search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழித்தடம்"

    • தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ரெயில் சேவையை அதிகரிக்கும் வகையில் 3-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
    • பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னரும் ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

    சென்னை:

    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதி மக்களில் முக்கிய போக்குவரத்தாக புறநகர் ரெயில் சேவை உள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை பயணிகளுக்கு பெரிதும் கைகொடுத்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரிப்பு காரணமாக மின்சார ரெயில்சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டன.

    இதேபோல் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ரெயில் சேவையை அதிகரிக்கும் வகையில் 3-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரெயில்பாதை கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதுவரை இந்த வழித்தடத்தில் கூடுதல் மின்சார ரெயில்கள் இயக்கப்படவில்லை. மேலும் வழக்கமாக இயக்கப் பட்ட ரெயில் சேவையும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் ரெயில் நிலையங்களில் நீண்டநேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 90 ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது 83 ஆக குறைக்கப்பட்டது. இது குறித்து அதிகாரபூர்வ தகவலை ரெயில்வே அறிவிக்க வில்லை. எனினும் குறைந்த அளவு ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக பயணிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை செங்கல்பட்டு-தாம்பரம் வழித்தடத்தில் 45 மின்சார ரெயில் சேவை, தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்திற்கு 45 ரெயில் சேவை கள் இயக்கப்பட்டன. பின்னர், பராமரிப்பு பணி கள் காரணமாக ரெயில் சேவைகள் குறைக்கப் பட்ட தாக ரெயில்வே தெரிவித்து உள்ளது.

    தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 42 ெரயில்களும், செங்கல்பட் டில் இருந்து தாம்பரத்திற்கு 41 ரெயில்களும் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னரும் ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிக ரிக்கப்படவில்லை. இதனால் மக்கள்அதிகம் பயன்படுத்தும் வழித்தடத்தில் 83 ரெயில் சேவைமட்டுமே உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்ட நெரிசலில் பரித விக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    மேலும் தற்போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ள தால் அதிகமானோர் மின்சார ரெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணி கள் சென்னை நகர் பகுதியில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் வாகனங்களில் செல்ல கூடுதல் செலவு மற்றும் பயணநேரம் அதிகம் உள்ளிட்ட காரணங்களால் ரெயில் சேவை பயணம் மேலும் உயர்ந்து உள்ளது.

    அதிகாலை நேரத்தில் தென்மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் வரும் பஸ்பயணிகள் தற்போது வண்டலூர், மற்றும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையங்களில் இறங்கி செல்கிறார்கள். அதிகாலை நேரத்தில் மாநகர பஸ்போக்குவரத்து போதிய அளவில் இல்லாதததும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    ஏற்கனவே மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டு உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் பயணிகள் கூட்டத்தால் ஊரப்பாக்கம், பொத்தேரி ரெயில் நிலையங்களிலேயே ரெயில் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காலை நேரங்களில் வழக்கமாக சென்னை நகருக்குள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு தினந்தோறும் செல்லும் பய ணிகள் கடற்கரை மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசலில் செல்ல முடியாமல் திணறி வருகிறார்கள்.

    அவர்கள் கூட்ட நெரிசலை கண்டு அடுத்த மின்சார ரெயிலில் காத்திருந்து ஏறினாலும் அதே அளவு கூட்டம் வருவதால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, செங்கல்பட்டு -சென்னை கடற்கரை வழித்தடத்தில் கூடுதல் மின்சார ரெயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறும்போது, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை தயார் நிலையில் இருந்தபோது செங்கல்பட்டுக்கு மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது 3-வது ரெயில் பாதை செயல்பாட்டுக்கு வந்து ஒரு ஆண்டு ஆகியும் ரெயில் சேவை அதிகரிக்கப்படவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை, பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனிக்கிழமை மாலை மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் இதுபற்றி தெரியாமல் ரெயில் நிலையங்களுக்கு சென்றனர். ரெயில்நிலையங்களில் இது போன்று ரெயில்கள் ரத்து மற்றும் நேரம் மாற்றங்கள் குறித்து தெரிவிக்க எந்த அறிவிப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுவதில்லை. இதுபற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க ரெயில்வே கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் பயணிகளை பற்றி ரெயில்வே துறையினர் கவலைப்பாடாமல் அவர்கள் விரும்பியபடி ரெயில் சேவைகளை இயக்குகின்றனர் என்றனர்.

    • அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வாகனங்களை இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.
    • கிராமங்களில் காவல் துறையின் அனுமதி யின்றி ஒலிபெருக்கி அமைக்க கூடாது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நாளை மறுநாள் 11-ந் தேதி இமானுவேல் சேகரன் நினைஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி கமுதி-கோட்டை மேட்டில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் வாடகை வாகனம், ஒலிபெருக்கி உரிமையா ளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், அபுதெல்கா விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள வாடகை வாகன உரிமையாளர்கள், ஒலிபெருக்கி, பிளக்ஸ் பேனர் அச்சக உரிமையா ளர்கள், பேன்சி ஸ்டோர் உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கமுதியை சுற்றியுள்ள கிராமங்களில் காவல் துறையின் அனுமதி யின்றி ஒலிபெருக்கி அமைக்க கூடாது, சாதி மோதல்களை தூண்டும் வகையில் தலைவர்களின் புகைப்படங்கள், வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை வைக்கக்கூடாது, வாடகை ஆட்டோக்கள் அத்தியா வசிய தேவைகளை தவிர்த்து, நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு இயக்க ஆட்ட உரிமையாளர் களுக்கு அனுமதி இல்லை, இளைஞர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் பேன்சி ஸ்டோர்களில் முகமூடி விற்க கூடாது என அறிவறுத்தப்பட்டது.

