search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    • ஆளும் திரிணாமுல் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • தொடக்கத்திலிருந்தே பாஜகவை கடுமையாக மம்தா சாடிவந்த நிலையில் அது தேர்தல் காலத்திலும் எதிரொலித்து வருகிறது.

    மேற்க மாநிலத்தில் பராக்பூர், ஹவ்ரா, ஹூக்ளி உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் வரும் மே 20 ஆம் தேதியன்று 5 ஆம் கட்ட தேர்தல் வாக்குபதிவில் இடம்பெற்றுள்ள. இந்நிலையில் ஆளும் திரிணாமுல் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த தேர்தலுக்காக முதலில் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த அவர், பின் அதிலிருந்து வெளியேறி, வெளியில் இருந்து இந்தியா கூட்டணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று அறிவித்தார். தொடக்கத்திலிருந்தே பாஜகவை கடுமையாக மம்தா சாடிவந்த நிலையில் அது தேர்தல் காலத்திலும் எதிரொலித்து வருகிறது. சந்தேஷ்க்காளி விவகாரதை கையில் எடுத்துள்ள பாஜக அதை முன்னிலைப் படுத்தி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

     

    இந்நிலையில் கோதக் பகுதியில் இன்று (மே 18) பிரச்சாரம் செய்த மம்தா, இந்த தேர்தலில் பாஜக 200 சீட் கூட ஜெயிக்காது என்றும் இந்தியா கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளார். பாஜக 400 இடங்களில் உறுதியாக வெல்லும் என்று மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரங்களில் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.  

    • நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
    • இந்நிலையில் டெல்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை டெல்லி தேர்தல் ஆணையம் செய்துகொடுத்துள்ளது.

    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் மே 20 திங்கட்கிழமை அன்று உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் என அதிக வாக்காளர்கள் உள்ள மாநிலங்களில் உள்ள தொகுதிகள் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவில் பங்கேற்க உள்ளன. அதைத்தொடர்ந்து மே 25 ஆம் தேதி நடக்கும் 6 ஆம் கட்ட வாக்குபதிவு நாளன்று டெல்லிக்கு ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்து முடியும்.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை டெல்லி தேர்தல் ஆணையம் செய்துகொடுத்துள்ளது. நேற்று இந்த வசதி மூலம் மொத்தம் 1409 பேர் வாக்களித்த நிலையில் இன்று வடக்கு டெல்லி உட்பட பல்வேறு தொகுதிகளில் மொத்தம் 2956 பேர் வாக்களித்தனர்.

    அதன்படி டெல்லியில் வசித்து வரும் பல்வேறு காட்சிகளைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் இன்று (மே 18) வாக்களித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமரும் மன்மோகன் சிங் நேற்று தனது வீட்டில் இருந்தபடியே தனதுஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

     

    முன்னாள் உள்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் முகமத் ஹமீத் அன்சாரி ஆகியோரும் நேற்றைய தினம் வாக்களித்தாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் பாஜகவை மூத்த தலைவர் எல்.கே அத்வானி இன்று தனது இல்லத்தில் இருந்தபடியே வாக்களித்தார். 

    • பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்.
    • நான் ஒருபோதும் இந்து-முஸ்லிம் அரசியல் செய்ததில்லை. அதைச் செய்யவும் மாட்டேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    கேள்வி:- இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பாரதிய ஜனதா எவ்வாறு தயாரானது?

    பதில்:- வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் வரை காத்திருக்காமல் உழைக்குமாறு கட்சி உறுப்பினர்களை ஓராண்டுக்கு முன்பே கேட்டுக் கொண்டேன். நாங்கள் அனைவரும் தாமரைக்காக உழைத்தோம். எதிர்க்கட்சிகள் கூட தாமரைக்காக உழைக்கின்றன. அவர்கள் எவ்வளவு சேற்றை அள்ளுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தாமரை மலரும்.

    பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும். அடுத்து வரும் எங்களின் ஆட்சியின் முதல் 125 நாட்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளேன். இதில் 25 நாட்கள் நாட்டின் இளைஞர்களுக்கு பிரத்தியேகமாக இருக்கும்.

    கேள்வி:- மத்திய புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்களே?

