என் மலர்
செய்திகள்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டி வருமாறு:-
சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகழ் பாடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களுடைய சொந்த தேவையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதைத்தான் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் பார்த்தேன்.
அம்மாவை மறந்து விட்டு, பழனிசாமி ஏதோ பரம்பரையாக முதல்-அமைச்சராக இருப்பது போல புகழ்பாடுகிறார்கள். இதன் மூலம் எம்.எல்.ஏ.க்களின் சொந்த நலனுக்காக அரசு பணம் வாரி இறைக்கப்படுகிறது. மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இது தான் உண்மை.
நிதியே இல்லை. 110-வது விதியின் கீழ் புதிதாக அறிவிக்கப்படும் எல்லாவற்றையும் பழனிசாமியால் நிறைவேற்ற முடியாது. இது அவருக்கு தெரியும்.
இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இருக்கிறவரை அறிவிப்போம் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி இப்படி செய்கிறார். வர இருக்கும் தேர்தலில் கூட்டணி அமைத்தாலும் அமைக்காவிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெறும்.
இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran
தமிழகத்தில் பா.ஜன தாவை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவது குறித்தும் நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஊழல் அதிகமாக நடக்கிறது. அது தனக்கு வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார்.
அமித்ஷா இந்தியில் பேசியதை தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார்.
அ.தி.மு.க.-பா.ஜனதா இடையே பரஸ்பர ஒற்றுமை இருந்து வருகின்ற நிலையில் அமித்ஷா ஊழல் பற்றி பேசியிருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமித்ஷாவின் ஊழல் பேச்சு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

அதுபோல அமித்ஷா தமிழகத்தை பற்றி நல்ல விதமாக சொன்னதை எச்.ராஜா தவறுதலாக மாற்றி மொழி பெயர்த்து கூறியுள்ளார். தமிழகத்தை பற்றி நன்றாகத்தான் அமித்ஷா சொல்லி இருப்பார். ஆனால் இவர்தான் தவறாக மாற்றி இருக்கிறார்.
இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பற்றி எச்.ராஜாவிடம் கேட்டபோது அவர் கருத்து கூற மறுத்து விட்டார். #Amitshah #HRaja #Jayakumar
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அடுத்த ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் போகிறோம். சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்குப் பதிலாக தேசிய தேர்வு முகமை மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், இணையம் மூலம் தேர்வுகள் நடைபெறும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வில் குளறுபடிகள் நடந்ததற்குக் காரணம் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து சி.பி. எஸ்.இ. நிர்வாகம் தேர்வுகளை நடத்தியதுதான். தற்போதும் முறையான திட்டமிடல் மற்றும் தேர்வு நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்காமல், ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், எழுத்துத் தேர்வாக இல்லாமல் கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கணினி வழித் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
11 மொழிகளில் நடத்தப்படும் ‘நீட்’ நுழைவுத் தேர்வை, எட்டு அமர்வுகளில் நடத்தினால் நாடு முழுவதும் ஒரே தரவரிசைப் பட்டியலை எப்படி வெளியிட முடியும்? என்று நியாயமான கேள்வியை கல்வியாளர்கள் எழுப்பி உள்ளனர்.
ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, கிராமப்புற மாணவர்கள் எந்த நிலையிலும் “மருத்துவக் கல்வி பெற்றுவிடக்கூடாது” என்று சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் வேலையை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.
மாநில உரிமைகளை காலில்போட்டு மிதித்து கூட்டாட்சி கோட்பாட்டையே சிதைத்து வரும் மத்திய பா.ஜ.க அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே வரி மற்றும் ஒரே நுழைவுத் தேர்வு என்று அனைத்தையும் ஒற்றை இந்துத்துவ தேசிய மயமாக்கும் பா.ஜ.க. அரசின் பாசிச திட்டங்களை ஜனநாயக முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #bjp #Vaiko
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் இன்று, சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்பை முறைப்படுத்த வகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் தங்கள் தரப்பு கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.
அப்போது புதிய சட்ட மசோதாவில் உள்ள அம்சங்கள், சொத்து உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும், வாடகைதாரர்களுக்கு எதிராகவும் உள்ளதாக தி.மு.க. எம்எல்ஏ ரகுபதி தெரிவித்தார். மேலும், இந்த மசோதாவை சட்டமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆனால் தி.மு.க.வின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. விவாதத்தின் முடிவில், குரல் வாக்கெடுப்பு மூலம், இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. இதேபோல், வனச் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட மேலும் சில மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. #TenantsBill
தமிழகத்தில் விளம்பர பலகைகள் வைப்பதில் விதிமீறல்கள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாக பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன. பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைப்பதற்கான உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கியது. ஆனால் அதை சரியாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், பேனர்களை வைக்க அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை சட்டசபையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி இன்று தாக்கல் செய்தார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பேனர்கள், விளம்பர பலகைகள் வைப்பதற்கு உரிமம் தர இந்த மசோதா வகை செய்கிறது. மேலும், விளம்பர பலகைகளை நிறுவுவதற்கான உரிமக் கட்டணத்தை உயர்த்தவும், விதிமீறல்களில் ஈடுபட்டால் தண்டனையை உயர்த்தவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. இந்த மசோதாவிற்கு ஆரம்ப நிலையிலேயே திமுக எதிர்ப்பு தெரிவித்தது. #AdvertisingBannersBill
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது கூறியதாவது:-
உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கின்ற அரசு தான் நல் அரசு. அமைதியான ஆட்சியை வழங்கும் அரசுதான் நல்லரசு என்று திருவள்ளுவர் கூறி இருக்கிறார்.
