search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பிரார்த்தனை"

    • ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது.
    • ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, ஈஸ்டர் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரியில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் புனித வெள்ளிக்கிழமையை தொடர்ந்து வரும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று ஈஸ்டர் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில், கடந்த 7-ந்தேதியன்று புனித வெள்ளிக்கிழமை மற்றும் நேற்று ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது.

    அதைத் தொடர்ந்து பிப்ரவரி 24-ம் தேதி, மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிலுவைப்பாதை சிறப்பு வழிபாட்டை தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தொடங்கி வைத்தார்.

    அன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தை சுற்றிலும், சிறிய சிலுவைப்பாதை ஜெபவழிபாடும், அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பாரம்பரிய பழைய புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் முதல் புதிய புனித ஆரோ க்கிய அன்னை ஆலயம் வரை பங்கு தந்தை கிறிஸ்டோபர் தலைமையில் குருத்தோலை பவனியும், தொடர்ந்து 7-ம் தேதி புனித வெள்ளிக்கிழமை அன்று பெரிய சிலுவை ப்பாதை பவனியும் நடைபெற்றது.

    இந்த குருத்தோலை மற்றும் பெரிய சிலுவைப்பாதை வழிபாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து நேற்று, ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, ஈஸ்டர் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் தருமபுரி மறை மாவட்ட வட்டார தலைமை குரு பெரியநாயகம் பங்கேற்று ஈஸ்டர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆராதணை மற்றும் மறையுரை நிகழ்த்தியும் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு நிறைவேற்றினார். இதில் பங்கு தந்தை கிறிஸ்டோபர், ராயப்பர், பங்கு மக்கள் பங்கேற்றனர். அனைவரும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

    • மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுகின்றனர்.
    • ஒழுக்கம், கட்டுப்பாடு சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

    திருப்பூர் :

    ஏசு சிலுவையில் அறையுண்டு இறந்த நிகழ்வை புனித வெள்ளியன்று நினைவு கூர்ந்த நிலையில் அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுகின்றனர். அதன்படி இன்று ஈஸ்டர் பெருநாளை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.

    இதையொட்டி திருப்பூர் புனித ஜோசப், கேத்ரீன், அவிநாசி புனித தாமஸ், சேவூர் புனித லூர்து அன்னை ஆலயம் உட்பட அனைத்து ஆலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆலயங்களில் நேற்று நள்ளிரவு 12மணிக்கு ஈஸ்டர் திருப்பலி நடத்தப்பட்டது. திருப்பலியில் மெழுகுவர்த்தி கையில் ஏந்தி, தீமையின் சக்தி தலைதூக்க கூடாது என்ற வேண்டுதலை பக்தர்கள் முன்வைத்தனர்.

    இது குறித்து பங்குதந்தைகள் கூறுகையில், கடந்த பிப்ரவரி 22-ந்தேதியில் இருந்து துவங்கிய தவக்காலத்தில் பல்வேறு தவ முயற்சிகளை பக்தர்கள் மேற்கொண்டனர்.அசைவ உணவு தவிர்ப்பது, தேவையற்ற செலவினங்களை தவிர்ப்பது, மது, புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதை தவிர்ப்பது, எளிய வாழ்க்கை வாழ்வது, அனைவரிடத்திலும் அன்பு காட்டுவது, பகைவனையும் நேசிப்பது என, ஒழுக்கம், கட்டுப்பாடு சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.செலவினங்களை தவிர்த்த சேமிப்பின் மூலம் கிடைத்த தொகையை ஏழைகளுக்கு வழங்கினர். இந்த பண்புகளை வாழ்நாள் முழுக்க கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும்.பாவத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்பதற்காக மனிதாக மண்ணில் வாழ்ந்த ஏசு, சாவை வென்றார். நம் வாழ்க்கையிலும் நீதி, சமத்துவம், மனித நேயம் உயிர்ப்பெற வேண்டும் என்பதைதான் ஈஸ்டர் பெருநாள் உணர்த்துகிறது என்றனர். திருப்பூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, பல்லடம் , காங்கயம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று காலை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனால் ஆலயங்கள் அனைத்தும் களை கட்டின.

