search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் ஆஸ்பத்திரி"

    • குழந்தையை கடத்த முயன்றதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்
    • சி.சி.டி.வி. காமிராவில் வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரிக்குள் சுற்றி திரிவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது‌.

    நாகர்கோவில், நவ.14-

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த தம்பதியின ரின் 2½ வயது குழந்தை ஒன்று காய்ச்சலால் பாதிக் கப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டிருந்தது.

    அப்போது ஆஸ்பத்தி ரிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் குழந்தை சிகிச்சை பெறும் அறைக்குள் சென்று குழந்தையை தூக்கி செல்ல முயன்றதாக அவரது பெற்றோர் புகார் செய்தனர். இது தொடர்பாக வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சி களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.

    அப்போது சி.சி.டி.வி. காமிராவில் வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரிக்குள் சுற்றி திரிவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வடசேரி போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர்.

    தனிப்படை போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அருகு விளையை சேர்ந்த சிவா என்பவர் ஆஸ்பத்திரிக்குள் புகுந்தது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வந்தனர். போலீசார் தேடு வது அறிந்த சிவா தலை மறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சிவாவை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அவரி டம் விசாரணை நடத்தப் பட்டது. சம்பவத்தன்று ஆஸ்பத்திரிக்குள் திருடச் சென்றதாகவும் குழந்தையை கடத்த செல்லவில்லை என்று கூறினார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட னர்.

    சிவா ஏற்கனவே சிறிய சிறிய திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிவாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாலிபரின் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி கருவி மூலம் 13 ஹேர்பின், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை அகற்றினர்.
    • வாலிபரின் வயிற்றில் இருந்து இரும்பு பொருட்கள் அகற்றிய பின்னர் வாலிபர் வழக்கமான உணவுகளை சாப்பிட தொடங்கியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை கடும் வயிற்றுவலி காரணமாக சிகிச்சை பெற அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர்.

    அப்போது அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அந்த வாலிபரின் வயிற்றில் பிளேடு, ஹேர்பின், ஊக்குகள் குவியலாக இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள்.

    தொடர்ந்து அந்த வாலிபரின் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி கருவி மூலம் 13 ஹேர்பின், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை அகற்றினர்.

    இதுகுறித்து மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் சசிக்குமார் கூறியதாவது:-

    வாலிபரின் வயிற்றில் இருந்து இரும்பு பொருட்கள் அகற்றிய பின்னர் அந்த வாலிபர் வழக்கமான உணவுகளை சாப்பிட தொடங்கியுள்ளார். அதனால் மறுநாளே அவர் உடல் நலத்துடன் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இந்த செயல்முறை சவாலாக இருந்தது. குறிப்பாக வயிற்றில் இருந்த ஹேர்பின்கள், ஊக்குகள் போன்றவை உடல்நலத்துக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும். அதை அகற்ற அதிக தொழில்நுட்பதிறன் தேவைப்படும். அதனை எங்கள் மருத்துவ குழுவினர் சிறப்பாக செய்து சாதனை படைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தையை கருக்கலைப்பு செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
    • டாக்டர் குழுவினர் இளம்பெண்ணுக்கு வளர்ச்சி குறைவான குழந்தையை கருக்கலைப்பு மூலமாக அகற்றினர்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அவரை பரிசோதனைக்காக குடும்பத்தினர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை ஸ்கேன் சென்டர் ஒன்றில் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு இரட்டை குழந்தை கருவில் இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஒரு குழந்தை வளர்ச்சி குறைவாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் இளம்பெண்ணின் உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தையை கருக்கலைப்பு செய்ய சம்மதம் தெரிவித்தனர். டாக்டர் குழுவினர் இளம்பெண்ணுக்கு வளர்ச்சி குறைவான குழந்தையை கருக்கலைப்பு மூலமாக அகற்றினர். பின்னர் பரிசோதனை செய்து பார்த்தபோது மற்ற குழந்தை நலமாக இருப்பதாக கூறினார்கள்.

    இதையடுத்து அந்த இளம்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற அந்த பெண் கழிவறைக்கு சென்றபோது மற்றொரு குழந்தையும் இறந்து வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த இளம்பெண்ணை உடனடியாக மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது உறவினர்கள் டாக்டரின் கவனக்குறைவால் குழந்தை இறந்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரில் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதேபோல் டாக்டர் தரப்பினரும் புகார் கூறியிருந்தனர். இருதரப்பு புகார் மீதும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • டாக்டர் மீது போலீசார் வழக்கு
    • பெண் அலுவலர், மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    நாகர்கோவில், ஜூலை.6-

    நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பாதுகாப்பு அலுவலராக பெண் ஒருவர் செயல்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று இவர் அலுவலக பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு டாக்டர் வந்துள்ளார். அவர், பெண் அலுவலர் இருந்த அறையை பூட்டிவிட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    பெண் அலுவலர் எதிர்ப்பு தெரிவித்ததால், டாக்டர் அவரை தாக்கியதோடு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் அலுவலர், மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி, பெண் அலுலவரின் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் நேசமணி நகர் போலீசார், டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூர்த்தி மகன்களுடன் தங்களுக்கு சொந்தமான பைபர் படிகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
    • தனியார் மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம ்மரக்காணம் அருகே கோமுட்டி சாவடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). இவருடைய 2 மகன்களான குமரேசன் (23), சுமன் ராஜ் (20) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான பைபர் படிகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவர்களது பைபர் படகு கடலில் கவிழ்ந்தது. இதில் 3 பேரும் கடலில் தத்தளித்தனர். அதே பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

    இதில் மூர்த்தி பலியானார். 2 மகன்களும் உயிர்பிழைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அழைத்து வரும் புரோக்கர்களுக்கு ரூ.1 முதல் 2 லட்சம் வரை கமிஷனாக தரப்பட்டுள்ளது.
    • சிறுநீரகம் கொடுத்ததற்காக அவரிடம் பேசியபடி தனியார் ஆஸ்பத்திரி குறிப்பிட்ட தொகையை தரவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் சமீப காலமாக கிட்னி விற்பனை அதிகளவில் நடந்துள்ளது.

    புரோக்கர்கள் மூலம் ஆசைவார்த்தை கூறி ஏழைகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு அழைத்து வரும் புரோக்கர்களுக்கு ரூ.1 முதல் 2 லட்சம் வரை கமிஷனாக தரப்பட்டுள்ளது. புரோக்கர்களை நம்பி காமராஜர் என்பவர் தனது கிட்னியை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொடுத்துள்ளார். சிறுநீரகம் கொடுத்ததற்காக அவரிடம் பேசியபடி தனியார் ஆஸ்பத்திரி குறிப்பிட்ட தொகையை தரவில்லை.

    இதையடுத்து அவர் விசாகப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆஸ் பத்திரியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு அனுமதி இல்லாமல் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

    • நாகர்கோவிலில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டர் ஒன்றில் ஸ்கேன் எடுத்துவிட்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றார். மீண்டும் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு கூறினார்கள்.
    • பிரசவத்தில் தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் அவர்களது உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    நாகர்கோவில் :

    இரணியல், சரல்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி அருள் ஜாஸ்மின் (வயது 30). இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் அருள் ஜாஸ்மின் மீண்டும் கர்ப்பமானார்.இதையடுத்து அவர் திங்கள் நகர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார்.

    தற்பொழுது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அருள் ஜாஸ்மின் பரிசோத னைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அருள் ஜாஸ்மினை ஸ்கேன் எடுத்து வருமாறு கூறினார்கள்.

    உடனே அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டர் ஒன்றில் ஸ்கேன் எடுத்துவிட்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றார். மீண்டும் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு கூறினார்கள்.

    உடனே அவரது உறவி னர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அருள் ஜாஸ்மினை அழைத்து வந்தனர். அங்கிருந்து நேற்று இரவு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அருள் ஜாஸ்மினை சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை அசைவின்றி இருப்பதால் உடனே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். நேற்று இரவு அருள் ஜாஸ்மினுக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுத்தனர்.அப்போது குழந்தை இறந்திருந்தது.

    மேலும் அருள் ஜாஸ்மினின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இதுகுறித்து டாக்டர்கள் அருள் ஜாஸ்மின் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்தனர்.குழந்தை இறந்த தகவலை கேட்டு ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த உறவினர்கள், அருள் ஜாஸ்மினும் கவலைக்கிட மாக இருப்பதாக கூறியதால் கவலை அடைந்தனர். இந்த நிலையில் அருள் ஜாஸ்மின் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    பிரசவத்தில் தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் அவர்களது உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அருள் ஜாஸ்மின் மற்றும் அவரது குழந்தை சாவிற்கு திங்கள் நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டரே காரணம் என்று அருள் ஜாஸ்மினின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பிரசவத்தில் தாய்-குழந்தை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுதா ஆஸ்பத்திரி பல்துறை ஆஸ்பத்திரியாக செயல்படுவதால் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற 94 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
    • இவர்களில் 46 பேரை உறவினர்கள் ஆம்புலன்சுகள் மூலம் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் தொடர்பாக ஈரோடு சுதா ஆஸ்பத்திரிக்கு சீல்வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை 15 நாட்களுக்குள் வேறு இடங்களுக்கு மாற்றவும் உத்தரவிட்டது.

    இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு சீல் வைத்தனர். மேலும் ஆஸ்பத்திரிக்கும் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரணை நடத்திய தனி நீதிபதி, சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை உடனடியகை அகற்ற உத்தரவிட்டார்.

    மேலும் புதிய நோயாளிகளை சேர்க்க விதித்த தடையையும் ரத்து செய்தார். அதன்படி சுகாதாரத்துறையினர் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை அகற்றினர்.