    பதில்:- மத்திய புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான அமலாக்க இயக்குநரகம் 2014-ம் ஆண்டுக்கு (காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ்) முன் பயனற்றதாக இருந்தது. தற்போது திறம்பட செயல்படத் தொடங்கி உள்ளது.

    ஊழல்வாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை, ஏழைகளுக்கு திருப்பி அளிக்கும் வகையில், சட்டத்தை உருவாக்க வக்கீல்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினேன். அமலாக்கத்துறையால் இதுவரை கைப்பற்றப்பட்ட ரூ.17 ஆயிரம் கோடியை ஏழைகளுக்கு திருப்பி கொடுத்துள்ளேன்.

    கேள்வி:- ஒரே நாடு, ஒரே உடையை நோக்கிய நகர்வாக பொது சிவில் சட்டம் முன்வைக்கப்படுகிறதே?

    பதில்:- கோவா மக்கள் ஒரே மாதிரியான ஆடைகளை அணிகிறார்களா? கோவா மக்களும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடுகிறார்களா? பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இது எந்த அரசியல் கட்சியின் விவகாரமும் அல்ல. இது அரசியல் நிர்ணய சபையில் இருந்து வந்தது.

    கேள்வி:- நாட்டின் அரசியலமைப்பை மாற்றவும், கல்வி-வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை நீக்கவும் பா.ஜனதா விரும்புவதாக கூறப்படுகிறதே?

    பதில்:- ஜவகர்லால் நேருவில் தொடங்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெவ்வேறு காலங்களில் அரசியலமைப்பை கிழித்தெறிந்தனர். அரசியலமைப்பை அவர்கள் தாக்கிய காலம் வெகு தொலைவில் உள்ளது. அதனால்தான் இன்று நான் தைரியமாக மக்களிடம், மோடி உயிருடன் இருக்கிறார் என்று சொல்கிறேன். இந்தியாவில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்காது என்று கூறிய அரசியல் நிர்ணய சபையின் அடிப்படை உணர்வுக்காக போராடுவேன். அதற்காக என் உயிரையும் தியாகம் செய்வேன்.

    கேள்வி:- பா.ஜனதா அரசு பணக்காரர்கள் சிலருக்கு பலன்களை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது பற்றி?

    பதில்:- என்னால் நேர்மையற்ற முறையில் யாரேனும் பயனடைந்தால் தண்டனையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் தவறான வழியில் யாருக்காவது நன்மை செய்திருந்தால் நான் தூக்கிலிடப்பட வேண்டும். ஆனால் எனது நாட்டில் செல்வத்தை உருவாக்குபவர்களை நான் மதிப்பேன். செல்வத்தை உருவாக்குபவர்கள்-தொழிலாளர்களைப் பற்றி சமமாக கவலைப்படுகிறேன்.

    கேள்வி:- நீங்கள் வகுப்புவாத அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே?

    பதில்:- நான் ஒருபோதும் இந்து-முஸ்லிம் அரசியல் செய்ததில்லை. அதைச் செய்யவும் மாட்டேன். ஆனால் முத்தலாக் தவறு என்று நான் சொன்னால், முஸ்லிம் விரோதி என்று முத்திரை குத்தப்பட்டேன்.

    நான் இப்படி முத்திரை குத்தப்பட்டால் அது விமர்சிப்பவர்களின் நிர்ப்பந்தம் ஆகும். என்னுடையது அல்ல. நீங்கள் (எதிர்க்கட்சிகள்) வகுப்புவாதத்தை பின் பற்றினீர்கள். நான் அதை அம்பலப்படுத்தினேன். அவர்களின் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினரை ஒப்பந்த முறையில் கொண்டு வருவோம் என்பதை நான் எதிர்த்தால், அதை மதச்சார்பின்மை காரணமாக செய்கிறேன். இதனால் நான் சிறு பான்மையினரை தாக்குவது போல் காட்டப்படுகிறது.

    கேள்வி:- 400 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றும் என்று கூறுவது பற்றி?

