search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குழப்பமான சூழ்நிலையில் மகாராஷ்டிரா அரசியல்: ஆதித்யா தாக்கரேயின் கணிப்பு
    X

    குழப்பமான சூழ்நிலையில் மகாராஷ்டிரா அரசியல்: ஆதித்யா தாக்கரேயின் கணிப்பு

    • அஜிப் பவார் உடன் இணைந்து பா.ஜனதா ஆட்சியமைக்க திட்டம்
    • ஏக்நாத் ஷிண்டேவை ராஜினாமா செய்யச் சொன்னதாக தகவல்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து, அஜித் பவார் தனது கூட்டாளிகளுடன் பிரிந்து சென்று மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தனர். அவர் துணை முதல்வராக பதவி ஏற்ற நிலையில், 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

    அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்ததில் இருந்து மூன்று கட்சிகளில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

    1. தேசியவாத காங்கிரஸ் கட்சி

    தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு சரத் பவார்- அஜித் பவார் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. டெல்லியில சரத் பவார் செயற்குழு கூட்டத்தை கூட்டியதுடன், கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.

    அஜித் பவர் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளார். அதில் தனக்கு அதிக அளவில் கட்சி தலைவர்கள், கட்சி எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அந்த கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது

    2. ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா

    முதலமைச்சராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சியில் மிகப்பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அஜித் பவார் கட்சியுடன் கைக்கோர்த்தது சிவசேனாவில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்களுக்கு பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் சித்தாந்தம். பால் தாக்கரே ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவது குறித்து சிந்தித்தது கிடையாது என்பதுதான்.

    மேலும், ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்ய வேண்டும் என கருத்து வெளிப்பட்டதாகவும், அவர் ராஜினாமா செய்ய முன்னவந்ததாகவும் தகவல் வெளியானது. பின்னர் ஷிண்டே ராஜினாமா செய்யமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

    3. பா.ஜனதா

    பா.ஜனதா கட்சியிலும் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் பவார் உடன் இணைவது அந்தக்கட்சியில் உள்ளவர்களுக்கும் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே அஜித் பவார் உடன் இணைந்து ஷிண்டேவை ஓரங்கட்ட பா.ஜனதா நினைத்துள்ளதாகவும் கட்சிக்குள் பேசப்படுகிறது.

    இந்த நிலையில் ஆதித்யா தாக்கரே ''பா.ஜனதா ஏக்நாத் ஷிண்டு குரூப்பை ஓரங்கட்டுகிறது. தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் குரூப் உடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஷிண்டே ராஜினாமா செய்ய கேட்கப்பட்டுள்ளார். இதனால் மகாராஷ்டிர மாநில அரசில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது'' என்றார்.

    இதற்கிடையே உத்தவ் தாக்கரே சிவசேனாவின் சஞ்ச் ராவத் ''அஜித் பவார் அரசில் இணைந்தது பிடிக்கவில்லை என்பதால் ஷிண்டேவின் சிவசேனா எம்.எல்.ஏ.-க்கள் சுமார் 18 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×