என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
14-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இந்தக் கோவிலைக் கட்டி முடித்துள்ளான். இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 700 ஆண்டுகள் கடந்து போய்விட்டது.
மூலவர் - ஸ்தலசயனப்பெருமாள்
தாயார் - நிலமங்கைத் தாயார்
தலவிருட்சம் - புன்னை மரம்
தீர்த்தம் - புண்டரீக புஷ்கரணி
திருவிழா - வைகுண்ட ஏகாதசி
ஊர் - மகாபலிபுரம்
மாவட்டம் - காஞ்சிபுரம்
திருத்தலங்களில் 63-வது தலமாக புகழ்பெற்று விளங்குகிறது மாமல்லபுரம். 14-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இந்தக் கோவிலைக் கட்டி முடித்துள்ளான். இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 700 ஆண்டுகள் கடந்து போய்விட்டது.
பல்லவ மன்னர்கள் தங்களது ஆட்சி காலத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக அமைந்துள்ள கடற்கரை கோவிலை கட்டினார்கள். இந்தக் கடற்கரை கோவிலில் அப்போது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, பூஜை வழிபாடுகள் நடந்து வந்தன. மாமல்லபுரம் பகுதியில் இயற்கை சீற்றங்களினாலும், கடல் கொந்தளிப்பாலும், ஆங்காங்கே உள்ள கோவில்கள் சிதிலமடைந்து வந்த நிலையில், ஊரின் மையப்பகுதியில், ஸ்ரீதலசயன பெருமாளுக்கு பராங்குச மாமன்னர் இந்தக் கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
வைகானச ஆகம முறைப்படி பிள்ளைலோகம் ஜீயர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு இன்றளவும் நான்கு காலபூஜைகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயத்தில் தலசயன பெருமாள் படுத்த நிலையில் தனது காலடியில் ஸ்ரீதேவி, பூதேவி இருவருடன் கருவறையில் காட்சி தருகிறார். 12 ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் இங்கு தோன்றியதால், பூதத்தாழ்வார் அவதரித்த ஸ்தலம் என்ற புகழும் இந்த ஆலயத்திற்கு உண்டு.
கோவில் சிறப்பு
இந்தக் கோவிலில் மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் பூதேவி, ஸ்ரீதேவி இல்லாமல், படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயனப் பெருமாள் காட்சியளிக்கிறார். ஆனால் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள அரிய காட்சி வேறு எங்கும் காண முடியாத அதிசய காட்சியாகும். மானிடராகப் பிறந்தவர்கள் இந்தப் பெருமாளை ஒரு முறையாவது தரிசித்தால் முக்திப்பேறு கிட்டும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் இக்கோவில் சைவ, வைணவ ஒற்றுமைக்கு வழிவகுக்கின்ற தலம் ஆகும்.
கோவில் அமைப்பு
படுத்த நிலையில் பெருமாள் (விஷ்ணு) காட்சி அளிக்கும் தலங்களில் இதுவும் ஒன்றாகும். மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. 14-ம் நூற்றாண்டில் பராங்குச மன்னன் கட்டிய காலத்தில் தென்னிந்திய கட்டிடக் கலைக்கு பெயர் சேர்க்கும் விதத்தில், இந்தக் கோவிலில் கருங்கல் தூண்கள் (ஸ்தூபிகள்) அமைத்து கட்டப்பட்டது. 12 ஆழ்வார்களுக்கும் இக்கோவிலில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. குறிப்பாக பூதத்தாழ்வார் இந்தக் கோவிலில் அவதரித்தது விசேஷம் ஆகும். கடந்த காலத்தில் 1957-ம் ஆண்டில் இந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதன்பிறகு 1997-ல் தமிழக அரசின் கட்டுமான கழகம் மூலம் ஒரு சிற்பியைக் கொண்டு, வைணவ ஆகம முறைப்படி பழைய கோபுரத்தை இடித்து, தமிழக கட்டிடக்கலைக்கு பெயரும், புகழும் சேர்க்கும் விதத்தில், தரைமட்டத்தில் இருந்து புதிதாக கோபுரம் கட்டி வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காஞ்சீபுரம் தலைநகராகவும், மாமல்லபுரம் துறைமுகப்பட்டினமாகவும் விளங்கிய காலத்தில் மல்லாபுரி என்ற பெயரோடு விளங்கிய இந்த ஊர் பிற்காலத்தில் மாமல்லபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கடற்கரை கோவிலை மையமாக வைத்தே ஊரின் மத்திய பகுதியில் இக்கோவில் (தலசயன பெருமாள் கோலில்) எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கடந்த காலத்தில் சைவமும், வைணவமும் இணைந்து இருந்த கடற்கரை கோவில் பொதுமக்கள் வழிபாட்டில் இருந்தது. பின்னர் தொல்லியல் துறை அக்கோவிலை எடுத்துக்கொண்ட பிறகு பூஜைகள், வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. பின்னர் ஊரின் மத்திய பகுதியில் கட்டப்பட்ட தலசயன பெருமாளை பொதுமக்கள், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வழிபட்டு வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் இக்கோவில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் அரசு விரைவு, குளிர் சாதன பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவில் (திருக்கடல்மல்லை) இத்திருக்கோவில் வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் 64 வது திவ்ய தேசமான இந்து வைணவ திருக் கோவிலாகும்.
தல வரலாறு
முன்பு காடாக இருந்த இப்பகுதியில் புண்டரீக மகரிஷி தவம் செய்து வந்தார். ஆயிரம் இதழ் கொண்ட அபூர்வ தாமரை மலர் ஒன்றைக் கண்ட மகரிஷி அதனை திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணருக்கு சமர்ப்பிக்க எண்ணினார். அன்பின் மிகுதியால் கடல் நீரை வற்ற இறைத்து விட்டால் திருப்பாற்கடலை அடைந்து தாமரை மலரை இறைவனுக்கு அர்ப்பணித்து விடலாம் என்று கருதினார். கடல் நீரை கைகளால் இறைத்து வற்றச் செய்ய முயன்றார்.
திருமாலும் ஒரு முதியவர் வடிவம் கொண்டு, முடியாத இக்காரியத்தைச் செய்ய முயலுகின்றீரே, பசித்திருக்கும் எனக்கு உணவளியுங்கள் என வினவ, பசித்தோருக்கு உணவிட வேண்டிய கடமையையும் தமது சீரிய காரியத்தில் ஏற்பட்டுள்ள தடையையும் கண்டு திகைத்தார் மகரிஷி. வந்த முதியவர், மகரிஷி சென்று உணவு கொணரும் வரை தாம் அவரது பணியை மேற்கொள்வதாக உறுதி கூறி மகரிஷியை உணவு கொண்டுவர அனுப்பினார். உணவுடன் மகரிஷி திரும்புவதற்குள் தாமரை மலர் சூடி தரையிலேயே சயன கோலத்தில் பள்ளிகொண்டார் திருமால். திரும்பி வந்து தரிசனம் பெற்ற முனிவர் ஆனந்தத்துடன் வழிபட்டு மகிழ்ந்தார்.
