என் மலர்
நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"
- வீடு புகுந்து பணத்தை திருடியவர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
- சிசிடிவி காமிரா காட்சிகள் மூலம் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,25,000 பணம், கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் கோவிந்தாபுரம் நாயக்கர் புது தெரு 3 வது தெருவை சேர்ந்தவர் சரண்யா.(வயது 37).இவரது வீட்டில் கடந்த 12ந் தேதி இரவு வீட்டின் கதவை உடைத்து பணம் ரூ 1,50,000 த்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில்,நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில்,சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி,நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்டு,தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன்,முகம்மது அலி, விசுவாசம்,சக்திவேல் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்தினர்.அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அந்த காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் அவர்களை தேடினர்.
அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் மணிகண்டன்,சக்திவேல் ஆகியோர் உதவியுடன் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் சீலப்பாடியைச் சேர்ந்த முகமது பிலால் (வயது 30),கோபால் நகரைச் சேர்ந்த நாகேந்திரன் (24)ஆகிய 2 பேர் என்பது தெரிய வந்தது.இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,25,000 பணம்,கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் முகமது பிலால்,நாகேந்திரன் ஆகிய 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உடல்நலக்குறைவு மற்றும் குடும்ப பிரச்சினைகாரணமாக 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பொம்மைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி வேணி (வயது 25). இவர்களது மகள் பூஜா (5). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாகராஜிடம் கோபித்துக் கொண்டு பூஜா தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் வேணிதிடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 36). இவருக்கு துர்கா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் வயிற்று வலி ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நாகேந்திரன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சம்பவத்தன்று கடைக்கு பொருட்கள் வாங்க சென்றவர் வீடு திரும்ப வில்லை.
- இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் உறவினர்கள் வீடுகள் மற்றும் கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் மனைவி வெண்ணிலா (வயது20). சம்பவத்தன்று கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அதன்பி ன்னர் அவர் வீடு திரும்ப வில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் உறவினர்கள் வீடுகள் மற்றும் கடைகளில் தேடியும் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெண்ணிலாவை தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் தர்ஷினி (17). பிளஸ்-2 முடித்து விட்டு தையல் பயிற்சிக்கு சென்று வரு கிறார். சம்பவத்தன்று தையல் வகுப்புக்கு சென்ற அவர் திடீரென மாயமா னார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து இளம்பெ ண்ணை தேடி வருகின்றனர்.
- தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஏகியா (28), சுகில்தேவ் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
சேலம்:
தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்துவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த ரெயிலில் இன்று அதிகாலை ஜோலார் பேட்டையில் இருந்து சேலம் ஜங்சன் வரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பொது ரெயில்பெட்டியில் சீட் எண் 45-க்கு கீழ் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 பேக்குகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஏகியா (28), சுகில்தேவ் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஒடிசா மாநிலம் பெரம்பூர் பகுதிக்கு சென்று 4 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்ததை நோட்டமிட்ட மற்ற விவசாயிகள் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மற்றவர்களை ஒருங்கிணைத்தனர்.
- அவர்கள் அந்த கும்பலை நெருங்கியபோது அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வாழைத்தார் திருடிச்செல்லும் சம்பவம் அதிகரித்தது. இந்த நிலையில் உத்தமபாளையம்-கோம்பை சாலையில் வாழைத்ேதாட்டம் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு கார் நின்றது.
அதிலிருந்த சிலர் பாதர்கான்பாளையத்தை சேர்ந்த விவசாயி தோட்டத்தில் புகுந்தனர். அங்கு வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்தனர். இதனைநோட்டமிட்ட மற்ற விவசாயிகள் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மற்றவர்களை ஒருங்கிணைத்தனர்.
அவர்கள் அந்த கும்பலை நெருங்கியபோது அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து காரை மடக்கி பிடிக்க முயன்றபோது 2 பேர் சிக்கினர். அவர்களை உத்தமபாளையம் போலீசில் விவசாயிகள் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் வாழைத்தார் திருடியது யோகேஸ்வரன் மற்றும் சூர்யா என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய புதியவன், அசோக், மாரி ஆகியோரை தேடி வருகின்றனர்.
- விற்பனைக்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதி களில் அந்தியூர், காஞ்சி கோவில், கருங்கல்பாளையம் போலீசார் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதியின்றி மது பாட்டி ல்களை விற்பனை செய்து கொண்டிருந்த கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் ஸ்ரீனிவாசன் (வயது 43) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைப்போல் வாய்க்கால் கரை பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த தர்மபுரி மாவட்டம் பென்னா கரத்தைச் சேர்ந்த மனோ கரன் மகன் சுதாகர் (32) என்பவரை காஞ்சிக்கோயில் போலீசார் பிடித்தனர்.
