search icon
என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    நீச்சல், ஓவியம், சிலம்பம், ஸ்கேட்டிங் என... குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்ப்பது நல்லதுதான் என்றாலும், அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்.
    உலகறிந்த மந்திரவாதி சிறுவனான, ஹாரி பாட்டரின் வாழ்க்கையை சொல்லும் ‘ஹாரி பாட்டர்’ வரிசை புத்தகங்கள் ஏழு பாகங்களாக கிடைக்கின்றன.

    ஹாரி பாட்டரும், அவனுடைய நண்பர்களும் படிக்கிற மாயாஜால பள்ளியை பற்றியும், அதைச் சார்ந்திருக்கிற உலகத்தையும், இதன் எழுத்தாளரான ரவுலிங்கின் நேர்த்தியான எழுத்தாற்றலில், படிக்க படிக்க திகட்டாதது.

    ‘பேமஸ் பைவ் மற்றும் சீக்ரெட் செவன் வரிசைப் புத்தகங்கள்’, துப்பறியும் கதைகளை கொண்டவை. ‘ஹாரிபிள் ஹிஸ்டரி’, வரலாற்றை இப்படியும் சுவையாகச் சொல்ல முடியுமா என, திகைக்க வைக்கும் வரிசைப் புத்தகங்கள் இவை.

    கிட்டத்தட்ட, ‘காமிக்ஸ்’ மாதிரி தான் இருக்கும். அதனால் புத்தகங்கள் படித்து, அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் குழந்தைகளே...

    நீச்சல், ஓவியம், சிலம்பம், ஸ்கேட்டிங் என... குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்ப்பது நல்லதுதான் என்றாலும், அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்.

    நிறைய புத்தகங்கள் படிப்பவர்களுடைய மூளை, மற்றவர்களை விட, கூர்மையாக இயங்குகிறது; எந்தத் துறையிலும், வெற்றி பெறுகின்றனர்; இது, திரும்பத் திரும்ப பல ஆய்வுகளில், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

    வயதுக்கு ஏற்ப குழந்தைகள், அவசியம் படிக்க வேண்டிய சில புத்தகங்களைப் பற்றி, இங்கே பார்ப்போம்...

    * மூன்று முதல் ஏழு வயதுள்ள குழந்தைகளுக்கு...

    படங்கள் அதிகம் உள்ள, எழுத்துக்கள் குறைவாக உள்ள புத்தகங்கள் ஏராளமாக கிடைக்கின்றன. வண்ண மயமான படங்களை, குழந்தைகள் விரும்பிப் பார்ப்பார்கள். பெற்றோர், அவர்களுக்கு படித்துக்காட்ட வேண்டி இருக்கும். சில சொற்களை, குழந்தையை சொல்ல வைக்கலாம். படங்களை சுட்டிக்காட்டி, ‘இது என்ன?’ என்று கேட்கலாம். ‘இதே போல் பொம்மை நம்ம வீட்ல இருக்கே. அதைக்காட்டு பார்க்கலாம்..’ என்று புதிர் போடலாம்.

    * ஏழு வயது முதல் பத்து வயதுள்ள குழந்தைகளுக்கு...

    இந்த வயது குழந்தைகளும் படம் உள்ள புத்தகங்களை தான் அதிகம் விரும்புவர். ஆனாலும், படத்துக்கு சமமாக, எழுத்துக்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பர். நகைச்சுவை, புராணம், சரித்திரம், ஆன்மிகம் மற்றும் வாழ்க்கை வரலாறு போன்ற புத்தகங்களை இவர்கள் விரும்பி படிப்பார்கள்.

    இவர்களுக்கு பஞ்ச தந்திர கதைகள், நீதிக்கதைகள் போன்ற புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கலாம். எளிய சம்பவங்களின் மூலம், குழந்தைகளின் மனதில், நீதியை பதிய வைக்கும் நோக்கங்களுடன் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளதால், அவர்கள் மனதில் எளிதில் பதியும்.

    ஆங்கில வரிசையில், ‘தி விசார்ட் ஆப் ஊஸ்’, ‘ஆலிஸ் இன் ஒன்டர்லாண்ட்’ போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். ‘தி விசார்ட் ஆப் ஊஸ்’ இது ஒரு ஜாலியான, மாயாஜாலக் கதை. அழகழகான படங்களுடன் கிடைக்கும். ஆலிசின் அற்புத உலகம், இதுவும் முந்தைய கதையை போலவே, மாய உலகம் சம்பந்தப்பட்டது தான். இதன் தமிழ் மொழி பெயர்ப்பும் கிடைக்கிறது.

    * பத்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு...

