர் அற்புதமான அழகுப் பொருள் தான் முல்தானி மெட்டி. இதைக் கொண்டு ஒருவர் தங்கள் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகள் வராலும் தடுக்கலாம். ஏனெனில் முல்தானி மெட்டியில் சரும பிரச்சனைகளைப் போக்கும் பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது.

    பெரும்பாலான அழகு நிலையங்களில் கூட சரும நிறத்தை அதிகரிப்பதற்கு முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் தான் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை அழகு நிலையங்களுக்குச் சென்று போடுவதற்கு பதிலாக, அந்த பொடியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

    * ஒரு சிறிய பௌலில் முல்தானி மெட்டி பொடியைப் போட்டு, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும்.

    * ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்டுடன், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது முல்தானி மெட்டி பொடி சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் கழுவி, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி காய்ந்த பின், நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், சருமம் மென்மையாக இருக்கும்.

    * ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

    * 1 டேபிள் முல்தானி மெட்டி பொடி, 1 டேபிள் ஸ்பூன், தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் சரிசமமாக தடவி, நன்கு காய வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், விரைவில் வெள்ளையாகலாம்.

    * ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகப்பரு வருவது தடுக்கப்படும்.
    கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் ஒரு சில பெண்களுக்கு பல் பிரச்சனை உண்டாவது வழக்கம் தான். அதாவது கர்ப்பத்தின் போது அதிகரிக்கும் ஹார்மோன்களால் கிருமிகள் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணிகள் தன் பற்களை தானாகவே பாதிப்புக்குள்ளாக்கி கொள்வதில்லை. கர்ப்பிணிகளின் பற்களை பொறுத்தே குழந்தைகள் பல் அமையும். கர்ப்பத்தின் போது எடுத்துக்கொள்ளும் கால்சியத்தின் அளவு என்பது குறைவாக இருக்குமெனில் குழந்தைக்கு தேவையான கால்சியத்தை அம்மாவின் எலும்பு தருகிறது.

    இருப்பினும், கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது.

    ஒரு ஆராய்ச்சியின் கூற்றுப்படி கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பல் பிரச்சனை என்பது குறைப்பிரசவத்துடன் கூடிய குறைவான எடையை தருகிறதாம். இவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை குறைபாடு மற்றும் காது பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது?

    1. ப்ளூரைடு டூத் பேஸ்ட் கொண்டு தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள்.
    2. ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
    3. பல் மருத்துவரை சந்தித்து அவரிடம் அடிக்கடி ஆலோசனை பெற முயலுங்கள்.

    பல் பாதுகாப்பு பணியில் கர்ப்பம் என்பது பாதிக்கப்படலாம். ஓர் உதாரணத்திற்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு பல் மருத்துவர் X-கதிர்களை செலுத்திவிடக்கூடும். எனவே மிகவும் கவனமாக நீங்கள் இருந்திட வேண்டும். இந்த பல் பாதுகாப்பு X-கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மருத்துவரிடம் முன்கூட்டியே கூறுவதன் மூலம் அவர் செலுத்தும் அளவு என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்படும். அதனால் நீங்கள் கர்ப்பம் என்பதை மருத்துவரிடம் சென்றவுடன் சொல்லிவிட வேண்டியது மிகவும் அவசியம்.

    பல் பிரச்சனை வர என்ன காரணம்?

    1. கிருமி பிரச்சனை.
    2. வாந்தி எடுப்பதால் பல் இடுக்கில் அழுக்கு சேர்வது.
    3. இனிப்பு சாப்பிட்டு வாய் கொப்பளிக்காமல் இருப்பது.

    கர்ப்ப காலத்தில் கால்சியத்தை அதிகரிக்கும் உணவு:

    1. பால்.
    2. பாலாடைக்கட்டி.
    3. இனிப்பு இல்லாத தயிர்.
    4. சோயாப்பால் (கால்சியம் கொண்டது)

    கால்சியம் நிறைந்த வைட்டமின் D:

    வைட்டமின் Dஇல் தேவையான அளவில் கால்சியம் இருக்கிறது.

    1. பாலாடைக்கட்டி
    2. செறிவூட்டிய வெண்ணெய்.
    3. சால்மன் போன்ற மீன்.
    4. முட்டை.

    இன்றைய குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட். பெற்றோர் சொல்லித்தரும் விஷயங்களை கற்பூரம் போல பற்றிக்கொள்கின்றன. அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.
    பெற்றோர் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள்.

    நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு 8-9 மணிநேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்ப வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்க விடக் கூடாது. இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகிவிடும்.

    குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பால் குடிக்கும் போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும்.

    குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது 'நன்றி' மற்றும் 'தயவு செய்து' போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.

    குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.
    வழக்கமான முட்டைக்கோஸை விட சிவப்பு முட்டைக்கோஸில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும்.
    தேவையான பொருட்கள்

    சிவப்பு முட்டைக்கோஸ் - 50 கிராம்
    கேரட் - 50 கிராம்
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    முட்டை - 2
    ப.மிளகாய் - 2
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    சிவப்பு முட்டைக்கோஸ், கேரட், வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சிவப்பு முட்டைக்கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் முட்டை கலவையை பரவலாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பு முட்டைக்கோஸ் கேரட் ஆம்லெட் ரெடி.

    மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவு பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின்-டியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான்.
    உயிர்ச்சத்துகளில் வைட்டமின்-டி முக்கியமானது. அதேநேரம் அதிக கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி'யும் ஒன்று.

    வைட்டமின்-டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது.

    வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தை சமாளிப்பதிலும் வைட்டமின்-டி உதவுவதாக கூறப்படுகிறது. மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவு பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின்-டியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான்.

    இதை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

    நமது வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் அமைந்துவிட்டது. வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வெளியே ஒரு 20 முதல் 25 நிமிடங்கள் நம் கை மீது வெயிலோ அல்லது திறந்தவெளிக் காற்றோ படும்படி இருந்தாலே போதும், வைட்டமின்-டி கிடைக்கும். மதிய உணவு நேரத்தின்போது அலுவலக வளாகத்துக்கு வெளியே சற்று நடந்துவரலாம். அதேபோல் குழந்தைகளையும் வெளியே விளையாட ஊக்குவிக்கலாம். இப்படிச் செய்யும் அதேநேரத்தில் அதிகப்படியாக வெயிலில் இருந்துவிடவும் கூடாது. அதனாலும் பாதிப்பு ஏற்பட நேரிடும்.

    நமது வழக்கமான உணவிலிருந்து வைட்டமின் ‘டி'யைப் பெறுவது கடினம் என்பதால் காளா, சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களைக் கொண்டு நமது தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளலாம். 3 காளா துண்டுகள், நமது தினசரி வைட்டமின் ‘டி’ தேவையில் 80 சதவீதம் பூர்த்தி செய்துவிடும். முட்டைகளிலிருந்தும் வைட்டமின்-டி சத்தை பெறலாம். ஒரு முட்டையிலிருந்து ஒரு மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் ‘டி'யைப் பெறலாம். மாட்டு ஈரலில் புரதச்சத்து, இரும்புச் சத்து போன்றவை மட்டுமல்ல, வைட்டமின் ‘டி'யும் காணப்படுகிறது.
    இந்த ஏர்ஃப்ரையர்கள் இன்னும் சில மாற்றங்களோடு ஸ்டெயின்லஸ் ஸ்பீலினால் செய்யப்பட்டு அவன் வடிவில் வந்திருப்பது இப்பொழுது புதுவரவு என்று சொல்லலாம்.
    வீட்டில் குழந்தைகளுக்கு சிப்ஸ், சிக்கன்-65, ஃப்ரன்ச் ஃப்ரைஸ் போன்ற எண்ணெயில் பொரிக்கும் உணவுகள் மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் நமக்கும் வடை, தந்தூரி சிக்கன், உருளைக்கிழங்கு டிக்கா என எண்ணெயுடன் மிகவும் நெருக்கமான உணவுகளை சாப்பிடுவது பிடிக்கும். ஆனால் உடல் நலத்தைத் கருத்தில் கொண்டு பிடித்தவற்றை விரும்பிச் சாப்பிடவும் முடியாமல், சாப்பிடாமல் இருக்கவும் முடியாமல் திண்டாடுகின்றோம்.

    இந்த திண்டாட்டத்திற்கு ஒரு பெரிய குட் பை சொல்வது போல் வந்தவை தான் ஏர்ஃப்ரையர்கள். இந்த ஏர்ஃப்ரையர்கள் இன்னும் சில மாற்றங்களோடு ஸ்டெயின்லஸ் ஸ்பீலினால் செய்யப்பட்டு அவன் வடிவில் வந்திருப்பது இப்பொழுது புதுவரவு என்று சொல்லலாம்.

    இந்த ஏர்அவன்கள் ஒரு எண்ணெய் டின் போல சமயம் மைக்ரோ அவன் போன்ற ேதாற்றத்தில் இருக்கின்றன.

