search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை
    X

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோபி, தாளவாடி, சத்தியமங்கலம், அந்தியூர், அம்மாபேட்டை, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள குளங்கள், நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.

    நேற்று முன்தினம் கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் 1 கோடி மதிப்பிலான வாழை தோட்டங்கள் சேதம் அடைந்தன. இதே போல் அந்தியூர் பகுதியிலும் பலத்த சேதம் அடைந்தன.

    இந்நிலையில் நேற்று இரவும் சத்தியமங்கலம், கொடிமுடி, பவானிசாகர், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு.-

    சிவகிரி -8.3, வெள்ளக்கோவில்-6.4, கொடிவேரி -2.2, பவானிசாகர் அணைக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 50.44 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 794 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்ருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×