search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதித்யா தாக்கரே"

    • அஜித் பவார் தலைமையிலான அணிதான் தேசியவாத காங்கிரஸ் என அங்கீகரிக்கப்பட்டது.
    • கடிகாரம் சின்னத்தை பயன்படுத்தும் அதிகாரமும் அஜித் பவார் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.க்களை பிரித்துக் கொண்டு சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் ஏக் நாத் ஷிண்டேவின் ஆட்சியில் இணைந்து அம்மாநிலத்தின் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    சரத் பவார் நாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றார். அதேவேளையில் அஜித் பவார் நாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றார். இதனால் இரு தரப்பிலும் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என நேற்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அத்துடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடிகாரம் சின்னத்தை பயன்படுத்தும் உரிமையையும் வழங்கியது.

    இது சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் மகனும், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்யா தாக்கரே தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "தேர்தல் ஆணையம் தானாகவே திருட்டை சட்டப்பூர்வமாக்கத் தொடங்கும்போது, ஜனநாயகம் அழிந்துவிட்டது என்பது உங்களுக்கு தெரியும். தேர்தல் ஆணையம் மோசடி செய்தது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. அது தேர்தல் ஆணையம் அல்ல. "முற்றிலும் சமரசம் (Entirely Compromised)". நாங்கள் சுதந்திரமானவர்கள் அல்ல, நியாயமான ஜனநாயகம் இல்லை என்பதை அனைவருக்கும் அவர்கள் காட்டுகிறார்கள்" என்றார்.

    முன்னதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் இருந்து ஏக் நாத் ஷிண்டே பிரிந்து சென்று நாங்கள்தான் சிவசேனா கட்சி எனத் தெரிவித்தது. அத்துடன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான விவகாரத்திலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிதான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அஜிப் பவார் உடன் இணைந்து பா.ஜனதா ஆட்சியமைக்க திட்டம்
    • ஏக்நாத் ஷிண்டேவை ராஜினாமா செய்யச் சொன்னதாக தகவல்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து, அஜித் பவார் தனது கூட்டாளிகளுடன் பிரிந்து சென்று மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தனர். அவர் துணை முதல்வராக பதவி ஏற்ற நிலையில், 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

    அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்ததில் இருந்து மூன்று கட்சிகளில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

    1. தேசியவாத காங்கிரஸ் கட்சி

    தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு சரத் பவார்- அஜித் பவார் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. டெல்லியில சரத் பவார் செயற்குழு கூட்டத்தை கூட்டியதுடன், கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.

    அஜித் பவர் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளார். அதில் தனக்கு அதிக அளவில் கட்சி தலைவர்கள், கட்சி எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அந்த கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது

    2. ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா

    முதலமைச்சராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சியில் மிகப்பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அஜித் பவார் கட்சியுடன் கைக்கோர்த்தது சிவசேனாவில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்களுக்கு பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் சித்தாந்தம். பால் தாக்கரே ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவது குறித்து சிந்தித்தது கிடையாது என்பதுதான்.

    மேலும், ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்ய வேண்டும் என கருத்து வெளிப்பட்டதாகவும், அவர் ராஜினாமா செய்ய முன்னவந்ததாகவும் தகவல் வெளியானது. பின்னர் ஷிண்டே ராஜினாமா செய்யமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

    3. பா.ஜனதா

    பா.ஜனதா கட்சியிலும் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் பவார் உடன் இணைவது அந்தக்கட்சியில் உள்ளவர்களுக்கும் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே அஜித் பவார் உடன் இணைந்து ஷிண்டேவை ஓரங்கட்ட பா.ஜனதா நினைத்துள்ளதாகவும் கட்சிக்குள் பேசப்படுகிறது.

    இந்த நிலையில் ஆதித்யா தாக்கரே ''பா.ஜனதா ஏக்நாத் ஷிண்டு குரூப்பை ஓரங்கட்டுகிறது. தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் குரூப் உடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஷிண்டே ராஜினாமா செய்ய கேட்கப்பட்டுள்ளார். இதனால் மகாராஷ்டிர மாநில அரசில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது'' என்றார்.

    இதற்கிடையே உத்தவ் தாக்கரே சிவசேனாவின் சஞ்ச் ராவத் ''அஜித் பவார் அரசில் இணைந்தது பிடிக்கவில்லை என்பதால் ஷிண்டேவின் சிவசேனா எம்.எல்.ஏ.-க்கள் சுமார் 18 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • மகாராஷ்டிராவின் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ராகுல் காந்தி யாத்திரை செல்கிறார்.
    • ராகுல் காந்தி வரும் 20-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் மகாராஷ்டிரா சென்றார்.

    ராகுல் காந்தியின் பாதயாத்திரை மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் நுழைந்தபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்குச் செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்கிறார்.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் இன்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். அவர் ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது சிவசேனா தொண்டர்கள் கோஷமெழுப்பினர்.

    ×