4 வருட மர்மத்துக்கு 'பேஸ்புக்' மூலம் தீர்வு கண்ட மணமகள்

புகைப்படங்களை தம்பதியினர் பார்த்த போது மிஷேல் அதிர்ச்சி அடைந்தார். மணமக்களின் அருகே நின்ற ஒருவர் யாரென்றே மிஷேல்- ஜான் தம்பதிக்கு தெரியவில்லை.
4 வருட மர்மத்துக்கு 'பேஸ்புக்' மூலம் தீர்வு கண்ட மணமகள்
Published on

திருமண விழாக்களுக்கு மணமக்களின் குடும்பத்தினர், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். சில திருமணங்களில் அழையா விருந்தாளிகளாக முன்பின் தெரியாதவர்களும் கூட வந்து விருந்து சாப்பிட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன.

இந்நிலையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த மிஷேல் வைலி என்ற பெண்ணுக்கும் ஜான் என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தம்பதியினர் பார்த்த போது மிஷேல் அதிர்ச்சி அடைந்தார். காரணம் மணமக்களின் அருகே நின்ற ஒருவர் யாரென்றே மிஷேல்- ஜான் தம்பதிக்கு தெரியவில்லை. அவர் யார் என்ற மர்மத்தை கண்டுபிடிக்க மிஷேல் முயற்சி செய்தார். ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில் மிஷேலின் இந்த மர்மத்துக்கு பேஸ்புக் மூலம் தீர்வு கிடைத்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருந்தவர் அயர்ஷையரை சேர்ந்த ஓவியரான ஆண்ட்ரூ ஆவார். அவர் தனது மனைவியுடன் வேறு ஒரு திருமணத்திற்கு செல்ல இருந்த நிலையில், தவறுதலாக இடம் மாறி மிஷேல் திருமணத்திற்கு சென்று விட்டதாக பேஸ்புக்கில் வேறு ஒரு நண்பருடன் உரையாடியதை மிஷேல் பார்த்துள்ளார். அப்போது தான் அவரின் 4 வருட மர்மத்துக்கு விடை கிடைத்ததாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com