search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabbir Rahman"

    இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்த சானியா மிர்சாவிற்கு தொந்தரவு கொடுத்ததாக அவரது கணவர் சோயிப் மாலிக் புகார் அளித்துள்ளார். #SaniaMirza
    பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஐதராபாத்தை சேர்ந்த இவர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் பட்டங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் சானியா மிர்சாவிடம் வங்காளதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். இதை அவரது கணவர் சோயிப் மாலிக் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகாராக அளித்துள்ளார்.

    அதில் ‘‘கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவி சானியா மிர்சாவுடன் வங்காள தேசத்தில் நடந்த பிரிமியர் ‘லீக்’ போட்டியில் பங்கேற்றேன். அப்போது வங்காளதேச வீரர் சபீர் ரஹ்மான் எனது மனைவி சானியா மிர்சாவிடம் முறை தவறி நடக்க முயன்றார். இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.



    வங்காளதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். சானியா மிர்சாவிடம் அத்துமீறி நடந்து கொண்டதற்காக அவர் மீது வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அவருக்கு ஆயுட்கால தடை கூட விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தொடர்ந்து சொதப்பலாக விளையாடிவருகிறார் என பேஸ்புக்கில் விமர்சித்த ரசிகரை மோசமான வார்த்தையால் திட்டிய கிரிக்கெட் வீரர் ஷபீர் ரஹ்மான் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளார். #SabbirRahman
    டாக்கா:

    வங்கதேச கிரிக்கெட் அணி வீரரான ஷபீர் ரஹ்மான், அதிரடி பேட்டிங்குக்கு மட்டுமில்லாமல் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். 2016-ம் ஆண்டு பெண் விருந்தினரை அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அழைத்து வந்தது முதல் , சிறுவனை தாக்கியது வரை பல்வேறு விவகாரங்களில் சிக்கி அபராதங்களும், தடைகளையும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போட்டி முதல் ஷபீர் ரஹ்மான் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இதையடுத்து, ரசிகர் ஒருவர் ஷபீரின் மோசமான பார்ம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகரின் நண்பர் ஷபீருக்கு அதனை பகிர, கடும் கோபம் கொண்ட ஷபீர் அந்த ரசிகரை, தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்குதல் விடுப்பதாக மிரட்டியுள்ளார்.  

    இந்த விவகாரம் அந்நாட்டு கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் மீது விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 
    ×