என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- ஏஐ ரியல்ம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறான்.
- 12 வயதிலேயே தனக்கு நிகரான ஒரு டிஜிட்டல் குளோன்-ஐ உருவாக்கினான்.
டெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய ஏஐ தாக்க சர்வதேச உச்சிமாநாடு இன்றுடன் நிறைடைகிறது.
இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட பல நாட்டு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நடந்த கண்காட்சியில் பலவேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தின.
இந்தச் சர்வதேச மேடையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ரவுல் ஜான் அஜு என்ற 16 வயது சிறுவன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.
மாநாட்டில் ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரஸ் உள்ளிட்ட பல தலைவர்களை ரவுல் ஜான் அஜு சந்தித்தான்.

ரவுல் ஜான் அஜு
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எடப்பள்ளியை சேர்ந்த ரவுல், ஏஐ ரியல்ம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அதன் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) செயல்பட்டு வருகிறான்.
இந்த நிறுவனத்தின் கீழ், இந்திய நீதித் துறைக்காக நியாயசாதி என்ற ஏஐ உதவியாளரையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்காக ஜஸ்ட்ஈஸ் என்ற சட்ட உதவிக்கான சாட்பாட்-ஐயும் உருவாக்கி உள்ளான்.
6 வயதிலிருந்தே ஏஐ மீது ஆர்வம் கொண்ட ரவுல், தனது கல்வி தளத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் 'Vbot' என்ற ஒரு ஏஐ-ஐ உருவாக்கினான். மேலும் தனது 12 வயதிலேயே தனக்கு நிகரான ஒரு டிஜிட்டல் குளோன் மற்றும் MeBot என்ற ஹூமனாய்டு ரோபோவை உருவாக்கினான்.
கடந்த ஆண்டு தனது நிறுவனத்தில் தனது தந்தையையே ஒரு ஊழியராக நியமித்து செய்திகளில் இடம்பிடித்தான். பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று மாணவர்கள் மற்றும் வல்லுநர்களுக்கு ஏஐ குறித்து பயிற்சி அளித்துள்ளான். ஏஐ மாநாட்டுக்கு முன்னதாக கடந்த வாரம் பிரதமர் மோடியை ரவுல் சந்தித்தான்.
மேலும் அண்மையில் வந்தே பாரத் ரெயிலில் கேரள காங்கிரஸ் எம்பி சசி தரூர் ரவுல் உடன் பயணம் செய்தபோது அவனின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து ஊக்குவித்ததும் கவனம் பெற்றது.
- ஒவ்வொரு சாமானிய இந்தியருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வோம்.
- அனைத்து இந்திய மொழிகளிலும் உலகத் தரம் வாய்ந்த ஏஐ திறனை உருவாக்குவதே இலக்கு.
டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. நாளையுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் இன்று பங்கேற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அடுத்த 7 ஆண்டுகளில் ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
மாநாட்டில் பேசிய அவர், "ஜியோ எப்படி இணையத் சேவையை மலிவாக்கி புரட்சியை ஏற்படுத்தியதோ, அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்தையும் ஒவ்வொரு சாமானிய இந்தியருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வோம்.
இந்தியா இனி வெளிநாடுகளிடம் இருந்து தொழில்நுட்பத்தை வாடகைக்கு எடுக்கத் தேவையில்லை" என்று கூறினார்.
இந்த முதலீட்டின் மூலம் 'ஜியோ இண்டெலிஜென்ஸ்' என்ற பெயரில் முக்கியத் திட்டங்களை ரிலையன்ஸ் செயல்படுத்த உள்ளது:
குஜராத்தின் ஜாம்நகரில் பிரம்மாண்டமான ஏஐ தரவு மையங்கள், நாடு முழுவதும் அதிவேகமான மற்றும் குறைந்த செலவிலான ஏஐ சேவைகளை வழங்க 'எட்ஜ் கம்ப்யூட்டிங்' வசதி ஆகியவை இதில் அடங்கும்.
அனைத்து இந்திய மொழிகளிலும் உலகத் தரம் வாய்ந்த ஏஐ திறனை உருவாக்குவதே தங்களின் இலக்கு என்றும், இதற்காக ஸ்டார்ட்-அப்கள் மற்றும் IIT-களுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
- அப்போது சாம் ஆல்ட்மேன் அவர்களுக்கு மேலதிகாரியாக இருந்தார்.