இத்தலத்தில் திருமால் ஆதிசேசனில் பள்ளிகொள்ளாமல் பள்ளிகொண்டுள்ளார். திருப்பாதத்தின் அருகில் புண்டரீக மகரிஷி அமர்ந்துள்ளார். தாமரை மலரும் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்புகள்
இத்தலமே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் பிறந்த அவதார திருத்தலம். உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம். இத்திருக்கோவிலின் சித்திரை பிரம்மோற்சவ உற்சவத்திருவிழா சிறப்பானது. மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராட இராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் என்று குறிப்பிடப்படுகின்றது.
கோவில் நடை திறக்கும் நேரம் - காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை
தாயார் - நிலமங்கைத் தாயார்
தலவிருட்சம் - புன்னை மரம்
தீர்த்தம் - புண்டரீக புஷ்கரணி
திருவிழா - வைகுண்ட ஏகாதசி
ஊர் - மகாபலிபுரம்
மாவட்டம் - காஞ்சிபுரம்
திருத்தலங்களில் 63-வது தலமாக புகழ்பெற்று விளங்குகிறது மாமல்லபுரம். 14-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இந்தக் கோவிலைக் கட்டி முடித்துள்ளான். இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 700 ஆண்டுகள் கடந்து போய்விட்டது.
பல்லவ மன்னர்கள் தங்களது ஆட்சி காலத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக அமைந்துள்ள கடற்கரை கோவிலை கட்டினார்கள். இந்தக் கடற்கரை கோவிலில் அப்போது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, பூஜை வழிபாடுகள் நடந்து வந்தன. மாமல்லபுரம் பகுதியில் இயற்கை சீற்றங்களினாலும், கடல் கொந்தளிப்பாலும், ஆங்காங்கே உள்ள கோவில்கள் சிதிலமடைந்து வந்த நிலையில், ஊரின் மையப்பகுதியில், ஸ்ரீதலசயன பெருமாளுக்கு பராங்குச மாமன்னர் இந்தக் கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
வைகானச ஆகம முறைப்படி பிள்ளைலோகம் ஜீயர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு இன்றளவும் நான்கு காலபூஜைகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயத்தில் தலசயன பெருமாள் படுத்த நிலையில் தனது காலடியில் ஸ்ரீதேவி, பூதேவி இருவருடன் கருவறையில் காட்சி தருகிறார். 12 ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் இங்கு தோன்றியதால், பூதத்தாழ்வார் அவதரித்த ஸ்தலம் என்ற புகழும் இந்த ஆலயத்திற்கு உண்டு.
கோவில் சிறப்பு
இந்தக் கோவிலில் மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் பூதேவி, ஸ்ரீதேவி இல்லாமல், படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயனப் பெருமாள் காட்சியளிக்கிறார். ஆனால் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள அரிய காட்சி வேறு எங்கும் காண முடியாத அதிசய காட்சியாகும். மானிடராகப் பிறந்தவர்கள் இந்தப் பெருமாளை ஒரு முறையாவது தரிசித்தால் முக்திப்பேறு கிட்டும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் இக்கோவில் சைவ, வைணவ ஒற்றுமைக்கு வழிவகுக்கின்ற தலம் ஆகும்.
கோவில் அமைப்பு
படுத்த நிலையில் பெருமாள் (விஷ்ணு) காட்சி அளிக்கும் தலங்களில் இதுவும் ஒன்றாகும். மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. 14-ம் நூற்றாண்டில் பராங்குச மன்னன் கட்டிய காலத்தில் தென்னிந்திய கட்டிடக் கலைக்கு பெயர் சேர்க்கும் விதத்தில், இந்தக் கோவிலில் கருங்கல் தூண்கள் (ஸ்தூபிகள்) அமைத்து கட்டப்பட்டது. 12 ஆழ்வார்களுக்கும் இக்கோவிலில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. குறிப்பாக பூதத்தாழ்வார் இந்தக் கோவிலில் அவதரித்தது விசேஷம் ஆகும். கடந்த காலத்தில் 1957-ம் ஆண்டில் இந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதன்பிறகு 1997-ல் தமிழக அரசின் கட்டுமான கழகம் மூலம் ஒரு சிற்பியைக் கொண்டு, வைணவ ஆகம முறைப்படி பழைய கோபுரத்தை இடித்து, தமிழக கட்டிடக்கலைக்கு பெயரும், புகழும் சேர்க்கும் விதத்தில், தரைமட்டத்தில் இருந்து புதிதாக கோபுரம் கட்டி வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காஞ்சீபுரம் தலைநகராகவும், மாமல்லபுரம் துறைமுகப்பட்டினமாகவும் விளங்கிய காலத்தில் மல்லாபுரி என்ற பெயரோடு விளங்கிய இந்த ஊர் பிற்காலத்தில் மாமல்லபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கடற்கரை கோவிலை மையமாக வைத்தே ஊரின் மத்திய பகுதியில் இக்கோவில் (தலசயன பெருமாள் கோலில்) எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கடந்த காலத்தில் சைவமும், வைணவமும் இணைந்து இருந்த கடற்கரை கோவில் பொதுமக்கள் வழிபாட்டில் இருந்தது. பின்னர் தொல்லியல் துறை அக்கோவிலை எடுத்துக்கொண்ட பிறகு பூஜைகள், வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. பின்னர் ஊரின் மத்திய பகுதியில் கட்டப்பட்ட தலசயன பெருமாளை பொதுமக்கள், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வழிபட்டு வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் இக்கோவில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் அரசு விரைவு, குளிர் சாதன பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவில் (திருக்கடல்மல்லை) இத்திருக்கோவில் வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் 64 வது திவ்ய தேசமான இந்து வைணவ திருக் கோவிலாகும்.
தல வரலாறு
முன்பு காடாக இருந்த இப்பகுதியில் புண்டரீக மகரிஷி தவம் செய்து வந்தார். ஆயிரம் இதழ் கொண்ட அபூர்வ தாமரை மலர் ஒன்றைக் கண்ட மகரிஷி அதனை திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணருக்கு சமர்ப்பிக்க எண்ணினார். அன்பின் மிகுதியால் கடல் நீரை வற்ற இறைத்து விட்டால் திருப்பாற்கடலை அடைந்து தாமரை மலரை இறைவனுக்கு அர்ப்பணித்து விடலாம் என்று கருதினார். கடல் நீரை கைகளால் இறைத்து வற்றச் செய்ய முயன்றார்.
