search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Facebook"

    • முகநூலில் சமீபத்தில் வெளிவந்த இது போன்ற கருத்து பதிவு குறித்து பா.ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர், பாலோடு போலீசில் புகார் தெரிவித்தார்.
    • இந்த பதிவுகள் அரசியல் கட்சி ஆர்வலர்களிடையே பதட்டத்தை தூண்டுவதாக உள்ளது

    திருவனந்தபுரம்:

    பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரப்பப்படுவதாக கேரள போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முகநூலில் சமீபத்தில் வெளிவந்த இது போன்ற கருத்து பதிவு குறித்து பா.ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர், பாலோடு போலீசில் புகார் தெரிவித்தார்.

    அதில், கேரளாவை சேர்ந்த நபீல் நாசர் என்பவர் தான் இது போன்ற கருத்துக்களை பதிவிடுவதாகவும், கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி முதல் ஆட்சேபணைக்கு ரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டு வருகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடியின் புகழை கெடுக்கும் நோக்கத்துடன் அவருக்கு எதிராக போலியான அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாகவும், இந்த பதிவுகள் அரசியல் கட்சி ஆர்வலர்களிடையே பதட்டத்தை தூண்டுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஐ.பி.சி.153, 171ஜி மற்றம் கேரள போலீஸ் சட்டத்தின் 120 (ஒ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தி.மு.க. வக்கீல் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, ஓலைப்பாடி கிராமத்தை சார்ந்த பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனை போல, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக தி.மு.க. வக்கீல் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொலையனூர் கிராமத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் திருமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக பெரிய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பள்ள கிருஷ்ணாபுரத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது
    • நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

    கேரளாவில் சுகாதாரத்துறை பணியாளர்கள் சமூக வலைத்தளங்களில் Content Creator-களாக இருக்கக் கூடாது என வழங்கப்பட உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

    தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதில் யூட்யூப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றவை முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் ஏராளமானோர் நடனமாடுவது, தங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவது போன்றவற்றை செய்து வருகிறார்கள். இதில் அரசு ஊழியர்களும் அடங்குவர்.

    கேரளாவில் சுகாதாரத்துறை பணியாளர்கள் பலர் சீருடையில் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து நடனமாடி வீடியோ பதிவேற்று வந்தனர். இந்நிலையில் சுகாதாரத் துறை பணியாளர்கள் சமூக வலைத்தளங்களில் Content Creator-களாக இருக்க கூடாது என கேரள அரசு மார்ச் 13-ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டது.

    இந்த சுற்றறிக்கைக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் இந்த சுற்றறிக்கையை கேரள அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், அந்த சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு நிலையில், அந்த உத்தரவை கேரள அரசு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

    • மெட்டா-வின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்கள் இயங்கி வருகின்றன
    • கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 50 லட்சத்திற்கும் மேல் பயனர்கள் பின் தொடர்கின்றனர்

    உலகெங்கும் பிரபலமாக உள்ள சமூக வலைதளங்களில், அமெரிக்காவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரு தளங்கள் முன்னணியில் உள்ளன.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதால் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், தங்கள் கருத்துகள் மக்களை எளிதில் சென்றடைய இவற்றை பயன்படுத்துகின்றனர்.

    மெட்டா எனும் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் இந்த 2 தளங்களும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய 2 தளங்களுக்கும் ஈரானில் தடை நிலவுகிறது.

    ஆனாலும், பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் இவற்றை பெருமளவில் "விபிஎன்" (VPN) மூலம் பயன்படுத்துகின்றனர்.

    இந்நிலையில், ஈரானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான 84-வயதாகும் "அயதுல்லா அலி கமேனி" (Ayatollah Ali Khamenei) பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் வைத்திருந்த சமூக வலைதள கணக்குகளை, கடந்த மாதம், மெட்டா நீக்கியது.


    இதற்கு உலகம் முழுவதும் உள்ள கமேனி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    தற்போது இது குறித்து ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒசைன் அமிர்-அப்தொல்லாகியான் (Hossein Amir-Abdollahian) தெரிவித்ததாவது:

    கருத்து சுதந்திரத்திற்கு எதிராகவும், கமேனியின் கோடிக்கணக்கான ஆதரவாளர்களை அவமானப்படுத்தும் விதமாகவும் மெட்டாவின் இந்த நடவடிக்கை உள்ளது.

    கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரை 50 லட்சத்திற்கும் மேல் பயனர்கள் பின் தொடர்கின்றனர்.

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலை கொண்டவர் கமேனி.

    கருத்து சுதந்திரம் குறித்து மேற்கத்திய நாடுகள் பெருமளவு பிரசாரங்கள் செய்கின்றன.

    ஆனால், அவை வெற்று முழக்கங்கள் என தற்போது தெளிவாகி விட்டது.

    தனது நடவடிக்கை மூலம் அவர்களின் மறைமுக அரசியல் உள்நோக்கங்கள் வெற்றி பெற மெட்டா உதவுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்குகின்றன
    • இன்று அமெரிக்க பங்கு சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது

    2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜூக்கர்பர்க் (Mark Zuckerberg) என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக் (Facebook).

    உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.

    தற்போது மெட்டா (Meta) எனும் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜூக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார்.

    நேற்று, உலகெங்கும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் முடங்கின.

    இதனால், அவற்றை பயன்படுத்தும் பயனர்கள், கருத்து பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட அதன் அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர்.

    சில மணி நேரங்கள் கடந்ததும் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.

    இந்நிலையில், இன்று அமெரிக்க பங்கு சந்தையில், மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது.

    இதனால் மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜூக்கர்பர்க், ரூ.25 ஆயிரம் கோடி ($3 பில்லியன்) சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    • 2008லிருந்து 2022 வரை தலைமை இயக்க அதிகாரியாக பணி புரிந்தார்
    • வர்த்தக ரீதியாக மெட்டா சிறப்பாக செயல்படுவதாக ஷெரில் தெரிவித்தார்

    மெட்டா (முன்னர் ஃபேஸ்புக்) நிறுவன முன்னாள் தலைமை இயக்க அதிகாரி (Chief Operating Officer) ஷெரில் சாண்ட்பர்க்.

    தற்போது 54 வயதாகும் (Sheryl Sandberg) 2008லிருந்து 2022 வரை மெட்டா தலைமை இயக்க அதிகாரியாக பணிபுரிந்தார். அதற்கு பிறகு நிர்வாக இயக்குனர்களில் ஒருவராக பொறுப்பேற்று நிறுவனத்தை வழிநடத்தினார்.

    வரும் மே மாதம், மெட்டா நிர்வாக இயக்குனர்கள் குழுவில் ஷெரிலின் பதவிக் காலம் நிறைவடைகிறது.

    இந்நிலையில், ஷெரில் மெட்டா நிறுவனத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

    தனது ஃபேஸ்புக் பதிவில் இது குறித்து ஷெரில், "வர்த்தக ரீதியாக மெட்டா சிறப்பாக செயல்படுகிறது. எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படும். எனவே, இது பிறருக்கு வழி விட சரியான தருணம். மெட்டாவிற்கு ஆலோசனை கூற எப்போதும் தயாராக உள்ளேன். ஜுகர்பர்கிற்கும் பிற நிர்வாக இயக்குனர்களுக்கும் நன்றி" என பதிவிட்டார்.

    ஷெரில் முடிவிற்கு மெட்டா நிறுவனர், மார்க் ஜுகர்பர்க் (Mark Zuckerberg) "ஒரு புதிய அத்தியாயத்தை எதிர்நோக்குகிறோம்" என பதிலளித்தார்.

    சுமார் 12 வருட காலம் மெட்டா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஷெரில், தலைமை இயக்க அதிகாரி பொறுப்பில் 14 வருட காலம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மெட்டா நிறுவனத்திற்கு அடுத்த நிலையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்றிருந்த ஷெரில், ஃபேஸ்புக்கில் விளம்பர வருவாயை ஊக்குவிக்கும் தற்போதைய வடிவமைப்பை கொண்டு வந்தவர். ஃபேஸ்புக் தள உள்ளடக்கத்தில் பல சர்ச்சைக்குரிய சிக்கல்கள் எழுந்த போது அவற்றை சரி செய்து நிறுவன நற்பெயரை காப்பாற்ற பல முடிவுகளை எடுத்தவர்.