    பதில்:- வெற்றி தோல்வி பற்றி நான் ஒருபோதும் கூறவில்லை. 400 இடங்களைப் பற்றி முதலில் பேசியது மக்கள்தான். மக்களின் பார்வையை அறிந்துதான் அதை கூறினேன். 2019-ம் ஆண்டு தேர்தலில் 400 இடங்களைப் பெற்றுள்ளோம். எனவே, இந்த முறை 400-யை தாண்டிச் செல்ல வேண்டும் என்று சொல்வது ஒரு தலைவராக எனது கடமையாகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளர்களை சாதித்து கார்கே உரையாடினார்.

    நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிப் பேசி வருவதால் அரசியல் களம் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரதமர் மோடி உடன்பட பல பாஜக தலைவர்கள் வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையம் இதுகுறித்து பாராமுகம் காட்டுவதாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மோடி பிரச்சாரங்களில் பேசி வருவது குறித்து விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளர்களை சாதித்து கார்கே உரையாடினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி, இந்து- முஸ்லிம், மட்டன்- சிக்கன் என பிரச்சாரத்தில் பேசுவதை விட்டுவிட்டு நாட்டில் உள்ள மக்கள் பிரச்சனயை பற்றி பேச வேண்டும்.

    அவரது பிரச்சாரத்தில், மட்டன், மாட்டிறைச்சி,சிக்கன், மீன், பெண்களின் தாலி உள்ளிட்ட வார்த்தைகளையே கேட்க முடிகிறது. அவர் மக்களிடம் இந்து- முஸ்லிம் விளையாட்டை விளையாடுவதை விட்டுவிட்டு நாட்டுக்கு பாஜக செய்த்வற்றைப் பற்றி பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், நாட்டில் நடந்து முடித்த 4 கட்ட வாக்குப்பதிவைப் பார்க்கும்போது இந்தியா கூட்டணி வலிமையுடன் இருப்பதாக தெரிவித்தார். 

    • கல்லூரி வளாகம் முழுவதுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறது.
    • அரசியல் கட்சி முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்லடம் சாலை எல் ஆர் ஜி அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு , கோபி , அந்தியூர் , பவானி , பெருந்துறை ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஸ்ட்ராங் ரூம் அமைத்து போலீசார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகம் முழுவதுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு பவானி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் மின்சாரம் தடை ஏற்பட்டது. சுமார் 20 முதல் 25 நிமிடங்களுக்குள்ளாக மின்தடை நீடித்ததால் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் எல் ஆர் ஜி கல்லூரிக்கு சென்றனர். மின்வாரிய சிறப்பு குழுவினர் பழுதை சீரமைத்தனர். ஆட்டோமேட்டிக் ஜெனரேட்டர் மூலம் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆன் செய்யப்பட்டது.

    மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டதாகவும் , 20 நிமிடங்களுக்குள்ளாக உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனால் எல்.ஆர்.ஜி கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே கடுமயான மோதல் வெடித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவும், சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (மே 13) நடந்தது. வாக்குபதிவின்போது ஒரு சில இடங்களில் பிரதான கட்சிகளான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.

    இந்நிலையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகும் இன்று (மே 15) மதியம் திருப்பதி மாவட்டத்தில், சந்திரகிரி தோகுதி தெலுங்கு தேச கூட்டணி வேட்பாளர் புலிவர்த்தி நாணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஒய்எஸ்ஆர் கட்சியினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்கு பத்மாவதி பலக்லைக்கழகத்தில் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூமை பார்வையிட்டு திரும்பும்போது நாணி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் நாணி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தெலுங்குதேசம் கட்சியினர் கூறுகையில், சுமார் 150 பேர் கத்தி, மற்றும் தடிகளுடன் வந்து தங்களை சரமாரியாக தாக்கியதாக தெரிவித்துள்ளனர். தோல்வி பயத்தில் ஓஎஸ் ஆர் கட்சியினர் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அவர்கள் விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஓஎஸ்ஆர் கொடிகளுடன் காணப்பட்ட வாகனங்களை தெலுங்கு தேசம் கட்சியினர் அடித்து உடைத்தனர். இதனால் பத்மாவதி பல்கலைக்கழக வளாகத்திலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    • ஹேமந்த் சோரனை கைது செய்தீர்கள், ஏன் அதானியையும் அம்பானியையும் கைது செய்யவில்லை?
    • தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நன்கொடை அளித்தவர்கள் பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் மல்லிகார்ஜூனா கார்கே கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியலமைப்பும் ஜனநாயகமும் ஆபத்தில் உள்ளன. மக்களும் ஆபத்தில் உள்ளனர். உங்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லையென்றால், நீங்கள் அடிமைகளாக இருப்பீர்கள். மோடி இந்த முறை வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் எந்தத் தேர்தலும் நடக்காது.

