என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
இந்த இரு போன்களும் ஹசெல்பிளாட் நிறுவன மென்பொருள் ஆப்டிமைசேஷன், மரிசிலிக்கான் எக்ஸ் சிப் ஆகியவற்றை பெற்றுள்ளன.
ஒப்போ நிறுவனம் ஃபைன்ட் எக்ஸ்5 மற்றும் எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்5 போனில் 6.55-inch OLED டிஸ்பிளே, ஃபுல் ஹெச்.டி+ ரெஷலியூஷன், 120Hz ரெஃபிரேஷ்ஷுடன் இடம்பெற்றுள்ளது. இதன்புறம் மேட் கிளாஸில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போனில் Snapdragon 888 chipset, கலர் ஓ.எஸ் 12.1-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 3 பின்புற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி f/1.8 lens, optical image stabilisation கொண்ட Sony IMX766 50 மெகாபிக்ஸல் கேமரா, f/2.2 அப்பரச்சர், Sony IMX766 sensor கொண்ட 50 மெகா பிக்ஸல் கொண்ட அல்ட்ரா வைட் லென்ஸ், 13 மெகா பிக்ஸல் டெலி போட்டோ சென்சார் ஆகிவை வழங்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள 6nm neural processing unit (NPU) மற்றும் image signal processor (ISP) ஆகியவற்றை இணைத்த MariSilicon X chip மற்றும் multi-tier memory architecture இதன் புகைப்பட தரத்தை மேம்படுத்துகிறது.
மேலும் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு Sony IMX615 32 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
4,800mAh டூயல் செல் பேட்டரி, 80W SuperVOOC வேகமான ஒயர்ட் சார்ஜிங், 30W AirVOOC ஒயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளன.
இந்த போனின் 8 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.84,500-ஆக முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ஃபைன்ட் எக்ஸ் 5 ப்ரோ போனில் 6.70-inch 10-bit QHD+ (1,440x3,216 pixels) AMOLED டிஸ்பிளே, குறைந்த வெப்பம் கொண்ட polycrystalline oxide (LTPO) தொழில்நுட்பம், 120Hz adaptive ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த போன் HDR10+ சப்போர்ட்டையும் பெற்றுள்ளது.
இந்த போனில் 3 பின்புற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி f/1.7 lens, optical image stabilisation கொண்ட Sony IMX766 50 மெகாபிக்ஸல் கேமரா, f/2.2 அப்பரச்சர், Sony IMX766 sensor கொண்ட 50 மெகா பிக்ஸல் கொண்ட அல்ட்ரா வைட் லென்ஸ், 13 மெகா பிக்ஸல் S5K3M5 சென்சார், f/2.4 அப்பார்ச்சர் கொண்ட டெலி போட்டோ சென்சார் ஆகிவை வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரைமரி சென்சாரில் 5 ஆக்ஸிஸ் ஓ.ஐ.எஸ் மற்றும் 13 சேனல் ஸ்பெக்ட்ரல் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
எக்ஸ்5 போன் போலவே இதிலும் புகைப்படத்தை மேம்படுத்தும் மரிசிலிக்கான் எக்ஸ் சிப் தரப்பட்டுள்ளது.
இந்த போனில் f/2.4 லென்ஸ், 32 மெகாபிக்ஸல் Sony IMX709 செல்ஃபி சென்சார் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த போனில் யூடியூப், பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஏர் கெஸ்டர் என்ற அம்சமும் தரப்பட்டுள்ளது.
இந்த போனிலும் 5000mAh டூயல் செல் பேட்டரி, 80W SuperVOOC, 50W AirVOOC, and 10W ரிவர்ஸ் ஒயர்லெஸ் சார்ஜிங் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,09,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கூறிய இரண்டு போன்களும் ஹசெல்பிளாட் நிறுவன மென்பொருள் ஆப்டிமைசேசனை பெற்றுள்ளன.
இந்தியாவில் இந்த போன்கள் அறிமுகமாகும் தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.