    இவற்றில் உணவுப் பொருட்களை பொரிப்பது மட்டுமல்லாமல் டோஸ்ட்டும் செய்ய முடியும்.

    ப்ராயிலிங் ரோஸ்ட் செய்ய முடியும்.

    பேக்கிங் செய்யும் வசதியும் உள்ளது.

    சமைத்த உணவுகளை மறுபடியும் சூடுபடுத்திக் கொள்ளும் வசதி உள்ளது.

    டீ ஹைட்ரேட்டிங் செய்து கொள்ள முடியும். அதாவது ஆப்பிள், வாழைப்பழம், வாழைக்காய் போன்றவற்றை துண்டுகளாக இதனுள் அறுத்து வைத்தோமென்றால் அவை சிப்ஸ் போலக் கிடைப்பதே டீ ஹைட்ரேட்டிங் ஆகும்.

    மொறு மொறுப்பாக வறுக்க முடியும்.

    தந்தூரி, ஷவர்மா போன்றவற்றை கடையில் வாங்குவது போலவே அதே ருசியுடன் இந்த ஏர்ஃப்ரையர் அவனில் செய்ய முடியும்.

    இதற்கு முன்பு வந்த ஏர்ஃப்ரையர் மாடலில் ஒரு சிறிய குடும்பத்திற்கு உணவைப் பொரிக்க முடியுமென்றால் இப்பொழுது வந்திருக்கும் இந்த அவன் மாடலில் ஒரு பெரிய குடும்பத்திற்கே உணவைப் பொரிக்குமளவிற்கு வசாலமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஏர்ஃப்ரையரின் கதவு கண்ணாடியால் செய்யப்பட்டு மேலிருந்து கீேழ திறப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவில் பொருத்தப்பட்டிருக்கும் கைப்பிடியானது உறுதியாக உள்ளது.

    ஏர்ஃப்ரையரின் உட்புறம் தகுந்த இடை வெளியில் வைத்துக் கொள்வது போல இரண்டு சதுர வடிவத்தட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாம் பொரிக்க மற்றும் வறுக்க வேண்டிய காய்கறிகளை வைத்து தேவைப்பட்டால் அதன் மேல் சிறிதளவு எண்ணெயை ப்ரஷ் கொண்டு தடவலாம். இந்த இரண்டு தட்டுகளுக்குக் கீழே ட்ரிப்பிங் ட்ரே அதாவது மேலே வைக்கப்பட்ட தட்டிலிருந்து ஒழுகும் மாசாலா உணவுத்துகள் மற்றும் எண்ணெயானது இந்தத் தட்டில் வந்து சேர்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. சமைத்து முடித்ததும் இந்த ட்ரிப்பிங் ட்ரேயை வெளியே எடுத்து சுலபமாகக் கழுவி விடலாம்.

    இத்துடன் ஸ்டெயின்லஸ் ஸ்டீலினால் செய்யப்பட்ட சுழலக்கூடிய கூடை ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடையில் போடப்படும் பொருளானது அனைத்து பக்கத்திலும் சமமாக சமைக்கப் படுகின்றது. குறிப்பாக ஃப்ரன்ச் ஃப்ரைஸ், ஃபிஷ் ஃபிங்கர், காலி ஃப்ளவர் மன்ச் சூரியன், நக்கட்ஸ், சிக்கன் விங்ஸ் போன்றவை மிகவும் மொறுகலாகவும், ருசியாகவும் கடையில் வாங்குவது போன்ற தோற்றத்திலும் கிடைப்பது அருமை என்றே சொல்லலாம்.

    ஏர்ஃப்ரையரின் வெளிபுறத்தில் ஃப்ரைபேக், ப்ராயில், ஹீட், டீ ஹைட்ரேட்டிங் என தனித்தனியே டிஜிட்டல் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே போல் நேரத்தை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும், சூட்டை குறைப்பதற்கும், கூட்டுவதற்கும் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நமக்கு விருப்பமான உணவுகளை தேர்வு செய்து தேவையான நேரத்தை தேர்வு செய்து சமைத்து கொள்ளலாம்.

    சமைக்கும் நேரத்தை தேர்வு செய்த பிறகு இடையிலேயே ஏர்ஃப்ரையரைத் திறந்து சமைக்கும் பொருளை புரட்டிப் போட்டும் சமைக்கலாம். இந்த ஏர்ஃப்ரையரில் கொடுக்கப்பட்டிருக்கும் தட்டுகள் மற்றும் ரொடேடிங் கூடை என அனைத்தையும் டிஷ் வாஷரில் கழுவுவதற்கு ஏதுவாக வடிவமைத்து இருக்கிறார்கள். சூடான காற்றானது சமைக்கக்கூடிய பொருளின் மீது பட்டு உணவைச் சமைப்பதால் எண்ணெயில் பொரிப்பது போன்ற சுவையை இந்த ஏர்ஃப்ரையர்களால் நமக்குத் தரமுடிகிறது.

