search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதி"

    • மும்பை ரெயிலை விபத்தில் சிக்கவைக்க சதி:
    • அரியலூர் அருகே ரெயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு
    • போலீசார் முகாமிட்டு விசாரணை

    அரியலூர்,

    நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு செல்லும் சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் அரியலூர் அருகே பழைய பாம்பன் ஓடை என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது உயர் அழுத்த மின் கம்பியில் பச்சை நிற சேலையில் கல்லை கட்டிய நிலையில் தொங்கி ெகாண்டிருந்தது. இதனை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    பின்னர் என்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளர்கள், பயணிகள் ரெயிலில் இருந்து கீழே இறங்கி சேலை தொங்கிக்கொண்டு இருந்த இடத்திற்கு அருகில் சென்று பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக விருத்தாசலம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது, உயர் அழுத்த மின் வயரில் சேலை தானாக காற்றில் வந்து விழ வாய்ப்பில்லை என்றும், இது ரெயில் என்ஜினின் மேல் பகுதியில் உள்ள கம்பியும், மின்சார கம்பியும் உரசும்போது எளிதில் ரெயிலை தீ விபத்தில் சிக்க வைத்துவிடலாம் என்ற நோக்கில் சமூக விரோதிகள் செய்த சதியாக இருக்கலாம் என தெரிய வந்தது. இதற்கிடையில் சேலை தொங்கிய இடத்தில் இருந்து தீப்பொறி விழுவதை கண்ட பயணிகளும், அதிகாரிகளும் பதற்றம் அடைந்தனர்.

    பின்னர் ரெயில்வே ஊழியர்கள் நின்ற ரெயிலில் இருந்த நீண்ட கம்பியை எடுத்து வந்து சாதுரியமாக உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி இருந்த சேலையை அகற்றினர். இதையடுத்து சுமார் 40 நிமிடம் தாமதமாக விருத்தாசலம் நோக்கி மும்பை ரெயில் புறப்பட்டு சென்றது.

    சேலையில் கல்லை கட்டி ரெயிலை தீ விபத்தில் சிக்கவைக்க சதி திட்டம் தீட்டிய மர்ம ஆசாமிகளை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். என்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனிடையே உயர் அழுத்த மின் வயரில் சேலை சிக்கி கிடந்த இடத்தை ரெயில்வே உயர் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடம் காட்டுப்பகுதி என்பதால் அந்த வழியாக மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்று போலீசர அந்த பகுதியில் முகமைட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    • அதிவேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு சைக்கிளை வீசி சென்ற மர்ம நபர்
    • சதி செயலா? என விசாரணை

    திருச்சி, 

    சென்னை - மங்களூரூ எக்ஸ்பிரஸ் ரெயில் விருதாச்சலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவர், சைக்கிளுடன் ரயில் பாதையை கடக்க வந்தார். வேகமாக வந்த ரயிலை கண்ட அந்த மர்ம நபர், தனது சைக்கிளை ரயில் பாதையில் போட்டு விட்டு தப்பி ஓடினார். ரயிலில் சிக்கிய சைக்கிள் சின்னா பின்னமானது. ரயில் இன்ஜினுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் இன்ஜினில் சைக்கிள் சிக்கியதை கண்டு லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். பின்னர் அவர் ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார். அங்கிருந்து ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது, அங்கு வந்த ஆர்பிஎப் வீரர்கள் சைக்கிளை அகற்றினர். சைக்கிள் முற்றிலுமாக அகற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர் பொறியாளர்கள் ரயில் என்ஜினை சோதித்தனர். சேதம் எதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், ரயில் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 21 நிமிடங்கள் ரயில் தாமதத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது. இது சதிச்செயலா? அல்லது தற்செயலாக நடந்த விபத்தா? என்பது குறித்து ஆர்பிஎப், ரயில்வே போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடி வந்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில், அதே ரயில் லால்குடி ஸ்டேஷன் அருகே வந்தபோது 10 மற்றும் 12-வது பெட்டியில் இருந்து புகை வந்தது. இதுகுறித்து ரயில் லோகோ பைலட்டுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலைத் தொடர்ந்து ரயில் ஸ்ரீரங்கம் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பழுது நீக்கப்பட்டது. தொடர்ந்து சுமார் 41 நிமிடங்கள் தாமதத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டு சென்றது. பின்னர் திருச்சி ஜங்ஷனில் சைக்கிள் மோதிய இரண்டாவது கோச் நீக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 70 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். சைக்கிள் மீது ரயில் மோதிய விவகாரம் தொட ர்பாக விழுப்புரம் ரயில்வே போலீசார் ரயில்வே சட்டம் 147, 154 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்களை இன்று சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்ததோடு, சிறிது நேரம் கலந்துரையாடினார். #PMModi #NationalTeachersAward #TeachersDay
    புதுடெல்லி:

    சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான, செப்டம்பர் 5-ஆம் தேதி, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வழங்கவுள்ளார். 

    இதற்கு முன்னர், நாடு முழுவதும் 300-க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த விருதின் முக்கியத்துவம் கருதி, தற்போது ஆண்டுக்கு 45 ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தின் கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ஆர்.சதியும் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

    இந்நிலையில், விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்களை இன்று சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார். மேலும், அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரும் உடனிருந்தார். 
    ×