திருமாலும் ஒரு முதியவர் வடிவம் கொண்டு, முடியாத இக்காரியத்தைச் செய்ய முயலுகின்றீரே, பசித்திருக்கும் எனக்கு உணவளியுங்கள் என வினவ, பசித்தோருக்கு உணவிட வேண்டிய கடமையையும் தமது சீரிய காரியத்தில் ஏற்பட்டுள்ள தடையையும் கண்டு திகைத்தார் மகரிஷி. வந்த முதியவர், மகரிஷி சென்று உணவு கொணரும் வரை தாம் அவரது பணியை மேற்கொள்வதாக உறுதி கூறி மகரிஷியை உணவு கொண்டுவர அனுப்பினார். உணவுடன் மகரிஷி திரும்புவதற்குள் தாமரை மலர் சூடி தரையிலேயே சயன கோலத்தில் பள்ளிகொண்டார் திருமால். திரும்பி வந்து தரிசனம் பெற்ற முனிவர் ஆனந்தத்துடன் வழிபட்டு மகிழ்ந்தார்.
இத்தலத்தில் திருமால் ஆதிசேசனில் பள்ளிகொள்ளாமல் பள்ளிகொண்டுள்ளார். திருப்பாதத்தின் அருகில் புண்டரீக மகரிஷி அமர்ந்துள்ளார். தாமரை மலரும் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்புகள்
இத்தலமே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் பிறந்த அவதார திருத்தலம். உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம். இத்திருக்கோவிலின் சித்திரை பிரம்மோற்சவ உற்சவத்திருவிழா சிறப்பானது. மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராட இராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் என்று குறிப்பிடப்படுகின்றது.
கோவில் நடை திறக்கும் நேரம் - காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள 5 கோபுரங்களிலும் சைவ புராண செய்திகளை வெளிப்படுத்தும் கல், சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன.
எத்தனையோ சிறப்புகளுடன் அமைய பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நந்தியும் தனி சிறப்புடன் அமைய பெற்று இருக்கிறது.
அதாவது கோவிலில் 5 நந்திகள் அமைய பெற்று இருக்கிறது.
இவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் பழமலை நாதரை (விருத்தகிரீஸ்வரர்) நோக்கி சற்றி வலது புறமாக கழுத்தை திருப்பியபடி அமைந்திருப்பது இந்த கோவிலில் மட்டுமே இருக்கும், தனி சிற்பபாக பார்க்கப்படுகிறது.
சைவ புராணங்களை வெளிப்படுத்தும் கோபுரங்கள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேரோடும் வீதிகள் நான்கு புறத்திலும் 7 நிலைகளுடன், 7 கலசங்களுடன் வான்உயர்ந்த கோபுரங்கள் அமைந்துள்ளது. கோவிலின் பழம்பெருமையை இந்த கோபுரங்கள் வெளிப்படுத்துகிறது.
கயிலாய பிரகாரத்தில் இருந்து கோவிலுக்குள் செல்லும் இடத்தில் உள்ளது கண்டராதித்த கோபுரம். இதை தன் கணவர் கண்டராதித்த சோழன் நினைவாக செம்பியன் மாதேவி (கி.பி. 957-1001 இடையே) திருப்பணி செய்தது ராஜராஜ சோழன் கல்வெட்டில் இருந்து தெரியவருகிறது.
மேலும் கோவிலில் உள்ள 5 கோபுரங்களிலும் சைவ புராண செய்திகளை வெளிப்படுத்தும் கல், சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன.
அதாவது கோவிலில் 5 நந்திகள் அமைய பெற்று இருக்கிறது.
இவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் பழமலை நாதரை (விருத்தகிரீஸ்வரர்) நோக்கி சற்றி வலது புறமாக கழுத்தை திருப்பியபடி அமைந்திருப்பது இந்த கோவிலில் மட்டுமே இருக்கும், தனி சிற்பபாக பார்க்கப்படுகிறது.
சைவ புராணங்களை வெளிப்படுத்தும் கோபுரங்கள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேரோடும் வீதிகள் நான்கு புறத்திலும் 7 நிலைகளுடன், 7 கலசங்களுடன் வான்உயர்ந்த கோபுரங்கள் அமைந்துள்ளது. கோவிலின் பழம்பெருமையை இந்த கோபுரங்கள் வெளிப்படுத்துகிறது.
கயிலாய பிரகாரத்தில் இருந்து கோவிலுக்குள் செல்லும் இடத்தில் உள்ளது கண்டராதித்த கோபுரம். இதை தன் கணவர் கண்டராதித்த சோழன் நினைவாக செம்பியன் மாதேவி (கி.பி. 957-1001 இடையே) திருப்பணி செய்தது ராஜராஜ சோழன் கல்வெட்டில் இருந்து தெரியவருகிறது.
மேலும் கோவிலில் உள்ள 5 கோபுரங்களிலும் சைவ புராண செய்திகளை வெளிப்படுத்தும் கல், சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன.
நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் சந்தனக் காப்பு களையப்பட்டு நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு மாசிலாமணீஸ்வரர் அருள்பாலிக்க உள்ளார்.
காஞ்சீபுரத்தை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை நாட்டின் அரசன் தொண்டைமான், ஒருமுறை திக்விஜயம் மேற்கொண்ட போது, எருக்கம் தூண்களும், வெண்கலத் கதவும், பவழத் தூண்களும் கொண்ட புழல் கோட்டையில் இருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்த ஓணன், காந்தன், என்னும் அசுரர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான்.
ஓணன் வாணன் என்னும் அசுரர்களிடம் போரில் தோல்வியுள்ள தொண்டைமான், தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது, யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன.
யானை முன்னேறி செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால், தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான். அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து ரத்தம் வருவதைக் கண்டான். யானையில் இருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கி பார்த்த போது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதை பார்த்தான். இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொருத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான்.
இறைவன் அவர்முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம் பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன், அசுரர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வெற்றிக் கண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் அருளைப் போற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பினான். அவர்களை வென்று அவர்கள் கோட்டையில் இருந்து கொண்டு வந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களைத் தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான்.
அதுவே இந்த மாசிலாமணி ஈஸ்வரர் ஆலயம் என்று தல வரலாறு கூறுகிறது. மூலவர் கருவறை முன்பு அந்த வெள்ளெருக்குத் தூண்களை இன்றும் காணலாம்.