கூகுள் மேப்பை அடிப்படையாக கொண்டு இயங்கும் இரண்டு தொழில்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
இன்று உலகம் முழுவதும் பயணிகளுக்கு வழி காட்டும் செயலியாக கூகுள் மேப் இருக்கிறது. பெரிய நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கூகிள் மேப்பில் இல்லாத இடங்களே இல்லை. கடைகள், சுற்றுலா தளங்கள் என நமக்கு வேண்டிய இடங்களையும் கூகுள் மேப் மூலம் கண்டடையலாம். இந்நிலையில் கூகுள் மேப் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் மேப்பை மேம்படுத்தும் வகையில் அந்நிறுவனம் புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி கூகுள் மேப்பில் காட்டப்படும் அனைத்து வணிக நிறுனங்களும் சரிபார்க்கப்படவேண்டும். இல்லையென்றால் அந்த நிறுவனங்கள் மேப்பில் இருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த சரிபார்க்கும் தொழிலையே அடிப்படையாக கொண்டு சில நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்கள் சிறு கடைகள் உள்ளிட்ட வணிக உரிமையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி கூகுள் எதிர்பார்க்கும் வகையில் வணிகத்தை மேப்பில் நிறுவுவது எப்படி என ஆலோசனை வழங்குகின்றன.
அதேபோல கூகுள் மேப்பில் இல்லாத கடைகளை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களிடம் இருந்து முழுமையான தகவல்களை பெற்று, கூகுள் மேப்பில் அப்டேட் செய்யலாம். இவ்வாறாக அந்த கடைகளுக்கும் உதவுவது மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

இதற்காக நிறுவனங்கள் அதிகபட்சம் 3700 ரூபாய் வரை வசூலிக்கின்றன. இந்த சேவையை தனிப்பட்ட நபர்களும் வணிக நிறுவனங்களை தொடர்புகொண்டு செய்யலாம்.
அதேபோல ’மேப் அனலிசிஸ்ட்’ என்ற சேவையையும் தனிப்பட்ட நபர்கள் வழங்கலாம். இதன்படி கூகுள் நிறுவனம் தனது மேப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் சரியானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக லயன்பிரிட்ஜ் உள்ளிட்ட ஆன்லைன் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த ஆய்வு நிறுவனங்கள் தனிப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு தேவையான தகவல்களை திரட்டுகின்றன. இதற்காக குறிப்பிட்ட தொகையையும் வழங்குகின்றன. தனிநபர்கள் இதற்கு உதவுவது மூலம் குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்கலாம்.
இந்த ஏசியை வாங்குபவர்களுக்கு 12.5 சதவீதம், ரூ.7,500 வரை கேஷ்பேக்குகள் வழங்கப்படும்.
சாம்சங் நிறுவனம் புதிய விண்ட் ஃப்ரீ ஏசிக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏசி நேரடியான அடந்த காற்றை 0.15 m/s வேகத்தில் 23,000 சிறுதுளைகள் வழியாக அகற்றும் தன்மை கொண்டுள்ளது.
இந்த ஏசி பி.எம் 1.0 ஃபில்டர்களில் கிடைக்கும் என்றும், இதில் உள்ள ஃப்ரிஸ் வாஷ் அம்சத்தின் மூலம் ஹீட் எக்ஸேஞ்சரில் உள்ள தூசு மற்றும் பாக்டீரியாவை எளிதாக அகற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்த விண்ட் ஃப்ரீ ஏசிக்களை வைஃபை மூலம் சாம்சங்கின் ஸ்மார்ட்திங்ஸ் செயலியில் இணைந்துகொள்ளலாம். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் அலெக்ஸா, கூகுள் ஹோம் மற்றும் பிக்ஸ்பியின் உதவியுடன் ஏசியை ஆன்/ஆஃப் செய்யவோ, செட்டிங்ஸை மாற்றவோ இயலும்.
