search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் வீரர்"

    • நொய்டா இன்ஜினியரான விகாஸ் நேகி கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்.
    • இவர் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்தார்.

    நொய்டா இன்ஜினியரான விகாஸ் நேகி கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர். இவர் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்தார்.

    அப்படி ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த அவர் ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது சக வீரரிடம் கைகுலுக்கி விட்டு அப்படியே மைதானத்தின் நடுவே மயங்கி கீழே விழுந்தார். அவர் விழுந்ததை கண்ட விக்கெட் கீப்பர் அவரை நோக்கி ஓடினார். மற்ற வீரர்களும் உதவிக்கு விரைந்தனர்.

    பின்னர் அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    நொய்டாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இன்ஜினியர் மாரடைப்பால் மைதானத்தில் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தொடர்ந்து சொதப்பலாக விளையாடிவருகிறார் என பேஸ்புக்கில் விமர்சித்த ரசிகரை மோசமான வார்த்தையால் திட்டிய கிரிக்கெட் வீரர் ஷபீர் ரஹ்மான் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளார். #SabbirRahman
    டாக்கா:

    வங்கதேச கிரிக்கெட் அணி வீரரான ஷபீர் ரஹ்மான், அதிரடி பேட்டிங்குக்கு மட்டுமில்லாமல் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். 2016-ம் ஆண்டு பெண் விருந்தினரை அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அழைத்து வந்தது முதல் , சிறுவனை தாக்கியது வரை பல்வேறு விவகாரங்களில் சிக்கி அபராதங்களும், தடைகளையும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போட்டி முதல் ஷபீர் ரஹ்மான் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இதையடுத்து, ரசிகர் ஒருவர் ஷபீரின் மோசமான பார்ம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகரின் நண்பர் ஷபீருக்கு அதனை பகிர, கடும் கோபம் கொண்ட ஷபீர் அந்த ரசிகரை, தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்குதல் விடுப்பதாக மிரட்டியுள்ளார்.  

    இந்த விவகாரம் அந்நாட்டு கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் மீது விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 
    ×