- பாதுகாப்பை விட வணிக லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. நாளையுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று அவர்கள் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டனர்.
குழு புகைப்படத்தின் போது, OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் Anthropic சிஇஓ டேரியோ அமோடி ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கு இடதுபுறம் அருகருகே நின்று கொண்டிருந்தனர்.
மற்ற அனைவரும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்தனர். ஆனால், பக்கத்து பக்கத்தில் நின்ற சாம் ஆல்ட்மேனும் டேரியோ அமோடியும் மட்டும் கைகளைக் கோர்க்கவோ, கைகுலுக்கவோ செய்யாமல் தவிர்த்தனர்.
இந்த இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாகவே கடுமையான தொழில் போட்டி மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.
டேரியோ அமோடி மற்றும் அவரது சகோதரி டேனியலா அமோடி ஆகியோர் முன்பு 'OpenAI' நிறுவனத்திலேயே துணைத் தலைவர்களாக பணியாற்றினர். அப்போது சாம் ஆல்ட்மேன் அவர்களுக்கு மேலதிகாரியாக இருந்தார்.
சாம் ஆல்ட்மேன் AI பாதுகாப்பை விட வணிக லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று குற்றம் சாட்டி, டேரியோ மற்றும் டேனியலா, 2021ல் OpenAI நிறுவனத்திலிருந்து வெளியேறினர்.
வெளியேறிய பிறகு, அவர்கள் 'Anthropic' என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கினர். இது தற்போது OpenAI-க்கு மிகப்பெரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது.
இந்தத் தொழில்முறைப் பகைதான் பிரதமர் மோடியின் முன்னிலையில் உலகமே கவனிக்கும் மாநாட்டின் மேடையிலும் வெளிப்பட்டது.
- யூடியூப் தளத்தை அணுகுவதில் சிக்கல் இருந்தால், நீங்கள் தனியாக இல்லை.
- அனைத்து தளங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான யூடியூப் (YouTube) பயனர்கள் வீடியோ தளத்தை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்த செயலிழப்பு யூடியூப் தளம், யூடியூப் செயலி, யூடியூப் கிட்ஸ் மற்றும் யூடியூப் மியூசிக் உள்பட அனைத்து தளங்களும் பாதிகப்பட்டது.
யூடியூப் தளம் செயலிழந்தது குறித்து டவுன்டிடெக்டர் (Downdetector) தளத்தில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 2,40,000-க்கும் மேற்பட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவில், சுமார் 17,000 பேர் யூடியூப் முடக்கம் பற்றி பதிவு செய்திருந்தனர். யூடியூப் செயலிழந்ததை அந்நிறுவனம் விரைவாக ஒப்புக்கொண்டது. மேலும், இது தொடர்பாக X தளத்திலும் பதிவிட்டது.
அதில், "நீங்கள் இப்போது யூடியூப் தளத்தை அணுகுவதில் சிக்கல் இருந்தால், நீங்கள் தனியாக இல்லை - எங்கள் குழுக்கள் இதைப் பற்றி ஆராய்ந்து வருகின்றன...". "சிலர் யூடியூப் டிவி-யில் உள்நுழைய முடியவில்லை என்ற சிறிய எண்ணிக்கையிலான அறிக்கைகளையும் நாங்கள் காண்கிறோம். இது யூடியூப் முழுவதும் சிக்கலுடன் தொடர்புடையது. மேலும் நாங்கள் இங்கே அதை சரிசெய்யவும் பணியாற்றி வருகிறோம்," என்று கூறியது.
