என் மலர்tooltip icon

    செய்திகள்

    9 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை-முதலமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார்
    X

    9 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை-முதலமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார்

    நிலவரித் திட்ட இயக்குனரகத்தில் பணியாற்றிய 9 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரகம் 150 ஆண்டுகளை கடந்த தமிழ்நாடு அரசின் மிகவும் பழமையான துறைகளில் ஒன்றாகும். இத்துறையானது, நிலஅளவைப் பிரிவுகள், நிலஅளவை குறியீடு, நில ஆவணங்கள் பராமரித்தல், நிலஉரிமை மற்றும் பின்னர் அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை உரிய பதிவேடுகளில் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரகத்தில் அமைச்சுப் பணியாளர்களாவும், நில அளவை சார்நிலைப் பணியாளர்களாகவும் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான 9 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில், நில அளவர், இளநிலை உதவியாளர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கான பணிநிய மனஆணைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். #TNCM #EdappadiPalanisamy
    Next Story
    ×