search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சவுண்டம்மன் கோவிலில் அம்மன்  வேடமணிந்த குழந்தைகள் ஊர்வலம்
    X

    சவுண்டம்மன் கோவிலில் அம்மன் வேடமணிந்த குழந்தைகள் ஊர்வலம்

    • நவராத்திரி விழாவை யொட்டி குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு அலங்கார வழிபாடு நடைபெற்றது.
    • விஜயதசமி நாளையொட்டி அம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார்.

    குமாரபாளையம்:

    நவராத்திரி விழாவை யொட்டி குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு அலங்கார வழிபாடு நடைபெற்றது. விஜயதசமி நாளையொட்டி அம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார்.

    மேலும் குழந்தைகளுக்கு அம்மன் வேடமிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, குழந்தைகளுடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக வந்த திருவீதி உலா கோவிலில் நிறைவு பெற்றது.

    கோவிலில் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாட குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×