search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐரோப்பிய ஒன்றியம்"

    • தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
    • மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்.

    பொருளாதார அழுத்தம் மற்றும் மோதல்கள் மற்றும் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஆகியவை ஐரோப்பியக் கரைகளுக்கு அதிக குடியேற்றங்களைத் தள்ளக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில் பணப் பற்றாக்குறை உள்ள எகிப்துக்கு 8 பில்லியன் டாலர் உதவிப் பொதியை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

    ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெனெ் மற்றும் பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரியா, சைப்ரஸ் மற்றும் கிரீஸ் தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கெய்ரோவில் உள்ள ஐரோப்பிய யூனியன் மிஷன் படி, "அரபு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கான அடுத்த மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அகதிகளின் செலவிற்காக டச்சு குடும்பங்கள் துன்பத்தில் வாழ்கின்றனர் என்றார் கீர்ட்
    • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முற்றிலும் வெளியேற விரும்புகிறார் கீர்ட்

    ஐரோப்பிய கண்டத்தின் வடமேற்கில் உள்ள இயற்கை அழகு மிக்க நாடு நெதர்லாந்து (Netherlands). இதன் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம் (Amsterdam).

    நெதர்லாந்தில் சில நாட்களுக்கு முன் பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

    அதில் "சுதந்திரத்திற்கான கட்சி" (PVV) எனும் வலதுசாரி கட்சி, 150 இடங்களில் 37 இடங்களை வென்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் கீர்ட் வைல்டர்ஸ் (Geert Wilders) மேலும் இரு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளார்.

    "வாக்காளர்கள் தங்கள் எண்ணங்களை உரத்த குரலில் கூறி உள்ளனர். அவர்களின் நம்பிக்கை எக்காரணம் கொண்டும் வீண் போகாது. கூட்டணி குறித்து விரைவில் ஒரு சமரச முடிவு எட்டப்படும். நாங்கள்தான் ஆட்சி அமைப்போம். 'தங்களின் நாடு தங்கள் வசமே மீண்டும் வரும்' என இனிமேல் டச்சு மக்கள் உறுதியுடன் இருக்கலாம். சுனாமி போல் நம் நாட்டிற்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையும், அனுமதியின்றி நம் நாட்டிற்குள் நுழைந்து புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையும் இனி படிப்படியாக குறைந்து விடும்" என தனது வெற்றி குறித்து கீர்ட் வைல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

    அரசியல் சித்தாந்தத்தில் அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் போன்று கருதப்படும் வைல்டர்ஸின் வெற்றி விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

    அவரது கட்சி, இஸ்லாமியர்களுக்கும், ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பிற்கும் எதிராக பார்க்கப்படுவதால், அவர் வெற்றி பெற்றதனால், நாட்டின் எல்லைகளை அகதிகளுக்கு மூடுவதும், ஆவணங்கள் இல்லாமல் அந்நாட்டிற்குள் வசித்து வரும் புலம் பெயர்ந்தவர்களை வெளியேற்றுவதும் இனி நடக்க தொடங்கும் என நம்பப்படுகிறது.

    நெதர்லாந்து நாட்டின் மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 5 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் இரண்டாம் தர குடிமகன்களாக தள்ளப்படலாம் என இஸ்லாமிய அமைப்புகள் அஞ்சுகின்றன.

    தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, "அகதிகளாக புகலிடம் கோரி வருபவர்களும், சட்டவிரோதமாக குடியேறியவர்களும் சொகுசு கப்பலில் கிடைப்பதை போன்ற சுகங்களை அனுபவித்தும், உணவுகளை உண்டும் மகிழ்கின்றனர். ஆனால், இவர்களுக்கு அரசாங்கம் செலவு செய்ய டச்சு குடும்பங்கள் தங்கள் மளிகை மற்றும் இதர அத்தியாவசிய செலவுகளையும் குறைத்து வாழ வேண்டி உள்ளது" என கீர்ட் குற்றம் சாட்டி வந்தார்.

    தேர்தலில் வென்றால், இஸ்லாமிய பள்ளிகள், மசூதிகள், முகத்தை மூடும் உடைகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தை போல், நெதர்லாந்தும் வெளியேறுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கீர்ட் கூறி வந்தார்.

    கீர்ட்டின் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றியை கண்டு பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் சித்தாந்தங்களை அவரை போலவே வகுக்க தொடங்கலாம் என அரசியல் நிபுணர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுப்பு.
    • தற்போதைய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஐரோப்பா தன் கடமைகளை நிறைவேற்றும் என்று தான் நம்புகிறேன்.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் போர் காரணமாக தடைப்பட்டது.

    அதன்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி செய்ய ரஷியா சம்மதித்தது. இந்நிலையில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

    இந்நிலையில், உக்ரைன் தானியங்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி தடை நீடிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சமூக ஊடகங்கள் மூலம் ஜெலென்ஸ்கி கூறுகையில், "தானியங்கள் இறக்குமதி எந்தவொரு கட்டுப்பாடும் நீட்டிப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஐரோப்பா ஒரு குறிப்பிட்ட பொருட்களுக்கு அதன் எல்லைகளை மூடுவதை விட பகுத்தறிவுடன் செயல்படும் நிறுவன திறனைக் கொண்டுள்ளது.

    செப்டம்பர் 15 அன்று உக்ரேனிய தானியங்கள் குறைவதற்கான தற்போதைய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஐரோப்பா தன் கடமைகளை நிறைவேற்றும் என்று தான் நம்புகிறேன்" என்றார்.

    • ரஷியா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்தன.
    • போருக்கு பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்து முடக்கப்பட்டுள்ளது.

    பிரஸ்சல்ஸ்:

    உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

    உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். உக்ரைன் மீதான போரை கைவிடுமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.