தற்போது தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “தமிழ்நாட்டில் பல்வேறு குற்றங்கள் அதிகரித்து விட்டதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது காவல் துறையினர் மிகவும் மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள்.
ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக கூறப்பட்ட தமிழக போலீசார் இப்போது மன அழுத்தத்துடன் இருப்பதால்தான் குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 200 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
போலீசார் மன அழுத்தத்துடன் இருக்க முக்கிய காரணம் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்தது போல உயர் அதிகாரிகளிடம் பணிபுரியும் போலீசார் கொத்தடிமை போல நடத்தப்படுகிறார்கள்.
பெரிய அதிகாரிகளிடம் போலீசார் வீட்டு வேலை செய்யும் ‘ஆர்டர்லி’ முறை இன்னும் தொடர்கிறது.
இதுபோன்ற முறை இந்த ஆட்சியில் மட்டுமல்ல கடந்த தி.மு.க. ஆட்சியிலும் இருந்தது. இதை தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.
இதற்கு பதிலாக அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #OrderlySystem
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த திட்டத்தை தீட்டினாலும் மக்கள் நலனுக்காகவே தீட்டுகிறது. மக்கள் சுதந்திரமான கருத்துக்களை தெரிவிப்பதே இந்திய அரசின் சிறப்பான வழிமுறை.
இந்த சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளும், மக்களும் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க விடாமல் காவல்துறையினர் வாய்ப்பூட்டு போடும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.
பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக பொதுக் கூட்டம் நடத்த த.மா.கா.வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பா.ம.க. பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மக்களிடம் கருத்து கேட்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரனும் கைது செய்யப்பட்டுள்ளார். செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் அதை தடுக்கும் வகையில் கைது நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு செய்வதால் ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு எதிராக எதையும் செய்துவிட முடியாது. சேலம் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று சொல்லவில்லை. மக்களிடம் இதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. எனவே மாற்றுப் பாதையில் அமைப்பது குறித்து நிபுணர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.
ஜனநாயக நாட்டில் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு எதிராக நடந்து கொண்ட அரசு வீழ்ந்ததுதான் வரலாறு. எனவே இந்த போக்கை அரசு கைவிட வேண்டும்.
தி.மு.க. ஆட்சியிலும் இது போன்ற சாலைகள் அமைக்கப்பட்டன. அதற்கான நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன. ஆனால் மக்களிடம் எதிர்ப்பு இல்லை. இப்போது மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. எனவே தான் மாற்று பாதை அமைக்க வலியுறுத்துகிறோம். #GreenWayRoad #MKStalin
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரகம் 150 ஆண்டுகளை கடந்த தமிழ்நாடு அரசின் மிகவும் பழமையான துறைகளில் ஒன்றாகும். இத்துறையானது, நிலஅளவைப் பிரிவுகள், நிலஅளவை குறியீடு, நில ஆவணங்கள் பராமரித்தல், நிலஉரிமை மற்றும் பின்னர் அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை உரிய பதிவேடுகளில் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரகத்தில் அமைச்சுப் பணியாளர்களாவும், நில அளவை சார்நிலைப் பணியாளர்களாகவும் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 9 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில், நில அளவர், இளநிலை உதவியாளர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கான பணிநிய மனஆணைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். #TNCM #EdappadiPalanisamy
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மே மாதம் 29-ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று வழக்கம் போல் காலை 10 மணிக்கு சபை கூடியது. கேள்வி நேரம் முடிந்ததும், 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
அவர் உரையாற்றி முடிந்ததும் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்து பேசினார். அப்போது சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விளக்கினார். இதையடுத்து சட்ட மசோதா மீது விவாதம் நடைபெறுகிறது.
ஊழலுக்கு எதிரான மசோதா இது என்பதால், எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்கும் என்பதால் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #LokayuktaBill
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் சின்னாறு மற்றும் காஞ்சிமாநதி இணைந்து நொய்யல் ஆறாக உருப்பெற்று, மேற்கு கிழக்காக, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக சென்று, கரூர் மாவட்டத்தின் நொய்யல் என்ற கிராமத்தின் அருகில் காவிரியில் கலக்கின்றது.
