search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bombs"

    • பயங்கரவாத தடுப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
    • துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல கும்பலின் தலைவன் பெரும்பாவூர் அனஸ். கொச்சி பியூட்டிபார்லர் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் மீது மேலும் பல வழக்குகள் இருக்கின்றன. இவருடைய கூட்டாளிகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அனசின் கூட்டாளியான எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள மஞ்சலி கொச்சுகுன்றும்புரம் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 4 துப்பாக்கிகள், 2 கத்திகள், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 25 குண்டுகள் இருந்தன.

    அவற்றை சோதனையில் ஈடுபட்ட பயங்கரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ரியாசின் வீட்டில் இருந்து ரூ8.83 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து ரியாசை போலீசார் கைது செய்தனர். ரியாசின் வீட்டில் கடந்த 8 ஆண்களுக்கு முன்பு இதேபோல் பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.

    இந்நிலையில் தற்போதும் அவர் துப்பாக்கிகளுடன் சிக்கியிருக்கிறார். அவர் தனது வீட்டில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கிவைத்திருந்தது தொடர்பாக அவரிடம் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று அனசின் மற்றொரு கூட்டாளியான அல்தாப் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ரிவால்வர் கேஸ், கைவிலங்கு மற்றும் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அனசின் நெருங்கிய கூட்டாளியான பெரும்பாவூரை சேர்ந்த ஷாஜி பாப்பன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் அனசுடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் கோவை மாவட்டம் ஆனைமலையில் ஒருவரின் வீடு, மேட்டுப்பாளையத்தில் ஒருவரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் பயங்கரவாத தடுப்பு படையினர் அந்த மாவட்ட போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தி உள்ளனர்.

    பயங்கரவாத தடுப்பு படையினரின் அதிரடி சோதனையில துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் சாகர் கவாச் என்ற பேரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
    • போலீசார் 7 பேர் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் வந்தனர்.

    கடலூர்:

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள் கடல்வழியாக மும்பையில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் போலீசார் சாகர் கவாச் என்ற பேரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது.

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் போலீசார் கடலோர பகுதிகளில் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் துறைமுகத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கடல் பகுதிக்கு விசை படகில் மத்திய, மாநில அதிரடி படையை சேர்ந்த கமாண்டோ போலீசார் 7 பேர் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் அவர்கள், கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் வெடிகுண்டு வைப்பதற்காக வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை துறைமுகம் பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த போலி வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இசக்கிமுத்து மீது போலீசார் சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் இசக்கிமுத்து(வயது 34).

    நேற்று காலையில் அவர் வீட்டில் வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் அவரது இடது கையில் 3 விரல்கள் துண்டானது. வலது கை சிதைந்தது.

    தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

    இசக்கி முத்து அப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகளை வேட்டையாடுயாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் மீது வழக்கும் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் வேட்டைக்கு பயன்படுத்துவதற்காக நேற்று நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்தது என்பது தெரியவந்தது. உடனே நெல்லையில் இருந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. அதனை பத்திரமாக கொண்டு சென்று செயலிழக்க செய்தனர்.

    இதுதொடர்பாக இசக்கிமுத்து மீது போலீசார், சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டு பிடிப்பதற்காக நாய்களை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் இலங்கை ராணுவத்தில் கீரிகளை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
    கொழும்பு:

    வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டு பிடிப்பதற்காக நாய்களை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. சில நாடுகளில் பன்றி, எலிகள் போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள்.

    இந்த நிலையில் இலங்கை ராணுவத்தில் கீரிகளை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். நாய்களை விட கீரிகளுக்கு மோப்ப சக்தி அதிகமாக இருப்பதாகவும், அவை சிறப்பாக வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளாகவே கீரிகளை பயன்படுத்தி வெடிகுண்டுகளை கண்டு பிடிப்பதற்கு பயிற்சி நடந்து வந்தது. அதில் நல்ல பயன் கிடைத்ததையடுத்து இப்போது 9 கீரிகளை ராணுவத்தில் சேர்த்துள்ளனர். அதில் 2 கீரிகளுக்கு பணிகள் வழங்கப்பட்டு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க அனுப்பப்பட்டு வருகிறது. மற்ற 7 கீரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக ராணுவ மேஜர் சுபுன்ஹேரத் கூறியதாவது:-

    வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கும் மோப்ப நாய்கள் வெளிநாடுகளில் இருந்து தான் வாங்கப்படுகின்றன. அவை குளிர்பிரதேசத்தில் வளரும் நாய்கள் ஆகும். அவற்றை இலங்கைக்கு கொண்டு வந்து பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. மேலும் இதன் செலவும் அதிகமாகிறது.

    எனவே தான் மோப்ப சக்தி அதிகம் கொண்ட கீரியை இதற்கு பயன்படுத்தலாமா? என்று ஆய்வு மேற்கொண்டோம். இது சிறப்பான பலனை கொடுத்துள்ளது. நாயை விட கீரிதான் நன்றாக செயல்படுகிறது. நாயை பொறுத்தவரை தனது தலைக்கு கீழ் உள்ள வெடிகுண்டுகளையே மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க முடியும். ஆனால் கீரிகளால் தரைப்பகுதி மட்டும் அல்லாமல் தனது தலைக்கு மேலே உள்ள வெடிகுண்டுகளையும் கண்டுபிடிக்க முடிகிறது. வெடிகுண்டுகளை கண்டுபிடித்ததும் அதை தோண்டி எடுப்பதற்கு பயிற்சி அளித்தோம். அதனால் கீரிகள் பாதிக்கப்படுவதால் இப்போது அதை தகவல் சொல்ல மட்டுமே பயன்படுத்துகிறோம்.

    ஒரு இடத்தில் வெடிகுண்டு இருப்பது தெரிந்தால் அந்த இடத்திற்கு சென்று கீரி அமர்ந்து கொள்ளும் அதை வைத்து எளிதாக வெடிகுண்டுகளை அகற்றி விடலாம்.

    இலங்கையில் 3 வீதமான கீரிகள் உள்ளன. அதில் சாம்பல் நிற கீரி நன்றாக மோப்பம் பிடிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #SriLankanArmy

    ×