என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாரத ரத்னா"
- தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
- முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்தது.
ஏற்கனவே, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூர் தாகூருக்கு பாரத ரத்னா விருது
அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர்களான சவுத்ரி சரண் சிங், நரசிம்மராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகாரின் கர்பூரி தாகூர் உள்ளிட்டோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
- முன்னாள் பிரதமர்கள் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும். அரசியல், கலை, இலக்கியம் என தங்கள் துறைகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவிக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் பீகாரைச் சேர்ந்த கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், கட்சி தலைவரான பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல், மகா நிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவும் பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
- தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும் பல்வேறு பதவிகளை வகித்திருந்தார். அவரது தொலைநோக்கு திறமையால் இந்தியாவின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அவர் அமைத்தார். அவர் பிரதமராக இருந்தபோது பொருளாதார வளர்ச்சி புதிய சகாப்தத்தை எட்டியது.
முன்னாள் பிரதமர் சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்குவது அரசின் அதிர்ஷ்டம். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது வாழ்நாள் முழுவதையும் விவசாயிகளின் நலன்களுக்காக அர்ப்பணித்தவர்.
மேலும், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
- விருது பெற்ற அத்வானிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு இன்று அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.
நாட்டின் மிக உயரிய விருதை அத்வானி பெற்றிருப்பது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடமும், நிர்வாகிகளிடமும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அத்வானிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடியும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அத்வானியின் மகள் பிரதீபா அத்வானி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எல்.கே.அத்வானியும் உடனிருந்தார். தனக்கு விருது வழங்கியதை ஏற்கும் வகையில் அத்வானி நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளை கூப்பி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதையடுத்து, பிரதீபா அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டின் மிக உயர்ந்த விருது அவருக்கு வழங்கப்பட்டதில் முழு குடும்பமும் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் முழு வாழ்க்கையையும் நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
#WATCH | Pratibha Advani, veteran BJP leader LK Advani's daughter, reacts on Bharat Ratna for her father.
— ANI (@ANI) February 3, 2024
She says, "The entire family and I are very happy that he has been given the highest civilian award in the country...He is very happy...He said that he dedicated his entire… pic.twitter.com/UMe1WNSldc
- ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார்.
- பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வரும் நிலையில், கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கர்பூரி தாக்கூர் 1970-71 மற்றும் 1977 முதல் 79 காலக்கட்டங்களில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். நாளை (ஜனவரி 24) கர்பூரி தாக்கூரின் பிறந்த தினம் என்ற வகையில், இன்று அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்