இத்தகைய சிறப்புடைய திருமுல்லைவாயல் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு 362 நாட்கள் சந்தனக் காப்பிலேயே இருக்கும் மூலவருக்கு சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளுக்கு முந்தைய 2 நாட்கள் சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்கு நிஜரூப தரிசனத்தில் காட்சி அளிப்பது வழக்கம்.
அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை பக்தர்களுக்கு நிஜரூப தரிசனத்தில் அருள்பாலிக்கிறார்.
சென்னை ஆவடி- அம்பத்தூர் இடையே திருமுல்லைவாயலில் அமைந்துள்ள தொன்மையான சிவத்தலம் ஸ்ரீகொடியிடை நாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் கோவில். சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெருமை வாய்ந்த இந்த கோவிலில் மூலவர் மாசிலாமணீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
தீண்டாத்திருமேனியான இவரை தேவார நால்வர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், வள்ளலார், அருணகிரிநாதர் உள்ளிட்ட பல்வேறு அருளாளர்கள், மகான்கள் பாடிப்பரவி வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம்.
இது தமிழக இந்து அறநிலையத்துறை நிர்வாகத்துக்குட்பட்டதாகும். இங்குள்ள கல்யாணதீர்த்த திருக்குளம் முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் சந்தனக் காப்பு களையப்பட்டு நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு மாசிலாமணீஸ்வரர் அருள்பாலிக்க உள்ளார். இதையடுத்து 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சதய நட்சத்திர நாளில் மீண்டும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது. நிஜரூப தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசிக்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாசிலாமணீஸ்வரர் கோவில் பரம்பரை அறங்காவலர் பாபு (எ) பொன்னம்பலம், கோவில் செயல் அதிகாரி இளங்குமரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
ஓணன் வாணன் என்னும் அசுரர்களிடம் போரில் தோல்வியுள்ள தொண்டைமான், தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது, யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன.
யானை முன்னேறி செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால், தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான். அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து ரத்தம் வருவதைக் கண்டான். யானையில் இருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கி பார்த்த போது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதை பார்த்தான். இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொருத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான்.
இறைவன் அவர்முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம் பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன், அசுரர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வெற்றிக் கண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் அருளைப் போற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பினான். அவர்களை வென்று அவர்கள் கோட்டையில் இருந்து கொண்டு வந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களைத் தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான்.
அதுவே இந்த மாசிலாமணி ஈஸ்வரர் ஆலயம் என்று தல வரலாறு கூறுகிறது. மூலவர் கருவறை முன்பு அந்த வெள்ளெருக்குத் தூண்களை இன்றும் காணலாம்.
இத்தகைய சிறப்புடைய திருமுல்லைவாயல் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு 362 நாட்கள் சந்தனக் காப்பிலேயே இருக்கும் மூலவருக்கு சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளுக்கு முந்தைய 2 நாட்கள் சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்கு நிஜரூப தரிசனத்தில் காட்சி அளிப்பது வழக்கம்.
அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை பக்தர்களுக்கு நிஜரூப தரிசனத்தில் அருள்பாலிக்கிறார்.
சென்னை ஆவடி- அம்பத்தூர் இடையே திருமுல்லைவாயலில் அமைந்துள்ள தொன்மையான சிவத்தலம் ஸ்ரீகொடியிடை நாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் கோவில். சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெருமை வாய்ந்த இந்த கோவிலில் மூலவர் மாசிலாமணீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
தீண்டாத்திருமேனியான இவரை தேவார நால்வர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், வள்ளலார், அருணகிரிநாதர் உள்ளிட்ட பல்வேறு அருளாளர்கள், மகான்கள் பாடிப்பரவி வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம்.
இது தமிழக இந்து அறநிலையத்துறை நிர்வாகத்துக்குட்பட்டதாகும். இங்குள்ள கல்யாணதீர்த்த திருக்குளம் முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் சந்தனக் காப்பு களையப்பட்டு நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு மாசிலாமணீஸ்வரர் அருள்பாலிக்க உள்ளார். இதையடுத்து 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சதய நட்சத்திர நாளில் மீண்டும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது. நிஜரூப தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசிக்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாசிலாமணீஸ்வரர் கோவில் பரம்பரை அறங்காவலர் பாபு (எ) பொன்னம்பலம், கோவில் செயல் அதிகாரி இளங்குமரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது எழுந்த ஆலாலம் எனும் கொடிய விஷத்தை விழுங்கி தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன் விஷாபரணமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.
* லிங்கோத்பவர் - முக்தி கிடைக்கும்
* திரிமூர்த்தி - குழந்தைப்பேறு அமையும்
* கல்யாண சுந்தரர் - திருமண பாக்கியம் வந்துசேரும்
* சுகாசனர் - நியாயமான ஆசைகள் நிறைவேறும்
* கங்காதரர் - பாவங்கள் விலகும்
* நடேசர் - மகப்பேறு கிட்டும்
* சண்டேச அனுக்ரகர் - கெட்ட எண்ணம் நீங்கும்
* ரிஷபாரூடர் - நல்ல முயற்சிகளில் வெற்றி வந்துசேரும்
* நீலகண்டர் - விஷ பூச்சிகளின் ஆபத்து நீங்கும்.
* ஹரிஹர மூர்த்தி - வழக்குகள் வெற்றியாகும்.
* ஏகபாத மூர்த்தி - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்
* உமாசகாயர் - துணையின் உடல்நலம் சீராகும்
* அர்த்தநாரீஸ்வரர் - தம்பதியர் கருத்து வேறுபாடு மறையும்
* தட்சிணாமூர்த்தி - கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்
* சோமாதி நாயகர் - சகல சவுபாக்கியமும் கிடைக்கும்
* சோமாஸ்கந்தர் - பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பர்
* சந்திர மவுலீஸ்வரர் - தனமும் தானியமும் சேரும்
* வீரபத்திரர் - எதிரி பயம் விலகும்
* காலசம்ஹாரர் - மரண பயமும், அகால மரணமும் நேராது
* காமாந்தகர் - தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்
* கஜசம்ஹாரர் - பிறர் செய்த தீவினையின் பாதிப்பு அகலும்
* திரிபுர சம்ஹாரர் - பிறவிப் பிணி தீரும், எம பயம் வராது
* பிட்சாடனர் - மோக மாயை விலகும்
* ஜலந்தர சம்ஹாரர் - விரோதிகள் விலகுவர்
* சரப மூர்த்தி - மாயை, கன்மம் விலகும்
* பைரவர் - இறையருள் எப்போதும் காக்கும்.
