என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பணகுடி வாலிபர் வீட்டில் மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின- இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு
Byமாலை மலர்1 Jun 2022 4:51 AM GMT (Updated: 1 Jun 2022 4:51 AM GMT)
இசக்கிமுத்து மீது போலீசார் சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் இசக்கிமுத்து(வயது 34).
நேற்று காலையில் அவர் வீட்டில் வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் அவரது இடது கையில் 3 விரல்கள் துண்டானது. வலது கை சிதைந்தது.
தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.
இசக்கி முத்து அப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகளை வேட்டையாடுயாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் மீது வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வேட்டைக்கு பயன்படுத்துவதற்காக நேற்று நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்தது என்பது தெரியவந்தது. உடனே நெல்லையில் இருந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. அதனை பத்திரமாக கொண்டு சென்று செயலிழக்க செய்தனர்.
இதுதொடர்பாக இசக்கிமுத்து மீது போலீசார், சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் இசக்கிமுத்து(வயது 34).
நேற்று காலையில் அவர் வீட்டில் வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் அவரது இடது கையில் 3 விரல்கள் துண்டானது. வலது கை சிதைந்தது.
தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.
இசக்கி முத்து அப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகளை வேட்டையாடுயாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் மீது வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வேட்டைக்கு பயன்படுத்துவதற்காக நேற்று நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்தது என்பது தெரியவந்தது. உடனே நெல்லையில் இருந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. அதனை பத்திரமாக கொண்டு சென்று செயலிழக்க செய்தனர்.
இதுதொடர்பாக இசக்கிமுத்து மீது போலீசார், சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X