search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மாவட்டம்"

    தமிழகத்தில் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. #TNResults #11thResult #Plus1Result
    சென்னை:

    தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுள்ளது.

    www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


    11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.5 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பிளஸ்1 தேர்வு எழுதிய 78 சிறைக் கைதிகளில் 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 98.08 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் 97.90 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 97.60 சதவீத தேர்ச்சியுடன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது. 89.29 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. #TNResults #11thResult #Plus1Result
    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். #LSPolls #collectorKathiravan
    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது.

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அரசியல்வாதிகள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் கலெக்டர் கதிரவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் ஆணையம் நடத்தை விதிமுறை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

    அதன்படி இந்த தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறிய ஒப்புகை சீட்டு நடைமுறை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மையம் குறித்தும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

    இதன்படி அரசு மற்றும் அனுமதி பெறாமல் தனியார் சுவர்களில் செய்யப்பட்டுள்ள கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

    மேலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரசார நடவடிக்கையில் யாரும் ஈடுபடக் கூடாது. தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் வகையில் பறக்கும் கண்காணிப்பு குழுக்கள் நிலை கண்காணிப்பு குழுக்கள் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் வீடியோ பார்வை குழுக்கள் என ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வாக்களிப்பதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

    குறிப்பாக கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் , வயதானவர்கள் சிரமமின்றி வாக்களிக்க பல சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் செயல்படுவார்கள். தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க தனியாக வாட்ஸ்-அப் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் ரூபாய் 50,000 வரை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல் பணம் எடுத்து சென்றால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    முடிந்த அளவு ஆன்லைன் பணவர்த்தனை முறையை பின்பற்றினால் சிறந்ததாக இருக்கும். இதில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை. வீடியோ குலுக்கல் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மலை கிராம மக்களும் சிரமமின்றி வாக்கு பதிவு செய்ய பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவர் அவர் கூறினார். #LSPolls #collectorKathiravan

    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 18 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #JactoGeo
    கடலூர்:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் பெருஞ்சித்திரன்(வயது 55), விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் அறிவழகன்(35), அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் நல்லூர் ஒன்றிய செய்தி தொடர்பாளர் சாஸ்தா(38), தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளர் தாமோதரன்(38), அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன்(52), தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கார்த்திகேயன்(44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் போராட்டத்தை முன்னின்று நடத்தியதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகள் சண்முகசாமி, ஏழுமலை உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். #JactoGeo
    அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின.
    ஈரோடு:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும் (8-ந் தேதி), நாளையும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    மேலும் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் ஆகியோரும் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பவானியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐ.ஓ.பி. வங்கி போன்ற வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

    இந்த வங்கிகளில் பணிபுரியும் 650 ஊழியர்களும் இன்று பணிக்கு வரவில்லை. இதனால் ஊழியர்கள் இல்லாமல் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பணபரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

    வேலை நிறுத்தம் பற்றி தெரியாத பலர் வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இன்று மட்டும் ரூ. 300 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

    நாளையும் போராட்டம் நடப்பதால் மேலும் ரூ. 300 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 600 தபால் ஊழியர்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் தபால் பட்டு வாடா சேவைகள் முடங்கின. ரூ. 100 கோடிக்கு பண பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது.

    ஈரோட்டில் காந்திஜி ரோட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான தொலை தொடர்பு அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், பிரப் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகியவையும் இன்று செயல்படவில்லை.

    இந்த அலுவலகங்கள் முன்பு அகில இந்திய வேலை நிறுத்தம் என்று மிகப்பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது.

    அனைத்து தொழிற்சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால் போக்குவரத்து முடங்கும் அபாயம் இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் வழக்கம்போல் ஓடின.

    தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின. ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, கொடுமுடி, அந்தியூர் மற்றும் தாளவாடி ஆகிய ஊர்களின் பஸ் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இதேபோல ஈரோடு மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் வழக்கம்போல திறந்திருந்தன.
    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பருவ மழை பெய்து வருகிறது. #Rain

    ஈரோடு:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. ஈரோட்டிலும் கடந்த 2 நாட்களாக மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது.

    நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது.

    டி.என்.பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியில் அதிகபட்சமாக 30 மி.மீட்டர் மழை பெய்தது.

    மேலும் பவானிசாகர், சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, பவானி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகயிலும் மிதமான மழை பெய்தது.

    இந்த மழையால் வெப்பம் அடியோடு தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    வனப்பகுதியான தாளவாடியில் நேற்று முன்தினம் நல்ல வெயில் அடித்தது. அதே சமயம் இரவில் சாரல்மழை தூறிக்கொண்டிந்தது. தாளவாடி பகுதியில் 18 மி.மீ. மழை பெய்தது.

    ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழைதூறிக்கொண்டே இருந்தது.

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 4,738 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். #TN #TNDraftRoll
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10-1-2018 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது மொத்தம் 18 லட்சத்து 37ஆயிரத்து 652 வாக்காளர்கள் இருந்தனர்.

    அந்த வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்காதவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவும், நீக்க விரும்புபவர்கள் நீக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    அதன்படி பலர் விண்ணப்பம் செய்திருந்தனர். அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அந்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    பட்டியலை மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமி‌ஷனர் சீனி அஜ்மல்கான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நர்மதா தேவி, பல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    புதிய பட்டியலின்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 1098 பேர் சேர்க்கப்பட்டு, 272 பேர் நீக்கப்பட்டனர். ஈரோடு மேற்கு தொகுதியில் 1754 பேர் சேர்க்கப்பட்டு, 425 பேர் நீக்கப்பட்டனர்.

    மொடக்குறிச்சி தொகுதியில் 1005 பேர் சேர்க்கப்பட்டு, 446 பேர் நீக்கப்பட்டனர். பெருந்துறை தொகுதியில் 223 பேர் சேர்க்கப்பட்டு, 42 பேர் நீக்கப்பட்டனர்.

    பவானி தொகுதியில் 780 பேர் சேர்க்கப்பட்டு, 243 பேர் நீக்கப்பட்டனர். அந்தியூர் தொகுதியில் 419 பேர் சேர்க்கப்பட்டு, 65 பேர் நீக்கப்பட்டனர்.

    கோபி தொகுதியில் 875 பேர் சேர்க்கப்பட்டு, 787 பேர் நீக்கப்பட்டனர். பவானிசாகர் தொகுதியில் 961 பேர் சேர்க்கப்பட்டு, 97 பேர் நீக்கப்பட்டனர்.

    ஆக மொத்தமாக மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்து 115 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். 2 ஆயிரத்து 377 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

    புதிய வாக்காளர் பட்டியலில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 8 தொகுதிகளிலும் மொத்தம் 18 லட்சத்து 42 ஆயிரத்து 390 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் 9 லட்சத்து 4 ஆயிரத்து 432 ஆண்களும், 9 லட்சத்து 37 ஆயிரத்து 888 பெண்களும் அடங்குவர். ஆண்களைவிட பெண்களே அதிகமாக உள்ளனர். மற்றவர்கள் 70 பேர் உள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை விட இந்த புதிய பட்டியலில் புதிதாக 4738 வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர்.

    இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 980 வாக்காளர்களும், ஈரோடு மேற்கு தொகுதியில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 103 வாக்காளர்களும் உள்ளனர்.

    மொடக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 960 வாக்காளர்களும், பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 15 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    பவானி தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 687 வாக்காளர்களும், அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 666 வாக்காளர்களும் உள்ளனர்.

    கோபி தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 616 வாக்காளர்களும், பவானி சாகர் 2 லட்சத்து 43 ஆயிரத்து 363 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
    ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான வரும் 15-ந் தேதி (புதன்கிழமை) கிராம சபா கூட்டம் நடக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான வரும் 15-ந் தேதி (புதன்கிழமை) கிராம சபா கூட்டம் நடக்கிறது.

    கிராமசபா கூட்டம் பற்றி மக்களிடையே குறிப்பாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மகளிர் மேம்பாட்டு திட்ட சுய உதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டு சமுதாய கடமை ஆற்ற வேண்டும்.

    மேலும் ஊராட்சிகளில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, திறந்த மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து விபத்துக்கள் நிகழ்வதைத் தவிர்த்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்குதல், தூய்மைப்பணி மேற்கொள்ளுதல் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழித்தல் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகள் குறித்து அனைத்து வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபாகர் கேட்டு கொண்டுள்ளார்.
    திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் அவரது படத்துக்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    ஈரோடு:

    தி.மு.க.தலைவர் முதுபெரும் தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி மறைவு தமிழக மக்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.

    கருணாநிதி மறைந்தார் என்ற செய்தியை தமிழர்களால் இன்னும் நம்பமுடியவில்லை.

    சென்னைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே என ஈரோடு மாவட்ட மக்கள், தி.மு.க. தொண்டர்கள், தமிழ்பால் பற்றுள்ளவர்கள் தங்கள் வசிக்கும் ஒவ்வொரு ஊர்களிலும் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், அத்தாணி, பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி, தாளவாடி, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அரச்சலூர், டி.என்.பாளையம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் கலைஞருக்கு இதய அஞ்சலி செலுத்துவதற்காக அடைக்கப்பட்டன.