    தானாகவே தேடித்தேடி வாசிக்க ஆரம்பிக்கும் இந்த வயதினருக்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக, துப்பறியும் கதைகள், மாயாஜாலக் கதைகள் மற்றும் சாகச கதைகள் என, ஏராளமான புத்தகங்கள் உள்ளன.
    ஆண், பெண் இருவருக்கும் உடலில் உள்ள பிரச்னைகளாலும் குழந்தையின்மை ஏற்படலாம். குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வருபவர்களில் யாராவது ஒருவருக்கு உடலில் பிரச்னை இருப்பது குறைவே.
    ஆணும் பெண்ணுமாய் இரண்டு உயிர்கள் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் இனவிருத்தி. இதற்கான உபகரணம்தான் தாம்பத்தியம். ஒரு மனித உயிரை உற்பத்தி செய்வதென்பது இயந்திரத்தனமாக நடப்பதில்லை.

    ஈர்த்து, இணைத்து, காதல் கொள்ளச் செய்து… காமத்தால் அந்தக் காதலை வற்றாதிருக்கச் செய்து… அன்பின் பிணைப்பால் ஆயுள் உள்ளவரை அடுத்தடுத்த சந்ததியரோடான சங்கிலியை வலிமையுறச் செய்கிறது. ஆண் பெண் என்ற இரு உயிர்களுக்கு இடையில் இன்று வரை வற்றாது இயங்கும் பாசம் கூட இனத் தேவைதான்.

    ஆறறிவு கொண்ட மனித இனம் தாம்பத்தியத்தை ரசனையால் அதனை அழகுறச் செய்கிறது. மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்ய அந்த இருவரது ஆயுளின் அந்தி வரை இணைந்து பயணிக்க… அந்தப் பயணம் நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் இனிக்க வேண்டுமல்லவா… அந்த இணைப்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் உருவாக்கித் தருவது தாம்பத்தியம்.

    தாம்பத்தியத்தின் விளைவாக தங்களது மழலைச் செல்வத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டால் அந்த ஏக்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மன உளைச்சல் என பல கட்டங்களாக வளர்ந்து அவர்களது தாம்பத்திய இன்பத்தைத் தகர்த்துவிடுகிறது. பிரச்னையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாததும் தாம்பத்தியம் பற்றிய தவறான நம்பிக்கைகளுமே இதற்குக் காரணம் என்கிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவரான கபிலன்.

    குழந்தையின்மைக்கான காரணம் மற்றும் தாம்பத்திய உறவின் இன்பத்துக்கு அதுவே எப்படி பிரச்னையாக மாறுகிறது? இதற்கான தீர்வு குறித்தும் விரிவாகப் பேசுகிறார். குழந்தையின்மைக்கான காரணங்களை தெளிவாகப் புரிந்து கொள்வதும் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும்.

    திருமணமான தம்பதியர் வேலைச் சூழல் காரணமாக மாதத்தில் சில முறை மட்டும் தாம்பத்யம் வைத்துக் கொள்வது, கணவர் வெளி ஊரில் பணியாற்றுவதால் சில மாதங்களுக்கு ஒரு முறை சந்திப்பதும் நீண்ட நாட்கள் கழித்து தாம்பத்யம் வைத்துக் கொள்வதும் குழந்தையின்மைக்கான காரணமாக இருக்கலாம்.

    இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்துப் புரிந்து கொள்வது அவசியம். பாசிட்டிவ்வான விஷயங்களைப் பாராட்டிக் கொள்வது, ‘நீ இந்த டிரஸ்ல அழகா இருக்க’ என பாராட்டுவது, ‘உனக்கு நான் முக்கியமானவன்…’ ‘இந்த உலகத்திலேயே எனக்கு முதன்மையானவள் நீ’ என்பது போன்ற அன்பின் வெளிப்பாடுகள் அவசியம். தொடர்ச்சியாக தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதும் அவசியம். அதே சமயம் உடலிலும் எந்தப் பிரச்னைகளும் இருக்கக் கூடாது.

    ஆணுறுப்பு விறைப்புத்தன்மையில் பிரச்னை, விரைவாக விந்து வெளியேறுதல் பிரச்னைகள் இருந்தாலும் குழந்தையின்மை மற்றும் தாம்பத்யப் பிரச்னைகள் இரண்டும் இணைந்து தாக்கும். பாரம்பரியமான குடும்பம், செக்ஸ் பற்றியெல்லாம் பேசக்கூடாது, யோசிக்கவே கூடாது என வளர்க்கப்பட்ட ஆணும் பெண்ணும் திருமணத்துக்குப் பின் செக்ஸ் வைத்துக் கொள்ளவே கூச்சப்படலாம், பெண் அருவெறுப்படையலாம். செக்ஸ் பற்றின விழிப்புணர்வு இருக்காது. குழந்தை வரம் கேட்டுக் கோயிலுக்குப் போவார்கள், விரதம் இருப்பார்கள்.

    செக்ஸ் என்பது இயல்பு வாழ்க்கையின் தேவை என்ற எண்ணமே அவர்களுக்கு இருக்காது. தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதில் தயக்கம், குழப்பம் இருப்பதாலும் குழந்தை உருவாகாமல் போகலாம்.

    பெண் உடலுறவின் போது ஒத்துழைக்காதது, ஆண் முழு ஈடுபாட்டுடன் தாம்பத்ய உறவு கொள்ளாமல் செயல்படுவது இருவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். மன உளைச்சலை உண்டாக்கும். திருமணத்துக்கு முன் தெளியான பாலியல் கல்வி அவசியம். செக்ஸ் பற்றி ஏற்கனவே மனதில் சேர்த்து வைத்திருக்கும் தயக்கங்களையும் உடைக்க வேண்டும்.

