என் மலர்
நீங்கள் தேடியது "நாகார்ஜுனா"
- சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
- படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைப்பெற்று வருகிறது.புக் மை ஷோ செயலியில் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது.படத்தின் வெற்றி விழா நேற்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது.
திரைப்படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. திரைப்படம் இதுவரை 50 கோடி ருபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.
குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் பார்வைகளை கடந்தது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் நடிகர் தனுஷை குறித்து சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " தனுஷ் எப்பொழுது படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலும் அந்த படத்தின் கதாப்பாத்திரமாக மாறிவிடுவார்.நான் அவரை முதன் முதலில் சந்தித்த போது இப்படத்திற்காக அவரை இன்னும் ஒல்லியாக சொன்னேன். அவர் அதற்கு " நீங்கள் மட்டும் தான் என்னை ஒல்லியாக கூறுகிறீர்கள்" என நகைச்சுவையாக கூறினார். மேலும் இப்படத்திற்காக அவர் டயட் இருந்து இன்னும் மெலிதான தோற்றத்தில் காணப்பட்டார்." என கூறினார்.
படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
- விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று ராஷ்மிகா தெரிவித்தார்.
- விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.
குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குபேரா டிரைலரை வெளியிட்டார்.
குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் விஜய் தேவரகொண்டா குறித்து கேட்கப்பட்ட கேள்வியால் நடிகை ராஷ்மிகா மந்தனா வெட்கத்தில் முகம் சிவந்தார்.
நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் நாகர்ஜூனாவிடம் இருந்து எந்த விஷயங்களை எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று ராஷ்மிகாவிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு நாகர்ஜூனாவின் வசீகரத்தையும் தனுஷின் நடிப்பு, இயக்கம், நடனத்தையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, விஜய் தேவரகொண்டாவிடம் என்று கேள்வி எழுப்பியதற்கு வெட்கத்தில் முகம் சிவந்தபடி அனைத்தயும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று ராஷ்மிகா தெரிவித்தார்.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து மற்றும் ஒன்றாக டேட் செய்து வருகின்றனர் என்ற தகவல் டியர் காமரேட் திரைப்பட நாட்களில் இருந்தே பரவி வருகின்றன. அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பொது இடங்களுக்கு செல்வது, சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்தது இதனை உறுதிப்படுத்துவதாக இருந்தது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இருவர் தரப்பினரிடம் இருந்து விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற படத்தில் நடித்துள்ளார்.
- குபேரா திரைப்படம் வரும் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை:
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். குபேரா திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.
படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியது. படத்தின் நேரளவு 3 மணி நேரம் 15 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது திரைப்படத்தின் அளவை 3 மணி நேரமாக குறைத்துள்ளனர்.
இந்நிலையில், குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குபேரா டிரைலரை வெளியிட்டார். இதையடுத்து ஸ்டேஜில் வைத்து குபேரா படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளை இயக்குநர் சேகர் கம்முலா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.
படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.
படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 3 மணி நேரம் 15 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது திரைப்படத்தின் அளவை 3 மணி நேரமாக குறைத்துள்ளனர்.
இந்நிலையில், குபேரா படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. மேலும் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
- சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.
படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.
மறுபக்கம் லோகேஷ் இயக்கியுள்ள ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் " தனுஷ் காட்சி படப்பிடிப்பின் போது அதன் இடைப்பட்ட இடைவேளையில் யாரிடமும் பேசமாட்டார். அவர் ஒரு ஓரமாக சென்று உட்கார்ந்து விடுவார். அடுத்து நடிக்க வேண்டிய காட்சிகளின் வசனத்தை படிப்பார், எப்படி நடிக்க வேண்டும் என்பதை மைண்டில் ப்ராசஸ் செய்வார்.
அதேப்போல் தான் ரஜினிகாந்த் சாரும். படப்பிடிப்பின் போது அமைதியாக இருப்பார். சண்டை காட்சிகளின் போது அனைவரையும் கலாய்த்து பேசுவார். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது. நான் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பேன்" என கூறியுள்ளார்.
- தெலுங்கில் பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா நடிப்பது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தற்போது தெலுங்கில் பிக்பாஸ் 6-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் நாகார்ஜுனா விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். நாகார்ஜுனா மட்டுமன்றி பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கும் பதில் மனு தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாகர்ஜுனா
மேலும், இந்த வழக்கு விசாரணையை 14 நாட்களுக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை எட்டியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் இந்த சீசன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா.
- நடிகர் நாகர்ஜுனாவின் 16 வீடுகள் கட்டுமான பணிக்கு அதிகாரிகள் திடீர் தடை விதித்துள்ளனர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா கோவா மாநிலம், மாண்ட் ரெம் பஞ்சாயத்துகுட்பட்ட மலையை ஒட்டிய பிராப் எர்டி பகுதியில் பல ஏக்கரில் நிலம் வாங்கி உள்ளார். அங்கு 16 வீடுகள் மற்றும் ரெஸ்ட்ரான்ட் கட்டுவதற்கு மாண்ட் ரெம் பஞ்சாயத்தில் தற்காலிகமாக அனுமதி வாங்கி இருந்தார்.