அறையில் 20 நிமிடங்களுக்கு எந்த அசைவும் இல்லை என்றால், மோஷன் சென்சார் மூலம் இந்த ஏசி விண்ட் ஃப்ரீ மோடுக்குள் சென்று விடும். இதன்மூலம் ஆற்றல் சேமிக்கப்படும். அதேபோல பயனர்கள் நடப்பதற்கு ஏற்ப ஏசி காற்று அவர்கள் மீது வீசுவது போலவும் இதில் மாற்றம் செய்யமுடியும்.
தற்போது 28 மாடல்களில் வெளியாகியுள்ள இந்த விண்ட் ஃப்ரீ ஏசிக்கள் ரூ.50,9900 விலை மதிப்பில் தொடங்கி ரூ.99,990 வரை இருக்கிறது. மேலும் இந்த ஏசியை வாங்குபவர்களுக்கு 12.5 சதவீதம், ரூ.7,500 வரை கேஷ்பேக்கும் வழங்கப்படும்.
இ.எம்.ஐ வசதி, பிசிபி கண்ட்ரோலர், ஃபேன் மோட்டார், காப்பர் கண்டன்ஸர், எவப்போரேட்டர் காயில் உள்ளிட்டவைக்கு 5 வருட வாரண்டியும் வழங்கப்பட்டுள்ளது.
பெயர் மாற்றம் செய்த ஒரே நாளில் ரூ.24,000 கோடி டாலர்கள் மதிப்பையும் ஃபேஸ்புக் இழந்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு மெட்டா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்நிறுவனம் வடிவமைத்து வரும் மெட்டாவெர்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இந்த புதிய பெயர் மாற்றப்பட்டுளது. மெட்டாவெர்ஸின் அறிவிப்பால் தொழில்நுட்ப நிறுவனங்கள் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் தங்களது கவனத்தை திருப்பியுள்ளன.
உலகம் முழுவதும் மெட்டாவின் பக்கம் திரும்பி இருக்கும் அதே நேரத்தில், ஃபேஸ்புக் நிறுவனம் மெட்டா என்று பெயர் மாற்றப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்ததால், அந்நிறுவனம் ரூ.50,000 கோடி டாலர் முதலீட்டு மதிப்பை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இழந்துள்ளது.

பெயர் மாற்றம் செய்த ஒரே நாளில் ரூ.24,000 கோடி மதிப்பையும் அந்நிறுவனம் இழந்துள்ளது. மேலும் அதிக மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த ஃபேஸ்புக் (மெட்டா) 10-வது இடத்திற்கும் கீழ் சென்றுள்ளது.
இது தவிர ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் விளம்பர கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றமும் மெட்டா நிறுவனம் தடுமாறுவதற்கு காரணமாக இருக்கிறது. ஆப்பிள் மற்றும் கூகுளின் புதிய விளம்பர கொள்கைகள் ஃபேஸ்புக் நிறுவனம், பயனர்கள் குறித்த சில முக்கிய தரவுகளை எடுப்பதற்கு தடை விதித்துள்ளது.
ஃபேஸ்புக்கிற்கு அதிக லாபத்தை வழங்கி வந்த இந்த தரவுகளை தற்போது சேகரிப்பது கடினமாகியுள்ளதால் ஃபேஸ்புக் மதிப்பை இழந்துள்ளது.
மார்ச் 3 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் இந்த ஒப்போ பேட் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகவுள்ளது.
ஒப்போ நிறுவனம் தனது முதல் டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லட்டிற்கு ‘ஒப்போ பேட்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்போ பேட் 11 இன்ச் அளவில் 2560x1600 பிக்சல் ரெஷலியூஷனுடன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட IPS LCD டிஸ்பிளேவுடன் வெளியாகியுள்ளது. இந்த பேட் HDR 10 மற்றும் 10 பிட் கலர் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும்.