    ஆண், பெண் இருவருக்கும் உடலில் உள்ள பிரச்னைகளாலும் குழந்தையின்மை ஏற்படலாம். குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வருபவர்களில் யாராவது ஒருவருக்கு உடலில் பிரச்னை இருப்பது குறைவே. 50 சதவீதம் பேரில் ஆண், பெண் இருவருக்குமே பிரச்னை உள்ளது. சிகிச்சைக்கு வரும் தம்பதியரில் இருவருமே சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

    ஆண்களைப் பொறுத்தவரை விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது முக்கியமான பிரச்னையாக உள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களுக்கு வயதாகும்போது விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். தாமதமாகத் திருமணமாகும்போது விந்தணுக்கள் குறைபாடு ஏற்படலாம்.

    வேலைக்காக 30 வயதுக்கு மேல் திருமணம் செய்வது. திருமணத்து பின் சில காரணங்களுக்காக குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடுவதாலும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இவர்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தியில் பிரச்னை இருக்கலாம். விந்தணுக்கள் பயணிக்கும் குழாயில் அடைப்பு இருக்கலாம். இதெல்லாம் சரி செய்யக் கூடிய பிரச்னைகளே.

    வெரிக்கோ சீல் கண்டிஷன் என்பது விந்தணுக்களை எடுத்துச் செல்லும் நரம்புக்குழாயில் பின்னோக்கிச் செல்லும் நிலை இருக்கலாம். விந்தணுக்கள் விரைவாக வெளியேறுவது என ஆணுக்கு இருக்கும் பிரச்னையை பரிசோதனை மூலம் சரியாகக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் சரி செய்ய முடியும். ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் விந்தணுக்களின் உற்பத்தியை சரி செய்ய முடியாமல் போகலாம். இதனை சிகிச்சையால் சரி செய்ய முடியாத ஒரு பிரச்னையாகப் பார்க்கலாம்.

    பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது பாலிசிஸ்டிக் ஓவரீஸ் டிசீஸ், கரு முட்டை வெளியேறும் குழாயில் அடைப்பு இருக்கலாம். கரு முட்டை உற்பத்தியாகி கருக்குழாய் வழியாக கருப்பையை வந்தடைய வேண்டும். ஆணுறுப்பில் இருந்து விந்தணுக்கள் வெளியேறி கருமுட்டையை அடைந்து குழந்தைப் பேறு நிகழ்கிறது. பெண்களுக்கு டியூபில் அடைப்பு இருக்கும் பட்சத்தில் முட்டை வெளியேறாது. இதுபோன்ற காரணங்களால் குழந்தையின்மை என்ற நிலை ஏற்படுகிறது.
    நுரையீரல், இதய நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவர்களில் 15 சதவீதம் பேருக்கு காற்று மாசுபாட்டுடன் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் நுரையீரல் பகுதியைதான் அதிகம் பாதிக்கிறது. நுரையீரல் பாதிப்புக்கு காற்று மாசுபாடும் ஒரு வகையில் காரணமாக இருப்பதால் அவர்களை கொரோனா வைரஸ் தொற்றும் எளிதில் பாதிப்படைய செய்து விடுகிறது.

    ஏற்கனவே நுரையீரல், இதய நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. ஐரோப்பாவில், காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய கொரோனா மரணம் 19 சதவீதமாக உள்ளது.

    மேலும் வட அமெரிக்காவில் 17 சதவீதமாக இருக்கிறது. அதிலும் கிழக்கு ஆசிய நாடுகளில்தான் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கிழக்கு ஆசியாவில் காற்று மாசுபாடு 27 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    “காற்று மாசுபாட்டுக்கும், கொரோனா இறப்புக்கும் இடையேயான நேரடி தொடர்பை எங்கள் ஆய்வு குறிப்பிடவில்லை. இருப்பினும் மறைமுக தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறோம். சுவாச கோளாறுகளை உள்ளடக்கிய நாள்பட்ட நோய்கள், பிற மருத்துவ நிலைமைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. உதாரணமாக இங்கிலாந்தில் 44 ஆயிரம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருந்தால் அதில் காற்று மாசுபாட்டால் 14 சதவீதம் பேர் மரணமடைந்திருப்பதாக மதிப்பிடுகிறோம்.

    அதாவது 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகள் காற்று மாசுபாட்டால் ஏற்பட்டிருக்கக்கூடும். காற்று மாசுபாட்டிற்கான நீண்டகால வெளிப்பாடு மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஆகிய இரண்டும் ஒன்றிணைந்தால், பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக இதயம், ரத்த நாளங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும்” என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
    கோதுமையில் எப்போதும் ஒரே மாதிரி சப்பாத்தி, பூரி செய்து சாப்பிடாமல் வித்தியாசமாக கோதுமை மாவில் கஞ்சி செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சம்பா கோதுமை மாவு - 3 டீஸ்பூன்,
    தண்ணீர் - ஒரு கப்,
    ஓமம், சுக்கு, சீரகம், மிளகு - சிறிதளவு,
    எலுமிச்சம்பழம் - அரை மூடி,
    நாட்டு சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,
    ஏலக்காய் - 2.