இதே போல் அந்தியூர்-பர்கூர் சாலையில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்றுக் கொண்டிருந்த அந்தியூர் தெப்பக்குளம் தெருவை சேர்ந்த தங்கவேல் மனைவி பேச்சியம்மாள் என்பவரை அந்தியூர் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கம்பம்-குமுளி சாலையில் அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- சோதனையில் யானை தந்தம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் வனப்பகுதியில் யானை தந்தம் கடத்தப்படுவதாக மத்திய வ னவிலங்கு குற்றகா ட்டுப்பாட்டு பணியக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வனவிலங்கு குற்றகட்டுப்பாட்டு பணியக இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் கம்பம் மேற்கு ரேஞ்சர் ஸ்டாலின் மற்றும் வனத்துறையினர் கம்பம்-குமுளி சாலையில் அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அவர்கள் யானை தந்தம் கடத்தியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து யானை தந்தத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கூடலூர் கன்னிகாளி புரத்தை சேர்ந்த சுரேஷ்கண்ணன்(32), கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கடைசிகடவு பகுதியை சேர்ந்த முகேஷ்கண்ணன் (28) என்பதும், யானை தந்தத்தை பைக்கில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து எங்கிருந்து யானை தந்தம் கடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் ேவறு யாருக்கும் தொடர்புள்ளதா என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தருமபுரியில் இன்று சரக்கு வேனில் 750 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்
- மதிக்கோன்–பாளையம் போலீசார் குண்டல்பட்டியில் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டபோது குட்கா பொருட்களை கடத்தி வந்தவர்கள் பிடிபட்டனர்.
தருமபுரி:
கர்நாடகா மாநிலத்தில் இருந்து தருமபுரி வழியாக தமிழகத்திற்கு அடிக்கடி தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா ஆகியவை மர்ம நபர்கள் ரெயில் மற்றும் பஸ், சரக்கு வாகனங்களில் கடத்தி வருவதாக மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ேஜசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் எல்லை பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு குட்கா கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் போலீசாருக்கு உத்தர விட்டார். அவரது உத்தர–வின்பேரில் மதிக்கோன்–பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் போலீசார் இன்று குண்டல்பட்டியில் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்தது. அதனை போலீசார் வழிமறித்து சோதனை செய்ததில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சிவக்குமார்(வயது30), கிருஷ்ணகிரியை சேர்ந்த குமார் (35) ஆகிய 2 பேர் வண்டியில் சுமார் 750 கிலோ எடையுள்ள தடை செய்யப்–பட்ட குட்கா பொருட்களை மூட்டை, மூட்டையாக கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் இருந்து பெரம்பலூருக்கு கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
உடனே போலீசார் 2பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து சரக்கு வேன், 750 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சாலையோர பள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் நத்தம் போலீசார் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
- இந்நிலையில் தொழிலாளியை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வீமாஸ் நகரில் டாஸ்மாக் கடை அருகே கடந்த 6-ம் தேதி ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் லிங்கவாடி எல்.வலையபட்டியைச் சேர்ந்த அழகுப்பிள்ளை மகன் சீனி (வயது 35) என்பது தெரிய வந்தது. இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார்.
சாலையோர பள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் நத்தம் போலீசார் அவர் கொலை செய்யப்பட்டா ரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்ற கோண த்தில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசா ரணையில் சீனி கொலை செய்ய ப்ப ட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இத னைத் தொட ர்ந்து அதே பகுதி யை சேர்ந்த சில ரிடம் போலீ சார் தீவிர விசா ரணை மே ற்கொ ண்ட னர்.
சம்பவம் நடந்த அன்று வத்தி பட்டியில் ஆசை என்ப வரின் பெட்டி க்கடையில் சீனி பொரு ட்கள் வாங்கி னார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசை, தென்னரசு, ரஜினி என்ற நல்லியப்பன் மற்றும் பாபு ஆகிய 4 பேரும் சேர்ந்து சீனி யை தாக்கினர்.
அதன்பி ன்னர் சீனி அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க செ ன்றார். அப்போது பின் தொட ர்ந்து வந்த அவர்கள் 4 பேரும் டா ஸ்மாக் கடை யில் மீண்டும் தகராறு செய்து தாக்கினர். இதனால் சீனி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. முதலில் சந்தேக மர ணமாக வழக்குப்பதிவு செய்த நிலையில் பின்னர் இது கொலை வழக்காக மாற்ற ப்பட்டது.
வழக்கில் தொடர்பு டைய புதுக்கோ ட்டையை சேர்ந்த தென்னரசு, வலைய பட்டி ஆசை ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மேலும் தலைமறை வாக உள்ள வலையப ட்டியைச் சேர்ந்த ரஜினி மற்றும் கவராயபட்டியை சேர்ந்த பாபு ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சீனிக்கு சின்னப்பிள்ளை என்ற மனைவியும், 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
- விக்னேஷ், அபிநயா (21) என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
- விக்னேஷ் அடிக்கடி மனைவி அபிநயாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த நாச்சிக்குளம் தச்சர் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது24).
இவரும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஈச்சங்குடி கிராமத்தை சேர்ந்த அபிநயா (21) என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஆண் குழந்ைத உள்ளது.
இந்தநிலையில் கணவர் விக்னேஷ் அடிக்கடி மனைவி அபிநயாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததுடன் தனது வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கூறி தாக்கி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அபிநயா, கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கணவர் உள்பட 2 பேர் கைது இந்த நிலையில் அபிநயா முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தொடர்ந்து வரதட்சணை கேட்ட தொந்தரவு செய்து வருவதாக புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் மற்றும் அவரது உறவினர் சிவகங்கையை சேர்ந்த சேகர் (39) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விக்னேசின் தந்தை கணேசன், தாயார் கமலா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.