    ஷெரில் சாண்ட்பர்கின் நிகர சொத்து மதிப்பு, சுமார் $1.9 பில்லியன் என்கிறது பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டு, பின்னர் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது.
    • திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்கால்:

    காரைக்கால் திருநள்ளாறில் பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு என்று தனியாக முகநூல் (பேஸ்புக்) பக்கம் உள்ளது.

    இதில் கோவிலில் நடைபெறும் விழாக்கள், பூஜைகள் விவரம், கோவில் வரலாறு மற்றும் சாமியின் புகைப்படங்கள பதிவிடப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கோவிலின் முகநூல் பக்கத்தை மர்ம நபர்கள் 'ஹேக்' செய்து அந்த கணக்கில் ஆபாச புகைப்படங்களை பதிவிட்டனர்.

    இதனை பார்த்த பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் முகநூல் பக்கத்தில் இருந்த ஆபாச படத்தை சைபர் கிரைம் போலீசார் உடனடியாக நீக்கினர்.

    மேலும் கோவிலின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்து இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டு, பின்னர் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது. இந்த நிலையில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமிக்கு பேஸ்புக் மூலமாக ஏற்கனவே அறிமுகமானவர் என கூறப்படுகிறது.
    • கற்பழிப்பு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குவாலியர்:

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 21-ந் தேதி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக காரில் இளைஞர்கள் சிலர் வந்துள்ளனர். அதில் ஒரு வாலிபர் அந்த சிறுமிக்கு பேஸ்புக் மூலமாக ஏற்கனவே அறிமுகமானவர் என கூறப்படுகிறது. அந்த வாலிபர் சிறுமியை காரில் ஏறுமாறு கூறியுள்ளார்.

    அதை நம்பி காரில் ஏறிய சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு கடத்தி சென்று அந்த வாலிபரும், அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

    பின்னர் சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

    அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் 4 வாலிபர்கள் மீதும் கற்பழிப்பு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவருக்கொருவர் பிறரின் வலைதளத்தை கிண்டல் செய்து வாக்குவாதம் செய்து வந்தனர்
    • சார்ல்ஸ் ஷூமர் வாஷிங்டனில் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்

    உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்குகின்றன.

    அமெரிக்காவில் இருந்து இயங்கும் பயனர்களின் உரையாடல்களுக்கான சமூக வலைதளம் டுவிட்டர். இதனை உலகின் நம்பர் 1 கோடீசுவரரும், அமெரிக்கருமான எலான் மஸ்க், கடந்த 2022ல் விலைக்கு வாங்கினார். வாங்கியதும் அதன் பெயரை எக்ஸ் என மாற்றி, லாபத்தைப் பெருக்கும் நோக்கில் அதிரடியாக பல முடிவுகளை எடுத்து வந்தார்.

    எக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக வலைதளத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனரும், அமெரிக்காவை சேர்ந்தவருமான மார்க் ஜூகர்பர்க், கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.

    இருவரும் மற்றவரின் சமூக வலைதளங்களின் தரம் குறித்து விமர்சனம் செய்து ஒருவருக்கொருவர் சமூக வலைதளங்களிலேயே வாக்குவாதம் செய்து வந்தனர்.

    இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாட் ஜிபிடி (ChatGPT) எனும் மென்பொருள் செயலியை ஓப்பன்ஏஐ எனும் நிறுவனம் உருவாக்கி கடந்த நவம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. மிகவும் வெற்றியை அடைந்துள்ள இந்த செயலி, செயற்கை நுண்ணறிவை குறித்த ஒரு விவாதத்தையும் தூண்டியுள்ளது.

    செயற்கை நுண்ணறிவை மிகவும் அவசியமான மற்றும் ஆரோக்கியமான கண்டுபிடிப்பாக ஒரு சாரார் ஆதரித்து வர, மற்றொரு தரப்பினரோ செயற்கை நுண்ணறிவு ஆபத்தானது என்றும் அதன் பயன்பாட்டிற்கான எல்லைகளை அரசாங்கங்கள் வகுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

    எலான் மஸ்க், ஏஐ பயன்பாடு ஒரு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என வாதிட்டு வருகிறார். ஆனால், ஜூகர்பர்க் இது குறித்து நடுநிலையான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார்.