    மேலும் அனுமதிக்கப் பட்ட வழித்தடத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும், மேற்கூரைகளில் பயணிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

    • ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் பஸ்கள் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
    • இதனால் பரமக்குடி பயணிகள் வழக்கம் போல் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு வழக்கமாக பரமக்குடி வழியாக செல்லும் பஸ்களின் வழித்தடம் இன்று காலை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பஸ்கள், லாரி, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கைகாட்டி, சிவகங்கை வழித்தடங்களில் மதுரைக்கு புறப்பட்டு சென்றது. வழக்கமாக பரமக்குடி வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று காலை முதல் திடீர் மாற்றம் காரணமாக ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி செல்லும் பயணிகள் பஸ் கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர்.

    அவர்கள் இது தொடர்பாக கண்டக்டர், டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பரமக்குடிக்கு செல்லும் பயணிகள் வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் பொறியியல் மேலாண்மை பணி நடக்கிறது.
    • டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், பயணத்தை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    சேலம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள, திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் மின்வழித்தடம், தண்டவாளம் சீரமைப்பு, பொறியியல் மேலாண்மை பணி இன்று, நாளை 2-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

    இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக செல்லும், 10 ரெயில்களின் நேரம், வழித்தடம் மாற்றப்படுகிறது. அவ்வகையில் இன்று ஆலப்புழா - தன்பாத், ஈரோடு - சென்னை - ஏற்காடு எக்ஸ்பிரஸ், திருப்பத்தூர் நிலையத்தில் நிற்காது. நாளை 2-ந் தேதி கன்னியாகுமரி - பெங்களூரு, கோவை - ராஜ்கோட், கொச்சுவேலி - மைசூரு, மங்களூரு - சென்னை வெஸ்ட்கோஸ்ட், திருப்பத்தூரில் நிற்காது.இந்த ரெயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், பயணத்தை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

    2 நாட்களும் ஈரோடு - ஜோலார்பேட்டை பாசஞ்சர் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பட்டுக்கோட்டைக்கு மதியம் 1.13 மணிக்கு வந்தடைந்து மீண்டும் சென்னை எழும்பூருக்கு இரவு 9.50 மணிக்கு சென்றடைகிறது.
    • ராமேஸ்வரம் பகுதிக்கு வியாழக்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூர் செகந்திராபாத் பகுதிகளுக்கும் செல்லலாம்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு 16 வருடங்களுக்கு பிறகு திருவாரூர்-பட்டுக்கோட்டை -காரைக்குடி ரெயில் தடத்தில் முதன் முறையாக செகந்திரபாத்தில் இருந்து சென்னை வழியாக ராமேஸ்வரத்திற்கு விரைவு ரெயில் இயக்கப்படும்.

    சிறப்பு விரைவு ரெயிலுக்கு பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் நாளை வரவேற்பு அளிக்கப்–படுகிறது.

    தென்மத்திய ரெயில்வே சார்பில் இன்று 24-ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திலிருந்து வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் (வண்டி எண் 07695) இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு நல்கொண்டா குண்டூர் தெனாலி ஓங்கோல் நெல்லூர் கூடூர் வழியாக மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைந்து, தொடர்ந்து செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு மாலை 4.50 மணிக்கு வருகிறது.

    தொடர்ந்து அறந்தாங்கி- காரைக்குடி- சிவகங்கை- மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக வியாழக்கிழமை இரவு 11.40 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்று அடைகிறது.

    மீண்டும் இந்த ரெயில் (வண்டி எண் 07696) இதே வழி தடத்தில் ராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.50 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு மதியம் 1.13 மணிக்கு வந்தடைந்து மீண்டும் சென்னை எழும்பூருக்கு இரவு 9.50 மணிக்கு சென்றடைகிறது.

    அதனைத் தொடர்ந்து செகந்திராபாத்திற்கு சனிக்கிழமை நண்பகல் 12.50 மணிக்கு சென்றடைகிறது.

    இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் புதன்கிழமைகளில் இரவு செகந்தராபாத்தில் புறப்பட்டு வியாழக்கிழமை சென்னை எழும்பூர் பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு இரவு சென்று சேரும். மீண்டும் ராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமைகளில் காலை புறப்பட்டு பட்டுக்கோட்டை சென்னை வழியாக செகந்திரா பாத்திற்கு சனிக்கிழமைகளில் நண்பகலில் சென்று சேரும்.

    இந்த ரெயில் மூலமாக பட்டுக்கோட்டை பகுதி மக்கள் ராமேஸ்வரம் பகுதிக்கு வியாழக்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூர் செகந்தி ராபாத் பகுதிகளுக்கும் செல்லலாம்.

    இந்த ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் 5, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 10, முதல் வகுப்பு குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2 சரக்கு மற்றும் மேலாளர் பெட்டிகள் 2 ஆக மொத்தம் 21 ரெயில் பெட்டிகளை கொண்டிருக்கும்

    இந்த சிறப்பு விரைவு ரெயிலுக்கு பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை மாலை 4.50 மணிக்கு வாழை மரங்கள் தோரணங்கள் கட்டி வாணவேடிக்கைகளுடன் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.

    • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    ஓமலூர்-மேட்டூர் அணை பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை 27-ந் தேதி ரெயில் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.12678) நாளை 27-ந் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு சேலம், திருப்பத்தூர், பங்கார்பேட்டை, பையப்பனகள்ளி வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். அந்த ரெயில் வழக்கமாக செல்லும் தர்மபுரி, ஓசூர், கார்மேளரம் வழியாக செல்லாது.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×