    செய்முறை:

    ஓமம், சுக்கு, சீரகம், மிளகு நான்கையும் வெறும் வாணலியில் சூடு வர லேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொள்ளவும்.

    வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டிபடாமல் கிளறி, மீதி தண்ணீரையும் ஊற்றிக் கிளறவும். கூழ் போல் ஆகிவிடும். அத்துடன் உப்பு சேர்த்துக் கிளறவும்.

    பொடித்து வைத்திருக்கும் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, 3, 4 துளிகள் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து மிளகு போன்ற சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    இந்த உருண்டைகளை, கோதுமைக் கஞ்சியில் சேர்த்துப் பருகவும்.

    வித்தியாசமான சுவையில், காரசாரமாக இருக்கும் இந்த சம்பா கோதுமை கஞ்சி.

    பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.
    சமையலில் பிரதானமாக இடம் பிடிக்கும் பூண்டுவை கொண்டு அழகையும் மேம்படுத்தலாம். பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    1. முகப்பருவுக்கு பூண்டு சிறந்த நிவாரணம் அளிக்கும். பூண்டுவை தோல் நீக்கி நன்றாக நசுக்கி சாறாக்கவும். முகப்பரு இருக்கும் இடங்களில் பூண்டு சாறுவை தேய்த்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து கழுவிவிடலாம். முகத்தில் சிவப்பு நிறத்தில் திட்டுகள், வீக்கம் இருந்தாலும் பூண்டுச் சாறை பயன்படுத்தலாம்.

    2. சிலருக்கு முகத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்படும். ஒரு பூண்டுவை தோல் நீக்கி அதனுடன் பாதி தக்காளி பழத்தை சேர்த்து விழுதாக அரைத்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் முகம் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.

    3. பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் படர்ந்திருக்கும் தழும்புகளை நீக்குவதற்கும் பூண்டை பயன்படுத்தலாம். பூண்டு சாறுடன் 100 மி.லி. ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கி தழும்பு இருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.

    4. உச்சந்தலை, முழங்கைகள், முழங்கால்களில் சிலருக்கு சருமம் சிவத்தல், அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இத்தகைய சரும அழற்சிக்கு பூண்டுவை நசுக்கி சருமத்தில் தடவி வரலாம்.

    5. வயதாகும்போது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் இளம் வயதிலேயே நிறைய பேர் சரும சுருக்க பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். காலையில் ஒரு டம்ளர் நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன், எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு சாறை கலந்து பருகி வந்தால் முகத்தில் சுருக்கங்கள் தோன்றாது. இளமையை பாதுகாக்கும் தன்மையும் பூண்டுக்கு இருக்கிறது.
    பணியாற்றும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிது தூரம் நடந்து வந்தால் உடல் புத்துணர்வு பெறும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இடையில் 10 நிமிடம் இடைவெளி விடுவது நல்லது.
    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீடடிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளன. அப்படி வீட்டிலிருந்தே சிறப்பாக பணியாற்றுவது எப்படி? என்பது பற்றிய விவரம் வருமாறு:-

    வீட்டிலிருந்தே பணியாற்றுபவர்கள் அதற்கு அவசிய தேவையானவற்றை கண்டிப்பாக வாங்க வேண்டும். முதலாவது மடிகணினி மற்றும் எழுதுவதற்கு வசதியான டெஸ்க் வாங்க வேண்டும். அடுத்து முதுகுவலி, கழுத்து வலி வராத அளவிற்கு சொகுசான நாற்காலி, தேவையிருந்தால் ஸ்கேனர், பிரிண்டர் போன்றவற்றையும் வாங்க வேண்டும்.

    அலுவலக பணியாற்றும் போது அதற்காக படுக்கை அறையை தேர்ந்தெடுக்கக் கூடாது. படிக்கும் அறையாக இருந்தால் வேலை சிறப்பாக அமையும். படுக்கை உங்கள் கண்ணில் தெரியும் வகையில் இருந்தால் உங்களுக்கு வேலை ஓடாது. தூக்கத் தான் தோன்றும். எனவே அந்த நிலையை மாற்ற வேண்டும்.

    பணியாற்றும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிது தூரம் நடந்து வந்தால் உடல் புத்துணர்வு பெறும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இடையில் 10 நிமிடம் இடைவெளி விடுவது நல்லது.
    உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
    முதுமை தெரியாத அளவுக்கு இளமையோடு வாழவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், சிலர் மட்டுமே வெகுகாலமாக இளமையுடன் தோன்றுகிறார்கள். பலர் இளம் வயதிலேயே முதிய தோற்றத்துடன் வலம் வருவதையும் காணமுடிகிறது. உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

    சமச்சீரான சத்துணவை போதுமான அளவில் தினமும் உட்கொண்டால் இளமையை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்போது, ஆரோக்கியத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். அப்போது நோய்கள் ஏற்படாது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது இளமையின் முதல் படி என்பதை உணரவேண்டும்.

