search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ நடவடிக்கை"

    • சிரியாவின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது.
    • இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரித்தது.

    டெஹ்ரான்:

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் ஹமாசுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஆதரவாக உள்ளது. இந்த இயக்கத்துக்கு ஈரான் தனது ஆதரவை அளித்து வருகிறது. இதையடுத்து, சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, சிரியா தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் இஸ்லாமிய புரட்சி படை தளபதிகள் 2 பேர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் நாட்டின் பல நகரங்களில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.

    இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கவேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் மிகப் பெரும் தாக்குதலை நடத்தலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சர்வதேச அணு சக்தி முகமையின் தடையை மீறி யூரேனியம் செறிவூட்டப் போவதாக அறிவித்துள்ள ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.#Iran #Israel
    ஜெருசலேம்:

    அணுசக்திக்கு தேவையான யூரேனியத்தை செறிவூட்டும் நிலயத்தை செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக என சர்வதேச முகமையிடம் ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சர்வதேச அணு சக்தி முகமையின் தடையை மீறி யூரேனியம் செறிவூட்டப் போவதாக அறிவித்துள்ள ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை மந்திரி யிஸ்ரயேல் காட்ஸ் இன்று அந்நாட்டு வானொலி மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது:-

    ஈரானியர்கள் இப்போது சரணடையாமல் கண்காணிப்பு இல்லாத வகையில் மீண்டும் யூரேனியம் செறிவூட்ட முற்பட்டால் இதற்கு எதிராக அமெரிக்க அதிபர் மற்றும் மேற்கத்திய நாடுகள் கூட்டமைப்பு சார்பில் தெளிவாக விளக்க அறிக்கை வெளியிடப்பட வேண்டும். அவர்களுடன் இதர அரபு நாடுகளும் இஸ்ரேலும் நிச்சயமாக உடனிருக்கும்.

    ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களை தயாரிக்கும் பழையப் பாதைக்கு திரும்பினால், அந்நாட்டுக்கு எதிராக ஒரு ராணுவ கூட்டணி உருவாக்கப்படும் என்பது அந்த அறிக்கை கூறும் செய்தியாக அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை மந்திரி வெளியிட்டுள்ள இந்த கருத்து, சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ரமலான் மாதத்தை ஒட்டி ஜம்மு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பாதுகாப்பு படைகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #KashmirCeaseFire
    புதுடெல்லி:

    நாளை முதல் ரமலான் மாதம் தொடங்குவதை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இதற்கு அம்மாநில பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், ஒரு மாதத்திற்கு ராணுவ நடவடிக்கைகள் (தேடுதல் வேட்டை, தீவிர சோதனை போன்றவை) எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேவேளையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடந்தால் தக்க பதிலடி கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×