    ஹேமந்த் சோரனை கைது செய்தீர்கள், ஏன் அதானியையும் அம்பானியையும் கைது செய்யவில்லை?

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களை "துஷ்பிரயோகம்" செய்வதை நிறுத்துவதற்காக இரு தொழிலதிபர்களிடமிருந்து "டெம்போ லோடு" பணத்தை பெற்றதாக பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.

    எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத்தியில் பாஜக தலைமையிலான அரசால் கைது செய்யப்பட்ட இந்திய அணி தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.

    இந்த முறை மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை.

    பிரதமர் மோடி சர்வாதிகாரத்தை நம்புகிறார். எதிர்க்கட்சிகள் அவருக்கு தேர்தலில் பாடம் கற்பிக்கும்.

    தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நன்கொடை அளித்தவர்கள் பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர்.

    முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இந்திய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லாததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

    அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்களை அழைக்க பிரதமர் மறக்கவில்லை, ஆனால் ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைக்க தவறிவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.
    • விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

    தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். ஏராளமான திரைப்படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர நடிகராகவும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீனிவாச ராவ். அவரது தனித்துவமான சிரிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த திருப்பாச்சி திரைப்படத்தில் சனியன் சகடை என்ற கதாப்பாத்திரம் மக்கள் மனதில் பதிந்தது. பின் 2011ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ திரைப்படத்தில் ஆளவந்தான் என்ர அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார். அவர் வரும் காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டுகளான உலா வந்து கொண்டு இருக்கின்றன.

    தற்போது 81 வயதாகும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், கடந்த சில மாதங்களாகவே உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இதனிடையே தெலுங்கானா மாநிலத்தில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் வசித்து வரும் ஸ்ரீனிவாசராவ் இன்று தனது வாக்கினை செலுத்துவதற்காக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்தார்.

    மனைவி மற்றும் உதவியாளர் ஒருவருடன் வருகை தந்த அவருக்கு, வாக்குச்சாவடிக்குள் அமர இருக்கைகள் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனது வாக்கினை செலுத்தினார். கம்பீரமான வில்லனாக பல திரைப்படங்களில் மிரட்டிய கோட்டா ஸ்ரீனிவாச ராவ், உடல் தளர்ந்து, வயோதிகம் காரணமாக நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஒரு காலத்தில் கம்பீரமான வில்லனாக வலம் வந்த அவர், இன்று நடக்க முடியாதபடி பிறரின் துணையோடு தள்ளாடியபடி வருகை தரும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த தள்ளாத வயதிலும் வாக்களிக்க வேண்டும் என்ற அவரது உறுதியை அவர்கள் பாராட்டி வருகின்றனர்.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழக அரசியல் களத்தில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது
    • 2026 தமிழக அரசியல்களம் நடிகர்கள் நிறைந்த களமாக மாறும் என தெரிய வந்துள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 2026 -ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திமுக, அதிமுக, பாஜக வுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய 'தமிழக வெற்றிக் கழகம்' வருகிற தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனால் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பு ஏற்படும் தெரிகிறது.



    இதே போல வருகிற தேர்தலுக்கு முன் புதிய கட்சி தொடங்கி தீவிர அரசியல் பணிகளில் இறங்க போவதாக நடிகர் விஷாலும் கடந்த மாதம் அறிவித்தார். கண்டிப்பாக 2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து வார்டு பகுதிகளிலும் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் அவரது ரசிகர் மன்றம் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




    தமிழக அரசியல் களத்தில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனவே 2026 தமிழக அரசியல்களம் நடிகர்கள் நிறைந்த களமாக மாறும் என தெரிய வந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜூன் 4-ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்.
    • டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எங்களது அரசுகள் உள்ளன.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று அவர் டெல்லியில் ஆம்ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து 'ரோடு ஷோ' நடத்தினார். அவர் 2 இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது கெஜ்ரிவால் பேசியதாவது:-

    ஜூன் 4-ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமையும். டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும். கடவுள் எனக்கு 21 நாட்கள் கொடுத்துள்ளார். 24 மணி நேரமும் உழைத்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன்.