    இதற்கிடையே, ரஷியா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

    இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் ரஷியாவின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் ரஷியா, உக்ரைன் போர் ஏற்பட்ட பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

    • பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது.
    • உக்ரைன், மால்டோவாவை வேட்பாளராக ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

    பிரஸ்ஸல்ஸ்:

    நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனென்றால் உறுப்பு நாடு என்றால்தான் நேரடியாக ராணுவ உதவி செய்ய முடியும்.

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான நடைமுறைகள் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைய பல ஆண்டு காலம் ஆகும்.

    இதற்கிடையே, உக்ரைன் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று விண்ணப்பம் கொடுத்துள்ளது. அந்நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அதேபோல் மால்டோவா நாட்டுக்கும் இன்று வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது. இதில் உக்ரைன் மற்றும் மால்டோவாவை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

    • இந்த ஆண்டுக்குள் ரஷியாவிடம் இருந்து பெறப்படும் எரிபொருள் இறக்குமதி முற்றிலுமாக குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.
    • கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் ரூ.7200 கோடி மதிப்பிலான எரிபொருட்களை பிரான்ஸ் இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    பாரிஸ்:

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான எரிபொருளுக்கு ரஷியாவையே நம்பி இருக்க வேண்டியதாக உள்ளது. ஆனாலும் இந்த ஆண்டுக்குள் ரஷியாவிடம் இருந்து பெறப்படும் எரிபொருள் இறக்குமதி முற்றிலுமாக குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.

    இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பிரான்ஸ், ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் ரூ.7200 கோடி மதிப்பிலான எரிபொருட்களை பிரான்ஸ் இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து உக்ரைனை பிரான்ஸ் ஏமாற்றிவிட்டது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    வரி தகராறு காரணமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை பலர் புறக்கணிக்கும் முடிவில் இருக்கின்றனர். இது சிறப்பான ஒன்று என டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். #Trump #HarleyDavison
    வாஷிங்டன்:

    அமெரிக்க தயாரிப்புகளுக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரியை சில மாதங்களுக்கு முன்னர் டிரம்ப் அதிரடியாக உயர்த்தினார்.

    இதனால், போட்டி போட்டுக்கொண்டு மேற்கண்ட நாடுகளும் அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. இந்த வரி அதிகரிப்பு தகராறுகளால் வணிக யுத்தம் நிகழும் சூழல் உருவானது. இந்த தகராறுகளின் ஒரு பகுதியாக அமெரிக்க தயாரிப்பு இரு சக்கர வாகனங்களுக்கு 6 சதவிகிதமாக இருந்த வரியை 31 சதவிகிதமாக ஐரோப்பிய நாடுகள் கூட்டின.

    இதனால், அமெரிக்காவின் முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது. இதனை சரிகட்டும் வகையில்,  ‘ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள வரி விதிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கப் போகிறோம். அது தான் ஐரோப்பாவில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே வழியாக இருக்கிறது. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நிலவி வரும் பிரச்னை சீக்கிரமே முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்’ என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்தது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது காரசாரமான விமர்சனத்தை டிரம்ப் வைத்திருந்தார். 

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் , ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஹார்லி டேவிட்சன் முதல் நிறுவனமாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்காக நான் அதிகமாக போராடினேன். அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்காது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கூறியிருந்தார்.

    எனினும், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது முடிவில் உறுதியாக இருந்தது. தனது ராஜ தந்திரங்கள் பலிக்கவில்லை என டிரம்ப் நினைத்தாரோ என்னவோ, தற்போது ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு எதிராக கருத்து வெளியிட தொடங்கியுள்ளார்.

    ‘நிறைய ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்கள் அந்த நிறுவனத்தை புறக்கணிக்கும் திட்டத்தில் இருக்கின்றனர். சிறப்பு! அந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் நம்மை நோக்கி வருகின்றனர். உண்மையில் ஹார்லி நிறுவனத்தின் முடிவு தவறான ஒன்று’ என டிரம்ப் தற்போது ட்வீட் செய்துள்ளார். 

    ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் அமெரிக்காவில் உற்பத்தியை நிறுத்திவிட்டு, ஐரோப்பாவில் இனி உற்பத்தி செய்யப்போவதாக அறிவித்துள்ளது டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. #Trump #HarleyDavison
    வாஷிங்டன்:

    அமெரிக்க தயாரிப்பு பொருட்களை முன்னிலைப்படுத்தும் வகையில் இறக்குமதி பொருட்கள் பலவற்றுக்கு வரியை அமெரிக்கா சமீபத்தில் அதிகரித்தது. அலுமினியம் மற்றும் ஸ்டீஸ் ஆகியவற்றின் இறக்குமதி வரியை உயர்த்திய டிரம்ப்பின் நடவடிக்கை கனடா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிச்சலை கொடுத்தது.

    இதனால், போட்டிக்கு போட்டியாக அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீதான வரியை  சீனா உயர்த்தியது. இதனால், வணிக யுத்தம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க தயாரிப்பு இரு சக்கர வாகனங்களுக்கு 6 சதவிகிதமாக இருந்த வரி விதிப்பு 31 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால், முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமான அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது. 

    இதனை சரிகட்டும் வகையில்,  ‘ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள வரி விதிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கப் போகிறோம். அது தான் ஐரோப்பாவில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே வழியாக இருக்கிறது. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நிலவி வரும் பிரச்னை சீக்கிரமே முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்’ என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்தது.



    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது காரசாரமான விமர்சனத்தை டிரம்ப் வைத்திருந்தார். 

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் கூறியுள்ளதாவது, ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஹார்லி டேவிட்சன் முதல் நிறுவனமாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்காக நான் அதிகமாக போராடினேன். அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்காது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.
    ×