* திரிமூர்த்தி - குழந்தைப்பேறு அமையும்
* கல்யாண சுந்தரர் - திருமண பாக்கியம் வந்துசேரும்
* சுகாசனர் - நியாயமான ஆசைகள் நிறைவேறும்
* கங்காதரர் - பாவங்கள் விலகும்
* நடேசர் - மகப்பேறு கிட்டும்
* சண்டேச அனுக்ரகர் - கெட்ட எண்ணம் நீங்கும்
* ரிஷபாரூடர் - நல்ல முயற்சிகளில் வெற்றி வந்துசேரும்
* நீலகண்டர் - விஷ பூச்சிகளின் ஆபத்து நீங்கும்.
* ஹரிஹர மூர்த்தி - வழக்குகள் வெற்றியாகும்.
* ஏகபாத மூர்த்தி - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்
* உமாசகாயர் - துணையின் உடல்நலம் சீராகும்
* அர்த்தநாரீஸ்வரர் - தம்பதியர் கருத்து வேறுபாடு மறையும்
* தட்சிணாமூர்த்தி - கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்
* சோமாதி நாயகர் - சகல சவுபாக்கியமும் கிடைக்கும்
* சோமாஸ்கந்தர் - பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பர்
* சந்திர மவுலீஸ்வரர் - தனமும் தானியமும் சேரும்
* வீரபத்திரர் - எதிரி பயம் விலகும்
* காலசம்ஹாரர் - மரண பயமும், அகால மரணமும் நேராது
* காமாந்தகர் - தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்
* கஜசம்ஹாரர் - பிறர் செய்த தீவினையின் பாதிப்பு அகலும்
* திரிபுர சம்ஹாரர் - பிறவிப் பிணி தீரும், எம பயம் வராது
* பிட்சாடனர் - மோக மாயை விலகும்
* ஜலந்தர சம்ஹாரர் - விரோதிகள் விலகுவர்
* சரப மூர்த்தி - மாயை, கன்மம் விலகும்
* பைரவர் - இறையருள் எப்போதும் காக்கும்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மன் முத்துப் பல்லக்கில் எழுந்தருளினார். நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மன் உற்சவர் மண்டபத்திலிருந்து கேடயத்தில் எழுந்தருளி தெப்ப மண்டபத்திற்கு வந்தடைந்தார். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மீண்டும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி மூன்றாவது முறையாக மைய மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தெப்ப உற்சவத்தை காண்பதற்காக தெப்பத்தின் நான்கு புறங்களிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
மேலும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் வழியே வாகனங்களில் சென்ற பயணிகளும் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து 8.45 மணிக்கு அம்மன் தெப்பத்திலிருந்து இறக்கப்பட்டு கேடயத்தில் வீதி உலா வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், வாசுதேவன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மன் முத்துப் பல்லக்கில் எழுந்தருளினார். நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மன் உற்சவர் மண்டபத்திலிருந்து கேடயத்தில் எழுந்தருளி தெப்ப மண்டபத்திற்கு வந்தடைந்தார். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து இரவு 7.55 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகள் ஒலிக்க அம்மன் தெப்பக் குளத்தில் உள்ள மைய மண்டபத்தை இரண்டு முறை வலம் வந்து அதன் பின்னர் தெப்பத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
தெப்ப உற்சவத்தை காண்பதற்காக தெப்பத்தின் நான்கு புறங்களிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
மேலும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் வழியே வாகனங்களில் சென்ற பயணிகளும் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து 8.45 மணிக்கு அம்மன் தெப்பத்திலிருந்து இறக்கப்பட்டு கேடயத்தில் வீதி உலா வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், வாசுதேவன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விளக்குகளில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவனின் ஐம்பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுகிறது.
இக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த விழாவின் போது அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபத்தை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து செல்வார்கள். அப்போது சிவன் அக்னி வடிவமாக காட்சி தருவதாக கூறுவார்கள்.
தீபத்துக்கு புகழ்பெற்ற இக்கோவிலில் சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதி முன்பு ஆயிரக் கணக்கான தீபம் ஏற்றும் வகையில் விளக்குகள் உள்ளன.
அவைகளை ஏற்றும் போது கோவில் தீப ஒளியில் ஜொலிக்கும்.ஆனால் பல நாட்கள் இந்த விளக்குகளில் தீபம் ஏற்றாமல் இருப்பதை காணும் பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.
தீபங்களை தினமும் ஏற்றுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். கேரள மாநிலம் குருவாயூரப்பன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமாக உள்ளது.
அதே போல அக்னி ஸ்தலமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் விளக்குகளில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த விழாவின் போது அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபத்தை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து செல்வார்கள். அப்போது சிவன் அக்னி வடிவமாக காட்சி தருவதாக கூறுவார்கள்.
தீபத்துக்கு புகழ்பெற்ற இக்கோவிலில் சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதி முன்பு ஆயிரக் கணக்கான தீபம் ஏற்றும் வகையில் விளக்குகள் உள்ளன.
அவைகளை ஏற்றும் போது கோவில் தீப ஒளியில் ஜொலிக்கும்.ஆனால் பல நாட்கள் இந்த விளக்குகளில் தீபம் ஏற்றாமல் இருப்பதை காணும் பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.
தீபங்களை தினமும் ஏற்றுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். கேரள மாநிலம் குருவாயூரப்பன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமாக உள்ளது.
அதே போல அக்னி ஸ்தலமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் விளக்குகளில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்மன் புற்றில் இருந்து எழுந்திருப்பது போலவும், கண்களை மூடி மூடி திறந்து அருள்பாலிப்பது போன்ற தொழில்நுட்பத்தில் வைத்திருந்தனர்.
சென்னை புரசைவாக் கத்தில் உள்ள கொசப்பேட்டையில் கிராம தேவதையாக ஆதி மொட்டையம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு வசிப்பவர்கள் ஆண்டுதோறும் ஆதி மொட்டையம்மனுக்கு ஜாத்திரை திருவிழா என்ற பெயரில் விழா எடுப்பது வழக்கம்.
இந்த விழாவுக்காக அங்கு வசிப்பவர்கள் அவரவர் வீட்டு வாசலில் அம்மனை உருவாக்கி வைத்திருப்பார்கள். அப்போது கோவிலில் உள்ள ஆதி மொட்டையம்மன் தேரில் உலா வந்து பக்தர்கள் உருவாக்கி வைத்துள்ள அம்மனை பார்த்து அருள்பாலிப்பார். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் கொசப்பேட்டையில் ஜாத்திரை திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிலர் வீட்டு வாசலில் அம்மனை உருவாக்கி வைத்திருந்தனர். சிலர் கூட்டமாக சேர்ந்து பிரமாண்டமான முறையில் அம்மனை உருவாக்கி தெருமுனையில் வைத்திருந்தனர்.