இந்த ஒப்போ பேட் பிக்பக்கம் ஃப்ராஸ்டெட் பேக்குடனும், மெட்டல் சேசிஸுடனும் வந்துள்ளது. கலர் ஓ.எஸ்ஸை அடிப்படையாக கொண்டு ஆண்ட்ராய்டு 11-ல் இந்த டேப் இயங்கும். இந்த டேப் மேக்னட் மூலம் சார்ஜாகும் ஓப்போ பென்சிலையும் சப்போர்ட் செய்யும்.
மேலும் இதில் Snapdragon 870 chipset தரப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை 13 மெகாபிக்ஸல் பின்புற கேமரா, 8 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 8,360mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட இந்த போன் கருப்பு மர்றும் பர்ப்பில் நிறங்களில் கிடைக்கிறது.
இந்த போனின் 6 ஜிபி ரேம் +128 ஜிபி ஸ்டோரேஜின் விலை இந்திய மதிப்பில் ரூ.27,500-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 ஜிபி ரேம்+ 256 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை இந்திய மதிப்பில் ரூ.38,800-ஆகவும், 6ஜிபி ரேம்+256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.32,300-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 3 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் இந்த ஒப்போ பேட் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகவுள்ளது.
இந்த போன் வரும் மார்ச் 3-ம் தேதி பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் புதிய நார்சோ 50 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் 6.6-inch FHD+ டிஸ்பிளே, 2414 X 1080 பிக்ஸல் ரெஷலியுசன், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 90.8 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேட்சியோவுடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போன் MediaTek Helio G96 chipset பிராசஸரை கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 2 மெக்காபிக்ஸல் மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்ஸல் பிளாக் அண்ட் ஒயிட் லென்ஸ் கொண்ட 3 பின்புற கேமராக்கள், 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி யு.ஐ.2.0-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்.ஸில் இயங்கும் இந்த போனில் டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1 ஜிபிஎஸ், டைப்-சி சார்ஜிங் ஆகியவை தரப்பட்டுள்ளன.
இந்த போனின் 4 ஜிபி ரேம்+64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999-ஆகவும், 6 ஜிபி+128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,499-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போன் வரும் மார்ச் 3-ம் தேதி 12 மணி முதல் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா மற்றும் ரியல்மி இணையதளத்தில் இந்த போனை வாங்கலாம்.
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அதிக விலை போன்களையே அறிமுகம் செய்து வந்த நிலையில் தற்போது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போன் குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.
இதன்படி கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே, 720×1,600 பிக்சல் வசதியுடன் தரப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் UNISOC T606 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளதாகவும், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை 48 எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு பின்புற கேமராக்கள் தரப்படவுள்ளன. முன்பக்கத்தில் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி மெமரி கொண்ட வேரியண்டுகளில் வருகிறது.
மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி தரப்பட்டுள்ள இந்த போனின் விலை ரூ.11,999-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பலரும் வீடுகளில் இருந்து பணியாற்றுவதால் இண்டர்நேட் சேவை கட்டாயமாக தேவைப்படும்பட்சத்தில் குறைந்த விலை பிராட்பேண்ட் திட்டங்கள் பெரிதும் உதவுகின்றன.
இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியர்களில் பெரும்பாலானோர் மொபைல் டேட்டா தான் இண்டர்நெட்டுக்காக பயன்படுத்தி வந்தாலும், கொரோனா ஏற்படுத்தியுள்ள ஊரடங்கு சூழல் பலரையும் வீடுகளில் இருந்து வேலை பார்க்கும் வகையில் மாற்றியுள்ளது.
வீடுகளில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கும், அதிகமாக இண்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கும் ஆரம்பகட்ட குறைந்தவிலை பிராட்பேண்ட் திட்டங்களை ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்குகின்றன. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
இதன்படி ஜியோ தனது ஜியோ ஃபைபர் அடிப்படை திட்டத்தில் மாதம் ரூ.399-க்கு 30 Mbps வேகத்தில் எஃப்.யூ.பி லிமிட்டில் 3.3 டி.பி டேட்டா வழங்குகிறது.
