என் மலர்

    நீங்கள் தேடியது "4 பேர் பலி"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அந்தியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் சோதனை நடத்தினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து அந்தியூர் அடுத்த கெட்டி சமுத்திரம் ஏரி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்களை போலீசார் நிறுத்தி மோட்டார் சைக்கிளில் சோதனை நடத்தினர். அப்போது அதில் கர்நாடக மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கொட்டக்காடு பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா, பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையத்தை சேர்ந்த கார்த்தி, பிரபு, பள்ளிபாளையம் அடுத்த தெற்குப்பள்ளம் பகுதியை சேர்ந்த சந்துரு என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 44 கர்நாடக பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர்.
    • சூதாட்டம் விளையாடி வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாட்டம் விளையாடி வந்த 4 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கே.ஆர்.பாளையம் முத்து கவுண்டர் வீதியை சேர்ந்த கந்தசாமி(47), அதேபகுதியை சேர்ந்த செல்லதுரை (45), மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சக்திவேல் (49), பள்ளிபாளையம் எக்கட்டூர் செந்தில்குமார் (43) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சீட்டு கட்டு மற்றும் ரூ.3,100 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள சவண்டப்பூர், ஆண்டிகாடு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம் (35), முருகன் (28), சி.ஆறுமுகம் (56), சண்முகம் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட சீட்டுகள் 52 மற்றும் பணம் ரூ. 570 ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிலர் கஞ்சாவை பதுக்கி விற்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் வந்தது.
    • 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை ரத்தினபுரி நாராயணசாமி வீதி மின்மயானம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி விற்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று அங்கு இருந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் மாணவர்களை குறி வைத்து காரில் கஞ்சா கடத்தி வந்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், நல்லாம்பாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் சூரிய பிரகாஷ்(32), மோனிஷா(21), அவரது உறவினர்கள் தேவி ஸ்ரீ(28), பத்மா(45) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதில் பத்மா அழகு நிலையம் ஒன்றில் பியூட்டிசியனாக வேலை பார்த்து வருகிறார். 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு கார், மொபட் மற்றும் ரூ. 4,600 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய மந்திரியிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
    • ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்‌

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த், டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து ஒரு மனு அளித்தார்.

    அதில், காரோடு முதல் கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலை பணிகள் நடை பெற்று வந்த நிலையில், கல், மண் தட்டுப்பாடு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. பணி முடங்கிய காரணத் தால் ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டது.

    பின்னர் மாநில அரசு அண்டை மாவட்டத்நிதின் கட்கரியை சந்தித்து ஒரு மனு அளித்தில் இருந்து மண் எடுப்பதற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து மீண்டும் இந்த பணிக்கான ஒப்பந்தத்திற்கு மறு டெண்டர் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரம் விடப்பட்டது.

    இந்த டெண்டர் வருகிற 19-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்நாள் வரை டெண்டர் முடிவு செய்யப் படாமல் உள்ளது. பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கும் 4 வழிச் சாலை பணிகள் மீண்டும் தொடங்க தாமதமானால் இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது.

    எனவே இதை கருத்தில் கொண்டு தாங்கள் அலுவலகம் வாயிலாக நெடுஞ்சாலை துறையிடம் உடனடியாக 4 வழி சாலை பணிக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொலை செய்யப்பட்டு கிடந்தது ஓசூரில் மாயமான சல்மான் என உறுதி செய்யப்பட்டது.
    • காதல் விவகாரத்தில் சல்மான்கான் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    ஓசூர்,

    கர்நாடகா மாநிலம் கனகபுரா மாவட்டம் கங்கிலிபுறா பகுதியை சேர்ந்தவர் கலிமுல்லா. இவருடைய மகன் சல்மான்கான் (வயது 23). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் ஓசூர் ராம்நகரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வந்தார்.

    மேலும் அந்த வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதை அறிந்த சல்மான்கான் சிறுமி தன்னை காதலிக்கும் போது எடுத்த புகைப்படத்தை அனுப்பி திருமணத்தை நிறுத்தினார்.

    மீண்டும் சிறுமிக்கு திருமண ஏற்பாடுகளை நிறுத்த சல்மான்கான் முயற்சி செய்ததால் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் சல்மான்கானை எச்சரித்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 10-ந் தேதி சல்மான்கான் மாயமானார்.