அம்மன் புற்றில் இருந்து எழுந்திருப்பது போலவும், கண்களை மூடி மூடி திறந்து அருள்பாலிப்பது போன்ற தொழில்நுட்பத்தில் வைத்திருந்தனர். அங்குள்ள ஒரு வீட்டில் மண்பானைகளை கொண்டு அம்மனை வடிவமைத்திருந்தனர்.
இந்த ஜாத்திரை விழாவை பார்ப்பதற்கு சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு அன்னதானம் மற்றும் வளையல் உள்ளிட்ட பிரசா தங்கள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவில் அனைத்து அம்மன் உருவங்களும் ஆதி மொட்டையம்மன் கோவில் குளத்தில் கரைக்கப்பட்டன.
இந்த விழாவுக்காக அங்கு வசிப்பவர்கள் அவரவர் வீட்டு வாசலில் அம்மனை உருவாக்கி வைத்திருப்பார்கள். அப்போது கோவிலில் உள்ள ஆதி மொட்டையம்மன் தேரில் உலா வந்து பக்தர்கள் உருவாக்கி வைத்துள்ள அம்மனை பார்த்து அருள்பாலிப்பார். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் கொசப்பேட்டையில் ஜாத்திரை திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிலர் வீட்டு வாசலில் அம்மனை உருவாக்கி வைத்திருந்தனர். சிலர் கூட்டமாக சேர்ந்து பிரமாண்டமான முறையில் அம்மனை உருவாக்கி தெருமுனையில் வைத்திருந்தனர்.
அம்மன் புற்றில் இருந்து எழுந்திருப்பது போலவும், கண்களை மூடி மூடி திறந்து அருள்பாலிப்பது போன்ற தொழில்நுட்பத்தில் வைத்திருந்தனர். அங்குள்ள ஒரு வீட்டில் மண்பானைகளை கொண்டு அம்மனை வடிவமைத்திருந்தனர்.
இந்த ஜாத்திரை விழாவை பார்ப்பதற்கு சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு அன்னதானம் மற்றும் வளையல் உள்ளிட்ட பிரசா தங்கள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவில் அனைத்து அம்மன் உருவங்களும் ஆதி மொட்டையம்மன் கோவில் குளத்தில் கரைக்கப்பட்டன.
அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் 'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்’ இங்கே உங்களுக்காக..
வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
கருத்து:
எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.
தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்
ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்
கருத்து:
பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.
ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்
கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே
கருத்து:
மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும், சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், வாயுதேவரின் பாக்கிய பூதருமான ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.
தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:
தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி
கருத்து:
சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும், ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.
வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்
தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம்
கருத்து:
வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை ரட்சிப்பதில் உறுதிகொண்டவரும், வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான ஸ்ரீஹனுமனை நேரில் தரிசித்தேன்.
ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி
கருத்து:
பஞ்ச ரத்னம் என்று பெயருள்ள - ஸ்ரீஹனுமனின் இந்த ஸ்தோத்திரத்தை எவர் படிக்கிறாரோ, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்.
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
கருத்து:
எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.
தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்
ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்
கருத்து:
பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.
ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்
கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே
கருத்து:
மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும், சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், வாயுதேவரின் பாக்கிய பூதருமான ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.
தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:
தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி
கருத்து:
சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும், ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.
வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்
தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம்
கருத்து:
வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை ரட்சிப்பதில் உறுதிகொண்டவரும், வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான ஸ்ரீஹனுமனை நேரில் தரிசித்தேன்.
ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி
கருத்து:
பஞ்ச ரத்னம் என்று பெயருள்ள - ஸ்ரீஹனுமனின் இந்த ஸ்தோத்திரத்தை எவர் படிக்கிறாரோ, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்.
தண்டு மாரியம்மன் கோவிலில் நடப்பட்டு இருந்த பெரிய கம்பம் பவானி ஆற்றில் விடப்பட்டது. அதை பக்தர்கள் வாணவேடிக்கையுடன் சுமந்து சென்றனர்.
சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் பிரசித்திபெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மனின் அக்காள் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பெரிய கம்பம் நடப்பட்டு குண்டம் விழா நடைபெறும்.
இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த 6-ந் தேதி பூச்சாட்டப்பட்டது. 7-ந் தேதி பெரிய கம்பம் நடப்பட்டது. அன்று முதல் கடந்த 19-ந் தேதி வரை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒவ்வொரு நாள் இரவும் விடிய விடிய கம்பம் ஆட்டம் ஆடி வந்தார்கள்.
சுமந்து சென்றனர்...
இதைத்தொடர்ந்து கடந்த 20-ந் தேதி கோவிலின் முன்பு குண்டம் விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நேற்று முன்தினம் இரவு முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் நடைபெற்றது.
50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று சேர்ந்து கம்பத்தை மெல்ல மெல்ல அசைத்து பிடுங்கினார்கள்.
பின்னர் வாணவேடிக்கையுடன் தோளில் பவானி ஆற்றுக்கு சுமந்து சென்றார்கள். கம்பத்தை சுமந்து செல்லும் பணியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டார்கள். பின்னர் கம்பம் பவானி ஆற்றில் விடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், வருகிற 28-ந் தேதி மறுபூஜையும் நடக்கிறது.
இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த 6-ந் தேதி பூச்சாட்டப்பட்டது. 7-ந் தேதி பெரிய கம்பம் நடப்பட்டது. அன்று முதல் கடந்த 19-ந் தேதி வரை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒவ்வொரு நாள் இரவும் விடிய விடிய கம்பம் ஆட்டம் ஆடி வந்தார்கள்.
சுமந்து சென்றனர்...
இதைத்தொடர்ந்து கடந்த 20-ந் தேதி கோவிலின் முன்பு குண்டம் விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நேற்று முன்தினம் இரவு முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் நடைபெற்றது.
50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று சேர்ந்து கம்பத்தை மெல்ல மெல்ல அசைத்து பிடுங்கினார்கள்.
பின்னர் வாணவேடிக்கையுடன் தோளில் பவானி ஆற்றுக்கு சுமந்து சென்றார்கள். கம்பத்தை சுமந்து செல்லும் பணியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டார்கள். பின்னர் கம்பம் பவானி ஆற்றில் விடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், வருகிற 28-ந் தேதி மறுபூஜையும் நடக்கிறது.
‘புனித ரமலான் மாதத்தில் ஈமானையும், நன்மையையும் நாடி நோன்பு நோற்பவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று பெருமானார் நவின்றுள்ளார்கள்.
