search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fisherman Bali"

    • மூர்த்தி மகன்களுடன் தங்களுக்கு சொந்தமான பைபர் படிகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
    • தனியார் மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம ்மரக்காணம் அருகே கோமுட்டி சாவடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). இவருடைய 2 மகன்களான குமரேசன் (23), சுமன் ராஜ் (20) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான பைபர் படிகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவர்களது பைபர் படகு கடலில் கவிழ்ந்தது. இதில் 3 பேரும் கடலில் தத்தளித்தனர். அதே பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

    இதில் மூர்த்தி பலியானார். 2 மகன்களும் உயிர்பிழைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×