    ஒருவர் இளமையோடு இருக்கிறார் என்பதை அவரது சருமம்தான் முதலில் அடையாளம் காட்டுகிறது. சருமத்தில் இளமையை பொலிவூட்டவேண்டும் என்றால் சிலவகை உணவுகளை தவிர்க்கவேண்டும். குளிர்பானத்தை அறவே தவிர்த்திடுங்கள். காபி, டீ பருகுவதை குறைத்திடுங்கள். மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் சரும அழகின் எதிரிகள் என்பதை உணர்ந்திடுங்கள். பழங்களை சாப்பிடலாம். பால், சர்க்கரை போன்றவை சேர்க்காத கிரீன் டீ பருகுவதையும் பழக்கத்தில் கொண்டுவரலாம்.

    உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால் உங்கள் உடலை இளமை ததும்பச் செய்ய முடியாது. உடல் இயக்கத்தை சீராக்கி, சிறப்பாக்க தினமும் 45 நிமிட இலகுவான உடற்பயிற்சி அவசியம். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங், ஏரோபிக்ஸ் போன்றவை எலும்பு, மூட்டுகளின் இயக்கத்திற்கு சிறந்த பயிற்சிகள் என்றாலும், இவைகளில் எதையும் செய்ய முடியாவிட்டாலும் தினமும் முக்கால் மணிநேரம் வேகமாக நடக்கும் நடைப்பயிற்சியையாவது செய்யுங்கள். வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரர்களை நம்பியிருக்காமல் நீங்களே செய்யுங்கள். வீட்டிலே சிறிதாக ஒரு தோட்டத்தை உருவாக்கி பராமரியுங்கள். சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு வீட்டு மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். உடலுக்கு ஏதாவது ஒருவகையில் வேலைகொடுங்கள்.

    உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, அதில் உங்கள் இளமைக்கு எதிராக என்னவெல்லாம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட முடியும். கண்களில் கருவளையம் இருந்தால் பளிச்சென்று மற்றவர்களுக்கு தெரிந்துவிடும். கண்களை சுற்றியுள்ள சருமத்தில் இருக்கும் ஹுமோகுளோபினை சில என்சைம்கள் சிதைக்கும்போது, அது கருவளையமாக தென்படும். இதற்கு சரும டாக்டர்களிடம் இருந்து ‘ஜெல்’ வாங்கி பூசலாம் என்றாலும், இயற்கையான சிறந்த மருந்து ஆழ்ந்த உறக்கம்தான். தினமும் எட்டு மணிநேரம் நன்றாக தூங்கி எழுந்தால் கருவளையம் அகலும். தினமும் போதுமான அளவு தண்ணீரும் பருகவேண்டும்.

    சிலரது முகத்தில் இளமை கொலுவிருக்கும். ஆனால் அவர்களது கையின் புறப்பகுதியில் சரும சுருக்கங்கள் ஏற்பட்டு, முதுமையை பறைசாற்றிவிடும். நடுத்தர வயதை கடக்கும்போது உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் குறைய தொடங்கும். அப்போது கோலாஜென், எலாஸ்டின் போன்றவை தளர்ச்சியடையும். அதனால்தான் சரும சுருக்கம் தோன்றுகிறது. இதற்கு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பழம், காய்கறி, பழம் போன்றவைகளை உணவில் அதிகம் சேர்ப்பது அவசியம்.

    சிறிதளவு சர்க்கரையை ஆலிவ் எண்ணெய்யில் கலந்து குழைத்து சருமத்தில் பூசும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் இறந்த செல்கள் அகன்று சருமம் புதுப்பொலிவுபெறும். சருமத்தின் அழகுக்கு வெளியே எத்தனை வேலைப்பாடுகள் செய்தாலும், உடலுக்கு உள்ளே அதற்கான சரியான மாற்றங்கள் உருவாகவேண்டும். உள்ளே ஏற்படும் இயக்கங்களில் குறிப்பிடத்தக்கது, சீரான ரத்த ஓட்டம். ரத்தத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தால்தான் ரத்த ஓட்டம் துரிதப்படும். கூடுதல் ஆக்சிஜன் கிடைக்க நன்றாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    எவ்வளவு இளமையோடு நீங்கள் ஜொலித்தாலும், அதற்கு புன்னகைதான் கிரீடம் சூட்டும். அதனால் சிரிப்பை எல்லா நேரங்களிலும் தக்கவைத்துக்கொள்ளுங்கள். சிரிக்கும்போது முகத்திற்கு கூடுதல் ரத்த ஓட்டம் செல்லும். ஏராளமான தசைகள் செயல்பட்டு முகத்திற்கு கூடுதல் அழகு கிடைக்கும். இளமை கொலுவிருக்க இதழ்விரித்து சிரியுங்கள்!
    மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் என்பதும், சிறியதாக இருந்தால் குறைவாக சுரக்கும் என்பதும் தவறான கருத்தாகும்.
    பெண்களின் உடல் உறுப்புகளில் முக்கியமானவை மார்பகங்கள். வயது மற்றும் ஹார்மோன்களின் செயல்பாட்டால் இவற்றில் ஏற்படும் மாற்றங்களை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். மார்பகங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    பூப்பெய்தும் காலத்தில் மார்பகங்கள் வளரத் தொடங்குகின்றன. இவை கொழுப்புத் திசுக்கள், பால் சுரப்பு நாளங்கள் கொண்டவை. உடல் எடை கூடும்போது மார்பகங்களின் அளவும் அதிகரிக்கும். இதன் காரணமாக அவை சீக்கிரமே தளர்ச்சி அடைய நேரிடலாம். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சரியான அளவுடைய உள்ளாடைகளை அணிதல் போன்ற வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் இதனைத் தவிர்க்க முடியும்.

    கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களால் மார்பகங்கள் மற்றும் மார்புக் காம்புகள் பெரிதாகுதல், தசைகள் விரிவடைதல், மென்மை
    யாகுதல், மார்புக் காம்புகளைச் சுற்றியுள்ள பகுதி கருமை அடைதல் போன்ற மாறுதல்கள் உண்டாகக்கூடும். இதன் காரணமாக மார்பகங்களில் வலி, அரிப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம்.

    மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் என்பதும், சிறியதாக இருந்தால் குறைவாக சுரக்கும் என்பதும் தவறான கருத்தாகும். பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால்தான் சிறந்த உணவு. அதில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தாய்ப்பால் புகட்டுவது தாயின் உடல் நலத்துக்கும் நல்லது. அதன் மூலம் கர்ப்ப காலத்தின் போது அதிகரித்த எடையை எளிதாகக் குறைக்க முடியும்.

    தாய்ப்பால் புகட்டுவதற்கு முன்பும், புகட்டிய பின்பும் மார்பகங்களை மிதமான சூடுள்ள நீரால் சுத்தப்படுத்த வேண்டும். பின்பு பருத்தித் துணியால் மென்மையாகத் துடைக்க வேண்டும். இதன் மூலம் மார்புக் காம்புகளில் புண், வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கும் பெண்களுக்கு பால் கட்டுதல், வலி ஏற்படுதல், பால் சுரப்பதில் சிக்கல்கள் போன்றவை ஏற்படும். அவர்களை மார்பகப் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் உள்ளது.

    மேலும் பெண்களுக்கு உடல் பருமன், மரபியல், உணவு மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களாலும் மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம். இந்தியாவில் கருப்பை மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் ‘மேமோகிராம்’ எனும் பரிசோதனையை வருடத்துக்கு ஒரு முறை செய்து கொள்வது நல்லது. இதைத்தவிர சுய பரிசோதனை மூலமும் மார்பகங்களில் கட்டிகள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் மாற்றங்கள் உள்ளதா? என்பதை பெண்கள் தெரிந்து கொள்ளலாம்.

    பல பெண்கள் மார்பகங்கள் தளர்ச்சி அடைதல், அவற்றின் அளவு, வடிவம் போன்றவற்றை எண்ணி குழப்பம் அடைந்து தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். அதைத் தவிர்த்து விழிப்புணர்வோடு செயல்படுவோம்.
    மலச்சிக்கலை சரிப்படுத்த நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
    குழந்தைகளுக்கு உணவு தருவதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதாது. சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமாகி, மலமாக வெளியேறுகிறதா எனக் கவனிப்பதும் முக்கியம். ஏனெனில் செரிக்கப்பட்ட உணவிலிருந்து சத்துகள் உறிஞ்சப்பட்ட பின் மீதமுள்ள கழிவானது உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இது சரியாக நடக்காவிட்டால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். மலம் வெளியேறாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கலைத் தவிர்க்கும் வழிகளை முறையாக பின்பற்றினாலே போதும். மலச்சிக்கல் பிரச்னை நீங்கிவிடும்; குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

    மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?

    பொதுவாகவே ஒரு வயதுக்கு கீழ் தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு மலம் கழிப்பதில் பெரிதாக சிக்கல் ஏற்படுவதில்லை. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்காவிட்டால் அது குழந்தைக்கு சரியாகப் பால் கிடைக்காததன் அறிகுறியாக இருக்கலாம். பசும்பால், பாக்கெட் பால் மற்றும் இதர உணவுகளைக் குழந்தைச் சாப்பிட தொடங்கியவுடன்தான்  மலச்சிக்கல் ஆரம்பமாகிறது.

    எப்படிக் கண்டுபிடிப்பது?