இஸ்லாமிய மாதங்களில் மிகவும் சிறப்பு மிக்கது ரமலான் மாதம். இந்த மாதத்தில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த மாதத்தை யார் அடைகின்றாரோ அவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் 2:185 கூறுவதாவது:-
“ரமலான் மாதம் எத்தகைய மகத்துவமுடையது என்றால், அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் என்னும் வேதம் இறக்கப்பட்டது. அது நன்மை, தீமையைப் பிரித்தறிவித்து, நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது.
ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால், அக்காலத்தில் உங்களில் யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் ரமலான் அல்லாத மற்ற நாள்களில் விட்டுப்போன நாட்களின் நோன்பைக் கணக்கிட்டு நோன்பு நோற்று விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளையைக் கொடுக்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை.
மேலும் தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின் எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; அவ்வாறே அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்”.
புனித ரமலான் மாதம் குறித்து நபிகளார் கூறியதாவது:- ‘மக்களே! உங்களிடம் ஒரு மாதம் வந்துள்ளது. அது கண்ணியமிக்க மாதம். பொறுமைக்குரிய மாதம். உங்களில் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டும் மாதம். இந்த மாதத்தில் உங்கள் வாழ்வாதாரங்களை இறைவன் உங்களுக்கு உயர்த்தித் தருகிறான்’.
ரமலான் மாதம் பிறந்து விட்டால் வானத்தில் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன. சைத்தான் விலங்கிடப்படுகின்றான். மனிதர்களின் பிழைகளை மன்னிக்க அல்லாஹ்வின் அருள் மழை பொழியும் மாதமாக, நன்மைகள் நிறைந்த பெட்டகமாக புனித ரமலான் மாதம் அமைந்துள்ளது. ரமலான் மாதத்தில் நாம் செய்யும் நற்செயல்களுக்கும், கூடுதல் வணக்கங்கள் போன்றவற்றுக்கும் 70 மடங்கு நன்மைகள் வழங்கப்படுகின்றன.
‘புனித ரமலான் மாதத்தில் ஈமானையும், நன்மையையும் நாடி நோன்பு நோற்பவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று பெருமானார் நவின்றுள்ளார்கள்.
பாவங்களில் இருந்து மன்னிப்பு பெறவும், பாவங்களில் இருந்து தடுத்துக்கொள்ளவும் கேடயம் போல ரமலான் நோன்பு செயல்படுகிறது. எனவே சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை நாம் கடைப்பிடித்து எல்லாம் வல்ல இறைவனிடம், நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடுவோம். மேலும் நோய்களில் இருந்து உடலையும், தீயவற்றில் இருந்து உள்ளத்தையும் காக்கும் கேடயமாக விளங்கும் நோன்பைக் கடைப்பிடித்து நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.
காரணம் இன்றி ரமலான் நோன்பை விட்டுவிட்டால் இதற்கு ஈடாக எந்தப்பரிகாரமும் செய்ய முடியாது. இதுகுறித்து நபிகளார் கூறும்போது, “ஒருவர் தக்க காரணம் இன்றி ரமலானின் ஒரு நோன்பை விட்டுவிட்டு அதற்கு பதிலாக காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும், அது ரமலான் மாத நோன்புக்கு ஈடாகாது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே அருள்மழை பொழியும் புனித ரமலான் மாதத்தில் முறையாக நோன்பு நோற்று, ஐந்து வேளை தொழுகை, தஹ்ஜத் மற்றும் தராவீஹ் தொழுகையை கடைப்பிடிப்போம். நோன்பாளிகள் மட்டுமே செல்லக்கூடிய ‘ரய்யான்’ என்ற சொர்க்கத்தின் வாசல் திறக்கப்படும் காலம் என்பதால் இந்த நோன்பு காலத்தில் அதிகமதிகம் திருக்குர்ஆன் ஓதுவோம், தான தர்மங்கள் செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.
பேராசிரியர் அ முகமது அப்துல் காதர், சென்னை.
“ரமலான் மாதம் எத்தகைய மகத்துவமுடையது என்றால், அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் என்னும் வேதம் இறக்கப்பட்டது. அது நன்மை, தீமையைப் பிரித்தறிவித்து, நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது.
ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால், அக்காலத்தில் உங்களில் யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் ரமலான் அல்லாத மற்ற நாள்களில் விட்டுப்போன நாட்களின் நோன்பைக் கணக்கிட்டு நோன்பு நோற்று விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளையைக் கொடுக்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை.
மேலும் தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின் எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; அவ்வாறே அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்”.
புனித ரமலான் மாதம் குறித்து நபிகளார் கூறியதாவது:- ‘மக்களே! உங்களிடம் ஒரு மாதம் வந்துள்ளது. அது கண்ணியமிக்க மாதம். பொறுமைக்குரிய மாதம். உங்களில் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டும் மாதம். இந்த மாதத்தில் உங்கள் வாழ்வாதாரங்களை இறைவன் உங்களுக்கு உயர்த்தித் தருகிறான்’.
ரமலான் மாதம் பிறந்து விட்டால் வானத்தில் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன. சைத்தான் விலங்கிடப்படுகின்றான். மனிதர்களின் பிழைகளை மன்னிக்க அல்லாஹ்வின் அருள் மழை பொழியும் மாதமாக, நன்மைகள் நிறைந்த பெட்டகமாக புனித ரமலான் மாதம் அமைந்துள்ளது. ரமலான் மாதத்தில் நாம் செய்யும் நற்செயல்களுக்கும், கூடுதல் வணக்கங்கள் போன்றவற்றுக்கும் 70 மடங்கு நன்மைகள் வழங்கப்படுகின்றன.
‘புனித ரமலான் மாதத்தில் ஈமானையும், நன்மையையும் நாடி நோன்பு நோற்பவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று பெருமானார் நவின்றுள்ளார்கள்.
பாவங்களில் இருந்து மன்னிப்பு பெறவும், பாவங்களில் இருந்து தடுத்துக்கொள்ளவும் கேடயம் போல ரமலான் நோன்பு செயல்படுகிறது. எனவே சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை நாம் கடைப்பிடித்து எல்லாம் வல்ல இறைவனிடம், நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடுவோம். மேலும் நோய்களில் இருந்து உடலையும், தீயவற்றில் இருந்து உள்ளத்தையும் காக்கும் கேடயமாக விளங்கும் நோன்பைக் கடைப்பிடித்து நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.