    பா.ஜனதாவின் சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும், இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே 400 இடங்கள் தேவை என்று பா.ஜ.க. கூறுகிறது. சர்வாதிகாரத்தை கொண்டு வரவே அவர்கள் விரும்புகிறார்கள்.

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு என்னை கைது செய்தது. நான் ஒரு சிறிய மனிதன். எங்களிடம் ஒரு சிறிய கட்சி உள்ளது.

    டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எங்களது அரசுகள் உள்ளன. இருப்பினும் டெல்லி மக்களுக்காக தரமான பள்ளிகள் மற்றும் மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தேன். இது தவறா?

    இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தினார்.

    டெல்லியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆம்ஆத்மி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் அவர் விவாதித்தார்.

    அதை தொடர்ந்து பிற்பகலில் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். இன்று மாலை அவர் 2 இடங்களில் ரோடு ஷோ நடத்துகிறார். மோதி நகர்,உத்தம் நகர் பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

    டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 25-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் 4 தொகுதிகளில் ஆம்ஆத்மி போட்டியிடுகிறது. எஞ்சிய 3 இடங்களில் காங்கிரஸ் நிற்கிறது.

    • பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.

    பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் ஆந்திரா தேர்தல் 2024 போட்டியிடுகிறார். பவன் கல்யாணுக்கு அமோக ஆதரவு கிடைத்துக் கொண்டு இருக்கும் நிலையில். மே 7 ஆம் தேதி அல்லு அர்ஜூன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவினை பதிவிட்டார் அதில் பவன் கல்யாண் காருவின் மீது எனக்கு எப்பொழுது மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அவர் எடுத்துக் கொண்ட பாதையை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு என்று பதிவிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக் நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.

    அதை அறிந்துக் கொண்ட ரசிகர்கள் ஷில்பா ரவிந்திராவின் வீட்டை சூழ்ந்துக் கொண்டனர். அவரைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்களுக்கு கையசைத்தும் நன்றி தெரிவித்தும் அன்பை பகிர்ந்துக்கொண்டார் அல்லு அர்ஜூன். பின் அவரது நண்பரான ஷில்பா ரெட்டிக்கு வாக்கு அளிக்குமாருக் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மேடக் நிஜாமாபாத் உள்ளிட்ட 8 தொகுதிகளில் மட்டுமே ஒரு சில பெண்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
    • அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு முக்கிய பதவிகளை வழங்காததால் பெண்கள் அரசியலுக்கு வருவதில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 13-ந் தேதி வாக்கு பதிவு நடக்கிறது.

    இங்கு மொத்தம் 525 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 49 பேர் மட்டுமே பெண்கள்.

    மொத்த போட்டியாளர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண்கள் உள்ளனர். கம்மம் தொகுதியில் ஒரு பெண் வேட்பாளர் கூட களத்தில் இல்லை. செவெல்லா, மேடக் நிஜாமாபாத் உள்ளிட்ட 8 தொகுதிகளில் மட்டுமே ஒரு சில பெண்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

    அதிகபட்சமாக செகந்திராபாத் மற்றும் வாரங்கல் தொகுதியில் தலா 8 பேர் போட்டியிடுகின்றனர்.

    குறைந்த அளவில் பெண்கள் போட்டியிடுவது அந்த மாநிலத்தில் உள்ள பெண் சமூக ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண்ணை தலைவராக ஏற்க மக்கள் தயங்குகிறார்கள். அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு முக்கிய பதவிகளை வழங்காததால் பெண்கள் அரசியலுக்கு வருவதில்லை.

    பெண்கள் போட்டியிட தயங்கினால் அவர்களுக்காக போராட யாரும் இருக்க மாட்டார்கள். இதனை மாநிலத்தில் உள்ள பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×