என் மலர்
சினிமா செய்திகள்
- சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவ் தான் காரணம் என அமைச்சர் சர்ச்சை கருத்து
- சமந்தா குறித்து கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு பெண் அமைச்சர் அறிக்கை
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன்பின், ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை அவர்கள் வெளிப்படையாக கூறவில்லை.
தற்போது, நாக சைதன்யா நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய உள்ளார். சில மாதத்துக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இதற்கிடையே, தெலுங்கானா மாநில அமைச்சரான கோண்டா சுரேகா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவ் தான் காரணம். அவர் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள் எனக்கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
தெலுங்கானா அமைச்சரின் இந்த கருத்துக்கு சமந்தா, நாகார்ஜுனா, நானி, அல்லு அர்ஜுன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சமந்தா குறித்து கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு பெண் அமைச்சர் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், அமைச்சர் கொண்டா சுரேகா தனது குடும்ப உறுப்பினர்களின் கெளரவம் மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் நாகார்ஜுனா நாம்பள்ளி நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வழக்கு தொடர்பான தகவலை பதிவு செய்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அதர்வா நடிப்பில் அடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ.
- இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதர்வா நடிப்பில் அடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹான போன்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்கள்.
பலவிதமான எமோஷன்ஸ், எனர்ஜி மற்றும் ரசிக்கக் கூடிய பல தருணங்களை படம் கொண்டுள்ளது. இதை காட்சி அனுபவமாக ரசிகர்களுக்கு மேம்படுத்தி கொடுக்க இசையமைப்பாளர் ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையும் படத்தில் அமைந்துள்ளது என்பதை படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதால் படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் வெளியிடும். க்ரைம் ஆக்ஷன் கதையாக உருவாகி இருக்கும் 'டிஎன்ஏ' திரைப்படத்தில் நம்பிக்கைக்குரிய நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
- இப்பாடல் ஜி.வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியுள்ளது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.
புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடல் ஜி.வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியுள்ளது.
தற்பொழுது ஹே மின்னலே பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் ஷ்வேதா மோகன் மற்றும் ஹரிச்சரண் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலின் மூலம் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரியங்கா மோகன் கடந்த மாதம் நானி நடிப்பில் வெளிவந்த சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
- தற்பொழுது சிகிச்சைக்கு பின் நலமாகவுள்ளார்.
பிரியங்கா மோகன் கடந்த மாதம் நானி நடிப்பில் வெளிவந்த சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அடுத்ததாக ஜெயம் ரவி நடித்து முடித்து ரிலீசுக்கு தயாராகியுள்ள பிரதர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் தோரூரில் உள்ள வணிக வளாக தொடக்க விழாவில் நடிகை பிரியங்கா மோகன் இன்று கலந்துக்கொண்டார். அப்பொழுது கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் மேடை சரிந்து விழுந்ததில் காயமடைந்தார்.
தற்பொழுது சிகிச்சைக்கு பின் நலமாகவுள்ளார். தான் நலமாக உள்ளே ரசிகர்கள் கவலைப்பட வெண்டாம் என தெரிவித்துள்ளார். மேடை சரிந்து விழுந்த காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார்.
- ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்ட ரஜினியை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகா தமனியில் ('அயோர்டா') அவருக்கு வீக்கம் இருந்தது. அறுவை சிகிச்சை இல்லாமல், இடையீட்டு சிகிச்சை மூலம் அதனை சரி செய்ய முடியும்.
அதன்படி, முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான குழுவினர், மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' -ஐ அந்த இடத்தில் பொருத்தி உள்ளனர். இது ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை ஆகும். தற்போது ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது.
சிகிச்சையை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை டிஸ்சார்ஜ் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடுள்ளது.
இருப்பினும், ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்ட ரஜினியை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி சென்னையில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் அவரது மகள் செளந்தர்யா தனது கணவருடன் சென்று பிரார்த்தனை மேற்கொண்டார்.
- விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 69" என தலைப்பிடப்பட்டு உள்ளது.
- இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதை படக்குழு அறிவித்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 69" என தலைப்பிடப்பட்டு உள்ளது.
இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். இப்படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். 'அனிமல்' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதை படக்குழு அறிவித்தது. பூஜா ஹெக்டே மேலும் மமிதா பைஜூ நடிப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது.
படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில் அடுத்ததாக நடிகை பிரியாமணி நடிக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த தளபதி 69 குறித்து அப்டேட் கொடுப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆதிக் ரவிசந்திரன்அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- படத்தை பற்றிய மற்றொரு சுவாரசிய தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'மார்க் ஆண்டணி' மிகப்பெரிய ஹிட் அடித்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இதை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு பணிகள் ஐதரபாத்தில் சில நாட்கள் நடைப்பெற்றது. அடுத்ததாக பணிகள் ஸ்பெயினில் நடைப்பெறவுள்ளது. படத்தை பற்றிய மற்றொரு சுவாரசிய தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் பிரசன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து நடிகர் பிரசன்னா மனம் திறந்து அதைப்பற்றி அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ' அன்புள்ள நண்பர்களே , இவ்வளவு நாள் நீங்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் இப்பொழுது உண்மையாகியுள்ளது. ஆம் நான் தல அஜித் குமார் சார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கிறேன். மங்காத்தா திரைப்படம் வெளிவந்த நாட்களில் இருந்தே அஜித் சார் நடிக்கும் திரைப்படத்தில் நான் நடிக்கப்போகிறேன் என்ற வதந்தி பரவி வந்த நிலையில். தற்பொழுது அது உண்மையாகியுள்ளது.
இதை சாத்தியமாக்கிய கடவுள், அஜித் சார், சுரேஷ் சந்திரா சார், மைத்திரி மூவீஸ், ஆதிக் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. திரைப்படம் தற்பொழுது ஸ்பெயினில் படமாக்கப்பட்டு வருகிறது." என்று கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நடிகர் வடிவேலுவின் வெற்றியின் பின்னால் நான் தான் இருந்தேன். என்னை துன்புறுத்தும் நோக்கில் நடிகர் வடிவேலு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னைப் பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக வடிவேலு சித்தரித்தார்.
நடிகர் வடிவேலு சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் அவர் எதிர்கொள்ளவில்லை என ஐகோர்ட்டில் சிங்கமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார்.
- இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதை படக்குழு அறிவித்தது
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 69" என தலைப்பிடப்பட்டு உள்ளது.
இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார். தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். 'அனிமல்' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதை படக்குழு அறிவித்தது. பூஜா ஹெக்டே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மமிதா பைஜூ நடிப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது.
தற்பொழுது படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த லியோ படத்தில் விஜய் மற்றும் கவுதம் மேனன் ஒன்றாக நடித்து இருந்தனர்.
அதைத்தொடர்ந்து தற்பொழுது தளபதி 69 படத்தில் நடித்துள்ளார். கவுதம் மேனன் அண்மையில் மழை பிடிக்காத மனிதன் திரைப்பத்தில் நடித்து இருந்தார் மேலும் மலையாளத்தில் மம்மூட்டியை வைத்து திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கவோ அல்லது MUTE செய்ய வேண்டும்.
- லைகா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ள, இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
இந்த நிலையில், 'வேட்டையன்' படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கவோ அல்லது MUTE செய்ய வேண்டும். அதுவரை இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மதுரை சேர்ந்த பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, என்கவுன்ட்டரை ஆதரிப்பது போல வேட்டையன் படத்தில் காட்சிகளும், வசனங்களும் வருகின்றன. எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிட்ப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மனு குறித்து தமிழ்நாடு அரசு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், லைகா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கொண்டா சுரேகாவின் பேச்சுக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை ரோஜா ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.
- நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இச்செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
சமந்தா- நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனுமான கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று தெலுங்கானா பெண் மந்திரி கொண்டா சுரேகா அளித்த பேட்டி சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக கே.டி. ராமாராவ் அவதூறு வழக்க தொடர்வதாக கூறியுள்ளார்.
கொண்டா சுரேகாவை கண்டித்த நடிகை சமந்தா அரசியலுக்காக என் பெயரை இழுக்க வேண்டாம் என கூறினார். மேலும் கொண்டா சுரேகாவின் பேச்சுக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை ரோஜா ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தெலுங்கான அமைச்சர் கொண்டா சுரேகா பேச்சுக்கு நடிகர் நானி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியவதாவது:-
எப்பேற்பட்ட முட்டாள்தனத்தையும் பேசி தப்பித்து விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர் ஊடகங்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளைப் பேசுவது சரியல்ல. நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இச்செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கோரிக்கை விடுத்த அமலா.
- உண்மையே இல்லாமல் பேசியது வெட்கக்கேடானது.
நடிகை அமலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு பெண் அமைச்சர் பேயாக மாறியது. தீய கற்பனைகளை குற்றச்சாட்டுகளாக கற்பனை செய்து வெளியிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அமைச்சர் மேடம், என் கணவர் (நாகார்ஜூனா) பற்றி ஒரு துளிகூட வெட்கமோ உண்மையோ இல்லாமல் பேசியது வெட்கக்கேடானது.
தலைவர்கள் தங்களை சாக்கடையில் தாழ்த்திக் கொண்டு குற்றவாளிகளைப் போல் நடந்து கொண்டால், நம் நாட்டின் கதி என்ன?" என்றார்.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கோரிக்கை விடுத்த அமலா, "ராகுல்காந்திஜி, நீங்கள் மனித நேயத்தில் நம்பிக்கை கொண்டால், தயவுசெய்து உங்கள் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்தி, எனது குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டு உங்கள் அமைச்சரின் விஷமத்தனமான அறிக்கைகளைத் திரும்பப் பெறச் செய்யுங்கள்" என்று அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






