search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவரால் உயிருக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பு கேட்டு பெண் மனு
    X

    குழந்தைகளுடன் மனு அளிக்க வந்த உமா.

    கணவரால் உயிருக்கு அச்சுறுத்தல்; பாதுகாப்பு கேட்டு பெண் மனு

    • கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
    • நானும் எனது குழந்தைகளும் பாதுகாப்பின்றி உள்ளோம்.

    நாகப்பட்டினம்:

    நாகை திருக்கண்ணப்புரம் அருகே விசலுார் ராராத்திமங்கலம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ்.

    இவரது மனைவி உமா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் உமா மற்றும் அவரின் குழந்தைகளுக்கு எந்தவித பொருளாதார உதவியும் செய்யாமல், அந்த பெண் வீட்டிலேயே ரமேஷ் வசித்து வந்துள்ளார்.

    மேலும் அடித்து துன்புறுத்துகிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது உமாவை தாக்கி உள்ளார்.

    இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமா புகார் அளித்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக உமா தனது பிள்ளைகளுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    நானும் எனது குழந்தைகளும் பாதுகாப்பு இன்றி உள்ளோம்.

    எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×