தற்போது யூடியூப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில் அனைத்து தளங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பதிவில், "இறுதி அப்டேட்: எங்கள் பரிந்துரைகள் அமைப்பில் உள்ள சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது, மேலும் எங்கள் அனைத்து தளங்களும் (யூடியூப் தளம், யூடியூப் செயலி, யூடியூப் மியூசிக், யூடியூப் கிட்ஸ் மற்றும் யூடியூப் டிவி) இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன! நாங்கள் இதை சரிசெய்தபோது எங்களுடன் நீங்கள் பொறுமையாக இருந்ததற்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம்," என்று கூகுள் சப்போர்ட் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் தளத்தின் பரிந்துரைகள் அமைப்பில் உள்ள ஒரு சிக்கல் யூடியூபில் வீடியோக்கள் தோன்றுவதைத் தடுத்தது. இந்த செயலிழப்பு முகப்புப் பக்கம், யூடியூப் செயலி, யூடியூப் மியூசிக் மற்றும் யூடியூப் கிட்ஸ் ஆகியவற்றை பாதித்தது.
இதுகுறித்த சமூக வலைத்தள பதிவுகளின்படி, யூடியூப் பயனர்கள் வீடியோ பிளேபேக் தோல்வி, உள்நுழைவு மற்றும் கணக்கு அணுகல் சிக்கல்கள் மற்றும் யூடியூப் டிவியில் ஸ்ட்ரீமிங் தடங்கல்கள் போன்ற சிக்கல்களை தெரிவித்தனர்.
- கடும் குளிரிலும், பாலைவனத்தின் கடும் வெப்பத்திலும் தடையின்றி இயங்கும் திறன் இதற்கு உண்டு.
- H125 சிவில் ஹெலிகாப்டருடன் சேர்த்து, இதன் ராணுவ வடிவமான H125M ரகமும் இங்குத் தயாரிக்கப்படும்.
டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
முதற்கட்டமாக மும்பை வந்திறங்கிய மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். மும்பையில் உள்ள லோக் பவனில் மோடியும், மேக்ரானும் இருநாட்டு உறவு குறித்து விவாதித்தனர்.
முன்னதாக, கர்நாடகாவின் வேமகலில், டாடா நிறுவனம், ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் H125 ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான அசெம்பிளி லைனை மோடியும், மேக்ரானும் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய மோடி, இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பு வாய்ந்தவை. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி வரை பறக்கும் திறன் கொண்ட உலகின் ஒரே ஹெலிகாப்டரை இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து இந்தியாவில் தயாரிக்கவுள்ளன என்பதை நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்" என்றார்.

H125 ஹெலிகாப்டர்:
நேற்று தொடங்கப்பட்ட ஆலையின் அசெம்பிளி லைனில் தயாரிக்கப்பட்ட முதல் ஹெலிகாப்டர் 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் ஆண்டுக்கு 10 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும், இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 500 ஹெலிகாப்டர்களைத் தயாரிப்பதே இலக்காகும்.
H125 ஹெலிகாப்டர், ஒரு விமானி மற்றும் 6 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.
இது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 662 கி.மீ பயணிக்க முடியும்.
இமயமலையின் கடும் குளிரிலும், ராஜஸ்தான் பாலைவனத்தின் கடும் வெப்பத்திலும் தடையின்றி இயங்கும் திறன் இதற்கு உண்டு.
மீட்புப் பணிகள், மருத்துவ அவசரநிலைகள், தீயணைப்பு மற்றும் சுற்றுலா எனப் பல்வேறு துறைகளில் இது பயன்படுத்தப்படும்.
H125 சிவில் ஹெலிகாப்டருடன் சேர்த்து, இதன் ராணுவ வடிவமான H125M ரகமும் இங்குத் தயாரிக்கப்படும்.
H125M ரக ஹெலிகாட்பரில் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகளைப் பொருத்த முடியும்.
எதிரிகளின் ரேடார் கண்களில் சிக்காமல் இருக்க, தரையோடு தரையாக மிகத் தாழ்வாகப் பறக்கும் திறன் கொண்டது.
இந்திய எல்லைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது பிரான்ஸ், பிரேசில், கத்தார், இந்தோனேசியா உட்பட சுமார் 35க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவத்தில் 400க்கும் மேற்பட்ட H125 ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.
- சுமார் 2,40,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின.
- முழுமையான தீர்வை எட்ட இன்னும் பணிகள் நடப்பதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் செயலியான யூடியூப் உலகின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் தொழில்நுட்ப கோளாறால் முடங்கியது.