    தொடர்ச்சியாக 2 அல்லது 3 நாள்கள் மலம் கழிக்காமல் இருத்தல்
    மலம் கழிக்கும்போது, வலி ஏற்பட்டு அழுவது
    மலம் கழிக்க மறுத்து, ஆத்திரமடைவது
    மலம் கழிக்க வேண்டுமென்ற பயத்தில் சாப்பிட மறுப்பது
    பசியின்மை
    எடை குறைவு
    மலம் கழிக்கும்போது முகத்தைச் சுருக்கி முக்குவது
    மலம் கழிக்க முயற்சி செய்தும் மலம் வெளியேற முடியாமல் குழந்தை அழுவது
    மலம் இறுகி வெளியேறும்போது அதில் காணப்படும் ரத்தக் கசிவு
    அடிவயிற்றில் வலி
    இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அது மலச்சிக்கலாக இருக்கலாம்.

    மலச்சிக்கலைத் தீர்க்க எளிய வழிகள்

    உணவு மாற்றம் அவசியம்:

    மலச்சிக்கலை சரிப்படுத்த நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

    கேரட், முருங்கைக்காய், தினம் ஒரு கீரை வகைகளோடு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துள்ள காய்களான வெண்டைக்காய், அவரைக்காய், சுரைக்காய், முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மேற்சொன்ன காய்களை நன்கு மசித்துத் தரலாம். பற்கள் இருக்கும் குழந்தைகளுக்கு நன்கு மென்று சாப்பிட சொல்லி வலியுறுத்துங்கள்.

    வாழைப்பழம் சிறந்த மலமிலக்கியாக செயல்படும். வாழைப்பழத்தை தனியாகச் சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு பாலுடன் சேர்த்து தரலாம். குழந்தைகளின் மலச்சிக்கலைத் தீர்க்க மலை வாழைப்பழம் பெஸ்ட்.

    இரவு ஊறவைத்த 5-10 உலர்திராட்சைகளைக் காலை மற்றும் மாலையில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

    பேரீச்சை – 2, அத்திப்பழம் – 1 ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் நன்கு மசித்துக் கொடுக்கலாம்.

    கேரட்டை அரைத்து சாறெடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து தரலாம்.

    அரிசி உணவை மட்டுமே கொடுக்காமல் உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    மைதாவால் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் துரித உணவுகளைக் கட்டாயமாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

    மலச்சிக்கலைத் தடுக்கும் தண்ணீர்:

    விளையாட்டு ஆர்வத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க மறந்தாலும்கூட தேவையான தண்ணீரைக் குடிக்க பழக்க வேண்டியது அவசியம்.

    தினமும் தூங்கி எழுந்த பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்க கொடுங்கள். இதனால் வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்கு பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் கொடுக்கலாம். இது குழந்தையின் செரிமானத்தைத்  தூண்டி மலச்சிக்கலைத் தடுக்கும்.
    கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்சத்துக்கள் உணவினை எளிதாக செரிக்க செய்து மலசிக்கலை தடுக்கின்றது. மெக்னீசியம் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது.
    தேவையான பொருட்கள்

    கைக்குத்தல் அரிசி - 4 டீஸ்பூன்
    பொரிகடலை - 2  டீஸ்பூன்
    சுக்குத்தூள் - ½  டீஸ்பூன்

    செய்முறை

    அரிசியை நன்றாக கழுவி வெயிலில் காய வைத்து நன்றாக காய்ந்ததும் வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக உப்பி வரும் வரை மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

    அதே போல் அடுத்து கடாயில் பொரிகடலையை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.

    இரண்டும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்குத்தூள் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தை  அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் 2 டீஸ்பூன் கஞ்சிப்பொடியை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.

    மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கஞ்சி பதம் வரும் அளவிற்கு கலக்கவும்.

    கஞ்சி தயார் ஆனவுடன் இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

    இப்போது சத்தான பொரிகடலை அரிசி கஞ்சி ரெடி.

    வயிற்று வலி மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகள் இருந்தால், மாதுளை இலைகளை மருந்தாக உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் செரிமானத்தை தூண்ட உதவும்.
    இருமல், சளி:

    மாதுளை பழத்தை போலவே, இலைகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுபவை. சளி மற்றும் இருமல் இருந்தால், மாதுளை இலைகளை கொண்டு காபி தயாரித்து பருகலாம். இந்த செயல்முறை எளிதானதுதான். ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். இலைகள் நன்கு வெந்ததும் வடிகட்டி பருகலாம். இந்த தண்ணீரை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் இருமல் தணியும். தொண்டையில் இருக்கும் நோய்த்தொற்றை அகற்ற உதவும். மாதுளையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது என்பதால் நோய் எதிர்ப்பு தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.

    வயிற்று வலி:

    மாதுளை இலைகள் செரிமான செயல் முறைக்கு நன்மை பயக்கும். வயிற்று வலி மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகள் இருந்தால், மாதுளை இலைகளை மருந்தாக உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் செரிமானத்தை தூண்ட உதவும். அதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அத்துடன் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் நீங்கும். இந்த பிரச்சினைகளுக்கு மாதுளை இலைகளை தேநீராக தயாரித்து பருக வேண்டும். இருமல், சளி தவிர பிற நோய் பாதிப்புகளுக்கு மாதுளை இலை சாற்றை வாரம் இரண்டு முறை மட்டுமே உட்கொள்ள வேண்டும். மாதுளை இலைகளை அதிகம் உட்கொள்வது பல்வேறு பக்க விளைவுகளுக்கு வழி வகுத்துவிடும்.

