search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் திருட முயன்ற வாலிபர் கைது
    X

    நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் திருட முயன்ற வாலிபர் கைது

    • குழந்தையை கடத்த முயன்றதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்
    • சி.சி.டி.வி. காமிராவில் வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரிக்குள் சுற்றி திரிவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது‌.

    நாகர்கோவில், நவ.14-

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த தம்பதியின ரின் 2½ வயது குழந்தை ஒன்று காய்ச்சலால் பாதிக் கப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டிருந்தது.

    அப்போது ஆஸ்பத்தி ரிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் குழந்தை சிகிச்சை பெறும் அறைக்குள் சென்று குழந்தையை தூக்கி செல்ல முயன்றதாக அவரது பெற்றோர் புகார் செய்தனர். இது தொடர்பாக வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சி களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.

    அப்போது சி.சி.டி.வி. காமிராவில் வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரிக்குள் சுற்றி திரிவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வடசேரி போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர்.

    தனிப்படை போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அருகு விளையை சேர்ந்த சிவா என்பவர் ஆஸ்பத்திரிக்குள் புகுந்தது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வந்தனர். போலீசார் தேடு வது அறிந்த சிவா தலை மறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சிவாவை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அவரி டம் விசாரணை நடத்தப் பட்டது. சம்பவத்தன்று ஆஸ்பத்திரிக்குள் திருடச் சென்றதாகவும் குழந்தையை கடத்த செல்லவில்லை என்று கூறினார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட னர்.

    சிவா ஏற்கனவே சிறிய சிறிய திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிவாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×