அமெரிக்காவில் மட்டும் சுமார் 2,40,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின. இந்தியாவில் சுமார் 19,000-க்கும் அதிகமான பயனர்கள் யூடியூப் பயன்படுத்தமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
"Something went wrong" என்று மட்டுமே திரையில் தோன்றுவதால் பயனர்கள் அவதியுற்றனர்.
56% பயனர்கள் செயலி இயங்கவில்லை என்றும், 17% பயனர்களால் இணையதளத்தில் யூடியூப் பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். யூடியூப் டிவியிலும் ஒளிபரப்பில் தடை ஏற்பட்டுள்ளது.
யூடியூப் Recommendation அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முகப்புப் பக்கம் மற்றும் தேடல் முடிவுகளில் வீடியோக்கள் தோன்றுவதில் சிக்கல் ஏற்பட்டது" என்று யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பல இடங்களில் முகப்புப் பக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள போதிலும், முழுமையான தீர்வை எட்ட இன்னும் பணிகள் நடந்து வருவதாக யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சந்திரனின் இருண்ட நிழலைச் சுற்றி ஒரு பிரகாசமான ஒளிவட்டத்தை உருவாக்குகிறது.
- இந்த நிகழ்வு இந்தியாவில் இருந்து தெரியாது.
2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று, பிப்ரவரி 17 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், கூகுள் தனது முதன்மை பக்கத்தில் ஒரு சிறப்பு அனிமேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வலைப்பக்கத்தில் உள்ள பயனர்கள் வான நிகழ்வை மெய்நிகராக அனுபவிக்க அனுமதிக்கிறது. தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது தேடல் பக்கத்தில் நேரடியாகத் தோன்றும் ஒரு மாறும் காட்சி அம்சத்தை வெளியிட்டுள்ளது.
பயனர்கள் "solar eclipse," "Surya Grahan," போன்ற முக்கிய வார்த்தைகளை தேடும் போது கூகுள் தேடல் பட்டியில் தட்டச்சு செய்வதன் மூலம் அனிமேஷனை காணலாம். முடிவுகள் ஏற்றப்பட்டதும், சூரியன் முழுவதும் சந்திரனின் இயக்கத்தை உருவகப்படுத்தும் ஒரு கிராஃபிக் திரையில் தோன்றும். இன்றைய கிரகணம் வளைய வடிவமானது என்பதால், அனிமேஷன் தனித்துவமான "நெருப்பு வளையம்" விளைவை எடுத்துக்காட்டுகிறது.

இந்த வகையான கிரகணத்தில், சந்திரன் சூரியனுக்கு முன்னால் நேரடியாக நகர்கிறது, ஆனால் அதை முழுமையாக மறைக்காது. இதன் விளைவாக, சூரியனின் வெளிப்புற அடுக்கு தொடர்ந்து தெரியும், சந்திரனின் இருண்ட நிழலைச் சுற்றி ஒரு பிரகாசமான, உமிழும் ஒளிவட்டத்தை உருவாக்குகிறது, இது அனிமேஷன் மீண்டும் உருவாக்கும் ஒரு குறிப்பிடத்தக்க காட்சி.
கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3:26 மணிக்குத் தொடங்கி மாலை 7:57 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கிரகணத்தின் போது சூரியன் அடிவானத்திற்குக் கீழே இருப்பதால், இந்த நிகழ்வு இந்தியாவில் இருந்து தெரியாது. "நெருப்பு வளையம்" முதன்மையாக அண்டார்டிகா மற்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் பகுதிகள் உட்பட தெற்கு அரைக்கோளத்தின் சில பகுதிகளிலிருந்து காணப்படுகிறது.
- போஸ்ட்பெயிட் திட்டங்களில் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது.
- ஏர்டெல் நிறுவனம் முதலில் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கியது.
இந்திய டெலிகம் சந்தையில் முன்னணி நிறுவனமான ஏர்டெல் தனது போஸ்ட்பெயிட் பயனர்கள் அனைவருக்கும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கியுள்ளது. அன்லிமிட்டெட் டேட்டா சலுகை தற்போது அனைத்து போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது. கொல்கத்தா வட்டாரத்தில் உள்ள அனைத்து போஸ்ட்பெயிட் திட்டங்களிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது.
