search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏபி டிவில்லியர்ஸ்"

    • ஐபிஎல் 2023 சீசனின் முடிவில் டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2024 சீசனில் விளையாட போகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனையொட்டி தாமதமாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்த நிலையில் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவர் பேட்டிங் செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    ஐபிஎல் 2023 சீசனின் முடிவில் டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு பெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2024 சீசனில் விளையாட போகிறேன் என்று அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக என் மீது அன்பை பொழியும் ரசிகர்களுக்கு நான் அளிக்கும் பரிசு இது என்று அப்போது அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் கேப்டன் டோனியின் ஓய்வு குறித்து தென் ஆப்ரிக்க அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருது தெரிவித்துள்ளார்.

    அதில், இந்த ஐபிஎல் தொடர் தான் டோனியின் கடைசி தொடராக இருக்குமோ? அதை யார் அறிவார். டோனி ஒரு டீசல் எஞ்சினை போன்றவர். அது எப்படி முடிவில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறதோ அப்படியே டோனியும் இருக்கிறார். அவர் என்ன ஒரு அற்புதமான வீரர். என்ன ஒரு அற்புதமான கேப்டன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஷமார் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன விருதை ஜோசப் தட்டிச் சென்றார்.

    பிரிஸ்பேன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 25-ந் தேதி தொடங்கி நடைபெற்றது.

    இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 7 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஷமார் ஜோசப்-ன் வாழ்க்கையை விக்கிபீடியாவில் படித்து கண் கலங்கியதாக தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் ஒரு உதவி செய்யுங்கள். அவருடைய வாழ்க்கையை பற்றி விக்கிபீடியாவில் படியுங்கள். அவரது பயணத்தை பற்றி படிக்கும் போது எனது கண்களில் கண்ணீர் வந்தது. எளிமையா சொல்லனும் என்றால் உங்களுக்கு ஊக்கமளிக்கும்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறினார்.

    • உலகிலேயே 360 டிகிரியில் விளையாடக்கூடிய ஒரே ஒரு வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் மட்டுமே என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.
    • 360 டிகிரி என்பதையும் தாண்டிய உச்சத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று எதிர்பாராத திருப்பங்களுடன் முடிந்துள்ளது. இந்தியா 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக முதல் 4 போட்டிகளிலேயே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்தியா நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற்ற ஜிம்பாபேவுக்கு எதிரான சம்பிரதாய கடைசி போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.

    6 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 61* (25) ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முகமது ரிஸ்வானை முந்தி சாதனை படைத்துள்ளார்.

    இந்திய ரசிகர்களும் ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்களும் அவரை இந்தியாவின் ஏபிடி என்றும் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றும் புகழாரம் சூட்டி வருகிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக மீண்டும் ஒருமுறை நேற்றைய போட்டியில் வெளுத்து வாங்கிய அவரை நீங்கள் ஏபி டி வில்லியர்ஸ் போல மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனாக செயல்படுகிறீர்கள் என்று போட்டி முடிந்ததும் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பாராட்டினார்.

    அதற்கு உலகிலேயே ஏபி டீ வில்லியர்ஸ் மட்டுமே 360 வீரர் என்று மறுப்பு தெரிவித்த சூர்யகுமார் யாதவ் அடக்கத்துடன் பேசியது பின்வருமாறு. உலகிலேயே 360 டிகிரியில் விளையாடக்கூடிய ஒரே ஒரு வீரர் மட்டுமே உள்ளார் என்று கூறினார். அவரது இந்த அடக்கமான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி ஏபி டீ வில்லியர்ஸ் கவனத்தை நேரடியாக ஈர்த்தது.

    அதனால் மகிழ்ச்சியடைந்த அவர் நீங்கள் அந்த இடத்திற்கு மிகவும் வேகமாக வந்து கொண்டிருக்கிறீர்கள். சொல்லப்போனால் 360 டிகிரி என்பதையும் தாண்டிய உச்சத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார். இது பற்றி ஏபி டிவில்லியர்ஸ் ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. "நீங்கள் அங்கே மிகவும் விரைவாக வருகிறீர்கள் நண்பரே. (சொல்லப்போனால்) இன்னும் அதிகமாக. இன்று மிகச் சிறப்பாக விளையாடினீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். அப்படி இந்திய வீரரை மனதார பாராட்டிய ஏபி டீ வில்லியர்ஸ் கொடுத்த அந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×