    தூக்கமின்மை:

    மாதுளை இலைகள், தூக்கமின்மைக்கும் நிவாரணம் தரக்கூடியவை. ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை விழுதாக அரைத்து 200 மி.லி. தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். 50 மி.லி. குறையும் வரை கொதிக்கவைத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனை இரவில் தூங்குவதற்கு முன்பு பருகி வரலாம். அது ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்.

    தோல் அழற்சி:

    நாள்பட்ட அரிப்பு, தோல் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. தடிப்பு, வீக்கம், சருமம் சிவத்தல் போன்ற பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். இந்த நோயை குணப்படுத்த மாதுளை இலைகளை பயன் படுத்தலாம். அதனை விழுதாக அரைத்து பாதிப்புக்குள்ளான இடத்தில் தடவி வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.
    மாதத்திற்கு எது அவசியமாகத் தேவையோ அதை மட்டும் வாங்குவதற்குத் தீர்மானியுங்கள். அதை நீங்கள் போடும் பட்ஜெட்டுக்குள் அடக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
    கை மீறும் செலவைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பதற்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் முறைதான் ‘30 நாள் விதி’. இந்த விதியை செயல்படுத்துவது எளிதானது. இதைத் தொடர்ந்து பின்பற்றும்போது, சேமிப்பை எளிதாக உயர்த்த முடியும்.

    பெரும்பாலானவர்கள் ஆன்-லைன் விற்பனை மையங்கள் வழங்கும் சலுகைகளால் ஈர்க்கப்பட்டு பொருட்கள் வாங்குவார்கள். இந்த செயல்பாடே சேமிப்பைத் தொலைப்பதற்கான முக்கிய காரணம். இவ்வாறு எதைப் பார்த்தாலும் உடனே வாங்கி விடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், சம்பாத்தியத்தை சரியான இடங்களில் ஒதுக்க முடியாமல் திணறுபவர்களுக்கும் ‘30 நாள் திட்டம்’ ஏற்றதாக இருக்கும். இதைப் பின்பற்றும்போது, பணத்தை எதற்காக செலவிடுகிறோம்? என்பதில் தெளிவு ஏற்படும்.

    30 நாள் விதியை எப்படிப் பின்பற்றுவது?

    ‘தேவை’ என்பது அனைவருக்கும் பொதுவானது. அதை அத்தியாவசியத் தேவை, நிதானத் தேவை என இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். மாதந்தோறும் குடும்பத்துக்காக மேற்கொள்ளும் செலவுகள் அத்தியாவசியத் தேவையில் சேரும். இதிலும், அந்த மாதத்திற்கு எது அவசியமாகத் தேவையோ அதை மட்டும் வாங்குவதற்குத் தீர்மானியுங்கள். அதை நீங்கள் போடும் பட்ஜெட்டுக்குள் அடக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.

    இதற்கு அடுத்தபடியாக, நிதானமானத் தேவை. இதில் நாம் வாங்குவதற்கு ஆர்வம் காட்டும், தற்சமயம் நமக்கு அவசரமாகவும், அத்தியாவசியமாகவும் தேவைப்படாத, பொருட்கள் அடங்கும். அந்தப் பொருளை வாங்குவதற்கு முன்னும், பின்னும் அதற்கான பணமதிப்பைக் கூர்ந்து கவனியுங்கள். இதுதான் ‘30 நாள் விதி’யின் அடிப்படை.

    பின்பு, நீங்கள் வாங்குவதற்கு நினைக்கும் பொருளை முதலில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை வாங்கும் முன், அந்தப் பொருளின் தன்மை, தயாரிப்பு நிறுவனம், விலை மற்றும் வாங்குவதில் கிடைக்கும் சலுகைகள் என அனைத்து விவரங்களையும் சேகரியுங்கள். அடுத்து அந்தப் பொருளை வாங்கும் எண்ணத்தை 30 நாட்கள் தள்ளி வையுங்கள். பொருட்களை வாங்க வேண்டும் என தீர்மானித்து முடிவு எடுத்த பின்பு அதைத் தள்ளி வைப்பதால் என்ன பயன் ஏற்படும்? இந்தக் கால இடைவெளியில், அந்தப் பொருள் மீதான ஈர்ப்பு குறைந்திருப்பதை உணர முடியும்.

    30 நாட்களில், குறிப்பிட்ட பொருளின் விற்பனை, விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களைக் கவனிக்க வேண்டும். மேலும், அந்த நேரத்தில், அது அவசியமானதா? என்பதை யோசிக்கும்போது, சரியான தீர்வை எளிதில் காண முடியும். இதை அனைத்து தேவைகளிலும் செயல்படுத்தினால், செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த முடியும். 30-நாள் விதியின்படி, வாழ்க்கை முறையை மாற்றினால் அது சேமிப்பிற்கான சரியான பாதையில் செல்வதற்கு உதவும்.
    ×