    பல கடைகள் முன் வியாபாரிகள் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி வைத்திருந்ததை காண முடிந்தது.

    அத்தியாவசியமான பொருளான பால் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு உள்பட அனைத்து ஊர்களிலும் ரோட்டோரங்களில் வேன் மூலம் பால் விற்பனை செய்து வந்தனர்.மேலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு டீக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.

    பொது மக்கள் மற்றும் தி.மு.க.தொண்டர்கள் ஆங்காங்கே கூடி நின்று கருணாநிதி பற்றியே பேசிக் கொண்டே இருந்தனர்.

    ஈரோடு உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கிடந்ததால் கடை வீதிகள் மற்றும் முக்கிய இடங்கள் வெறிச்சோடி போய் கிடந்தன. ஒவ்வொருவர் வீட்டிலும் தங்கள் வீட்டில் ஒரு பெரியவர் காலமானதை போல் நினைத்து பாகுபாடின்றி தி.மு.க.தலைவர் கருணாநிதிக்கு இதய அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    ஈரோடு:

    பெட்ரோல், டீசல் விலையை 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்தம் போராட்டம் நேற்று முதல் தொடங்கியது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை. சித்தோடு அருகே உள்ள நரிப்பள்ளம் ஓடையில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இன்று லாரி வேலை நிறுத்த போராட்டம் 2-வது நாளாக நீடித்தது. இன்றும் நரிப்பள்ளம் ஓடையில் 200-க்கும் மேற்பட் ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களும், கிளீனர்களும் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.

    லாரி ஸ்டிரைக்கால் ஜவுளி பொருட்கள், மஞ்சள், எண்ணெய் வித்துகள், காய்கறிகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றி செல்லும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது.

    லாரி ஸ்டிரைக் காரணமாக குடோனில் தேங்கியுள்ள நூல் பண்டல்கள்

    இது குறித்து ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி கூறியதாவது.-

    ஈரோட்டில் இருந்து தினமும் 2,500 லாரிகள் சென்னை, மும்பை, மேற்கு வங்காளம்,கொல்கத்தா போன்ற பெரும் நகரங்களுக்கு சென்று வருகிறது. பிற மாவட்டங்களுக்கு ஈரோட்டில் இருந்து தினமும் 1000 லாரிகள் சென்று வந்தது.தற்போது நடந்து வரும் ஸ்டிரைக்கால் இந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    நாங்கள் எங்கள் வாழ்வாதார பிரச்சினைக்காக போராடி வருகிறோம். எனவே மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike
    பிளஸ் 1 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த தேர்விலும் மாணவிகளே ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். #TNHSCResult #PlusOneResult2018 #ErodePlusonetop
    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக இந்த ஆண்டு பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

    பிளஸ் 1 தேர்வில் பள்ளி மாணாக்கராகவும் தனித் தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 8,63,668. பள்ளி மாணாக்கராய் தேர்வு எழுதியோர் 8,47,648. மாணவியரின் எண்ணிக்கை 4,54,215. மாணவர்களின் எண்ணிக்கை 3,93,433. பொதுப் பாடப்பிரிவில் தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை 7,92,331. தொழிற்பாடப் பிரிவில் தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை 55,317. தேர்ச்சி பெற்றவர்கள் 91.3 சதவீதம். மாணவியர் 94.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.4 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.2 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

    மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7070. இதில் 2054 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 2724 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    36,380 மாணவர்கள் 500-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதில் மாணவியர் எண்ணிக்கை 25412. மாணவர்களின் எண்ணிக்கை 10968.

    தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 97.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்து திருப்பூர் மாவட்டம் 96.4 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 96.2 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. #TNHSCResult #PlusOneResult2018 #ErodePlusonetop
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோபி, தாளவாடி, சத்தியமங்கலம், அந்தியூர், அம்மாபேட்டை, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள குளங்கள், நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.

    நேற்று முன்தினம் கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் 1 கோடி மதிப்பிலான வாழை தோட்டங்கள் சேதம் அடைந்தன. இதே போல் அந்தியூர் பகுதியிலும் பலத்த சேதம் அடைந்தன.

    இந்நிலையில் நேற்று இரவும் சத்தியமங்கலம், கொடிமுடி, பவானிசாகர், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு.-

    சிவகிரி -8.3, வெள்ளக்கோவில்-6.4, கொடிவேரி -2.2, பவானிசாகர் அணைக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 50.44 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 794 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்ருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    ×