    சமைக்க கூடிய எந்த உணவிற்கும் எண்ணெயானது மிக மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுவதால் நம் உடலில் சேரக்கூடிய கெட்ட கொழுப்பு குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை. கடையில் கிடைப்பது போலவே சுவை இருப்பதால் குறைந்த செலவில் ஆரோக்கியமாக நம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள முடிகின்றது.

    சிறிய அளவில் இருப்பதால் நாம் செல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல்வது எளிது. மொத்தத்தில் மிக ஆரோக்கியமான சமையலறை உபகரணம் என்று இதைச் சொல்லலாம்.
    மணப்பெண் பிளவுஸ்களுக்கென்றே பிரத்யேகமான டிசைன்களும், அதைத் தைப்பதற்கென்றே சிறப்பான தையல் கலைஞர்களும் உள்ளனர் என்பதைக் கேட்கும்போதே அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா?
    கடந்த சில வருடங்களாகவே புடவைக்கு அணியும் பிளவுஸ்களுக்கென்று தனிக்கவனத்தை பெண்கள் கொடுத்து வருகிறார்கள்.

    விதவிதமான வேலைப்பாடுகளுடன் அருமையாகத் தைத்து அதற்கேற்றாற்போல் கான்ட்ராஸ்டாக சேலைகளை அணிந்து செல்வதே இன்றைய ட்ரெண்ட் என்று சொல்லலாம்.

    மணப்பெண் பிளவுஸ்களுக்கென்றே பிரத்யேகமான டிசைன்களும், அதைத் தைப்பதற்கென்றே சிறப்பான தையல் கலைஞர்களும் உள்ளனர் என்பதைக் கேட்கும்போதே அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா?

    மிகச் சமீபத்திய பிளவுஸ் டிரெண்ட் என்று பட்டன் ரோ பேக் மாடலைச் சொல்லலாம். இவை பட்டு சேலைகளுக்கு அணிந்து கொள்ள சூட்டானவையாகும். இந்த பிளவுஸ்களில் க்ளோஸ் நெக் வைத்து, முதுகுப்புறம் பட்டன்களைத் தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளி விட்டோ தைக்கிறார்கள். ப்ளவுஸ் நிறத்திற்கு கான்ட்ராஸ்டாக பட்டன்களை வைப்பது இன்னும் அழகைக் கூட்டுகின்றது.

    ட்ரெடிஷனல் மற்றும் மாடர்ன் லுக்காக இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஆஃப் ஹோல்டர் பிளவுஸ் டிசைன் மிகவும் ஏற்றதாக இருக்கும். அம்மா, பாட்டியின் பட்டுப் புடவைகளை இதுபோன்ற பிளவுஸ்களுடன் போடும்பொழுது மிகவும் மாடர்னான தோற்றத்தையே தரும்.

    மக்காம் வேலைப்பாடுகளுடன் முக்கால் கை வரை வைத்துத் தைக்கப்படும் இவ்வகை பிளவுஸ்களையே தென்னிந்திய மணப்பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

    ஃபுல் ஸ்லீவ்ஸ் பிளவுஸ் டிசைன்களை அனைவருமே பட்டுச் சேலைகளுடன் அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த மாடல் பிளவுஸ்கள் மறுபடியும் இன்றைய டிரெண்டில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.

    அதேபோல் ப்ரோகேட் பிளவுஸ்களை எந்தச் சேலையுடனும் மேட்ச் செய்து அணிந்து கொள்வதற்கு ஏற்றாற்போல் பலவித நிறங்களை ஒரே பிளவுஸில் இருப்பது போல் தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றை மிக்ஸ் அண்டு மேட்ச் செய்தோ அல்லது பல சேலைகளுக்கு ஒரே பிளவுஸை அணிந்து கொள்ளவோ வாய்ப்புகளை அதிகமாக வழங்குகிறது. இவற்றின் ரிச்சான லுக்கானது அனைத்து பெண்களின் வாட்ரோப்களிலும் இடம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

    நெட் துணிகளை பிளவுஸ்களின் கைப் பகுதிக்கு மட்டும் வைத்து தைக்க டிசைன் மாறி இப்பொழுது முதுகுப்புரம் முழுவதும் வைத்துத்தைத்து அதில் பேட்ச் வொர்க் அல்லது சிக்கி, குந்தன் வேலைப்பாடுகளுடன் தைத்து அணிவது இப்பொழுது டிரெண்ட் என்று சொல்லலாம்.

