என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சானியாவிடம் வங்காளதேச கிரிக்கெட் வீரர் அத்துமீறல்- கணவர் சோயிப்மாலிக் புகார்
Byமாலை மலர்2 Sep 2018 9:57 AM GMT (Updated: 2 Sep 2018 9:57 AM GMT)
இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்த சானியா மிர்சாவிற்கு தொந்தரவு கொடுத்ததாக அவரது கணவர் சோயிப் மாலிக் புகார் அளித்துள்ளார். #SaniaMirza
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஐதராபாத்தை சேர்ந்த இவர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் பட்டங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சானியா மிர்சாவிடம் வங்காளதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். இதை அவரது கணவர் சோயிப் மாலிக் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகாராக அளித்துள்ளார்.
அதில் ‘‘கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவி சானியா மிர்சாவுடன் வங்காள தேசத்தில் நடந்த பிரிமியர் ‘லீக்’ போட்டியில் பங்கேற்றேன். அப்போது வங்காளதேச வீரர் சபீர் ரஹ்மான் எனது மனைவி சானியா மிர்சாவிடம் முறை தவறி நடக்க முயன்றார். இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
வங்காளதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். சானியா மிர்சாவிடம் அத்துமீறி நடந்து கொண்டதற்காக அவர் மீது வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அவருக்கு ஆயுட்கால தடை கூட விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சானியா மிர்சாவிடம் வங்காளதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். இதை அவரது கணவர் சோயிப் மாலிக் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகாராக அளித்துள்ளார்.
அதில் ‘‘கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவி சானியா மிர்சாவுடன் வங்காள தேசத்தில் நடந்த பிரிமியர் ‘லீக்’ போட்டியில் பங்கேற்றேன். அப்போது வங்காளதேச வீரர் சபீர் ரஹ்மான் எனது மனைவி சானியா மிர்சாவிடம் முறை தவறி நடக்க முயன்றார். இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
வங்காளதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். சானியா மிர்சாவிடம் அத்துமீறி நடந்து கொண்டதற்காக அவர் மீது வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அவருக்கு ஆயுட்கால தடை கூட விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X