search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 kids"

    • ராஜபாளையத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமாதாக கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
    • இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகில்வண்ணன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 28), கொத்தனார். இவரது மனைவி அழகேஸ்வரி (27). இவர்களுக்கு சக்திகுமார் (5), சசிகுமார் (3) என்ற மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் மாணிக்கம் கடந்த 4 நாட்களாக வெம்ப க்கோட்டை பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போதுஅவரது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.

    இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீசில் மாணிக்கம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்.

    • ராஜபாளையத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
    • பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சம்மந்தபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 30),பால் வியாபாரி. இவரது மனைவி சந்தானேஸ்வரி. இவர்களுக்கு 3 வயதில் மகன், ஒரு வயதில் மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று லட்சுமணன் வழக்கம்போல் வியாபாரத்திற்கு ெசன்று விட்டார். பின்னர் அவர் வீடு திரும்பியபோது சந்தானேஸ்வரி மற்றும் 2 குழந்தைகளை காண வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் மனைவி, குழந்தைகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து லட்சுமணன் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், எனது மனைவி மற்றும் குழந்தைகளை பக்கத்து வீட்டை சேர்ந்த காளிராஜ் என்பவர் கடத்தி சென்றி ருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பி உள்ளார்.

    அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×