நாகார்ஜுனா
அந்த இடத்தில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதனை ஆய்வு செய்த பஞ்சாயத்து அதிகாரிகள் அந்த இடத்தில் பல இடங்களில் மிக ஆழமான துளைகள் போடப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் எந்த வகையான கட்டிடம் கட்டப்பட உள்ளது என்ற விவரம் அடங்கிய பெயர் பலகை எதுவும் வைக்கவில்லை.

நாகார்ஜுனா
இதையடுத்து அதிகாரிகள் கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என நாகார்ஜுனாவிற்கு நோட்டீஸ் அனுப்பினர். நோட்டீசை கண்ட நாகார்ஜுனா அதிர்ச்சி அடைந்து உடனடியாக பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு பதில் மனு அனுப்பினார். அதில் தொழில் தொடங்குவதற்காக கட்டுமான பணி நடைபெற்று வருவதாகவும் இதற்காக பஞ்சாயத்து அலுவலகத்தில் தடையில்லா அனுமதி வாங்கி உள்ளதாகவும், பணி நிறுத்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

நாகார்ஜுனா
ஆனால் நாகார்ஜுனா அனுமதி வாங்கியதற்கான எந்தவிதமான பதிவேடும் பஞ்சாயத்து அலுவலகத்தில் இல்லாததால் மேற்கொண்டு பணியை தொடர அனுமதி வழங்க முடியாது என அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். நீதிமன்றம் அணுகி அனுமதி பெற்று கட்டுமான பணியை தொடங்குங்கள் அதுவரை கட்டுமான பணியை தொடர அனுமதி கிடையாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கட்டுமான பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டுமான பணி தாமதம் காரணமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், கட்டுமான பணிக்கு தடை விதித்தால் மேலும் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
- எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
- காங்கிரஸ் முதல் மந்திரியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மாதப்பூரில் நடிகர் நாகார்ஜுனாவிற்குச் சொந்தமான 'என் கன் வென்ஷன் சென்டர்' என்ற மண்டபம் உள்ளது. அந்த மண்டபம்தும்மிடிகுண்டா ஏரிக்குச் சொந்தமான 3.30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் ஐதராபாத்தில்கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. நடிகர் நாகார்ஜுனாவின் மண்டபமும் இடிக்கப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்த நாகார்ஜுனா, 'மண்டபம் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு முறைப்படி பட்டா உள்ளது என்றும் ஓர் அங்குல இடம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை' என்றும், தெரிவித்தார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் இஸ்கான் அமைப்பு சார்பில் நடத்த ஜன்மாஷ்டமி விழாவில் பங்கேற்ற, முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-
தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும். அதற்கு எந்த வழியையும் கடைப்பிடிக்கலாம் என்பதைத் தான் மகாபாரதம் வாயிலாக நமக்கு கிருஷ்ண பகவான் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலனுக்காக தர்மத்தை காப்பாற்றி, அதர்மத்தை அழிக்க வேண்டும்என பகவத் கீதையில் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார்.
ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. இவற்றை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவது, மாபெரும் பாவம். மக்கள் நலனுக்கு எதிரானது.
கிருஷ்ணரின் போதனைப்படி நடக்கும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு, ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைகளை, மக்கள் நலனுக்காக மேற்கொண்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், அதனால், கட்டிடங்களை இடிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் முதல் மந்திரியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
- சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவ் தான் காரணம் என அமைச்சர் சர்ச்சை கருத்து
- சமந்தா குறித்து கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு பெண் அமைச்சர் அறிக்கை
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன்பின், ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை அவர்கள் வெளிப்படையாக கூறவில்லை.
தற்போது, நாக சைதன்யா நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய உள்ளார். சில மாதத்துக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இதற்கிடையே, தெலுங்கானா மாநில அமைச்சரான கோண்டா சுரேகா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவ் தான் காரணம். அவர் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள் எனக்கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
தெலுங்கானா அமைச்சரின் இந்த கருத்துக்கு சமந்தா, நாகார்ஜுனா, நானி, அல்லு அர்ஜுன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சமந்தா குறித்து கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு பெண் அமைச்சர் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், அமைச்சர் கொண்டா சுரேகா தனது குடும்ப உறுப்பினர்களின் கெளரவம் மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் நாகார்ஜுனா நாம்பள்ளி நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வழக்கு தொடர்பான தகவலை பதிவு செய்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அன்னபூர்ணா ஸ்டுடியோவில் 8 மணிநேர திருமண விழா நடைபெறவுள்ளது.
- சடங்கில் நலங்கு வைத்து மஞ்சள் தேய்த்து சோபிதா துலிபாலா குளித்த புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் திருமணம் நடக்க உள்ளது. திருமணம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஹைதராபாத்தில் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் 8 மணிநேர திருமண விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தற்போது திருமணத்துக்கு முந்தைய வைபவங்கள் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடந்து வருகிறது. அதன்படி வட இந்தியாவில் மணமகள் வீட்டில் நடக்கும் திருமணத்துக்கு முந்தைய வைபவமான ஹல்தி சடங்கு நடைபெற்றுள்ளது.

அதன் புகைப்படங்களை சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த மங்களாசாசனம் எனும் நலங்கு சடங்கை அப்பா மற்றும் அம்மா இணைந்து சோபிதா துலிபாலாவுக்கு நடத்தியுள்ளனர். சடங்கில் நலங்கு வைத்து மஞ்சள் தேய்த்து சோபிதா துலிபாலா குளித்த புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