    • கடந்த பிப்ரவரி 22-ந்தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தவக்காலம் தொடங்கியது.
    • பனிமய மாதா பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாள் தவக்காலம் அனுசரிக்கின்றனர்.

    இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது. இயேசு உயிர் துறந்த புனித வெள்ளி நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை கொண்டா டும் ஈஸ்டர் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாப்பட்டது.

    தூத்துக்குடி

    ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது. பின்னர் பங்குத்தந்தை குமார்ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்ளில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு கத்தோலிக்க ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று அதிகாலை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனையும், திருவிருந்து ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையை யொட்டி நேற்று இரவு 11.30 மணிக்கு தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்றது. பாவூர்சத்திரம் சி.எஸ்.ஐ . ஆலயத்தில் சேகர குருவானவர் டேனியல் தனசன் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை நடத்தினார்.

    அனைவருக்கும் கேக் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதேபோல் பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் தேவாலயத்தில் பங்கு தந்தை ஜேம்ஸ் அடிகளார் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    புனித லூர்து அன்னை

    தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை இன்று காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி தலைமையில் பங்குத் தந்தை ஆன்றனி புருனோ பெருவிழா திருப்பலி நிறைவேற்றினார். இதில் இயேசு உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நடைபெற்றது. அப்போது, கிறிஸ்துவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, இயேசு பிறப்பை வரவேற்றனர். இதில் ஆயிரக்கணக்காக கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

    புனித லூர்து அன்னை ஆலயத்தில்  சிறப்பு திருப்பலி நடைபெற்றபோது எடுத்த படம்.

    புனித லூர்து அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றபோது எடுத்த படம்.


     


    • இரவு 11.40 மணிக்கு ஆலயத்தின் வெளியே பிரமாண்ட பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.
    • உணவு பொருட்களை வழங்கி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினர்.

    கடலூர்:

    ஈஸ்டர் தினத்தை யொட்டி கடலூரில் உள்ள தேவால யங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து சிலுவை யில் அறையப்பட்டு 3-ம் நாள்உயிர்த்தெழுந்தார். அந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் தினமாக கொண்டாடுகின்றனர். இதைமுன்னிட்டு, கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. இரவு 11.40 மணிக்கு ஆலயத்தின் வெளியே பிரமாண்ட பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்திகளில் புதிய தீபத்தை ஏந்திக்கொண்டு தேவலாயத்துக்குள் சென்றனர். 12 மணிக்கு இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவு கூர்ந்ததை விளக்கும் விதமாக தேவலாயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலித்தன.

    பின்னர் பங்கு தந்தை தலைமையில் கிறிஸ்தவர்கள் கைகளில் புதிய தீபத்தை ஏந்தி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து காலையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. புதிய மெழுகு தீபத்தை அணையாமல் வீட்டுக்கு கொண்டு சென்றனர். 40 நாட்கள் தவக்காலம் முடிந்து புத்தாடைகள் அணிந்து இனிப்பு, உணவு பொருட்களை வழங்கி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினர். இதேபோன்று கடலூர் சப்- ஜெயில் சாலையில் உள்ள தூய எபிபெனி ஆலயம், பாரதி சாலையில் உள்ள ஆற்காடு லூத்தரன் திருச்சபை, செம்மண்டலம் பாவநாசர் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    • இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
    • ஓசன்னா வாழ்த்து பாடல்களை பாடியபடி குருத்தோலைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

    கடலூர்:

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகரு க்குள் கழுதை மேல் அமர்ந்துவரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து வாழ்த்து பா டல்களை பாடினர். இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி குருத்தோ லை பவனி நடைபெறும். அதன்படி குருத்தோலை ஞாயிறான இன்று காலை கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. பின்னர் குருத் தோலைகளை ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாயலத்தை வந்தடைந்தனர். இதில் ஏ ராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் ஆற்காடுலுத்தரன் திருச்சபை மற்றும் கடலூர் செம்மண்டலம், திருதிரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம் மேல்ப ட்டாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கிறிஸ்த வர்கள் ஓசன்னா வாழ்த்து பாடல்களை பாடியபடி குருத்தோலைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

    • கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • நண்பர்கள், உறவினர்களுக்கும் ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்து க்களை தெரிவிக்கிறார்கள்.