ஏர்டெல்லை பொறுத்தவரை அடிப்படை திட்டத்தில், மாதம் ரூ.499-க்கு 40 Mbps வேகத்தில், 3.3 டிபி டேட்டா எஃப்.யூ.பி லிமிட்டில் வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல் ஃபைபர் பேசிக் பிளான் திட்டத்தில் மாதம் ரூ.449-க்கு 30 Mbps வேகத்தில், 3.3 டிபி டேட்டா எஃப்.யூ.பி லிமிட்டுடன் வழங்கப்படுகிறது.
ஆக்ட் நிறுவனம் மாதம் ரூ.549-க்கு 40 Mbps வேகத்தில் 500 ஜிபி டேட்டா எஃப்யூபி லிமிட்டுடன் கிடைக்கிறது.
இந்த திட்டங்களில் ஜி.எஸ்.டி விலை சேர்க்கப்படவில்லை.
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவே இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் செயலி இந்தியாவில் குறுஞ்செய்தி அனுப்பும் செயலிகளில் முன்னணி செயலியாக இருக்கிறது.
இந்த செயலியில் குறுஞ்செய்திகள் மட்டும் இன்றி ஆடியோ, வீடியோ, வாய்ஸ் கால், வீடியோ கால் உள்ளிட்ட பல அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் பாதுகாப்புக்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் “சேஃப்டி இன் இந்தியா” என்ற தகவல் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
சேஃப்டி இன் இந்தியா தளத்திற்கு சென்று பயனர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துவது குறித்த அனைத்து தகவல்களையும் பெற முடியும்.
2 ஸ்டெப் வெரிஃபிகேஷன், ஃபார்வெர்ட் லிமிட்ஸ், பிளாக், ரிப்போர்ட், டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் உள்ளிட்ட அம்சங்கள் குறித்த சந்தேகங்களை பயனர்கள் தீர்த்துகொள்ள முடியும்.

வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை உண்மை தானா என உறுதி செய்யவும் இந்த தளம் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாட்ஸ்அப் மூலம் யாரும் தொந்தரவு செய்தால் புகார் அளிக்கும் வகையிலும் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவே இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 12 மினி போன் வாங்குபவர்களுக்கு டிஸ்கவரி+ சந்தாவில் 25 சதவீதம் தள்ளுபடியும், ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும், ரூ.201 மதிப்புள்ள பிட்காயினும் வழங்கப்படும்.
ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் ஐபோன் 12 மினி (64ஜிபி ஸ்டோரேஜ்) போனுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரூ.59,900-க்கு விற்கப்பட்டு வரும் ஐபோன் 12 மினி இன்று ரூ.18,601 விலை குறைக்கப்பட்டு ரூ.41,299-க்கு கிடைக்கிறது. இந்த விலையிலும் எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ரூ.15,500 வரை தள்ளுபடி பெற்று ரூ.25,799-க்கு ஐபோன் மினியை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஐபோன் 12 மினி போனின் 128 ஜிபி வேரியண்ட் ரூ.9901 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.54,999-ஆகவும், 256 ஜிபி வேரியண்ட் ரூ.9901 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.64,999-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தவிர இந்த போனை யூபிஐ பரிவர்த்தனையில் வாங்குபவர்களுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும். விசா கிரெடிட் கார்டுகள், யெஸ் பேங்க் கிரெடிட் கார்டுகள், ஐ.டி.எஃப்.சி கிரெடிட் கார்டுகளுக்கு வாங்குபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும், ஃபிளிப்கார்ட் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்ட்டில் வாங்குபவர்களுக்கு 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும்.
இது தவிர ஐபோன் 12 மினி போன் வாங்குபவர்களுக்கு டிஸ்கவரி+ சந்தாவில் 25 சதவீதம் தள்ளுபடியும், ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும், ரூ.201 மதிப்புள்ள பிட்காயினும் வழங்கப்படும்.