    முக்கால் கை வைத்து ஹை நெக்குடன் தைக்கப்படும் பிளவுஸ்களை டிசைனர் சேலைகளுடன் அணியும் போது அவை கூடுதல் கம்பீரத்தை தருகின்றது.

    நார்மல் ஷர்ட்டுகளின் மாடல்களில் பிளவுஸ்களை அணிந்து கொள்வது இன்றைய டீன் ஏஜ் பெண்களின் விருப்பமாக உள்ளது.

    ஹை நெக் முக்கால் கை வைத்து முழுக்கழுத்தும் நகை அணிந்தது போல தங்க நிற நூல்களால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கும் பிளவுஸ்களை பிளெயின் சேலைகளுடன் அணிந்தால் ஒரு சின்ன நகையைக் கூட அணிய வேண்டிய அவசியமில்லை.

    பட்டர்ஃபிளை கட் பேக் நெக் பிளவுஸ்கள் ஒரு தனித்துவமான பாணியில் பூசிய உடல் வாகுடன் இருக்கும் பெண்கள் அணிந்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தைத் தருவதாக உள்ளது. இவ்வகை பிளவுஸ்கள் டிசைனர் சேலைகளுடன் அணிய ஏற்றவை.

    சோளி ஸ்டைல் ஃபேஷன் பிளவுஸ்களில் பின்புறம் முடிந்து கொள்வது போல் வந்திருக்கும் மாடலும் இன்றைய டிரெண்ட் எனலாம்.

    ஒரு ஷோல்டர் மாடல், ட்யூப் ஸ்டைல் மாடல், க்நாட்டட் மாடல், பெப்லம் ஸ்டைல், சைனீஸ் காலர் மாடல், பெப்லம் ஸ்டைல், சைனீஸ் காலர் மாடல் என பிளவுஸ்களை விதவிதமாகத் தைத்து அணிவதிலும், தைத்த பிளவுஸ்களில் டிசைன் செய்து அணிவதிலும் இன்றைய இளைம் பெண்கள் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல், சில ஆயிரம் முதல் பல ஆயிரம் வரையிலும் பிளவுஸ்களுக்குச் செலவு செய்யத் தயாராகவும் இருக்கிறார்கள்.
    குழந்தைகள் வயிற்றில் பூச்சி, புழுக்கள் வளர்வதும் ஒருவகையில் அவர்கள் பல்பம் தின்பதற்கு காரணமாக இருக்கும். டாக்டர்களிடம் கலந்தாலோசித்து உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
    பள்ளி செல்லும் குழந்தைகள் எழுத்துக்களை சிலேட்டில் எழுதி பழகுவதற்கு உபயோகப்படுத்தும் பல்பம் எனப்படும் சிலேட் குச்சியை வாயில் வைத்து மென்று தின்கிறார்கள். சிறுமிகள்தான் அதிகமாக இதை தின்கிறார்கள். பின்னாளில் பல்பம் ஏற்படுத்தும் பாதிப்பால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி அவதிப்படுகிறார்கள்.

    பல்பத்தில் கால்சியம் கார்பனேட் எனும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து தின்றால் சிறுநீரக கற்கள் உருவாகக்கூடும். பல்பம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உருவாகுவதற்கு உடலில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சி சத்துக்கள் குறைவாக இருப்பதே காரணமாகும்.

    டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டு உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பக்க விளைவுகளால் அவதிப்பட நேரிடும். இரும்பு, கால்சியம் சத்து கொண்ட உணவு பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் பல்பம் மீதான மோகத்தில் இருந்துவிடுபடலாம்.

    இரும்பு சத்து அதிகம் கொண்ட இறைச்சி வகைகள், இறால், வஞ்சீரம் போன்ற மீன் வகைகளை சாப்பிட்டு வரலாம். உலர்திராட்சை, உலர் பழங்கள், கோதுமை, சோயா, கீரை வகைகள், ஓட்ஸ் போன்றவற்றையும் சாப்பிடலாம். பால், பாலாடை கட்டி, தயிர், பாதாம் பருப்பு போன்ற கால்சியம் அதிகம் கொண்ட உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

    குழந்தைகள் வயிற்றில் பூச்சி, புழுக்கள் வளர்வதும் ஒருவகையில் அவர்கள் பல்பம் தின்பதற்கு காரணமாக இருக்கும். டாக்டர்களிடம் கலந்தாலோசித்து உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