    "கட்டுப்பாடில்லாத தொழில்நுட்ப வளர்ச்சி ஆபத்தானது. அது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் கூறியிருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் ஷூமர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான கொள்கைகளை வகுத்தல் குறித்து கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு சந்திப்பை வாஷிங்டனில் ஏற்பாடு செய்துள்ளார். செப்டம்பர் 13ல் நடக்கவிருக்கும் இந்த சந்திப்பில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

    இதில், எலான் மஸ்கும், மார்க் ஜூகர்பர்கும் பங்கேற்க உள்ளனர்.

    செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பலர் வேலை இழக்கும் அபாயம் தோன்றும் என அச்சம் நிலவுவதாலும், சமூக வலைதளங்களில் எதிரிகளைப் போல் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் மஸ்கும் ஜூகர்பர்கும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்கப் போவதாலும், இந்தச் சந்திப்பு மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமல்லாமல், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • பேஸ்புக் கணக்கு ஹேக் செய்திருந்தால், அந்த படங்களை சைபர் கிரைம் போலீசாரால் நீக்க முடியவில்லை.
    • படங்களை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு பேஸ்புக் நடத்தும் நிறுவனத்துக்கு கேரள போலீசார் நோட்டீசு அனுப்பினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் மனநல மருத்துவர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தை யாரோ மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்பு அந்த டாக்டரின் ஆபாசமான படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர்.

    இதுகுறித்து அந்த பெண் மருத்துவர், போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் கேரள சைபர் கிரைம் போலீசார், பெண் டாக்டரின் பேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த படங்களை அழிக்க முயன்றனர். ஆனால் அவரது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்திருந்ததால், அந்த படங்களை சைபர் கிரைம் போலீசாரால் நீக்க முடியவில்லை.

    ஆகவே பெண்டாக்டரின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்திருந்த நபரை கண்டு பிடித்து, படங்களை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு பேஸ்புக் நடத்தும் நிறுவனத்துக்கு கேரள போலீசார் நோட்டீசு அனுப்பினர். அவ்வாறு நோட்டீசு அனுப்பும் பட்சத்தில், 36 மணி நேரதிற்குள் படங்களை நீக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது.

    ஆனால் ஒரு வாரமாகியும் பெண் டாக்டரின் பேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த படங்களை நீக்கவில்லை. மேலும் போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு சரியான பதிலையும் பேஸ்புக் நிறுவனம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பேஸ்புக் மீது கேரள போலீசார், குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தவர் மஸ்க்
    • எலான் மஸ்க் சண்டையை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என்றார் மார்க்

    செய்தி, வீடியோ, ஒலி மற்றும் கோப்புகளை பிறருடன் பரிமாறி கொள்ளவும், பிறருடன் உரையாடவும் உலகின் முதன்மையான வலைதளமாக இருந்து வந்தது அமெரிக்காவை சேர்ந்த டுவிட்டர்.

    இந்நிறுவனத்தை உலகின் நம்பர் 1 கோடீசுவரரான அமெரிக்கர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கி அதன் லாபத்தை அதிகரிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பல பழைய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து புது அதிகாரிகளை சேர்த்த மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் பெயரை அண்மையில் 'எக்ஸ்' என மாற்றினார்.

    உலகின் மற்றொரு பிரபல சமூக வலைதளமான முகநூல் நிறுவனத்தின் அதிபர் மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக உரையாடல்களுக்கான வலைதளம் ஒன்றை தொடங்கினார்.

    இதை விரும்பாத எலான் மஸ்க், திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு, திரெட்ஸ் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தற்காப்பு கலை தெரிந்தவர் என்பதை அறிந்த எலான் மஸ்க் அவரை வம்பு சண்டைக்கு இழுத்தார். இதற்கு சளைக்காத மார்க் ஜூக்கர்பர்க், "சண்டைக்ககான இடத்தின் பெயரை அனுப்பவும்" என பதிலளித்திருந்தார்.

    இவர்கள் இருவரும் இந்த சண்டை விசயமாக அவரவர் வலைதளங்களில் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.

