search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிட்செல் ஸ்டார்க்"

    • எம்.எஸ். டோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் என கருதப்படுகிறது.
    • அவர் பேட்டிங் செய்ய வரும்போது ரசிகர்கள் டோனி... டோனி... என ஆரவாரம் செய்கின்றனர்.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனாக விளங்கிய எம்.எஸ். டோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடத்துடன் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இதனால் டோனி களம் இறங்கும்போதெல்லாம் ரசிகர்கள் டோனி... டோனி... என ஆர்ப்பரிக்கிறார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும்போது மைதானத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் ரசிகர்களும் டோனி... டோனி... என சத்தம் எழுப்பி வருகின்றனர். இது மற்ற வீரர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

    இது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:-

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எம்.எஸ். டோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் டோனி டோனி என ஆர்ப்ரித்த சத்தம், ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கும் மேல்போர்ன் மைதானத்தில் கூட இது போன்ற ஆர்ப்பரிப்பை கேட்ட முடியாது. இது மிகவும் வேடிக்கையானது.

    இவ்வாறு ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    எம்.எஸ். டோனி இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக கடைசி ஓவரில் ரன்கள் விளாசுகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார். நேற்று எல்எஸ்ஜி அணிக்கெதிராக ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.

    • 84 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    • 121 ஒருநாள் போட்டிகளில் 236 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் (2 மற்றும் 3) வீழ்த்திய ஸ்டார்க், 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 263 போட்டியில் 651 விக்கெட்டுகள் சாய்த்து சாதனைப் படைத்தார்.

    சர்வதேச போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு 28 ரன் கொடுத்து 6 விக்கெட் சாய்த்ததாகும். 23 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இரண்டு முறை 10 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

    651 விக்கெட்டுகள் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வார்னே 1001 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது.

    ஸ்டார்க் 84 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாககும். டெஸ்ட் போட்டியில் 14 முறை ஐந்து விக்கெட், இரண்டு முறை 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    121 ஒருநாள் போட்டிகளில் 236 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும். 9 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் 58 போட்டிகளில் 73 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • சுமார் 6 வருட காலம் ஐபிஎல் தொடரில் ஸ்டார்க் பங்கேற்கவில்லை
    • உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் விளையாட இது ஒரு வாய்ப்பு என்றார் ஸ்டார்க்

    ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் முன்னெப்போதும் இல்லாத அதிக தொகையாக ரூ.24.75 கோடிக்கு ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியினரால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

    2018 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விளையாட முடியாமல் வெளியேறினார் ஸ்டார்க்.

    இடையில் பல வருடங்கள் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட், பிற போட்டி தொடர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை கழிப்பது என இருந்த ஸ்டார்க், திடீரென மனதை மாற்றி கொண்டு தற்போதைய ஏலத்தில் பங்கேற்க சம்மதித்தார்.

    சுமார் 6 வருட காலம் கழித்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து ஸ்டார்க்கிடம் கேட்கப்பட்டது.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    நான் சர்வதேச கிரிக்கெட்டிற்குத்தான் முதலிடம் கொடுத்து வந்தேன். அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அதன் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு என் அதிக பங்களிப்பை உறுதி செய்ய நினைத்தேன். இவ்வருட கடைசியும் அடுத்த வருடமும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு சர்வதேச அரங்கில் ஒரு அமைதியான காலகட்டம். என் திறனை மேம்படுத்தி கொள்ள தலைசிறந்த உலக தரம் பெற்ற முன்னணி வீரர்களுடன் விளையாட இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே இப்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்க சம்மதித்தேன்" என தெரிவித்தார்.

    ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணியின் சார்பில் பங்கேற்ற அந்த அணியின் ஆலோசகர், முன்னாள் இந்திய கிரிக்கெட் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட ஸ்டார்க்கின் தேர்வை நியாயப்படுத்தும் விதமாக, "புது பந்தை வீசுவதிலும், கடைசி ஓவர்களில் பந்து வீசுவதிலும், தாக்குதலை முன்னெடுத்து செல்வதிலும் ஸ்டார்க் மிக சிறந்த நட்சத்திர வீரர் என்பதில் சந்தேகம் இல்லை" என தெரிவித்தார்.

    • ஏலத்தில் எனது தொகை விவரத்தை நான் பார்ப்பதற்கு முன்பே எனது மனைவி எனக்கு சொல்லி விட்டார்.
    • இனி கொஞ்சம் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24¾ கோடிக்கு விலை போய் இருக்கிறார். 33 வயதான ஸ்டார்க் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் 16 விக்கெட் (10 ஆட்டம்) கைப்பற்றி இருந்தார்.

    ஏலம் குறித்து அவர் கூறுகையில், 'உண்மையில் எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது மனைவி அலிசா ஹீலி (ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் கேப்டன்) தற்போது இந்தியாவில் விளையாடி வருகிறார்.

    ஏலத்தில் எனது தொகை விவரத்தை நான் பார்ப்பதற்கு முன்பே எனக்கு சொல்லி விட்டார். இனி கொஞ்சம் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் கடைசியாக விளையாடிய ஐ.பி.எல்.-ல் பெற்ற அனுபவம், அதை சமாளிக்க உதவும் என்று நம்புகிறேன். முடிந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன்' என்றார்.

    • ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.
    • இந்தியாவின் ஹர்ஷல் படேல் 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடர் ஏலத்தில் அதிகம் விலை போன வீரர்களின் விவரம் வருமாறு:

    மிட்செல் ஸ்டார்க்: ரூ.24.75 கோடி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்)

    பாட் கம்மின்ஸ்: ரூ.20.50 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

    டேரில் மிட்செல்: ரூ.14 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    ஹர்ஷல் படேல்: ரூ.11.75 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)

    அல்ஜாரி ஜோசப்: ரூ.11.50 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

    • ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா.
    • பேட் கம்மின்ஸ், டேரில் மிட்செல் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலம் எடுத்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு மிட்செல் ஸ்டார்க்கை ஏலம் எடுத்துள்ளனர்.

    முன்னதாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    • நாங்கள் எப்போதுமே சிறந்த அணியை எதிர்கொள்வதற்காகவே விளையாடுகிறோம்.
    • ஜோஸ் மற்றும் நான் இந்த உலகக்கோப்பையில் பவர் பிளே ஓவர்களில் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை.

    கொல்கத்தா:

    ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

    இந்நிலையில் முதல் ஆட்டத்தில் சந்தித்த இந்தியாவை மீண்டும் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த உலகக்கோப்பையில் பவர் பிளே ஓவர்களில் தாமும் ஹேசல்வுட்டும் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இம்முறை பைனலில் இந்தியா தடுமாற்றத் துவக்கத்தை பெறும் அளவுக்கு அசத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

    நாங்கள் எப்போதுமே சிறந்த அணியை எதிர்கொள்வதற்காகவே விளையாடுகிறோம். இத்தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடும் இந்தியாவும் நாங்களும் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளோம்.

    குறிப்பாக தொடரின் முதல் ஆட்டத்தில் அவர்களை எதிர்கொண்ட நாங்கள் கடைசியாகவும் எதிர்கொள்வது இந்த உலகக்கோப்பைக்கு நல்ல முடிவாக இருக்கும். பவர்பிளே ஓவர்களை எங்களுக்கு சாதகமான வழியில் கொண்டு வர வேண்டும்.

    குறிப்பாக ஜோஸ் மற்றும் நான் இந்த உலகக்கோப்பையில் பவர் பிளே ஓவர்களில் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. எனவே இறுதிப்போட்டியில் பவர் பிளேவில் நன்றாக செயல்படுவது சிறப்பாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.

    • 14-வது லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணியின் முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தே அவுட் என நடுவரிடம் முறையீடப்பட்டது. ஆனால் நடுவர் அதனை நிராகரித்தார். இதனையடுத்து வீசிய 3-வது பந்தில் குசல் பெரேராவை ஸ்டார்க் மன்கட் முறையில் அவுட் செய்ய முயன்றார். இது குறித்து இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டே நகர்ந்தனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக அளவில் மன்கட் செய்யப்படும் என முன்னாள் வீரர்கள் பலர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நாளைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும்.

    மொகாலி:

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    முதல் போட்டி நாளை மொகாலியில் நடக்கிறது. 2-வது போட்டி 24-ந்தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 27-ந்தேதி ராஜ்கோட்டிலும் நடக்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    முதல் 2 ஆட்டங்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார்.

    அஸ்வின் அணிக்கு திரும்பியுள்ளார். பேட்டிங்கில் சுப்மன்கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக்வர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர்.

    பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜ், முகமது சமி, பிரசித் கிருஷ்ணா உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். நாளைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் அவர்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள்.

    ஆஸ்திரேலிய அணி, சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி விட்டு இந்தியா வந்து உள்ளது. டேவிட் வார்னர், லபுஸ்சேன், மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ், ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், ஹேசல்வுட், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகுவதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும் என்பதால் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகி உள்ளனர்.

    இரு அணி வீரர்கள் விபரம் வருமாறு:-

    இந்தியா:- லோகேஷ் ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான்கிஷன் ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், பிரசித்கிருஷ்ணா.

    ஆஸ்திரேலியா:- கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன், ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசல்வுட், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா.

    • இவர் 9 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.
    • இவரை சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

    இதுவரை ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கைப்பற்றி உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக ஐதராபாத், கொல்கத்தா 2 முறையும், ராஜஸ்தான், குஜராத் 1 முறையும் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் மினி ஏலப்பட்டியலில் ஸ்டார்க் பெயர் இடம்பெறும் பட்சத்தில் அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இவரை சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    இவர் 9 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.

    • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
    • 20 ஓவர் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.

    சிட்னி:

    இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி தொடங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 22-ந் தேதி மொகாலியில் நடக்கிறது.

    இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ், 20 ஓவர் மற்றும் ஒருநாள் அணியில் இடம் பிடித்து இருந்த ஸ்டீவன் சுமித் ஆகியோர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் அணியில் இருந்து விலகி இருக்கின்றனர்.

    இதேபோல் ஒருநாள் அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் ஒதுங்கி இருக்கிறார். ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை மிட்செல் மார்ஷ் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆஷ்டன் டர்னர், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோர் கூடுதலாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து மீண்டு வரும் கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்திய தொடருக்குள் முழு உடல் தகுதியை எட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டார் மார்பிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
    • பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

    இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

    2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி வரும் போட்டிகளில் வெற்றி பெற தங்கள் அணியில் பல மாற்றங்களைச் செய்துள்ளது.

    3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார். டார் மார்பிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான மிட்செல் ஸ்டார்க் அணியில் இணைய உள்ளார். இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிட்செல் ஸ்டார்கின் சுவிங் பவுலிங்கில் திணறி ஆட்டம் இழந்திருக்கிறார்கள்.

    இந்தியாவின் சமதளமான பிட்சில் அவரால் எளிதாக ரிவர்ஸ் சுவிங் போட்டு விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் வரும் மார்ச் 1ம் தேதி இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்தியா இந்தப் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    ×