    சிலருக்கு உறவுக்குப் பின்பு சின்னச் சின்ன உடல் உபாதைகளும், சிலருக்கு தீவிரமான பாதிப்புகளும் ஏற்படலாம். உறவு கொண்ட பின்பு, பொதுவாக ஏற்படும் சில உடல் உபாதைகளைப் பற்றி அறிந்து கொள்வது ஆண்-பெண் இருபாலருக்கும் நல்லது.
    கணவன்- மனைவி இடையேயான தாம்பத்திய உறவு இன்பமானதாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு உறவுக்குப் பின்பு சின்னச் சின்ன உடல் உபாதைகளும், சிலருக்கு தீவிரமான பாதிப்புகளும் ஏற்படலாம். உறவு கொண்ட பின்பு, பொதுவாக ஏற்படும் சில உடல் உபாதைகளைப் பற்றி அறிந்து கொள்வது ஆண்-பெண் இருபாலருக்கும் நல்லது.

    அடிக்கடி ஏற்படும் வலி

    பொதுவாக தாம்பத்ய உறவு முடிந்ததும் கணவனும்- மனைவியும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் அல்லது பேசிக் கொண்டிருப்பார்கள். பின்பு ஆண்கள் சீக்கிரமாக தூங்கிவிடுவார்கள். உடல் அசதி இருவருக்குமே இருந்தாலும், பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரம்ப கால உறவின்போது ஏற்படும் வலி என்பது வேறு. வழக்கமான உறவுக்குப் பின்பு வலி ஏற்படுவது கவனிக்க வேண்டியதாகும்.

    வித்தியாசமான உறவு செயல்பாடுகளால் வலி உண்டாகலாம். தீவிர ஆர்வத்தால், வினோத புணர்வு இன்பத்தால் பிறப்பு உறுப்பில் தோல் கிழிவது, புண்ணாவது, நகங்கள் படுவது போன்ற காரணங்களால் இருபாலருக்குமே காயம் ஏற்படவும் வலி உண்டாகும் வாய்ப்பும் உண்டு. உடல் ஆரோக்கிய குறைபாடு காரணமாகவும் வலி உண்டாகலாம். மாறுபட்ட முயற்சி மற்றும் முரட்டுத்தனமான புணர்ச்சியாலும் தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாகலாம்.

    சாதாரண வலி என்றால் அதனை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆரோக்கிய குறைபாடு மற்றும் தொடர் வலி இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் ஒவ்வொரு முறை உடலுறவுக்குப் பின்பும் வலி ஏற்படுவது, கட்டி, புண்கள் வளர்வதற்கான அறிகுறியாகவும், வேறு நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். வலி ஏற்படாமல் இருக்க நிதானமான தாம்பத்ய செயல்பாடுகள் அவசியம்.

    நீண்ட நேர எரிச்சல்

    வலியைப் போலவே பலருக்கும் உடலுறவுக்குப் பின்பு எரிச்சல் உணர்வு உண்டாகலாம். நகக் கீறல், பற்குறி, அசுர வேகம் உள்ளிட்ட காரணங்களால் தோலில் ஏற்படும் கிழிசலாலும், அதிக அழுத்தம் காரணமாக ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டும் எரிச்சல் ஏற் படலாம்.

    உறவுக்குப்பின்பு சுமார் ஒரு மணி நேரத்திற்குள் எரிச்சல் நின்றுபோனால் அது சாதாரணமானது. எப்போதும் தொடர்ந்து எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். நிதானமான உறவு செயல்பாடு வலியையும், எரிச்சலையும் தவிர்க்கும். வாய் மற்றும் பிறப்பு உறுப்புகளை சுத்தம் செய்வதும் அவசியமாகும். இருவருமே அந்தரங்க சுத்தத்தை மேற்கொண்டால் எரிச்சலை பெருமளவு தவிர்க்கலாம்.

    ரத்தக்கசிவு

    முதல் உறவின்போது மட்டுமே கன்னித்திரை கிழிவதால் லேசான ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. தற்போது பெண்களின் விளையாட்டு, உடல் இயக்கம், வாழ்வியல் முறைகளால் அத்தகைய ரத்தக் கசிவு நிலை அனேகமாக ஏற்படுவதில்லை. மாதவிலக்கு முடிந்த அடுத்த நாட்களில் உறவு வைத்துக் கொண்டால், சில பெண்களுக்கு எஞ்சிய ரத்தத்துளிகள்கூட கசிந்துவரக்கூடும்.

