search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாஞ்சில் சம்பத்"

    • நாஞ்சில் சம்பத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது தெரிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறினார்.
    • மருத்துவர்களிடம் பேசி நாஞ்சில் சம்பத்தின் உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, உரிய சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    நாகர்கோவில்:

    இலக்கியவாதியான நாஞ்சில் சம்பத், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    நாஞ்சில் சம்பத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது தெரிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறினார். மருத்துவர்களிடம் பேசி நாஞ்சில் சம்பத்தின் உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார்.

    இந்த நிலையில் டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் நாஞ்சில் சம்பத் உடல் நலம் பெற்று சுயநினைவு பெற்றார். இதனையடுத்து அவர், டுவிட்டரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், முதல்வரின் தனிக் கருணையில் இன்று புதியாய் பிறந்தேன். முதல்வரின் பரிவிற்கும், பாசத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில் சந்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் மயக்க நிலையில் இருக்கிறார்
    • டாக்டர்கள் கண்காணிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத் (வயது 68). பேச்சாளரும் இலக்கியவாதியுமான இவருக்கு நேற்று திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து நேற்று மதியம் நாஞ்சில் சம்பத்தை அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது நாஞ்சில் சம்பத் மயக்க நிலையில் காணப்பட்டார்.

    இன்று காலை வரை அவருக்கு மயக்கம் தெளியவில்லை. டாக்டர்கள் அவரை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ள நாஞ்சில் சம்பத்திற்கு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சற்று குறைவாக உள்ளதாகவும் சர்க்கரை நோயின் அளவு அதிகமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் நேற்று அவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்ததைவிட உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஆனால் இன்னும் மயக்க நிலை யிலேயே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    நாஞ்சில் சம்பத் ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகி 2012-ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.அங்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்.

    தினகரன் அ.ம.மு.க.வை ஆரம்பித்த நிலையில் அதில் அண்ணாவும் திராவிடமும் இல்லை என்று கூறி கட்சியில் சேரவில்லை. பின்னர் அரசியல் இருந்தே விலகு வதாக அறிவித்து விட்ட நாஞ்சில் சம்பத் சமீபகாலமாக தி.மு.க. நடத் தும் கூட்டங்களில் கலந்து கொண்டு திராவிட இயக்கம் சார்ந்து பேசி வந்தார்.

    தற்போது இலக்கியம் சார்ந்த மேடை நிகழ்ச்சிகளில் நாஞ்சில் சம்பத் தற்போது பங்கேற்று வருகிறார்.

    • பெரியாரின்,அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்கு சில ஆட்டுக்குட்டிகள் கத்துகின்றன.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், பெரியார், அண்ணா, ஆகியோரது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரியார் சுப்பிரமணி தலைமை வகித்தார். அங்ககுமார், குமாரவேல், முன்னிலை வகித்தனர். திருமூர்த்தி வரவேற்றார். இதில் கலந்துகொண்டு நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

    பெரியாரின்,அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்குச் சில ஆட்டுக்குட்டிகள் கத்துகின்றன.பயந்து நடுங்கும் கட்சியல்ல தி.மு.க. இந்த நாட்டில் நன்றாக உள்ள கட்சியை உடைத்து,அதில் உள்ள குள்ள நரிகளை வைத்து ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.க.வின் நரித்தனம் தமிழகத்தில் பலிக்காது.இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில அமைப்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மற்றும் மு.சுப்பிரமணியம், காவி.பழனிச்சாமி, சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதிமன்றத்தில் பல முறை நாடிய வைகோவுக்கு, நாஞ்சில் சம்பத் ஸ்டெர்லைட் நாயகன் என புகழாரம் சூட்டியுள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடக்க காலம் முதலே போராடி வருபவர் வைகோ. பல முறை நீதிமன்றத்தை நாடி ஸ்டெர்லைட் ஆலை விதிமுறைகளை மீறி இயங்கி வருவதாக வாதிட்டுள்ளார். கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர் வைகோ என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

    மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மறைக்கு பின்னர் சசிகலாவை எதிர்த்து பின்னர் சசிகலா அணிக்கு ஆதரவாளராகி பின்னர் தினகரனுடன் இணைந்து செயல்பட்டு பின்னர் அவருடன் முரண்பட்டு அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக சமீபத்தில் அறிவித்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைகோவை நிகழ்ச்சி ஒன்றில் நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசியிருந்தார். அவர் மீண்டும் மதிமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    ×