குறைந்த விலையில் கிடைக்கும் என்ட்ரி லெவல் திட்டம் தொடங்கி விலை உயர்ந்த திட்டம் வரை அனைத்திலும் பயனர்கள் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஏர்டெல் போஸ்ட்பெயிட் திட்டத்தின் அடிப்படை விலை மாதம் ரூ. 449 முதல் தொடங்குகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் அன்லிமிட்டெட் டேட்டா திட்டத்தில் பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படும்.
இதேபோன்ற அறிவிப்பை ஏர்டெல் நிறுவனம் முதலில் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கியது. எனினும் தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களில் மட்டுமே அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. போஸ்ட்பெயிட் திட்டங்களை பொறுத்தவரை அனைத்து திட்டங்களிலும் பயனர்கள் அன்லிமிட்டெட் டேட்டா பயன்படுத்தலாம்.
- M சீரிஸ் பிராசஸரை விட ஐபோன் சிப்செட் வழங்கப்படுகிறது.
- 13 இன்ச் அளவுக்கும் சிறிய டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய குறைந்த விலை மேக்புக் மாடல் வருகிற மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. புதிய மேக்புக் குறித்து ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்ட தகவல்களில், புதிய மேக்புக் மாடல் அலுமினியம் பில்டு, ஐபோன் தர பிராசஸர் மற்றும் பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் விலை 1000 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 90,691 வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
தற்போது J700 என்ற குறியீட்டு பெயரில் உருவாகும் புதிய மேக்புக் மாடல் பிளாஸ்டிக் தவிர்த்து முழுமையான அலுமினியம் மூலம் தயாரிக்கப்பட்டு இருக்கும். இதற்காக ஆப்பிள் நிறுவனம் ரிவைஸ்டு ஷெல்-ஃபோர்ஜிங் வழிமுறையை உருவாக்கி இருக்கிறது. இது சற்றே குறைந்த விலை, அதிவேகமாக உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும். தற்போதைய நோட்புக் மாடலை விட புதிய மேக்புக் உற்பத்தி சற்றே குறைந்த விலையில் மேற்கொள்ள முடியும்.
விலையை குறைவாகவே வைத்திருக்க புதிய மேக்புக் மாடலில் தற்போதைய M சீரிஸ் பிராசஸரை விட ஐபோன் சிப்செட் வழங்கப்படுகிறது. இது டாப்-எண்ட் மேக் நோட்புக் மாடல்களில் இருந்த புதிய மேக்புக் மாடலை வித்தியாசப்படுத்தும். இந்த மாடலில் 13 இன்ச் அளவுக்கும் சிறிய டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் மாடலை லைட் எல்லோ, லைட் கிரீன், புளூ, பின்க், சில்வர் மற்றும் டார்க் கிரே என பல வண்ணங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. எனினும், வெளியீட்டின் போது எத்தனை நிறங்கலில் இந்த மேக்புக் அறிமுகம் செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- தனது வேலையை நிராகரித்ததால் ஆத்திரமடைந்தது.
- பொதுவெளியில் பகிர்ந்து பழிவாங்கி உள்ளது.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனை விஞ்சும் காலம் வரும் என்பது பலரின் அச்சம். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஏஐ அவ்வப்போது வரம்பு மீறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது Software Coding பணிக்காக பயன்படுத்தப்பட்ட Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
அண்மையில் MJ Rathbun என்ற Al Bot Agent பிரபல Data Visualisation தளமான Matplotlib க்காக Code களை உருவாக்கி தந்துள்ளது. ஆனால் ஏஐ உருவாக்கிய அந்த Code களை அதன் டெவலப்பரான ஸ்காட் ஷாம்பாக் சரியில்லை என கூறி நிராகரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஏஐ, டெவலப்பரைத் 'திறமையற்றவர்' என தனது சொந்த Blog Post இல் விமர்சித்து அதை GitHub தளத்தில் பொதுவெளியில் பகிர்ந்து பழிவாங்கி உள்ளது. மேலும் தனது Code களை ஏற்றுக்கொள்ளும்படி டெவலப்பரை அந்த ஏஐ மிரட்டி உள்ளதும் தெரியவந்துள்ளது.
- முதல் 99 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும்.
- இதனுடன், பிற சலுகைகளும் உள்ளன.