    மற்ற நேரங்களில் சாதாரண உறவு நிலையில் ரத்தம் கசிந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். முரட்டுத்தனம் மற்றும் அவசரத்தால் ஏற்பட்ட ரத்தக்கசிவு என்றால் மருந்துகளை உபயோகித்து சரி செய்துவிடலாம். உறவுக்குப் பின்பு தொடர்ந்து ரத்தம் கசிவது, ஒவ்வொரு உறவின்போதும் இதே பிரச்சினை ஏற்படுவது, பிறப்பு உறுப்பின் உட்பகுதியில் புண் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதற்கு அவசியம் மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள்.

    நமைச்சலும் அரிப்பும்

    உறவுக்குப் பின்பு பிறப்பு உறுப்புகளில் நமைச்சல், அரிப்பு ஏற்பட்டால் அந்தரங்க சுத்தமின்மை காரணமாக இருக்கலாம். உறவுக்கு முன்னும் பின்னும் உறுப்புகளை சுத்தமாக கழுவுவது நல்லது. ஆணுறை உபயோகிப்பது, வழுவழுப்பு தன்மைக்காக ஏதேனும் கிரீம்களை உபயோகிப்பது, உதட்டுச் சாய ரசாயனங்களின் விளைவு உள்ளிட்ட காரணங்களாலும் அரிப்பு ஏற்படலாம். உறுப்புகளை கடந்து உடலிலும் அரிப்பு ஏற்பட்டால் மருத்துவ உதவியை பெறுவது அவசியம்.

    உடலுறவால் சிலருக்கு சிறுநீர்ப்பை நோய்த் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. குடல் பகுதியில் இருந்து பாக்டீரியா நுண்கிருமிகள் பிறப்பு உறுப்புகளின் வழியே நுழைவது சிறுநீர்ப்பை நோய்த் தொற்றை உருவாக்கும். உடலுறவுக்கு முன்பு அல்லது உடலுறவு முடித்த உடன் சிறுநீர் கழிப்பதை தவிர்த்தால் சிறுநீர்ப்பை நோய்த் தொற்றை தவிர்க்கலாம்.

    அவசர உபாதைகள்

    தாம்பத்ய உறவு கொண்டதும் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் அல்லது மலம் கழிக்கும் அவசரம் ஏற்படுவதுபோல தோன்றலாம். இது முழு விருப்பம் இல்லாமல், பலவித மனநெருக்கடிக்கு இடையில் உடலுறவு கொள்வதால் ஏற்படுவதாகும். ஆண்களில் சிலருக்கு உறவுக்குப் பின்பு, திரவம் கசிவதுபோல இருக்கலாம். அது எஞ்சிய திரவமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. பெண்கள் கருவுற்ற நிலையில் உறவு கொண்டாலோ அல்லது கருத்தடை சாதனங்களை பயன்படுத்திக் கொண்டு உறவு கொண்டாலோ உட்சென்ற விந்துத்திரவம் சிறிது நேரத்தில் வெளித்தள்ளப்படக்கூடும். இது இயற்கையானதுதான்.

    அந்தரங்க சுத்தமும், நிதானமான செயல்பாடுகளும் இருந்தால் பெரும்பாலும் உடலுறவுக்குப் பின்னால் அவஸ்தைகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பதை ஆண்களும், பெண்களும் கவனத்தில்கொள்வது மிக அவசியம்.
    சோளத்தில் பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
    தேவையான பொருட்கள்

    வெள்ளை சோளம் - 1 கப்
    இட்லி அரிசி - 1 கப்
    உளுந்து -  அரை கப்
    வெந்தயம் - ஒரு ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சோளம், இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் கலந்து கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஆறு மணி நேரம் ஊறிய பின்னர் மிக்ஸியில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து, 8 மணி நேரம் புளிக்க விடவும்.

    மாவு நன்கு புளித்தவுடன் தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சாம்பார் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும்.

    சூப்பரான சோள தோசை ரெடி.

    பிரஷர் குக்கரை அதன் காலாவதி தேதிக்கு பின்னரும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் வீட்டை நிர்வகித்து வரும் இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் உதவியாக இருப்பது பிரஷர் குக்கர். பெண்களுக்கு ‘பிரஷர்’ ஏறாமல், சமையலை எளிதாக முடிப்பதற்கு உதவும் பிரஷர் குக்கரை சரியான முறையில் பராமரிக்க வேண்டியது முக்கியம்.