    இதற்கிடையே இதை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குநேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைத்த சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.

    இந்த உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் சுதா ஆஸ்பத்திரிக்கு சீல்வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் அங்கு பணியாற்றும் 800 டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதே நேரம் உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சைகள் மட்டும் செய்யப்பட்டது.

    இதற்கிடையே ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமகுமாரி தலைலைமயிலான அதிகாரிகள் நேற்று மாலை சுதா ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    பின்னர் அங்கு 4 அறைகளில் இருந்த 10 ஸ்கேன் எந்திரங்களுக்கும், அறைகளுக்கும் சீல் வைத்தனர். தொடர்ந்து ஸ்கேன் மையங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலையும் வழங்கினர். மேலும் ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கும் நடவடிக்கையையும் சுகாதாரத்துறையினர் தொடங்கினர்.

    சுதா ஆஸ்பத்திரி பல்துறை ஆஸ்பத்திரியாக செயல்படுவதால் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற 94 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 46 பேரை உறவினர்கள் ஆம்புலன்சுகள் மூலம் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர்.

    மீதம் உள்ள நோயாளிகளும் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதும் இன்று மாலை அல்லது நாளைக்குள் சுதா ஆஸ்பத்திரிக்கு முற்றிலுமாக சீல் வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் அபுல்ஹாசன் கூறியதாவது:-

    டாக்டர்கள் மீதோ, மருத்துவமனை மீதோ தவறு இருந்தால் அதற்கு என்று தனியாக விசாரணை நடத்தி தண்டனை வழங்கலாம். அதை விட்டு விட்டு ஒட்டுமொத்தமாக மருத்துவமனையை மூட சொல்வது நியாயம் இல்லை.

    இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம், மற்றும் டெல்லி உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளோம். இந்திய மருத்துவ சங்கம் அல்லாது பல்வேறு அமைப்புகள் சேர்ந்து இதுகுறித்து கடிதம் எழுத முடிவு செய்துஉள்ளனர். அந்த கடிதத்தை நாங்கள் பெற்று தமிழக அரசுக்கு அனுப்புவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமச்சந்திரன் தனது ஆஸ்பத்திரியை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாக, கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்
    • கோவை உப்பிலி பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து இரவு பகலாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கோவை:

    கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் தலைவர் ராமச்சந்திரன்(வயது72). இவர் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு சென்னையை சேர்ந்த உமா சங்கர்(54) என்பவரிடம் ஆஸ்பத்திரி கட்டிடத்தை வாடகை அடிப்படையில் நடத்த ஒப்பந்தம் போட்டு ஒப்படைத்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், ராமச்சந்திரன் தனது ஆஸ்பத்திரியை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாக, கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாக தெரிகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக உமாசங்கர், அவரது மேலாளர் மருதவாணன் ஆகியோர் மீது ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற உமாசங்கர் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி பலியானார். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், கடந்த ஆண்டில் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் ஆஸ்பத்திரி தலைவர் ராமச்சந்திரன், உதவியாளர் காமராஜ் (45), மூர்த்தி (45), முருகேசன் (47), டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இவர்கள் கோவை மத்திய ஜெயியில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    மனு மீதான விசாரணை கடந்த புதன்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் கைதான–வர்களை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.

    தொடர்ந்து அவர்களிடம் கோவை உப்பிலி பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து இரவு பகலாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் போலீசார் ஆஸ்பத்திரி விவகாரம் தொடர்பாக கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

    அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் போலீசார் மேலும் சிலரிடம் விசாரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களிடம் காவல் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் 5 பேரையும் மீண்டும் ஜெயிலில் அடைத்தனர்.

    • 5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
    • ஆஸ்பத்திரி விவகாரத்தில் பல முக்கிய தகவல்களை அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்ததாக கூறப்படுகிறது.

    கோவை

    கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் தலைவர் ராமச்சந்திரன்( வயது 72). இவர் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு சென்னையை சேர்ந்த உமா சங்கர் (54) என்பவரிடம் ஆஸ்பத்திரி கட்டிடத்தை வாடகை அடிப்படையில் நடத்த ஒப்பந்தம் போட்டு ஒப்படைத்ததார்.

    இந்நிலையில், ராமச்சந்திரன் ரூ. 100 கோடி மதிப்பிலான தனது ஆஸ்பத்திரிையை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற உமாசங்கர் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி பலியானார்.

    இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டில் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் ஆஸ்பத்திரி தலைவர் ராமச்சந்திரன், உதவியாளர் காமராஜ் (45), மூர்த்தி (45), முருகேசன் (47), டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

    இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பேரையும் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 5 பேரிடமும் தனித்தனியாக விடிய, விடிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆஸ்பத்திரி விவகாரத்தில் பல முக்கிய தகவல்களை அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்ததாக கூறப்படுகிறது. 

    ×