search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி, தருமபுரியில்  கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
    X

    கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    கிருஷ்ணகிரி, தருமபுரியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    • கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிரார்த்தனை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
    • பாடல் குழுவினரால், சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைத்து பாடப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில ஆலயத்தில், நல்லிரவு கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிரார்த்தனை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    திருத்தல பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு, கிறிஸ்து பிறப்பு சிறப்பு விழிபாட்டில் ஈடுபட்டனர்.

    மேலும், கிறிஸ்துமஸ் பெரு விழாவினை முன்னிட்டு தேவாலயம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேவாலயத்தின் உட்புறமும், வெளிப்புறமும் இயோசு பாலகனின் பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்ப ட்டிருந்தது.

    தொடர்ந்து, தேவாலயத்தில் உலக நன்மைக்காகவும், உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும், அன்பு சமாதானத்தில் திளைத்திடவும் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். பிரார்த்தனையின் போது பாடல் குழுவினரால், சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைத்து பாடப்பட்டது.

    இந்த சிறப்பு பிரார்த்தனையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாடைகளை அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்துக்கொண்டனர்.. சிறப்பு பிரார்தனையின் முடிவில் அனைவரும் தங்களுக்குள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர்.

    தருமபுரியில் மாவட்ட த்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து ெகாண்டு வழிபாடு செய்தனர்.

    Next Story
    ×