    மதுரை கீழவாசல் தூய மரியன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு பாதிரியார் சிலுவை அடையாளமிட்ட காட்சி

     மதுரை

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால நோன்பை கடைப் பிடித்து சிறப்பு பிரார்த்த னையில் ஈடுபடுவது வழக்கம்.

    இதற்கான தொடக்க நாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது சாம்பல் புதன் அன்று தவக்காலத்தில் தொடக்கம் என்பதால் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகிறது.

    மதுரையில் உள்ள அனைத்து தேவாலயங் களிலும் சாம்பல் புதன் தினமான இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடை பெற்றன. மதுரை நரிமேடு, கீழவாசல் அண்ணா நகர் புதூர் பசுமலை காளவாசல், கோச்சடை, கூடல் நகர், தெப்பக்குளம், வில்லாபுரம், தெற்கு வாசல், மேலவாசல் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் இன்று சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

    கத்தோலிக்க ஆலய ங்களில் சிறப்பு திருப்பலி கள் இன்று காலை நடத்தப் பட்டன. சி.எஸ்.ஐ தேவா லயங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கிறது.இதில் ஏராள மானோர் கலந்து கொண்டு தவக்காலத்தின் தொடக்க நிகழ்வில் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து 40 நாட்கள் உபவாசம் இருந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்த வர்கள் ஈடுபடு கிறார்கள்.

    இதையடுத்து வருகிற ஏப்ரல் மாதம் 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி அனுஷ்டிக்கப் படுகிறது. அன்றைய தினமும் நாள் முழுக்க நோன்பை கடைபிடித்து கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்கள்.இதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் ஒவ்வொரு தேவாலயத்திலும் கிறிஸ்தவர்கள் குருத் தோலை களை கையில் பிடித்தப்படி பேரணியாக சென்று ஓசன்னா பாடல் களை பாடுவார்கள்.இதனைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும்.

    பின்னர் 3-ம் நாள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் ஏப்ரல் மாதம் 9- தேதி உயிர்ப்பின் பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை கொண் டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏராள மான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார் த்தனை செய்கிறார்கள். மேலும் நண்பர்கள், உறவினர்களுக்கும் ஈஸ்டர் பண்டிகை நல்வாழ்த்து க்களை தெரிவிக்கிறார்கள்.


    • சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
    • கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    சென்னை:

    சென்னை சாந்தோம், பெசன்ட்நகர் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் கொட்டும் மழையில் இன்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

    கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (25- ந்தேதி) அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.

    கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னையில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், கண்கவர் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டன. சென்னை மாநகரம் முழுவதும் அலங்கார மின் விளக்குகள் கண்ணை கவர்ந்தது.

    சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சென்னை சாந்தோம், பெசன்ட்நகர், பெரம்பூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், எழும்பூர், வேப்பேரி உள்ளிட்ட முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள், இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபங்கள் அமைக்கப்பட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.

    அதே போல் இன்று காலை 8 மணிக்கு கொட்டும் மழையில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்கவிடப்படுகிறது.

    நண்பர்கள், உறவினர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுபொருட்களை வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

    சென்னை சாந்தோம் கிறிஸ்தவ பேராலயம், பெசன்ட்நகர் ஆலயம், சின்னமலை ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் உள்ளிட்ட ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னை முழுவதும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    • கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிரார்த்தனை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
    • பாடல் குழுவினரால், சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைத்து பாடப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில ஆலயத்தில், நல்லிரவு கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிரார்த்தனை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    திருத்தல பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு, கிறிஸ்து பிறப்பு சிறப்பு விழிபாட்டில் ஈடுபட்டனர்.