    மூன்று நாட்களுக்கு முன் மார்க் இது குறித்து கூறியதாவது:-

    தற்காப்பு கலைக்கு முக்கியம் கொடுப்பவர்களோடு மட்டுமே போட்டியிட போகிறேன். எலான் இதை தீவிரமாக எடுத்து கொள்ளாதவர். எலான் மஸ்க் மாற்றி மாற்றி பேசுகிறார்.

    இவ்வாறு மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இதுகுறித்து எலான் மஸ்க் தற்போது தெரிவித்திருப்பதாவது:-

    நான் முதலில் விளையாட்டுக்காகத்தான் மார்க்கை சண்டைக்கு இழுத்தேன். பிறகு இடத்தை தேர்வு செய்து சொல்லுங்கள் என மார்க் கூறியதும், இத்தாலியை நான் தேர்ந்தெடுத்தேன். மார்க் மறுத்ததால், அவர் வீடுதான் சரியான இடமா? என நான் கேட்டேன். அவர் பதிலளிக்கவில்லை. எங்காவது சண்டையிட அவர் தயாரா? எனவும் தெரியவில்லை.

    இவ்வாறு மஸ்க் தற்போது கூறியிருக்கிறார்.

    இவர்கள் இருவருக்குமிடையிலான சொற்போர் இத்துடன் நிற்குமா அல்லது உண்மையிலேயே சண்டையிடுவார்களா என இணைய ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிபர் கொலைகளுக்கான நேரம் வந்து விட்டது. முதலில் ஜோ, பிறகு கமலா என குறிப்பிட்டிருந்தார்
    • அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரிகள் க்ரெய்க் வீட்டிற்கு வாரண்டுடன் சென்றனர்

    அமெரிக்காவின் மேற்கில் உள்ள மாநிலம் உடா. இங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் புலனாய்வு அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    2021 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்-ஐ வென்ற ஆதரவாளர்களும், இப்போதைய அதிபர் ஜோ பைடனின் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தீவிரமாக பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உடா மாநிலத்தை சேர்ந்த தீவிர ட்ரம்ப் விசுவாசியான க்ரெய்க் ராபர்ட்ஸன் என்பவர் முகநூலில் பைடனை குறித்து தீவிரமாக கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

    2022-ல் தனது பதிவு ஒன்றில், "அதிபர் கொலைகளுக்கான நேரம் வந்து விட்டது. முதலில் ஜோ, பிறகு கமலா" என குறிப்பிட்டிருந்தார்.

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். அதனால் அவரையும் கொல்லப்போவதாக ராபர்ட்ஸன் கூறி வந்தார்.

    இரு தினங்களுக்கு முன், தனது முகநூல் பதிவில் அதிபர் பைடன் உடா மாநிலத்திற்கு வருகை தருவதால் தனது எம்24 ஸ்னைப்பர் வகை துப்பாக்கியை உபயோகப்படுத்தும் வேளை வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

    இது மட்டுமின்றி அவரது முகநூல் கணக்கில் பலவகை துப்பாக்கிகளையும் அவர் பதிவிட்டிருந்தார்.

    இதனையடுத்து உடா மாநிலத்தில் உள்ள ப்ரோவோ எனும் இடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தேடுதல் மற்றும் கைது வாரண்டுடன் அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரிகள் சென்றனர்.

    அங்கு நடைபெற்ற நடவடிக்கையில் அவர் சுட்டு கொல்லப்பட்டார்.

    ராபர்ட்ஸன் மீது அச்சுறுத்தல் குற்றம், அதிபருக்கெதிரான மிரட்டல் குற்றம், தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கடமையாற்றும்போது அவர்களை இடைமறித்து கடமையை செய்ய விடாமல் தடுப்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

    அமெரிக்காவை மீண்டும் பெருமைக்குரியதாக மாற்றுவோம் என பொருள்படும் மாகா (Making America Great Again) முழக்கத்தை டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். இந்த முழக்கத்தை ஆதரிப்பவராகவும், தன்னை ஒரு டிரம்ப் விசுவாசியாகவும் அறிவித்து கொண்டவர் க்ரெய்க் ராபர்ட்ஸன் என்பது குறிப்பிடத்தக்கது.

    க்ரெய்க் சுட்டு கொல்லப்பட்ட சூழ்நிலையின் முழு விவரங்களும் இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

    ×