    இது தொடர்பாக அவரது தாய் ஹாதாஜ் பானு கடந்த 26-ந் தேதி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சல்மான்கானை தேடி வந்தனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் தாவரக்கரே பகுதியில் குட்டை ஒன்றில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக அந்த மாநில போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது ஓசூரில் மாயமான சல்மான் என உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இக்கொலை வழக்கு ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதில் காதல் விவகாரத்தில் சல்மான்கான் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக ஓசூர் ராம்நகரை சேர்ந்த ஜான்பாஷா (36), சாதிக் (45), வாஜித் (25), முகமது அலி (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    மேலும் இக்கொலையில், ஓசூர் தளி சாலையை சேர்ந்த ஸ்ரீகாந்த் (36), தர்மபுரி மாவட்டம் திருப்பாச்சிபுரத்தைச் சேர்ந்த கமலேசன் (28) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் சேலம சிறையில் அடைக்கப்பட்டனர். இக்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சத்தியமங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • அவர்களிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ய 15 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    ஈரோடு

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, பங்களாபுதூர் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது சத்தியமங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் அதிக விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்களை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் கோபி, டி.என்.பாளையத்தை சேர்ந்த நன்மணி முத்து (25), ரவிவர்மா (31) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 39 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல பழனிகவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படு வதாக கடத்தூர் போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசாரை கண்டவுடன் மொபட்டில் தப்பி செல்ல முயன்ற நபர்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர்.

    அப்போது அவர்களிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ய 15 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் சிவங்கங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்துள்ள கண்டியூரை சேர்ந்த விக்னேஷ்வரன், கோவை ரத்தினபுரியை சேர்ந்த பசுபதி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 15 மதுபாட்டில்கள், மொபட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து 4 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
    • அவர்களிடம் இருந்து 33 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு வடக்கு, கோபி, அந்தியூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து 4 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 33 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாதுகாப்பு அற்ற முறையில் ஆவணங்கள் இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 720 மதிப்புள்ள 255 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ள கடைகளில் பாதுகாப்பு அற்ற முறையில் ஆவணங்கள் இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஆனைமலை போலீசார் வேட்டைகாரன்புதூர் பகுதியில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சரவெடி உள்பட பல்வேறு வகை பட்டாசுகள் 61 பெட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசை பதுக்கி விற்ற வேட்டைகாரன்புதூரை சேர்ந்த உதயகுமார் (வயது 47) என்பவரை கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ரூ.57,100 மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.இதேபோன்று ஆனைமலை போலீசார் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பேன்சி கடையில் சோதனை செய்தனர். அங்கு ரூ.26,620 மதிப்புள்ள பட்டாசுகள் 64 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்தனர். இதனை போலீசார் கைப்பற்றி விற்பனையில் ஈடுபட்ட பேன்சி கடைகாரர் அண்ணாமலை (51) என்பவரை கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி காரமடையில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 55 பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தனர்.

    ஊட்டி ரோட்டில் உள்ள மளிகை கடையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 75 பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரமடையை சேர்ந்த குமரேசன் (48) மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தேவநாத் (52) ஆகியோரை கைது செய்தனர்.நேற்று ஒரே நாளில் பட்டாசுகளை பதுக்கி விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 720 மதிப்புள்ள 255 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பவானிசாகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது பவானிசாகர் அடுத்த பசுவபாளையம் அருகே வெள்ளை நிறப்பை உடன் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (60) என்பதும்,

    அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான் மசாலா போன்ற பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து அவரிடம் இருந்து 670 கிராம் புகையிலை பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 2 ஆயிரம் இருக்கும்.

    மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது திருக்குமார் என்ற நபர் மூலம் பான் மசாலா, புகையிலை பொருட்கள் வாங்கியதாக கூறினார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் திருக்குமாரை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதேப்போல் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் சூரம்பட்டி போலீசாரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சீட்டாட்டம் விளையாடுவதாக ஏரியூர் காவல் நிலைய போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது .
    • 1,050 ரூபாய் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஏரியூர் அருகே உள்ள சிடுவம்பட்டி புளியமரத்தூர் காலனி சுடுகாட்டில் பணம் வைத்து மங்காத்தா சீட்டாட்டம் விளையாடுவதாக ஏரியூர் காவல் நிலைய போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது .

    இதன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் மாரி தலைமையிலான போலீசார் சிடுவம்பட்டி புளியமரத்தூர் காலனி சுடுகாட்டில் பணம் வைத்து மங்காத்தா சீட்டாட்டம் விளையாடிக் கொண்டிருந்த நாகராஜ் (வயது 55),வெங்கடேசன் (38), சிலம்பரசன் (33), சின்ன கண்ணு (60) ஆகிய நான்கு பேரை சுற்றி வளைத்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் பணம் வைத்து மங்காத்தா சீட்டாட்டம் விளையாடியதை ஒப்புக்கொண்டனர். இதன் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 1,050 ரூபாய் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.