    மேலும், கிறிஸ்துமஸ் பெரு விழாவினை முன்னிட்டு தேவாலயம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேவாலயத்தின் உட்புறமும், வெளிப்புறமும் இயோசு பாலகனின் பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்ப ட்டிருந்தது.

    தொடர்ந்து, தேவாலயத்தில் உலக நன்மைக்காகவும், உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும், அன்பு சமாதானத்தில் திளைத்திடவும் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். பிரார்த்தனையின் போது பாடல் குழுவினரால், சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைத்து பாடப்பட்டது.

    இந்த சிறப்பு பிரார்த்தனையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாடைகளை அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்துக்கொண்டனர்.. சிறப்பு பிரார்தனையின் முடிவில் அனைவரும் தங்களுக்குள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர்.

    தருமபுரியில் மாவட்ட த்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து ெகாண்டு வழிபாடு செய்தனர்.

    • கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நள்ளிரவு முதலே தொடங்கி விட்டது.



    மதுரை

    கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (25- ந்தேதி) அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.

    மதுரை மாவட்டத்தில் ஞானஒளிபுரம், மாடக்குளம், நரிமேடு, கே.புதூர், கீழவாசல், தெற்குவாசல், மேலவாசல், காளவாசல், அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உள்ளன. அங்கு கிறிஸ்து மஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. தேவாலயத்தின் உட்புற பகுதியில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு இருந்தது.

    மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நள்ளிரவு முதலே தொடங்கி விட்டது. அப்போது கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்துக்கு புறப்பட்டு வந்தனர். அங்கு பங்குத் தந்தையின் மறையுறை, கூட்டு திருப்பலி, சிறப்பு வழிபாடுகள் ஆகியவை நடத்தப்பட்டன.

    தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையில் முத்தாய்ப்பாக, திருப்பலி யின் நிறைவில், தேவதை கள் வேடமிட்டு இருந்த குழந்தைகள், பங்கு தந்தையிடம் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கொடுத்தனர். இதனை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

    இதனை தொடர்ந்து பங்குத்தந்தைகள் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகை யில், அந்த சொரூபத்தை கிறிஸ்துமஸ் குடிலில் வைத்தார்கள். இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்க விடப்பட்டு உள்ளன.நண்பர்கள், உறவினர் களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுபொருட்களை வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

    மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் ரோந்து வந்து கண்காணித்தனர். மேலும் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    • தேவாலயங்களில் நேற்றிரவு 11 மணி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது.
    • குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைத்த பின், பங்கு குருக்கள் திருப்பலி நிறைவேற்றினர்.

    திருப்பூர் :

    உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை நினைவு கூர்ந்து இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்றிரவு 11 மணி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது.

    நள்ளிரவு 12 மணிக்கு மாட்டுத் தொழுவத்தின் தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்ட குடில் அலங்காரத்தில், குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைத்த பின், பங்கு குருக்கள் திருப்பலி நிறைவேற்றினர். சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடத்தப்பட்டது. திருப்பூரில் புனித கேத்தரீன் சர்ச், புனித பவுல், ஏ.ஜி., ஆலயம், கோர்ட்டு வீதியில் உள்ள டி.இ.எல்.சி.அருள்நாதர் ஆலயம், அவிநாசி புனித தோமையார், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயம், சேவூர் புனித லூர்து அன்னை ஆலயம்,பல்லடம் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், சி.எஸ்.ஐ., புனித ஜான் ஆலயம் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் அந்த ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டன.

    மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, காங்கயம், வெள்ளக்கோவிலில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.உடுமலை நகரில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், சிஎஸ்ஐ. இம்மானுவேல் தேவாலயம் ஆகியவற்றில் அதிகாலை கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 8.30 மணிக்கு இரண்டாம் ஆராதனை நடந்தது. இதேபோல பிற தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.மேலும் கிறிஸ்தவா்களின் வீடுகளில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    காங்கயம் நகரம் கரூா் சாலையில் உள்ள குறைகள் தீா்க்கும் குழந்தை மாதா அருள்தலத்தில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்புத் திருப்பலி நடந்தது. தொடா்ந்து குழந்தை இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் குழந்தை இயேசுவை குடிலில் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் கூட்டுத் திருப்பலி , சிறப்புத் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி கிறிஸ்தவா்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனா். நாட்டில் அமைதியும், அன்பும் நிலவ வேண்டும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டது.

    இதேபோல காங்கயம் களிமேடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. இயேசு ரட்சகா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் வழிபாடு நடந்தது. இதேப்போல் மாவட்டம் முழுவதும் அனைத்து ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் நண்பர்கள், உறவினர்கள், ஏழைகளுக்கு கேக் மற்றும் உணவுகளை வழங்கினர். பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. தேவாலய குருக்களும், மக்களும் இணைந்து ஏழை மற்றும் ஆதரவற்றவர்களை சந்தித்து ஆடை, உணவு உள்ளிட்டவற்றை வழங்கினர். 

    • கல்லறை திருநாளையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
    • 1,000த்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

    அரியலூர்:

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றறது. ஆண்டிமடம் அருகேயுள்ள தென்னூர் புனித லூர்து அன்னை ஆலய கல்லறைத் தோட்டம் மற்றும்வரத–ராசன் பேட்டைஅலங்கார அன்னை ஆலய கல்லறைத் தோட்டத்தில் 1,000த்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று தங்களது மூதாதையர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்தனர்.

    அவர்களுக்கு பிடித்த உணவு வகைகள், பழ வகைகள் படையலிட்டு, பின்னர் அதில் மெழுகு–வர்த்திகள், ஊதுவர்த்திகள் கொண்டு அவர்கள் நினை–வாக பிரார்த்தனை செய்து சிலுவையை நட்டும் அஞ்சலி செலுத்தினர்.

    பங்குதந்தை வின்செ–ன்ட்ரோச்மாணிக்கம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதே போல் தென்னூர் லூர்து ஆலய கல்லறைத் தோட்டத்தில் பங்கு தந்தை பிலிப்சந்தியாகு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நெட்டலகுறிச்சி புனித சவேரியார் ஆலய கல்லறைத் தோட்டத்தில் பங்கு தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. குலமாணிக்கம் இஞ்ஞாசியர், புதுக்கோட்டை தூய மங்கள அன்னை, ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதே போல் ஜயங்கொ–ண்டம், கூவத்தூர்,அரிய–லூர், உடையா–ர்பாளையம், செந்துறை, கல்லக்குடி கிராமம் உள்ளிட்ட பகுதி–களிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    • மங்கள சண்டியாகம் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஐப்பசி மாத சப்தமி திதியை முன்னிட்டு நேற்று நவக்கிரக தோஷங்கள் அகல, நிலம், பூமி, வீடுமனை மற்றும் சொத்து தகராறு வழக்குகள் நீங்கிட, தோஷங்கள், திருமணத்தடை அகல, மனஅமைதி பெற்று, மன சோர்வு நீங்கி, திருஷ்டி, செய்வினை அகன்றிட, கணவன் மனைவி ஒற்றுமை பெற, கடன் தொல்லை அகன்றிட, பதவி, படிப்பு, தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஏற்படும் தடைகள் விலகிட வேண்டி மங்கள சண்டியாகம் நடைபெற்றது.

    மங்கள சண்டி யாகத்தை முன்னிட்டு காலை கோ பூஜை, கணபதி சங்கல்பம், யாகசாலை பூஜைகள், நவதானியங்கள், பல்வேறு வகையான பூக்கள், பழங்கள், கரும்பு, இனிப்பு வகைகள், பூசணிக்காய் உள்பட பல்வேறு வகையான பொருள்கள் வைத்து நடைபெற்ற சண்டி யாகம், பைரவர் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ×