என் மலர்
நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"
- உத்தமபாளையம் அருகே முதியவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டி மேற்குதெருவை சேர்ந்தவர் மகாலிங்கம்(67). இவர் கருத்துவேறுபாடு காரணமாக மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.
தற்போது அவர்கள் சேர்ந்து வசித்து வந்த நிலையில் கடைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் அவரது மனைவி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் துரைமகன் ஜெகதீஸ்வரன்(29). இவர் சின்னமனூரில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை கடை உரிமையாளரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது ஜெகதீஸ்வரன் வேலைக்கு வரவில்லை என கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த துரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.
- செல்பி பாலம் பகுதியில் சென்றபோது முனிராஜ் அதிவேகமாக வண்டியை ஓட்டியதில் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டார்.
- முனிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரியை அடுத்த நல்லாம்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் முனிராஜ் (வயது20). சுபகாரிய நிகழ்ச்சிகளில் பூ அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
செல்பி பாலம் பகுதியில் சென்றபோது முனிராஜ் அதிவேகமாக வண்டியை ஓட்டியதில் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல புலிக்கரை பகுதியை சேர்ந்த மாதையன் (40) விவசாயியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் அல்லியூர் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மாதையன் மீது மோதியது. இதில் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து தருமபுரி நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள்
- 7 கிலோ பறிமுதல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்திய ஒரிசா மாநில 2 வாலிபர்கள் ரெயில்வே போலீசார் கைது செய்து 7 கிலோ கஞ்சாவை இன்று அதிகாலை பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா என்பது குறித்து சேலம் உட்கோட்ட ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் அடங்கிய தனிப்படையினர் நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இன்று அதிகாலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 1 வது பிளாட்பாரத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டியில் சோதனை செய்தபோது சீட்டு எண் 4 ல் அமர்ந்து இருந்த சந்தேகத்தின் பேரில் 2 வாலிபரின் உடமைகளை சோதனை செய்யும் போது கள்ளத்தனமாக கருப்பு கலர் பையில் 7 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது தெரிய வந்தது
மேலும் கஞ்சா கடத்திய வாலிபர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் பலாஸ்கீர் ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பூர் வரை பயணம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ரெயில்வே போலீசார் இவரை ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் ஒரிசா மாநிலம், பெல்பாரா கடம்படா பகுதியை சேர்ந்த ஷ்யாம் சிங் என்பவரின் மகன் சுஜித் நாக் (வயது 29) மற்றொருவர் கசல்பூர் பகுதியைச் சேர்ந்த புராணசந்திர பகா என்பவரின் மகன் பிபேகானந்தா பகா (வயது 31) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து ஜோலார்பேட்டை ரெயில் போலீசார் அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
இதனை அடுத்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஒரிசா மாநில 2 வாலிபர்கள் சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சாவின் மதிப்பு 70 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.
- நிலக்கோட்டையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- நிலக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சங்கால்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் மகன் மதன்குமார்(30). விவசாயி. குடிப்பழக்கம் இருந்ததால் வயிற்றுவலி ஏற்பட்டது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப்ப ட்டார். அங்கு மதன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிலக்கோட்ைட அருகே சி.புதூரை சேர்ந்தவர் ஈஸ்வரன்(45). கடந்த சில நாட்களுக்கு முன்பு விப த்தில் சிக்கினார். இதனால் காலில் முறிவுஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போதும் குணமாக வில்லை.
இதனால் அவர் விஷம் குடித்து மயங்கினார். நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த 2 சம்பவங்கள் குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்க ட்ராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.
- தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பேர் மாயமாகினர்.
- புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் மேல்ம ங்கலம் அருகில் உள்ள அம்மாபட்டி தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகள் ேராசிணி(15). இவர் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி மாயமானார்.
பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் சாந்தி ஜெயமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
கொடைக்கானல் பிரகாசபுரத்தை சேர்ந்த தேவதாஸ் மகன் லோக நாதன்(29). இவர் பெரிய குளம் வடகரை புதிய பஸ்நிலையம் பகுதியில் தனது தந்தையுடன் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக வந்தார்.
அதன்பிறகு மாயமானார். இதுகுறித்து தேவதாஸ் பெரியகுளம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை ேதடி வருகின்றனர்.
- ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவது வழக்கம்.
- அப்படி நிறுத்தப்படும் வாகனங்களில் அடிக்கடி டீசல் திருட்டு போனது.
ஏற்காடு:
சுற்றுலா தலமான ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வருகின்ரன. மேலும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஏற்காட்டிலும் ஏராளமன வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவது வழக்கம்.
