search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voting booth"

    ஈரோடு அடுத்த சித்தோட்டில் வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் காவேரி ரோடு மாசிமலை வீதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 52). இவரது மனைவி பெயர் பாவாத்தாள். கவுதம் என்ற மகனும், காவியா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் மூர்த்தி சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோட்டை அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்களும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தியும் இந்த வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்- இன்ஸ்பெக்டர் மூர்த்திக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தப்படி சரிந்து விழுந்தார்.

    உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மற்ற போலீசார் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி கொண்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர் அவரை பரிசோதித்த போது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    திடீர் மாரடைப்பில் இறந்த சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி உடல் பவானி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திடீர் மாரடைப்பில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
    கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெள்ளக்கவி , நாமக்கல்லின் கேடமலை, ஈரோட்டின் கதிரிப்பட்டி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு உபகரணங்களை எடுத்துச் செல்ல கழுதைகள் பயன்படுத்தப்பட்டன. #LoksabhaElections2019

    சென்னை, ஏப்.19-

    தமிழகம், புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடந்தது.

    தேர்தலில் பயன் படுத்தப் படும் வாக்குப்பதிவு இயந் திரங்களை இடம் மாற்று வதற்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட வாக னங்கள் பயன்படுத்தப் படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தின் மலைப் பகுதி களில் வாக்குப்பதிவு இயந் திரங்களையும் உபகரணங் களையும் இடம் மாற்ற ஜி.பி.எஸ் தொழில்நுட்பங் களை பயன்படுத்த முடியாது.

    மலை உச்சியில் உள்ள சில குக்கிராமங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது கடின மான பணி. சில பகுதி களுக்கு வாகனங்களில் செல்ல வழியே இல்லை.

    தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களி லுள்ள தொலைதூர கிராம வாக்குச்சாவடிகளுக்கும் சுமார் 300 முதல் 1100 வாக்காளர்கள் உள்ளனர். தர்மபுரி மாவட் டம் பென்னாகரம் பகுதி யிலுள்ள கோட்டூர், நாமக்கல் மாவட்டம் போத மலை போன்ற பகுதிகள் பாறைகள் நிறைந்த கரடு முரடானவை.

    இந்த பகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங் களையும், உப கரணங்களை யும் தேர்தல் அதிகாரிகள் சாக்குப்பைகளில் கட்டி கழுதைகளிலும், குதிரை களிலும் ஏற்றி தொலைதூர வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்சென்றுள்ளனர். சிலர் பொருட்களை தலை யில் சுமந்தபடி சென்றனர். இவர்கள் மலைப் பகுதிகளில் 9 முதல் 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெள்ளக்கவி மற்றும் பள்ளத்துக்காடு, நாமக்கல்லின் கேடமலை, ஈரோட்டின் கதிரிப்பட்டி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு உபகரணங் களை எடுத்துச் செல்ல கழுதைகள் பயன் படுத்தப் பட்டன.

    வெள்ளக் கவி கிராமம் போன்ற சில வாக்குச்சாவடிகள் அடர்ந்த மலைக் காடுகளுக்கிடையே இருப்பதால் நக்சல் தடுப்பு போலீசாரின் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் பயணம் செய்தனர். பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்பட்டது.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வாக்குச்சாவடி மையத்தில் பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அக்கிசெட்டிபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டு இருந்தது.

    இந்த வாக்குப்பதிவு மையத்தில் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் சசிகலா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் விஜய் (வயது 29) என்பவர் அங்கு வந்து பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதை பார்த்த சசிகலா, வாக்குச்சாவடி அருகே நிற்கக்கூடாது, இங்கிருந்து செல்லுங்கள் என கூறினார்.

    அதற்கு விஜய், ஆபாசமாக பேசி தகராறு செய்தார். மேலும் மிரட்டல் விடுத்து தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதையறிந்ததும், சக போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே விஜய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து சசிகலா ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கேசவன் விசாரணை நடத்தி, பெண் போலீசை ஆபாசமான வாத்தையால் பேசியது, அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, அவமானப்படுத்தி வன்கொடுமை செயலில் ஈடுபட்டது என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயை கைது செய்தார்.

    பின்னர் போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வாலாஜா அருகே வாக்குசாவடி மையத்தில் மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    வாலாஜா:

    வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம் ஆகிய 3 சட்டமன்ற இடைதேர்தல் வாக்குபதிவு இன்று நடந்து வருகிறது.

