என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஜியோ நிறுவனம் இந்த லேப்டாப்பிற்கு ஹார்ட்வேர் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை லேப்டாப்பை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த லேப்டாப்பிற்கு ஜியோ புக் எனவும் பெயரிடப்பட்டிருந்தது. 

    இந்நிலையில் இந்த லேப்டாப் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த லேப்டாப்பிற்கு ஹார்டுவேர் அனுமதி பெறுவதற்காக ஜியோ விண்ணப்பித்துள்ளது. அந்த ஆவணத்தில் இடம்பெற்றிருக்கும் தகவலின் படி, இந்த லேப்டாப் விண்டோஸ் 10 ஓ.எஸ்ஸில் இயங்கும். இந்த லேப்டாப்பில் விண்டோஸ் 11-ஐ அப்கிரேட் செய்ய முடியும். இதில் ஏ.ஆர்.எம் பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கும்.
    ஜியோ புக்

    எம்டோர் டிஜிட்டல் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்த லேப்டாப்பை உருவாக்கியுள்ளது. ஆனால் ஜியோவின் பெயரில் தான் இந்த லேப்டாப் விற்பனைக்கு வரும்.

    இவ்வாறு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மிகவும் குறைந்த விலையில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த லேப்டாப் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஐபோனின் அடுத்த மாடல் குறித்து வெளியான இந்த தகவல் பயனர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஐபோனில் புது புது மாற்றங்களை செய்து அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஐபோன் மாடல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

    இதன்படி ஆப்பிள் நிறுவனம் அடுத்ததாக மடிக்கக்கூடிய ஐபோனை உருவாக்கி வருவதாக தகவல் கசிந்துள்ளது.

    இந்த ஐபோன் டிசைனுக்கு “ஐபோன் ஏர்” என பெயரிடப்பட்டுள்ளது.

    ஐபோன் ஏர்

    தற்போது உள்ள மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ’கிரீஸ் லைன்’ எனப்படும் மடிப்பு பகுதியில் தூசு சேர்ந்து போனின் செயல்திறனை பாதிக்கிறது.

    இந்த பிரச்சனையை சரி செய்யும் வகையில் புதுவித டிசைனின் உதவியுடன் மடிக்கும் போனை ஆப்பிள் உருவாக்க உள்ளது. மேலும் இந்த போன் முழுவதும் வாட்டர் ஃப்ரூப் தன்மை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஆப்பிள் போன் அளவில் பெரிதாகி வருவதாக ஐபோன் ரசிகர்களிடையே வரும் புகாரையும் இந்த புதிய டிசைன் சரி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மெய்நிகர் தொழில்நுட்பத்தின் துணையை கொண்டு உருவாகி வரும் மெட்டாவெர்ஸ் உலகத்தில் நாம் விரும்பியதை செய்யலாம்.
    பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மெட்டாவெர்ஸ் மெய்நிகர் உலகத்தை உருவாக்கி வருவதாக அறிவித்தார். 

    மெய்நிகர் தொழில்நுட்பத்தின் துணையை கொண்டு உருவாகி வரும் இந்த மெட்டாவெர்ஸ் உலகத்தில் நாம் விளையாடலாம், நண்பர்களுடன்  கூடி அரட்டையடிக்கலாம், பாடம் கற்கலாம், நிலம் வாங்கலாம் மற்றும் விரும்பும் விஷயங்களை செய்யலாம். இணைய உலகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக மெட்டாவெர்ஸ் அமையப்போவதாக பலரும் கருதுகின்றனர்.

    இந்நிலையில் மெட்டாவெர்ஸில் தங்களை இணைத்துகொள்ளும் முயற்சியில் பெரும்பாலான நிறுவனங்களும் இறங்கிவிட்டன. இதன் ஒரு பகுதியாக பிரபல பாஸ்ட் புட் நிறுவனமான மெக்டோனல்ட்ஸும் மெட்டா உலகில் இணையப்போவதாக அறிவித்துள்ளது.

    மெக்டோனல்ட்ஸ் நிறுவனம்

    இதன்மூலம் மெய்நிகர் உலகத்தில் அமைந்துள்ள மெக்டோனல்ட்ஸ் உணவகத்திற்கு பொதுமக்கள் செல்லலாம். அங்கு உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்தவுடன், நிஜ உலகத்தில் அந்த உணவு டெலிவரி செய்யப்படும். மேலும் இசை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றையும் மெட்டாவெர்ஸில் மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்யும் என தெரிவித்துள்ளது.

    இதுதவிர டிஜிட்டல் ஓவியங்கள், இசைகள், வீடியோக்கள் ஆகியவையும் மெட்டாவெர்ஸ் மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மெக்டோனல்ட்ஸ் உணவகத்தின் திறப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது.
    தற்போது உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ்கள் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது.
    நோக்கியா நிறுவனம், நோக்கியா கோ இயர்பட்ஸ் 2+ மற்றும் நோக்கியா கோ இயர்பட்ஸ் 2 ப்ரோ ஆகிய ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ்கள் 24 மணி நேரம் பேட்டரி லைஃபை கொண்டுள்ளன. 

    மேலும் இவற்றில் வழங்கப்பட்டுள்ள 10 எம்.எம் டிரைவர்கள் கூடுதல் பேஸை வழங்குகின்றன. இதில் மற்றொரு சிறப்பம்சமாக சுற்றுப்புற சத்தத்தை தடை செய்யும் அம்சமும் இடம்பெற்றுள்ளது.

    நோக்கியா கோ இயர்பட்ஸ் 2+, நோக்கியா கோ இயர்பட்ஸ் 2 ப்ரோ

    நோக்கியா கோ இயர்பட்ஸ் 2+ விலை இந்திய மதிப்பில் ரூ.3000-ஆகவும், நோக்கியா கோ இயர்பட்ஸ் 2 ப்ரோவின் விலை இந்திய மதிப்பில் ரூ.3,400-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் இந்த இயர்பட்ஸ்கள் விற்பனைக்கு வருகின்றன.

    இந்த இயர்பட்ஸ்களில் 5.2 வெர்ஷன் ப்ளூடூத், ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் இணக்க பயன்படும் கூகுளின் ஃபாஸ்ட் பேர் டெக்னாலஜி, 1.5 மணி நேரத்தில் முழுதாக சார்ஜ் ஆகும் 300mAh பேட்டரி ஆகியவையும் தரப்பட்டுள்ளன.

    தற்போது உலக அளவில் அறிமுகமாகியுள்ள இந்த இயர்பட்ஸ்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
    இந்த சாதனங்களின் அறிமுக நிகழ்ச்சி நேரலையாக இரவு 7 மணிக்கு ஒன்பிளஸ் இந்தியா யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும்.
    ஒன்பிளஸ் நிறுவனம் இன்று ஒன்பிளஸ் நார்ட் சி.இ 2 ஸ்மார்ட்போன் மற்றும் 2 ஸ்மார்ட் டிவிக்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. 

    இதுகுறித்து வெளியான தகவலின் படி நார்ட் சி.இ. 2 ஸ்மார்ட்போனில் 65W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி சப்போர்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் இந்த போனை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே ஒரு நாள் முழுவதும் பயன் பெறலாம். 

    மேலும் இந்த போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 900 SoC, 6.43 இன்ச் ஃபுல் ஹெச்.டி மற்றும் AMOLED டிஸ்ப்ளே, பின் பக்கத்தில் 64 மெகாபிக்ஸல் கொண்ட மூன்று கேமராக்கள், 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா, 3.5mm ஹெட்போன் ஜாக், 6ஜிபி மற்றும் 8ஜிபி கொண்ட ரேம் வேரியண்டுக்கள், 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிரே மிரர் கலரில் வரும் இந்த போனின் 6ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை ரூ.23,999-ஆகவும், 8ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை ரூ.25,999-ஆகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் டிவி

    மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் Y1S மற்றும் Y1S Edge என்ற இரண்டு டிவிக்களையும் இன்று அறிமுகம் செய்கிறது. 32 இன்ச் மற்றும் 43 இன்ச்களில் வெளியாகும் இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தில் இயங்கும் எனவும், இந்த டிவியில் கொடுக்கப்பட்டுள்ள ‘ஒன்பிளஸ் கனெக்டிவிட்டி’ மூலம் பிற ஒன்பிளஸ் சாதனங்களுடன் இணைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