இந்த தொழில்நுட்பம் மெட்டாவெர்ஸில் இடம்பெறும் என்று மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனம் மெட்டாவெர்ஸ் உருவாக்கத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மெய்நிகர் தொழில்நுட்பத்தில் உருவாகும் மெட்டாவெர்ஸ் உலகில் நாம் விரும்பிய விஷயங்கள் அனைத்தையும் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மெட்டாவெர்ஸில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உரையாடுவதற்கு அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய மொழி பெயர்ப்பு அம்சம் ஒன்றை உருவாக்கி வருவதாக மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பல்வேறு பின்னணியில் இருந்து வரும் மக்கள் மெட்டாவெர்ஸ் மெய்நிகர் உலகத்தில் பங்கேற்கும்போது அவர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்கு தடை எதுவும் இருக்கக்கூடாது. அவர்கள் எந்த மொழியில் பேசினாலும், எழுதினாலும் அதை உடனுக்குடன் மொழிபெயர்ந்து சம்பந்தப்பட்ட நபர் புரிந்துகொள்ளும் வகையில் மெட்டாவெர்ஸ் இயங்கும்.
மொழிகளில் உள்ள நுண்ணிய அர்த்தங்களையும் புரிந்துகொள்ளும் வகையில் இந்த மொழிபெயர்ப்பு அம்சம் வடிவமைக்கப்படும். சிறியது, பெரியது என உலகில் உள்ள அனைத்து மொழிகளும் இதில் இடம்பெறும். செயற்கை நுண்ணறிவு மூலம் மக்களை ஒன்றிணைக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபிக்க இருக்கிறோம்.
இவ்வாறு மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.
ரெட், ப்ளூ, பிளாக் மற்றும் பிங்க் நிறங்களில் இந்த வாட்ச் விற்பனைக்கு வருகிறது.
ரெட், ப்ளூ, பிளாக் மற்றும் பிங்க் நிறங்களில் இந்த வாட்ச் விற்பனைக்கு வருகிறது.
போட் நிறுவனம் புதிய “போட் வாட்ச் பிளேஸ்” என்ற ஸ்மார்ட் வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்ச் ஸ்லிம் மெட்டல் டிசைனில் 2.5D கார்வ்ட் டிஸ்பிளேவுடன் வருகிறது. இதில் சூப்பர் ஸ்லீக் 11mm வாட்ச் பாடியும், பக்கவாட்டில் 2 பட்டன்களும் தரப்பட்டுள்ளன.
இந்த வாட்சின் டிஸ்பிளே 1.75 இன்ச், 320 x 385 ரெஷலியூஷன் கொண்டுள்ளது. இதில் 500 nits பிரைட்னஸை பெறலாம். இந்த வாட்ச் Apollo 3 Blue Plus SoC-ல் இயங்குகிறது.
இந்த வாட்சில் 10 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப் வழங்கப்பட்டுள்ளது. 10 நிமிடத்திற்கு குயிக் சார்ஜ் செய்தால் 1 நாள் முழுவதும் பயன்படுத்தலாம். இந்த வாட்சில் இதய துடிப்பை அளவிடும் அம்சம், SpO2 கண்காணித்தல், அவுட்டோர் ரன், இன்டோர் ரன், சைக்கிளிங், ஹைக்கிங் உள்ளிட்ட 14 ஸ்போர்ட்ஸ் மோட்கள், குயிக் ரிப்ளே, ஹைட்ரேஷன் அலர்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாட்ச் 3ATM தூசு, நீர் மற்றும் ஸ்பிளாஷ் பாதுகாப்புடன் வருகிறது.
ரெட், ப்ளூ, பிளாக் மற்றும் பிங்க் நிறங்களில் வரும் இந்த வாட்சின் விலை ரூ.3,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் நாளை முதல் அமேசான் தளம் மற்றும் போட் இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது.