    பிரஷர் குக்கரில் உணவு சமைக்கும்போது 90 முதல் 95 சதவிகித ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் கிடைப்பதாக இத்தாலியின் ‘ஜேர்னல் ஆப் புட் சயின்ஸ்' எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

    பிரஷர் குக்கரின் வகைகள்:

    அலுமினியம், காப்பர், எஸ்.எஸ்.ஸ்டீல், டைட்டானியம் என பல வகையான உலோகங்களில் பிரஷர் குக்கர்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட பிரஷர் குக்கரை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

    பிரஷர் குக்கரை பராமரிக்கும் முறைகள்:

    பிரஷர் குக்கரில் பயன்படுத்தும் ‘கேஸ்கட்’ எனும் ரப்பர் வளையத்தை, உபயோகப்படுத்தாதபோது குக்கரில் இருந்து கழற்றி, குளிர் சாதனப் பெட்டியின் பிரீஸரில் வைக்கலாம். இந்த வசதி இல்லாதவர்கள் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ‘கேஸ்கட்’டைப் போட்டு வைக்கலாம். இதன் மூலம்  ‘கேஸ்கட்' விரைவாக சேதம் அடைவதைத் தடுக்க முடியும். ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை கேஸ்கட்டை அவசியம் மாற்ற வேண்டும்.

    பிரஷர் குக்கரின் மூடியில் இருக்கும் துவாரங்களில் ஏற்படும் அடைப்பை, சிறிய ஊசியின் உதவியால் நீக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல் முடிந்த பின்பு, குக்கரில் சமைத்த உணவை வேறு பாத்திரத்தில் மாற்றி விட்டு சுத்தமாக கழுவி உலர வைக்க வேண்டும். வெயிலில் 10 நிமிடம் வரை உலர வைப்பது சிறந்தது.

    பிரஷர் குக்கரில் சமைக்கும் போது, அதில் பாதி அல்லது முக்கால் பாகம் தான் சமைக்கும் உணவுப்பொருள் இருக்க வேண்டும். முழு கொள்ளளவு வரை இருக்குமாறு சமைக்கக் கூடாது. குக்கரை மூடும் போதே ‘விசில்’ போடக்கூடாது. நீராவி நன்றாக வெளிவர ஆரம்பித்த பிறகே அதில் விசிலைப் பொருத்த வேண்டும். இதன் மூலம் குக்கர் சீராக இயங்குவதோடு நீண்ட நாள் உழைக்கும்.

    பிரஷர் குக்கரில் நேரடியாக சமைப்பதைத் தவிர்த்து, உள்ளே ஒரு எவர் சில்வர் பாத்திரத்தை வைத்து உணவு சமைப்பதே நல்லது. சமைத்து முடித்ததும் குக்கரின் அழுத்தம் முற்றிலும் அடங்கிய பின்னர் தான் திறக்க வேண்டும். பிரஷர் குக்கரில் இருக்கும் கைப்பிடிகளில் உள்ள திருகுகள் துருபிடிக்காமல் இருப்பதற்கு அதனை மாதம் ஒரு முறை கழற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

    திருகுகள் கழன்று வராமல் சரியாகப் பொருந்தி இருக்கிறதா என்பதையும் அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பிரஷர் குக்கரை அதன் காலாவதி தேதிக்கு பின்னரும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்திய பாடில்லை. இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல.
    நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்திய பாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள்.

    இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

    சராசரியாக மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூங்குவதற்கு சரியான நேரம், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான். ஏனெனில், அப்போதுதான் ‘மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சரியாக சுரக்கும். வெளிச்சமே இல்லாத இரவில் தூங்கி வெளிச்சம் வந்தவுடன், எழுந்துவிட வேண்டும். அப்போதுதான், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, ஆரோக்கியம் மேம்படும்.

    சிலர், வேலை காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் தூங்க வேண்டிய சூழல் வரலாம். அவர்களும் இந்த 6-8 மணி நேர தூக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல.

    பேஸ்புக்கில் அப்லோடு செய்த போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கிறது, யாராவது கமெண்ட் செய்திருக்கிறார்களா, வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து செல்போனை சோதனை செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவை அனைத்துமே ஒரு வகையில் மனரீதியான பிரச்சினைகள்தான். இவர்கள் ஆழ்ந்த தூக்கம் என்ற நிலையை அடைவதே இல்லை.

    இந்தபிரச்சினையை மருத்துவ ஆலோசனை யின் பேரில் சில வகை தெரபி, மெலட்டோனினை சுரக்கவைக்கும் மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியும். இதுபோன்ற முறையற்ற தூக்கத்தில் இருந்து விடுபட ஒரே வழி, குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு செல்போனை தள்ளி வைத்துவிட்டு, சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பதுதான்.
    ×