    இந்த சாதனங்களின் அறிமுக நிகழ்ச்சி, நேரலையாக இன்று இரவு 7 மணிக்கு ஒன்பிளஸ் இந்தியா யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும்.
    ஹெச்.டி.எப்.சி கார்டுகளை பயன்படுத்தி இந்த போன்களை வாங்குபவர்களுக்கு அறிமுக சலுகையாக ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் ரியல்மி 9 ப்ரோ 5ஜி, ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இதில் ரியல்மி 9 ப்ரோ 5ஜி போனில் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி+ எல்.சி.டி பேனல், 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் அமைந்துள்ளது. மேலும் இந்த போனில் octa-core Qualcomm Snapdragon 695 SoC, Adreno 619 GPU பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த போன் ஆண்ட்ராய்டு 12, ரியல்மி யு.ஐ. 3.0 இயங்குதளத்தில் இயங்குகிறது.

    கேமராவை பொறுத்தவரை 3 பின்புற கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் f1.79 அபார்சர் லென்ஸ் கொண்ட 64 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்ஸல் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகா பிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் லென்ஸ் ஆகியவை அமைந்துள்ளன.

    செல்ஃபி மற்றும் வீடியோ சாட்டுகளுக்கு 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா முன்பகுதியில் அமைந்துள்ளது.

    மேலும் இந்த போனில் 5.2 ப்ளுடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், டைப் சி யூ.எஸ்.பி, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜேக், பக்கவாட்டில் அமைந்துள்ள கைரேகை சென்சார், 5000mAh பேட்டரி, 33W டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த போனின் 6ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.17,999-ஆகவும், 8ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.20,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி போன்கள்

    ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி மாடலில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி+, Super AMOLED டிஸ்பிளே, 20:9 aspect ratio, 90Hz ரெப்ரெஷ் ரேட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. டிஸ்பிளேவிற்கு 2.5டி கார்னிங் கொரிலா கிளாஸ் 5 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. டிஸ்பிளேயின் டச் சாம்பிளிங் ரேட் 180Hz -ஆக இருக்கிறது.

    இந்த போன் octa-core MediaTek Dimensity 920 SoC, Mali-G68 MC4 GPU-ல் இயங்குகிறது.

    இந்த போனில் 3 பிக்பக்க கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. இதில்  f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் சோனி IMX766 சென்சார், f/2.2 அபார்ச்சரில், 8 மெகாபிக்ஸல் சோனி IMX355 சென்சார் கொண்ட அல்ட்ரா-ஒயிட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர் தரப்பட்டுள்ளன.

    இந்த போனின் பிரைமரி கேமரா சென்சாரில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பம் துல்லியமாக ஒளியை உள்வாங்கும் திறன் கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள நாய்ஸ் ரெடக்‌ஷன் இன்ஜின் 3.0 புகைப்படங்களில் ஏற்படும் நாய்ஸ்களை குறைக்கூடியது.

    முன்பக்க கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல், f/2.4 அபார்ச்சர் லென்ஸ் கொண்ட சோனி IMX471 செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும் இந்த போனில் ஆக்ஸெலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப், மேக்னெட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் இதில் உள்ள ஹார்ட் ரேட் சென்சார் மூலம் இதய துடிப்பை அளவிட முடியும். சாதாரணமாக நாம் இருக்கும்போது உள்ள இதய துடிப்பு, உடற்பயிற்சி, ஓய்வு, கவலை, முழு ஆற்றல், தூங்காமல் இருக்கும்போது நம் இதயதுடிப்பு எவ்வாறு இருக்கும் என்பதையும் நாம் இதில் அறிய முடியும்.

    இந்த போனின் 6ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.24,999-ஆகவும், 8 ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.26,999-ஆகவும், 8ஜிபி ரேம்+256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.28,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹெச்.டி.எப்.சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்குபவர்களுக்கு அறிமுக சலுகையாக ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.


    ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் புதுவகை ஐபோன்-ஐ அறிமுகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
    ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சி வரும் மார்ச் 8-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் 5-வது தலைமுறை புதிய ஐபேட் ஏர், 13 இன்ச் மேக்புக் ப்ரோ எம்2, 27 இன்ச் ஐமேக் ப்ரோ, மேக் மினி மற்றும் ஐபோன் எஸ்.இ 3 ஆகிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    ஐபேட் ஏர் 5

    ஐபோன் எஸ்.இ 3-ல் ஐபோன் 13 சீரிஸில் இடம்பெற்றுள்ள 5nm A15 பயோனிக் பிராசஸர், 3 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோனில் 4.7 இன்ச் எல்.சி.டி டிஸ்பிளே, 12 மெகா பிக்ஸல் கேமரா சென்சார் ஆகியவையும் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.45,000 இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

    இதன்மூலம் இந்த புதிய ஐபோன், ஓன்பிளஸ் 9 ஆர்.டி மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்.இ ஆகிய ஆண்ட்ராய்டு போன்களுக்கு கடும் போட்டியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஏர்டெல் அறிவித்துள்ள இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் வாடிக்கையாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
    இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்கள் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் அறிவித்துள்ள இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் வாடிக்கையாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதன்படி ஏர்டெல்லின் ரூ.2999, ரூ.3359 ஆகிய இரண்டு திட்டங்களும் ஒரே பலனை அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 

    ஏர்டெல்லின் ரூ.3,359 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்திற்கு வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இந்த திட்டத்துடன்  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்பு 365 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் 3 மாதங்கள் அப்பல்லோ 27/7 சர்கிள், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் கோர்ஸ், பாஸ்டேக் ரீசார்ஜில் 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ், இலவச விங் மியூசிக் ஆகிய சேவைகளும் வழங்கப்படுகின்றன.

    ஏர்டெல் திட்டங்கள்

    இதேபோன்று ஏர்டெல்லின் ரூ.2,999 ரீசார்ஜ் திட்டத்திற்கும் இதே பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் ஆகியவை கிடைக்கின்றன. மேலும், ரூ.3,359 திட்டத்தில் உள்ளது போன்றே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்பு 365 நாள்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 3 மாதங்கள் அப்பல்லோ 27/7 சர்கிள், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் கோர்ஸ், பாஸ்டேக் ரீசார்ஜில் 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ், இலவச விங் மியூசிக் ஆகியவையும் இந்த திட்டத்தில் வழங்கபடுகின்றன.

    இந்த அறிவிப்பு ஏர்டெல் வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி ஏர்டெல் நிறுவனத்திடம் பலரும் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    வழக்கமாக உணவு வகைகளின் பெயர்களை ஆண்ட்ராய்டு ஓ.எஸ்களுக்கு வைக்கும் கூகுள் நிறுவனம் ஆண்டாய்டு 13-க்கு ‘டிராமிசூ’ என்ற இத்தாலி உணவு வகையின் பெயரை சூட்டியுள்ளது.
    இந்தியாவில் பெரும்பான்மையாக ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களே பயன்பாட்டில் இருக்கின்றன. இதுவரை கூகுள் நிறுவனம் 12 வெர்சன் ஆண்ட்ராய்டு ஓஎஸ்களை வெளியிட்டுள்ளது. 

    ஆண்ட்ராய்டின் 12-வது வெர்சனான “ஸ்னோ கோன்” கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி பயன்பாட்டில் உள்ளது. 

    இந்நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ் பிரீவ்வை வெளியிட்டுள்ளது.

    இந்த ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ் பதிவு செய்யப்பட்ட, குறிப்பிட்ட டெவலப்பர்களுக்கு மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓ.எஸ்ஸின் பீட்டா வெர்ஷன் ஏப்ரல் மற்றும் அதற்கு பின் வரும் மாதங்களில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்

    வழக்கமாக உணவு வகைகளின் பெயர்களை ஆண்ட்ராய்டு ஓ.எஸ்களுக்கு வைக்கும் கூகுள் நிறுவனம், ஆண்டாய்டு 13-க்கு ‘டிராமிசூ’ என்ற இத்தாலி உணவு வகையின் பெயரை சூட்டியுள்ளது.