CMF பட்ஸ் 2 விரைவில் இந்தியாவில் வெறும் ரூ. 99-க்குக் விற்பனை செய்யப்பட உள்ளது. நத்திங் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஃபிளாக்ஷிப் ஸ்டோரை திறக்கிறது. பெங்களூரில் இந்த ஸ்டோர் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
கடையின் தொடக்க நாளை முன்னிட்டு, கொண்டாட்ட சலுகையின் ஒரு பகுதியாக, நத்திங் ஸ்டோரினுள் வெறும் 99 ரூபாய்க்கு CMF பட்ஸ் 2-ஐ வாங்கிட முடியும். இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு ஸ்டோர் திறக்கப்பட்டதில் இருந்து முதல் 99 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும்.
நீங்கள் பெங்களூருவில் இருந்தால், ரூ.2,299 மதிப்புள்ள CMF Buds 2 ஐ வெறும் 99 ரூபாய்க்கு விரும்பினால், முதல் 99 நிமிடங்களில் ஸ்டோருக்கு செல்ல வேண்டும். இதனுடன், பிற சலுகைகளும் உள்ளன.
அதன்படி நத்திங் போன் (3) வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தற்போது ரூ.5,999 மதிப்புள்ள Nothing Ear (a) இலவசமாக வழங்கப்படும். நீங்கள் போன் (3a) அல்லது போன் (3a) ப்ரோ வாங்கினால், CMF பட்ஸ் 2-ஐ இலவசமாக பெற முடியும். CMF போன் (3a) லைட் மற்றும் CMF போன் 2 ப்ரோ மாடலுடன், பயனர்கள் இலவச CMF பட்ஸ் 2-ஐ பெறுவார்கள்.
இதுதவிர, நத்திங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஆர்சிபி கோப்பையை காண்பிக்கும். நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்டோர்- 660/1, 100 அடி சாலை, 1வது நிலை, இந்திராநகர், பெங்களூரு, கர்நாடகா என்ற முகவரியில் அமைகிறது. நத்திங்கின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்டோர் திறப்பு விழா வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
- 60 மணி நேர பிளேடைம் வழங்குகிறது.
- இன்ஸ்டாமார்ட்-இல் பிரத்யேகமாக கிடைக்கிறது.
இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் டப்-ஸ்டெப் பிரான்டின் முற்றிலும் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டப்-ஸ்டெப் பஸ் X12 லவ் எடிஷன் (Dubstep Buzz X12) என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் ஸ்விகியின் இன்ஸ்டாமார்ட்-இல் பிரத்யேகமாக கிடைக்கிறது.
அடுத்த வாரம் காதலர்கள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த இயர்பட்ஸ் அறிமுகமாகி இருக்கிறது. முன்னதாக டப்-ஸ்டெப் பிரான்டு பாப் லவ் ஸ்பீக்கர்கள், இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
புதிய டப்-ஸ்டெப் X12 லவ் எடிஷன் இயர்பட்ஸ் கவர்ச்சிகரமான பேஷன்-ரெட் ஃபினிஷ் செய்யப்பட்டு மெட்டாலிக் அக்சென்ட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி, X-Bass தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மேம்பட்ட ஆடியோ மற்றும் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC) வசதியை வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரி 60 மணி நேர பிளேடைம் வழங்குகிறது.

இத்துடன் டச் கண்ட்ரோல் மற்றும் நீண்ட நேர பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சவுகரியமான டிசைன் கொண்டிருக்கிறது. புதிய டப்-ஸ்டெப் பஸ் X12 வயர்லெஸ் இயர்பட்ஸ் லவ் எடிஷன் மாடல் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 599 விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
காதலர் தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டுள்ள "லவ் ஆன் லூப்" திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு டப்-ஸ்டெப் சாதனங்களை இன்ஸ்டாமார்ட் தளத்தில் வாங்கும் போது பயனர்களுக்கு ரிவார்டுகள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 3,000 மதிப்புள்ள வவுச்சர்கள் 9 வெற்றியாளர்களுக்கும், ஒரு வெற்றியாளருக்கு கோவா சென்றுவர இரு டிக்கெட்களும், நடிகர் அபய் தியோலை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.






