search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grama sabha meetings"

    ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான வரும் 15-ந் தேதி (புதன்கிழமை) கிராம சபா கூட்டம் நடக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான வரும் 15-ந் தேதி (புதன்கிழமை) கிராம சபா கூட்டம் நடக்கிறது.

    கிராமசபா கூட்டம் பற்றி மக்களிடையே குறிப்பாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மகளிர் மேம்பாட்டு திட்ட சுய உதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டு சமுதாய கடமை ஆற்ற வேண்டும்.

    மேலும் ஊராட்சிகளில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, திறந்த மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து விபத்துக்கள் நிகழ்வதைத் தவிர்த்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்குதல், தூய்மைப்பணி மேற்கொள்ளுதல் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழித்தல் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகள் குறித்து அனைத்து வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபாகர் கேட்டு கொண்டுள்ளார்.
    ×