என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி ஸ்டிரைக் இன்று 2-வது நாளாக நீடிப்பு- ஈரோடு மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம்
Byமாலை மலர்21 July 2018 7:40 AM GMT (Updated: 21 July 2018 7:40 AM GMT)
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது. #LorryStrike
ஈரோடு:
பெட்ரோல், டீசல் விலையை 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்தம் போராட்டம் நேற்று முதல் தொடங்கியது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை. சித்தோடு அருகே உள்ள நரிப்பள்ளம் ஓடையில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இன்று லாரி வேலை நிறுத்த போராட்டம் 2-வது நாளாக நீடித்தது. இன்றும் நரிப்பள்ளம் ஓடையில் 200-க்கும் மேற்பட் ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களும், கிளீனர்களும் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.
இது குறித்து ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி கூறியதாவது.-
ஈரோட்டில் இருந்து தினமும் 2,500 லாரிகள் சென்னை, மும்பை, மேற்கு வங்காளம்,கொல்கத்தா போன்ற பெரும் நகரங்களுக்கு சென்று வருகிறது. பிற மாவட்டங்களுக்கு ஈரோட்டில் இருந்து தினமும் 1000 லாரிகள் சென்று வந்தது.தற்போது நடந்து வரும் ஸ்டிரைக்கால் இந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாங்கள் எங்கள் வாழ்வாதார பிரச்சினைக்காக போராடி வருகிறோம். எனவே மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike
பெட்ரோல், டீசல் விலையை 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்தம் போராட்டம் நேற்று முதல் தொடங்கியது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை. சித்தோடு அருகே உள்ள நரிப்பள்ளம் ஓடையில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இன்று லாரி வேலை நிறுத்த போராட்டம் 2-வது நாளாக நீடித்தது. இன்றும் நரிப்பள்ளம் ஓடையில் 200-க்கும் மேற்பட் ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களும், கிளீனர்களும் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.
லாரி ஸ்டிரைக்கால் ஜவுளி பொருட்கள், மஞ்சள், எண்ணெய் வித்துகள், காய்கறிகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றி செல்லும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது.
லாரி ஸ்டிரைக் காரணமாக குடோனில் தேங்கியுள்ள நூல் பண்டல்கள்
ஈரோட்டில் இருந்து தினமும் 2,500 லாரிகள் சென்னை, மும்பை, மேற்கு வங்காளம்,கொல்கத்தா போன்ற பெரும் நகரங்களுக்கு சென்று வருகிறது. பிற மாவட்டங்களுக்கு ஈரோட்டில் இருந்து தினமும் 1000 லாரிகள் சென்று வந்தது.தற்போது நடந்து வரும் ஸ்டிரைக்கால் இந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாங்கள் எங்கள் வாழ்வாதார பிரச்சினைக்காக போராடி வருகிறோம். எனவே மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X