அப்படி நிறுத்தப்படும் வாகனங்களில் அடிக்கடி டீசல் திருட்டு போனது. எப்படி திருட்டு நடக்கிறது என தெரியாமல் வாகன் ஓட்டிகள் தவித்தனர். இதுபற்றி போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யபட்டது. இந்நிலையில் நேற்று இரவு ஒண்டிக்கடை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கன ரக வாகனத்தில் மர்ம நபர்கள் டீசல் திருடினர். இதை அப்பகுதியில் வசித்துவரும் சுசிலா என்பவர் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்ளிடம் கூறினார். அப்பகுதி மக்கள் திரண்டு 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை ஏற்காடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர்கள் ஏற்காடு கீரைகாடு கிராமத்தில் வசிக்கும் காளியப்பன் (வயது 23), மோகனவேல் (21) என்பது தெரியவந்தது. இருவரும் அண்ணா பூங்கா அருகே நின்ற லாரியில் 40 லிட்டர் டீசல் திருடியதாக ஒப்புகொண்டனர். 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய வாகனத் தையும் பறிமுதல் செய்தனர்.
- பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
- போலீசார் கார் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சந்தானம் (வயது42), ராஜா (35), பிரகாஷ் (30), இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் மாவட்டம் கன்னியாபுரம் அருகே உள்ள குளத்தில் நடந்த மீன்பிடி திருவிழாவில் பங்கேற்பதற்காக வந்தனர்.
ஒத்தக்கடை அருகில் எஸ்.கொடை பிரிவு பகுதியில் வந்தபோது சாணார்பட்டி யில் இருந்து மதுரை அழகர் கோவில் நோக்கி சென்ற கார் பயங்கரமாக மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சந்தானம் மற்றும் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த பிரகாஷ் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியாண்டி தலைமையில் சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி மற்றும் போலீசார் கார் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர். மீன்பிடி திருவிழாவுக்கு வந்தவர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திண்டுக்கல் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள மாலப்பட்டி காமாட்சிநகரை சேர்ந்தவர் சுப்பையா(74). இவர் ரெயில்வே பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் மாலப்பட்டி ரோட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகா யமடைந்தார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் சுள்ளெறும்பு நால்ரோடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(60). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திட்டக்குடி அருகே கஞ்சா வியாபாரிகள் போலீசாரை தாக்கினர்.
- அவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே கோழியூரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி கோழியூர் கால்வாய் பாலம் அருகே பைக்கில் சென்ற நபர்களை போலீசார் நிறுத்தி விசாரணை செய்தபோது அந்த நபர்கள் இரும்புக்கம்பியை காட்டி மிரட்டியவாறு போலீசாரை தாக்கி கீழே தள்ளி விட்டு கையில் வைத்திருந்த கஞ்சா பாக்கெட் தூக்கியெறிந்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அதனை தொடர்ந்து திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் கோழியூரை சேர்ந்த பெருமாள் மகன் ஆனந்தராஜா (20) மற்றும் 19 வயது சிறுவன் என தெரிய வந்தது. இது குறித்து ஏட்டு முனுசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
- நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்த டிரைவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
- திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வடமதுரை:
வடமதுரை அருகே கொல்லப்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீபதி(50). லாரி டிரைவர். கடந்த சில நாட்களாக நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ஸ்ரீபதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வடமதுரை அருகே பிலாத்து பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி போதும்பொண்ணு(24). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் போதும்பொண்ணு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ மேல்விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- தேனி அருகே மது பழக்கத்தால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் அணைப்பட்டி பாரஸ்ட் பங்களா தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முருகன் (வயது31). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டியை சேர்ந்த காளியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆட்டோ பைனான்ஸ் தொழில் பார்த்து வந்த முருகன் குடி பழக்கத்துக்கு அடிமை யானதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் முருகன் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தாய் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். தேவதானப்பட்டி அருகில் உள்ள செங்குளத்து ப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (57). இவரது மகன் ஆறுமுகத்துக்கு திருமணம் முடிந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் மனவேதனையில் இருந்த பெருமாள் தனது வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி ஸ்ரீரங்கம் பழைய இ.பி. அலுவலகம் பின்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடப்பதாக தகவல் வெளியானது
- வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் (51), பாலக்கரையை சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி :
திருச்சி ஸ்ரீரங்கம் பழைய இ.பி. அலுவலகம் பின்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல் துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அங்கு வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் (51), பாலக்கரையை சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் 11 எண்ணிக்கையிலும், ஒரு செல்போன் மற்றும் ரூ. 5000 ரொக்கம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.