search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி ஸ்டிரைக் இன்று 2-வது நாளாக நீடிப்பு- ஈரோடு மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம்
    X

    லாரி ஸ்டிரைக் இன்று 2-வது நாளாக நீடிப்பு- ஈரோடு மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம்

    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    ஈரோடு:

    பெட்ரோல், டீசல் விலையை 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்தம் போராட்டம் நேற்று முதல் தொடங்கியது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை. சித்தோடு அருகே உள்ள நரிப்பள்ளம் ஓடையில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இன்று லாரி வேலை நிறுத்த போராட்டம் 2-வது நாளாக நீடித்தது. இன்றும் நரிப்பள்ளம் ஓடையில் 200-க்கும் மேற்பட் ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களும், கிளீனர்களும் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.

    லாரி ஸ்டிரைக்கால் ஜவுளி பொருட்கள், மஞ்சள், எண்ணெய் வித்துகள், காய்கறிகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றி செல்லும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது.

    லாரி ஸ்டிரைக் காரணமாக குடோனில் தேங்கியுள்ள நூல் பண்டல்கள்

    இது குறித்து ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி கூறியதாவது.-

    ஈரோட்டில் இருந்து தினமும் 2,500 லாரிகள் சென்னை, மும்பை, மேற்கு வங்காளம்,கொல்கத்தா போன்ற பெரும் நகரங்களுக்கு சென்று வருகிறது. பிற மாவட்டங்களுக்கு ஈரோட்டில் இருந்து தினமும் 1000 லாரிகள் சென்று வந்தது.தற்போது நடந்து வரும் ஸ்டிரைக்கால் இந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    நாங்கள் எங்கள் வாழ்வாதார பிரச்சினைக்காக போராடி வருகிறோம். எனவே மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike
    Next Story
    ×