காரணம் இன்றி ரமலான் நோன்பை விட்டுவிட்டால் இதற்கு ஈடாக எந்தப்பரிகாரமும் செய்ய முடியாது. இதுகுறித்து நபிகளார் கூறும்போது, “ஒருவர் தக்க காரணம் இன்றி ரமலானின் ஒரு நோன்பை விட்டுவிட்டு அதற்கு பதிலாக காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும், அது ரமலான் மாத நோன்புக்கு ஈடாகாது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே அருள்மழை பொழியும் புனித ரமலான் மாதத்தில் முறையாக நோன்பு நோற்று, ஐந்து வேளை தொழுகை, தஹ்ஜத் மற்றும் தராவீஹ் தொழுகையை கடைப்பிடிப்போம். நோன்பாளிகள் மட்டுமே செல்லக்கூடிய ‘ரய்யான்’ என்ற சொர்க்கத்தின் வாசல் திறக்கப்படும் காலம் என்பதால் இந்த நோன்பு காலத்தில் அதிகமதிகம் திருக்குர்ஆன் ஓதுவோம், தான தர்மங்கள் செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.
பேராசிரியர் அ முகமது அப்துல் காதர், சென்னை.
கடந்த சில நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வரை 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.
சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக ஏழுமலையான் கோவிலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேரடியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் விரைந்து சாமி தரிசனம் செய்ய முடிகிறது.
இன்று காலையில் ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் 7 குடோன்கள் மட்டுமே நிரம்பி வழிந்தது. இதனால் 2 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 63,084 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,563 முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.12 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.
திருப்பதி தேவஸ்தான பக்தி சேனலில் நேற்று மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை தெலுங்கு சினிமா பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக தேவஸ்தான அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக பக்தி சேனலில் ஒளிபரப்பப்பட்ட தெலுங்கு சினிமா பாடல்கள் நிறுத்தப்பட்டது.
மீண்டும் கோவில் விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இதுகுறித்து பக்தி சேனல் ஊழியர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக ஏழுமலையான் கோவிலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேரடியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் விரைந்து சாமி தரிசனம் செய்ய முடிகிறது.
இன்று காலையில் ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் 7 குடோன்கள் மட்டுமே நிரம்பி வழிந்தது. இதனால் 2 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 63,084 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,563 முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.12 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.
திருப்பதி தேவஸ்தான பக்தி சேனலில் நேற்று மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை தெலுங்கு சினிமா பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக தேவஸ்தான அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக பக்தி சேனலில் ஒளிபரப்பப்பட்ட தெலுங்கு சினிமா பாடல்கள் நிறுத்தப்பட்டது.
மீண்டும் கோவில் விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இதுகுறித்து பக்தி சேனல் ஊழியர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர நாளில் விரதம் இருந்து பைரவரை நினைத்து வழிபட்டால், காரியத் தடைகள் விலகும்.
சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி வழிபாடு தான் பலருக்கும் தெரிந்த வழிபாடாக இருக்கிறது. இதைத் தவிர, சித்திரை மாதத்தில் ஏராளமான சிறப்புமிக்க விரத வழிபாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
* சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில், பார்வதி தேவியை விரதம் இருந்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
* சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர நாளில் விரதம் இருந்து பைரவரை நினைத்து வழிபட்டால், காரியத் தடைகள் விலகும். அன்றைய தினம் தயிர் சாதத்தை பைரவருக்கு நைவேத்தியமாக படைக்கலாம். இதனால் எதிரிகள் விலகுவர்.
* சித்திரை மாத மூலம் நட்சத்திரத்தில், விரதம் இருந்து லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.
* சித்திரை மாதத்தின் வளர்பிறையில் திருதியை திதி வந்தால், அன்றைய தினம் விரதம் இருந்து சிவனையும் பார்வதியையும் வணங்கி, ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் தானங்கள் செய்தால் சிறப்பான வாழ்வு அமைவதோடு, வாழ்வின் இறுதியில் சிவலோகப் பதவியும் அடையலாம்.
* தாகம் என்று வருபவர்களுக்கு நீர் அளிப்பது, அடிப்படை தர்மம். அதுவும் சித்திரை மாதத்தில் இதுபோன்று நீர், மோர் தானம் செய்வது, நாம் பிறக்கும்போதே உடன் வந்த பாவங்களை விலகச் செய்யும்.
* சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை அடுத்த திருதியையே, ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. அந்நாளில் தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தை வரவழைக்கும்.
* சித்திரை மாத திருதியை தினம் ஒன்றில்தான், மகாவிஷ்ணு ‘மச்ச அவதாரம்’ எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.
* சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில், வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு லட்சுமி வந்ததாக புராணங்கள் சொல்கின்றன. எனவே அன்றைய தினம் விரதம் இருந்து லட்சுமியை பூஜித்தால், செல்வச் செழிப்பு ஏற்படும்.
* சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியில், அம்பிகை பிறந்ததாக ஐதீகம். எனவே அந்நாளில் விரதம் இருந்து புனித நதிகளில் நீராடுவது சிறப்பான பலனைத் தரும்.
* சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில், பார்வதி தேவியை விரதம் இருந்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
* சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர நாளில் விரதம் இருந்து பைரவரை நினைத்து வழிபட்டால், காரியத் தடைகள் விலகும். அன்றைய தினம் தயிர் சாதத்தை பைரவருக்கு நைவேத்தியமாக படைக்கலாம். இதனால் எதிரிகள் விலகுவர்.
* சித்திரை மாத மூலம் நட்சத்திரத்தில், விரதம் இருந்து லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.
* சித்திரை மாதத்தின் வளர்பிறையில் திருதியை திதி வந்தால், அன்றைய தினம் விரதம் இருந்து சிவனையும் பார்வதியையும் வணங்கி, ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் தானங்கள் செய்தால் சிறப்பான வாழ்வு அமைவதோடு, வாழ்வின் இறுதியில் சிவலோகப் பதவியும் அடையலாம்.
* தாகம் என்று வருபவர்களுக்கு நீர் அளிப்பது, அடிப்படை தர்மம். அதுவும் சித்திரை மாதத்தில் இதுபோன்று நீர், மோர் தானம் செய்வது, நாம் பிறக்கும்போதே உடன் வந்த பாவங்களை விலகச் செய்யும்.
* சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை அடுத்த திருதியையே, ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. அந்நாளில் தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தை வரவழைக்கும்.
* சித்திரை மாத திருதியை தினம் ஒன்றில்தான், மகாவிஷ்ணு ‘மச்ச அவதாரம்’ எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.
* சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில், வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு லட்சுமி வந்ததாக புராணங்கள் சொல்கின்றன. எனவே அன்றைய தினம் விரதம் இருந்து லட்சுமியை பூஜித்தால், செல்வச் செழிப்பு ஏற்படும்.
* சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியில், அம்பிகை பிறந்ததாக ஐதீகம். எனவே அந்நாளில் விரதம் இருந்து புனித நதிகளில் நீராடுவது சிறப்பான பலனைத் தரும்.