    இந்நிலையில் வாலாஜா அருகே உள்ள அனந்தலை குளத்துதெருவை சேர்ந்தவர் துளசி (வயது 80). இவர் இன்று அதே பகுதியில் உள்ள அரசு நிதியுதவி நடு நிலைபள்ளி மையத்தில் உள்ள வாக்குசாவடியில் ஓட்டு போடுவதற்காக சென்றார்.

    வாக்குசாவடி மையத்தின் உள்ளே சென்ற போது திடீரென மயங்கி விழந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது. #LSPolls
    திருச்சி:

    தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு விதிமுறைகளை தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. அதன்படி வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து தேர்தல் கமி‌ஷன் விதிமுறைகள் குறித்து திருச்சியை சேர்ந்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது :-

    பாராளுமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட எல்லா வேட்பாளர்களின் வாக்குச் சாவடி ஏஜெண்டுகள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மட்டுமே தங்கள் செல்போன்களை பயன்படுத்தலாம்.

    அவர்கள் செல்போனை தேர்தல் அதிகாரிகள் எந்த நேரமும் தொடர்பு கொள்வார்கள். அதே சமயம் வாக்குச் சாவடி தலைமை அலுவலர் தங்கள் தேவைகளுக்கு உடனடியாக தொடர்புடைய அதிகாரிகளுடன் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும். வெளிநபர்களோ அல்லது வெளிநபர்களுக்கோ இந்த செல்போனில் இருந்து தொடர்பு கொள்ளக்கூடாது. இந்த செல்போன் எப்போதும் ஆன் செய்து இருக்க வேண்டும். வேறு செல்போன்களுக்கு வாக்குச்சாவடியில் கட்டாயமாக அனுமதியில்லை.

    அதே சமயம் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குப் பதிவை கண்காணிக்கும் திட்டத்தை தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. அதன் படி வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் எஸ்.எம்.எஸ். குறியீடுகள் கொண்ட அட்டை, வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கு முன்பாகவே வழங்கப்படும்.

    இந்த திட்டம் மூலம் வாக்குச்சாவடியின் செயல்பாடு குறித்த ஒவ்வொரு விவரமும், அதாவது முதல் நாள் வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடியை சென்றடைதல், வாக்குப்பதிவு பொருட்கள் சென்றடைதல், மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், ஒவ்வொரு நேரத்துக்கும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் வாக்குப் பதிவு விவரம் தெரிவித்தல், முக்கிய நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் மற்றும் வாக்குப்பதிவு நிறைவடைதல் ஆகியவற்றை குறிப்பிட்ட குறியீட்டின் மூலம் வாக்குப் பதிவு தலைமை அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் மாநில தலைமை தேர்தல் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும்.

    எஸ்.எம்.எஸ். முறையில் பயிற்சி பெற ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் அந்தந்த வாக்குச்சாவடியில் உள்ள வெப் கேமிரா ஆபரேட்டர் இருந்தால் அவரது உதவியுடன் தகவல்களை தெரிவிக்கலாம். அதனால் வாக்குச் சாவடி அலுவலர்கள் எஸ்.எம்.எஸ். தகவல் முறையை நன்கு அறிந்து கொண்டு அதற்குரிய வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #LSPolls
    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். #LSPolls #collectorKathiravan
    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது.

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அரசியல்வாதிகள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் கலெக்டர் கதிரவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் ஆணையம் நடத்தை விதிமுறை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

    அதன்படி இந்த தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறிய ஒப்புகை சீட்டு நடைமுறை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மையம் குறித்தும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

    இதன்படி அரசு மற்றும் அனுமதி பெறாமல் தனியார் சுவர்களில் செய்யப்பட்டுள்ள கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

    மேலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரசார நடவடிக்கையில் யாரும் ஈடுபடக் கூடாது. தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் வகையில் பறக்கும் கண்காணிப்பு குழுக்கள் நிலை கண்காணிப்பு குழுக்கள் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் வீடியோ பார்வை குழுக்கள் என ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வாக்களிப்பதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

    குறிப்பாக கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் , வயதானவர்கள் சிரமமின்றி வாக்களிக்க பல சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் செயல்படுவார்கள். தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க தனியாக வாட்ஸ்-அப் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் ரூபாய் 50,000 வரை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல் பணம் எடுத்து சென்றால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    முடிந்த அளவு ஆன்லைன் பணவர்த்தனை முறையை பின்பற்றினால் சிறந்ததாக இருக்கும். இதில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை. வீடியோ குலுக்கல் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மலை கிராம மக்களும் சிரமமின்றி வாக்கு பதிவு செய்ய பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவர் அவர் கூறினார். #LSPolls #collectorKathiravan

    ×