திருப்பூர் மாநகராட்சி மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளை நொய்யல் ஆறு கடக்கும் போது, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் மாசடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர் அமைத்து, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல தடுப்புச் சுவரின் வெளிப்புறத்தில் கழிவுநீர் வடிகால் அமைத்தல், தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், நடை பாதை அமைத்தல், கரையோர பூங்கா மற்றும் அலங்கார விளக்குகள் அமைத்தல், அணைக்கட்டு பகுதியினை மேம்படுத்துதல் மற்றும் நதியினை தூர்வாரி சுத்தப்படுத்துதல் ஆகிய பணிகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வரும் காலத்தில் நொய்யல் ஆறு மாசடையாமல் இருப்பதற்கான பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெடுஞ்சாலைகளில் அதிகமாக சாலை விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அவ்விடங்களில் சோதனை அடிப்படையில், வாகனப் பதிவெண் பலகையினை படிக்கும் தானியங்கி புகைப்படக் கருவிகள் மற்றும் வாகன கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகள் 25 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #TNCM #EdappadiPalanisamy
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் திராவிட மாணவர் கழக 75 -ம் ஆண்டு பவள விழா மாநில மாநாடு நடை பெற்றது. திராவிட கழக மாணவர் கழக மாநில துணைசெயலாளர் யாழ் திலீபன் தொடக்கவுரையாற்றினார்.
செயலவை தலைவர் அறிவிக்கரசு கருத்தரங்கிற்கு தலைமை வகித்தார். இதில் திராவிட மாணவர்களின் கல்வி உரிமையும் கடமையும் என்ற தலைப்பில் அதிரடி அன்பழகன், பூவை புலிகேசி, தமிழ்செல்வி ஆகியோர் பேசினர்.
இனமான ஏடுகளின் நோக்கமும், தாக்கமும் என்ற தலைப்பில் நடை பெற்ற கருத்தரங்கிற்கு ஆடிட்டர் சண்முகம் அறிமுகவுரையாற்றினார். பொது செயலாளர் அன்புராஜ் கருத்துரையாற்றினார்.
தொடர்ந்து ‘‘பெரியாரை சுவாசிப்போம்’’ என்ற தலைப்பில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் நேரு, கவிஞர்கள் திவ்யபாரதி, சந்தீப், தமிழருவி ஆகியோர் பேசினர்.
இதையடுத்து திராவிட கழக தலைவர் கி வீரமணி புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
திராவிட கட்சியை எந்த கொம்பனாலும் ஆட்டி பார்க்கவோ, அசைத்து பார்க்கவோ முடியாது. காவிகளோ அல்லது ஆவிகளோ கூட இந்த இயக்கதைத அசைக்க முடியாது.
தற்போது உள்ள அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் மாணவர்களை நெறிப்படுத்தி, பக்குவப்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டும். அது தான் நம் கடமை.
பெரியாரின் நெறிகளை சுவாசித்தாலே போதும் , அதனை சொல்லி கொடுக்க வேண்டியதில்லை.
கும்பகோணத்தில் தனி தனி பானை வைத்து அதில் ஒரு சமூகத்தினர் தண்ணீர் குடிக்க கூடாது என்று கூறியதால் திராவிட மாணவர் இயக்கம் தொடங்கியது. தண்ணீர் தான் மாணவர்களை சிந்திக்க வைத்துள்ளது.
பெரியார் எந்த நூலகத்திலும் படிக்க வில்லை, பெரியார் நான்காம் வகுப்பு வரை படித்துள்ளார். ஆனால் அவர் படித்த நாட்களில் தண்ணீருக்காக பட்ட கஷ்டங்களை கொண்டு தான் திராவிட இயக்கம் உருவானது.
திராவிட கழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் தான், தற்போது தமிழ்நாட்டில் எழுச்சி மிக்கவர்களாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது கடவுளுக்கே பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சாமி சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாலையில் திராவிட மாணவர்களின் பேரணி மற்றும் அணிவகுப்பு திருநாராயணபுரம் சாலையிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கடலங்குடி தெருவில் உள்ள மாநாட்டு அரங்கில் முடிவடைந்தது. #KVeeramani
குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக ரூ.100 கோடி செலவில் 1513 ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, மொத்தம் 328.95 கோடி செலவில் 1511 ஏரிகள் புனரமைப்பு பணிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து ஏரிகள் புனரமைப்பு பணிகளை முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரூ.328.95 கோடியில் நடக்கும் 1,151 குடிமராமத்து திட்ட பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க ககன்தீப் சிங் பேடி, அமுதா, பவன்குமார் பன்சால் உட்பட ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உத்தரவிட்டுள்ளார். #IASofficers #TNdesiltingworks