    ஆண்ட்ராய்டு 13-ன் டெவலப்பர் ப்ரீவ் 1-ஐ பிக்ஸல் 4, பிக்ஸல் 4 எக்ஸ் எல், பிக்ஸல் 4 ஏ, பிக்ஸல் 4 ஏ(5ஜி), பிக்ஸல் 5, பிக்ஸல் 5ஏ 5ஜி, பிக்ஸல் 6 மற்றும் பிக்ஸல் 6 ப்ரோ ஆகிய போன்களில் இன்ஸ்டால் செய்யலாம்.

    ஆண்ட்ராய்டு 13-ல் செயலிகளை பயன்படுத்த அருகில் உள்ள வைஃபை கருவிகளை இணைக்கும்போது ரன் டைம் அனுமதி கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓ.எஸ்ஸில் உள்ள செயலிகளுக்கு தீம் ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த புதிய ஓ.எஸ்ஸில் இதற்கு முன் இருந்ததை விட சிறந்த தீம்கள், செயலிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதில் மேம்பாடு, சிறந்த தனியுரிமை அம்சங்கள், மொழி கட்டுப்பாடுகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ட்விட்டர் நிறுவனம் இந்த அம்சத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அறிமுகம் செய்து சோதனையை தொடங்கியது.
    முன்னணி சமூக வலைதள நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் “சேப்டி மோட்” அம்சத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறிய மக்கள் தொகையினருக்கு அறிமுகப்படுத்தி சோதனையை தொடங்கியது. 

    இந்த சேப்டி மோட் அம்சத்தை பயன்படுத்தும் பயனர்களின் பதிவுகளில் யாரேனும் ஆபாசமாகவோ, வன்முறையை தூண்டும் விதமாகவோ கமெண்ட் செய்தால் அவர்களுடைய கணக்கு தானாகவே 7 நாட்களுக்கு பிளாக் செய்யப்படும். 

    ட்விட்டர் சேப்டி மோட்

    இந்த அம்சம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த அம்சத்தை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 50 சதவீத ட்விட்டர் கணக்குகளுக்கு விரிவுப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

    இதன்பின் இந்த அம்சம் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தச் சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோவை மார்ச் 7-ம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.11,399 மதிப்புள்ள ஸ்லிம் பென் 2 ஸ்டைலெஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோவை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்கிறது. 

    டெஸ்க்டாப் கணினியின் ஆற்றல், லேப்டாப்பை போன்று எங்கும் எடுத்து செல்லக்கூடிய தன்மை மற்றும் பல்வேறு பணிகளை செய்யும் கிரியேட்டிவ் ஸ்டூடியோ செட்டப் இந்த சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோவில் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோ விண்டோஸ் 11 இயங்குதளத்துடன் வருகிறது. 

    120Hz screen refresh rate கொண்ட 14.4 இன்ச் பிக்ஸெல்சென்ஸ் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 2,400×1,600 பிக்ஸல் ரெஷலியூஷன், 10 பாயிண்ட் மல்டி டச் சப்போர்ட் ஆகிய அம்சங்கள் இதன் திரையில் அமைக்கப்பட்டுள்ளன. டிஸ்ப்ளேவை பல்வேறு திசைகளுக்கும் நகர்த்தும் வகையில் இதன் திரை அமைக்கப்பட்டுள்ளது.

    குவாட்கோர் 11-த் ஜென் இண்டல் கோர் பிராசஸர்ஸில் இயங்கும் இந்த கருவியில் 32 ஜிபி LPDDR4x ரேம், 2 டிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் Intel Core i5 SoC பிராசஸர் கொண்ட மாடலில் இண்டெல் எக்ஸ்இ இண்டகிரேட்டட் கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. Intel Core i7 SoC பிராசஸர் மாடலில் Nvidia GeForce RTX 3050 Ti dedicated GPU கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    ஆடியோவை பொறுத்தவரை குவாட் ஆம்னிசோனிக் ஸ்பீக்கர்கள், டூயல் ஃபார்பீல்டு ஸ்டூடியோ மைக்குகள், டால்பி அட்மோஸ் ஆகியவற்றை இந்த கருவி கொண்டுள்ளது.

    சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோ

    பேட்டரியை பொறுத்தவரை Intel Core i5 பிராசஸர் கொண்ட மாடல்கள் 19 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும் தன்மையை கொண்டுள்ளன. 65W சர்பேஸ் பவர் சப்ளை அடாப்டர்கள் அதற்கு வழங்கப்படுகிறது. Intel Core i7 SoC பிராசஸர் கொண்ட மாடல்கள் 18 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும் தன்மையை கொண்டுள்ளன. அவற்றிருக்கு 102W சர்பேஸ் பவர் சப்ளை அடாப்டர் வழங்கப்படுகிறது.

    கணெக்டிவிட்டிக்காக 2 யூஎஸ்பி டைப் சி போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக், சர்பேஸ் கனெக்ட் போர்ட், வைஃபை 6, 5.1 ப்ளூடூத் ஆகிய அம்சங்களும் இதில் தரப்பட்டுள்ளன.

    இதன் 11th-gen Intel core i5 SoC பிராசஸர், 16 ஜிபி ரேம், 256 ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,65,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 11th-gen Intel core i7 SoC பிராசஸர், 16 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,15,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோ வரும் மார்ச் 8-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் நிலையில், மார்ச் 7-ம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.11,399 மதிப்புள்ள ஸ்லிம் பென் 2 ஸ்டைலெஸ் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த டிவியை குறிப்பிட்ட வங்கியின் டெபிட், கிரெடிட் கார்டில் வாங்குபவர்களுக்கு ரூ.1,500 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
    ஜியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம் ஸ்மார்ட்போன், டிவி மற்றும் பல்வேறு டிஜிட்டல் கருவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துவருகிறது. 

    அந்நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43, ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ ஆகியவற்றை அறிமுகம் செய்தது.

    இந்நிலையில் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43 இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    43 இன்ச் கொண்ட இந்த டிவியில் 3840 x 2160 பிக்ஸல்களுடன் 4கே டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவி பேனல் ஹெச்.டி.ஆர், டோல்பி விஷன், விவிட் பிக்சர் இன்ஜின், ரியாலிட்டி ப்ளோ ஆகியவற்றை கொண்டுள்ளது.  quad-core 64-bit A55 CPU, Mali G52 MP2 GPU ஆகியற்றி துணை கொண்டு இந்த டிவி இயங்குகிறது.

    இந்த டிவியில் 2 ஜிபி ரேம், 16 ஜிபி ஸ்டோரேஜ் தரப்பட்டுளது. ஆடியோவை பொறுத்தவரை 30W ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் விர்ட்சுவல் எக்ஸ், டால்பி ஆடியோ, டிடிஎஸ்-ஹெச்.டி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43

    மேலும் கூகுள் அசிஸ்டென்ஸ், உட்புறம் அமைந்துள்ள க்ரோம்கேஸ்ட், எம்.ஐ. ஹோம் செயலி, ஸ்மார்ட் ரெக்கமண்டேஷன்ஸ், பல்வேறு மொழிகள், யூசர் சென்டர், ஐ.எம்.டி.பி, குயிக் வேக், பேட்ச்வால் 4 ஒருங்கிணைப்பு, குயிக் மியூட், பெற்றோருக்கு உதவும் கிட்ஸ் மோட், ஆட்டோ லேடன்ஸி மோட், குயிக் செட்டிங்ஸ் ஆகிய பல அம்சங்கள் இந்த டிவியில் தரப்பட்டுள்ளன.

    ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தில் இயங்கும் இந்த டிவியில் மூன்று ஹெச்.டி.எம்.ஐ 2.1 போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி போர்ட்டுகள், eARC போர்ட், ஆப்டிக்கள் போர்ட், ஹெட்போன் ஜாக், எதெர்நெட் போர்ட் கணெக்டிவிட்டி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஏ.வி இன்புட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த டிவியின் விலை ரூ. 28,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், எம்ஐ.காம் ஆகிய தளங்களில் இந்த டிவியை வாங்கலாம். கோடாக் மகிந்திரா பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு வாங்குபவர்களுக்கு அறிமுக சலுகையாக ரூ.1,500 உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×